View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 89 of 159 FirstFirst ... 3979878889909199139 ... LastLast
Results 881 to 890 of 1587

Thread: new serials/programs

  1. #881
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பிரிவோம் சந்திப்போம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `பிரிவோம் சந்திப்போம்'. ரேவதி - ஜோதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதை.

    மனித நிறங்களுக்கும், அவர்கள் மனங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான். ரேவதி செக்கச் செவேலென்று இருப்பாள். ஆனால் ஜோதி மாநிறம். இந்த நிற வேற்றுமைக்கிடையிலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். இவர்கள் வாழ்விலும் பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் உணர்வு போராட்டம் பற்றிய கதை தான் இது.

    ரேவதி சிறுவயதிலேயே தாயை இழந்தவள், தந்தை சுந்தரேசன் கப்பல் துறையில் வேலை பார்ப்பதால், தன் மனைவியின் அண்ணன் சண்முகராஜா வீட்டில் ரேவதியை ஒப்படைக்கிறார். சண்முகராஜாவின் மகள் தான் ஜோதி. ரேவதியும், ஜோதியும் நல்ல தோழிகளாக வளர்கிறார்கள். அவர்களின் அன்பை பார்த்து சண்முகராஜா பரவசமடைகிறார். ஆனால் ஜோதியின் அம்மாவுக்கும், பாட்டிக்கும் வெறுப்பு. ஜோதியை விட ரேவதி அழகாயிருப்பதினால், இந்த வெறுப்பு.

    ஜோதியின் நல்வாழ்விற்காக ரேவதி எடுக்கும் முடிவு, இதனால் அவள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் பிரிவோம் சந்திப்போமின் கதை.

    நட்சத்திரங்கள்: எல்.ராஜா, ராஜலட்சுமி, கல்யாணி, மகாலட்சுமி. இயக்கம் ரசுல்.

    வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.

    [நன்றி: தினதந்தி






    Sundaresan's daughter Revathi is being brought up by his brother-in-law. He is a writer.

    Sundaresan has been sending money to Revathi for her monthly expenditure through his brother-in-law. He had been putting those money in a Bank. He now decides to give this money to Revathi and gives the accumulated money to Revathi bundled in a red bag.

    Revathi refuses to take money saying that she had been brought up like his own daughter by him and have given her education and respect in society.

    Revathi is sitting in the steps and writing her diary. Jyothi comes over there and gives a ear-ring telling that it has been given by the grandmother for her. Revathi likes the ring very much. Jyothi puts the ring to Revathi. Sangeetha who comes there to dry clothes sees Jyothi giving the ring to Revathi which actually had been given to Jyothi.
    Sangeetha knows that if Jyothi's mother Dhanam sees this she would be angry. She sends Revathi to kitchen telling that aunty had called her. Revathi goes to the kitchen but Dhanam who dislikes Revathi never sees her face. Sangeetha becomes upset.

    When everyone is having lunch Sangeetha tacitly makes Dhanam to see Revathi wearing the ring. Dhanam leaves the dining table without having her food and goes to her room. Sangeetha asks Revathi to take milk to Aunty. Revathi after finishing her lunch takes milk to Dhanam. Dhanam refuses milk and asks Revathi to leave. Revathi thanks for the ear-ring given by the grandmother.

    Last edited by aanaa; 15th April 2011 at 04:02 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #882
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மகா-பிரகாஷ் திருமணம் நடக்குமா?


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப் பாகிவரும் `மகாராணி' தொடர் பரபரப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது.

    மகாவின் பெற்றோரை ராணி தனது தந்திரத்தால் பெற்றோராக்கிக் கொள்கிறாள். இதனை அறிந்த மகா உண்மை தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தவிக்கிறாள். ஆனால் தன்னைப் பெற்ற தாயுடன் வாழும் அதிர்ஷ்டம் அவளுக்குக் கிடைக்கிறது. மகாவின் உண்மையான தாயான சந்தியாவும் உண்மை தெரிந்து மகாவை அரவணைத்துக் கொள்கிறாள்.

    சந்தியா, மகாவின் தந்தையான தேவராஜ்-யமுனா தம்பதியருக்கும் மகா தான் உண்மையான மகள் என்று தெரியவரும்போது காரியம் கை நழுவிப்போய்விட்ட நிலையில் தேவராஜ் இருக்கிறார். தனது உண்மையான மகளென்று நினைத்து தத்தெடுத்த ராணியின் பெயரில் சொத்துக்கள் அனைத்தையும் எழுதிவைத்து விட, அதுவே பெரிய சிக்கலாகி விடுகிறது. சொத்துக்காக ராணி எந்த எல்லைக்கும் செல்வாள். தோப்பியாஸ் என்ற தேவராஜின் அலுவலக ஆளுடன் சேர்ந்து தேவராஜ், யமுனா, சந்தியா மற்றும் மகாவை ஒரேயடியாக அழிக்க திட்டம் தீட்டுகிறாள்.


    மகாவைக் காதலிக்கும் பிரகாஷையும் அடையவேண்டும் என்ற நோக்கோடு அவர்களுக்கு நிச்சயித்த திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறாள். இதனிடையே தேவராஜின் பால்ய நண்பர் ஜோதிலிங்கத்தின் உதவியுடன் ராணியின் சதித்திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கி அவளை பெண்கள் காப்பகத்தில் அடைக்கிறார்கள். பெண்கள் காப்பகத்தில் உள்ள கெடுபிடி மற்றும் கடுமையான தண்டனைக்கு மிரளாத ராணி அங்கேயும் வில்லத்தனமான திட்டங்களைத் தீட்டுகிறாள். தோப்பியாஸின் உதவியுடன் அவள் இப்போது அடைய நினைப்பது தேவராஜின் சொத்துக்களை.

    மகாவின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் சொத்து வழக்கின் தீர்ப்பு நாளும் நெருங்குகிறது. தோப்பியாசிடம் பிரகாஷை தீர்த்துக்கட்டிவிடுமாறு சொல்லும் ராணியின் கட்டளைக்கு அவனும் சரி சொல்கிறான். மகாவின் திருமணம் நடக்குமா? பிரகாஷிற்கு என்னவாகும்? தேவராஜின் சொத்து வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

    மகா-பிரகாஷ் திருமணம் நடைபெறவிருக்கிற நேரத்தில் பெண்கள் காப்பகத்தில் இருந்து சீறிவரும் ராணி, மகாவின் திருமணத்தை நிறுத்திவிடுவாளா? என்ற கேள்விக்கும் விடைஉண்டு.

    மகாவாக சுஜிதா, ராணியாக அர்ச்சனா, சந்தியாவாக பிரவீணா, யமுனாவாக சுலக்ஷனா நடிக்க, இயக்கம்: தாமரைக் கண்ணன்.


    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 15th April 2011 at 04:03 AM.
    "அன்பே சிவம்.

  4. #883
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `நாடறிந்த நடிகர் நாகேஷ்'


    வசந்த் டிவியில் செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு `தமிழ்த்திரையுலகில் நடிகர் நாகேஷ்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நகைச்சுவையில் தொடங்கி பின்னாளில் குணசித்ரத்திலும் கொடிகட்டிப் பறந்த நாகேஷின் கலையுலக சாதனை அளப்பரியது. சினிமாவில் பிசியாக இருந்த நாட்களிலும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது திரையுலக நட்பு சரித்திரம்.

    நாகேஷ் புகழேணியின் உச்சியில் இருந்த நேரத்தில் அவருடன் இணைந்து நடித்த நட்சத்திரங்கள் காத்தாடி ராமமூர்த்தி, சச்சு, அவருக்கு டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் காட்சிகள் அமைத்த கதாசிரியர் சித்ராலயா கோபு ஆகியோர் நாகேஷுடன் பழகிய அந்த நாட்களை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்கிறார்கள்.

    நடிகை சச்சு பேசும்போது, "நாகேஷ் டைமிங்காக பேசி சிரிக்கவைப்பதில் வல்லவர். `காதலிக்கநேரமில்லை' படத்தில் அவருடன் நடிக்கும்போது அவர்அடித்த டைமிங் ஜோக்கால் சிரித்துக்கொண்டே இருந்தேன்'' என்றார்.

    சித்ராலயா கோபு கூறும் போது, "நாகேஷ் நடித்து அப்போது `நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் மட்டுமே வந்திருந்தது. அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக வெளிïருக்கு நாகேஷுடன் நாங்கள் காரில் போன போது `நாகேஷ்..நாகேஷ்..' என்று உற்சாகத்துடன் கத்தியபடி ரசிகர்கள் காரை நோக்கி ஓடிவந்தனர். அந்தக்காரில் எங்களுடன் நடிகர் தங்கவேலுவும் வந்தார். அவர் ஏற்கனவே `கல்யாணப்பரிசு' போன்ற படங்களில் நகைச்
    சுவையாக நடித்து புகழ் பெற்றவர். நாகேஷுக்கு இருந்த ரசிக ஈர்ப்பை நேரில் பார்த்ததும் அவர் , `ஒரு படத்திலேயே இப்படி ரசிகர்களை கவர்ந்து விட்ட நாகேஷ் பின்னாளில் பெரிய நட்சத்திரமாக வருவார்' என்று அப்போதே வாழ்த்தினார். அவர் வாழ்த்தியபடியே நாகேஷும் வளர்ந்தார்'' என்றார்.

    நிகழ்ச்சியின்போது நாகேஷ் நடித்த படங்களில் இருந்து நகைச்சுவைக்காட்சிகளும் இடம் பெறுகிறது.



    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 15th April 2011 at 04:03 AM.
    "அன்பே சிவம்.

  5. #884
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அழகிய தமிழ்மகள்


    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "அழகிய தமிழ் மகள்'' நிகழ்ச்சி, 143 எபிசோடுகளைக் கடந்து தொடர்கிறது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா டெலிபிலிம்ஸ் சார்பில் கே.பி.முத்துக்குமார் மற்றும் யமஹா பிரகாஷ் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை, நடிகை ரோகிணி தொகுத்து வழங்குகிறார். பெண்மையின் பெருமையை பாராட்டும் விதமாக, பெண்ணியக் காவலர்களை மேடையேற்றி, பெண்ணினத்திற்கு பெருமிதம் சேர்க்கிறது இந்த நிகழ்ச்சி. சமூக சிந்தனையோடு, தாய்மார்களின் ஏக்கம் தீர்க்க, பல உதவிகளையும் மேடையில் அறிவிக்கிறார்கள்.

    புதுக்கோட்டையில் நிகழ்ச்சி நடந்தபோது, மாற்றுத்திறனாளி ரத்தினவேலுக்கு மூன்று சக்கர வாகனம் வாங்க பணம் வழங்கியபோது, தன்மானம் கருதி பணத்தை வாங்காமல் விடைபெற்றுச் சென்ற அவரது செயல், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் கலங்க வைத்தது. இவர் ஒரு பி.காம். பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.



    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 15th April 2011 at 04:03 AM.
    "அன்பே சிவம்.

  6. #885
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அன்னக்கொடியின் `காக்கும் கரங்கள்'



    ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கொடிமுல்லை' தொடரில், தாய்-மகள் என இரட்டைவேடத்தில் நடித்து வருகிறார் தேவயானி. உயிரின்முக்கியத்துவத்தையும், ரத்ததானத்தின் அவசியத்தையும் தாய் அன்னக்கொடி கேரக்டர் மூலம் வரும் வாரங்களில் ஆணியடித்த மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

    அன்னக்கொடியின் நகையை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் முயன்ற நேரத்தில் அந்த ஊர் வியாபாரி தடுக்க முயல, அவருக்கு விழுகிறது அரிவாள் வெட்டு. ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் உயிருக்குப்போராடுகிறார்.

    பதறிய அன்னக்கொடி, அவர் உயிரைக்காப்பாற்றும் துடிப்பில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்த முயற்சிக்கிறாள். ஆனால், அவரவர் தங்கள் அவசரவேலையை காரணம் காட்டி உதவ மறுத்து பறக்கிறார்கள். கடைசியில் ஒரு ஆட்டோ டிரைவர் அன்னக்கொடியின் உருக்கமான வேண்டுகோளுக்கிணங்கி உயிருக்குப் போராடும்
    வியாபாரியை ஆட்டோவில் ஏற்றி அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்.

    ஆனால், அங்கும் சில நீடித்த விசாரணைகளில் வெட்டுப்பட்டவர் அதிக அளவில் ரத்தம் இழக்கிறார். இனியும் பொறுத்தால் உயிர் போவது நிச்சயம் என்பதை உணர்ந்த அன்னக்கொடி, ஆஸ்பத்திரி டீனை சந்தித்து நிலைமையை விளக்குகிறாள். அவரிடம் இருந்தும் அலட்சியமே பதிலாக வர, ஆத்திரத்தின் உச்சிக்கேபோன அன்னக்கொடி, அவரது கழுத்தில் கத்தரிக்கோலால் கீறுகிறாள். அடுத்தகணமே வியாபாரிக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஆனால், அவருக்கு உடனடியாக ரத்தம் ஏற்றியாக வேண்டிய நிலை. அவருடையது அபூர்வ வகை ரத்தம் என்பதால் கிடைப்பது கேள்விக்குறியாகிறது. இந்த நிலையில் அன்னக்கொடி தன் மகள் மலர்க்கொடி பணியில் இருக்கும் சமூக நிறுவனத்துக்கு போன் செய்து ரத்த உதவி கேட்கிறாள். மலர்க்கொடியை பெண் பார்த்து நிச்சயம் செய்துபோன வருங்காலக் கணவனுக்கும் அதே ரத்தகுரூப் என்பதால் அவனுக்கு போன் செய்து உதவி கேட்கிறாள் மலர்க்கொடி, அவனும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கே வந்து ரத்தம் கொடுக்க, வியாபாரி காப்பாற்றப்படுகிறார்.

    இதனால் மலர்க்கொடிக்கு அன்னக்கொடி போனில் நன்றி சொல்ல, "இப்படி உதவும் குணம் கொண்ட உங்களை நான் சந்திக்க வேண்டுமே'' என்கிறாள், மலர்க்கொடி. "இதோ இப்போது கூட வியாபாரித்தம்பிக்கு உதவியாக ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறேன்'' என்கிறாள் அன்னக்கொடி.

    தாய்-மகள் என்ற உறவு தெரியாமலே இப்படிஅன்பு வளையத்துக்குள் வந்துவிட்ட அன்னக்கொடியும், மலர்க்கொடியும் இப்போதாவது சந்தித்தார்களா? என்பது அடுத்தகட்ட சஸ்பென்ஸ்.



    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 15th April 2011 at 04:03 AM.
    "அன்பே சிவம்.

  7. #886
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அப்பா-மகள் சந்திப்பு நடந்ததா?
    விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், `பிரிவோம் சந்திப்போம்.'

    சிறுவயதிலிருந்து தன் தாய்மாமா சண்முகராஜனின் வீட்டில் வாழும் ரேவதி, 15 வருடங்களாக தன் தந்தை சுந்தரேசனின் பிரிவினால் வாடுகிறாள். இந்நிலையில் சுந்தரேசன் இந்தியா வரப் போவதாகக் கூற ரேவதி பரவசமடைகிறாள். தன் தந்தையின் வருகையையொட்டி வீட்டில் அனைவருக்கும் பரிசுகளை வாங்கித் தருகிறாள். அப்பா வரும் நாளில் தன் கையாலேயே அவருக்கு ருசியாக சமைக்கப் போவதாகக் கூறி தனியாளாக அனைத்தையும் தயார் செய்கிறாள்.

    சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்தபடி, `உனக்கு என்ன பரிசு வேண்டும்?' எனக் கேட்கும் அப்பாவிடம், `உங்கள் வருகையே எனக்கு மிகப் பெரிய பரிசுதான்' என ரேவதி கூற... இருவரும் நெகிழ்ச்சியடைகிறார்கள். உணர்ச்சிபெருக்கின் உச்சக்கட்ட பாசத்தில் இருக்கும் சுந்தரேசன்-ரேவதி சந்திப்பு நிகழ்ந்ததா? சுந்தரேசனை வரவேற்க திருச்சி விமான நிலையம் செல்லும் சண்முகராஜனுக்கு காத்திருப்பது ஆனந்தமா? அதிர்ச்சியா?

    ரேவதியாக கல்யாணி, ஜோதியாக மகாலட்சுமி, சுந்தரேசனாக கவுதம், சண்முகராஜனாக `சங்கர்குரு' எஸ்.ராஜா மற்றும் ராஜ்யலட்சுமி, உதயா, ஸ்ரீதேவி நடிக்கிறார்கள்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #887
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அவள் ஒரு தொடர்கதை


    பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `அவள் ஒரு தொடர்கதை.' சமுதாயத்தின் பார்வைக்கு அழகற்றவளாக தன்னை காட்டிக்கொள்ளும் அழகான சுஜாதா தான் தொடரின் நாயகி. தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடிசைகளில் ஒன்றுதான் அவளது வாசம். பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் அவள் வாழ்க்கை, வேதனையும், சோதனையும் மிக்கது மட்டுமல்ல, ரகசியங்கள் அடங்கியதும் கூட. அவளது போராட்டங்களில் அவளது தாய் பத்மா மட்டுமே துணை.

    அழகே வடிவான சுஜாதாவின் முகம் ஒரு சந்தர்ப்பத்தில் வெளியுலகுக்கு தெரியவருகிறது. தொடர்ந்து பத்மா பயந்த மாதிரியே பிரச்சினைகளும் வருகிறது. அழகுப்பெண்ணை ஆளுமை செய்யத் துடிக்கும் வெறிகொண்ட நய வஞ்சகர்களின் கூட்டம் வேட்டைநாயாய் அவளை சுற்றுகிறது.

    இந்தநேரத்தில் கடவுளே அனுப்பியது போல் வந்து உதவுகிறான் பொன்னேரி தாஸ். பருவத்திற்கே உரிய தூண்டுதலால் தாஸ் மீது மையல் கொள்கிறாள் சுஜாதா. விதியின் கணக்கோ வேறு மாதிரி. தாஸ் ஏற்கனவே மனைவியை இழந்தவன். சுஜாதா மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவன். மகளின் மனதை அறிந்த தாய் பத்மா, `ஒருவர் நம் மீது காட்டும் கருணையை காதல்' என்று கொச்சைப்படுத்தக் கூடாது என்று அறிவுரை கூறுகிறாள்.

    மனமுடைந்து போகும் சுஜாதா, தாயின் ஆலோசனையின் வலிமையை உணர்ந்து தனது காதலை தனக்குள்ளே புதைக்கிறாள்.

    சமுதாயத்தின் கொடுமைகளை எதிர்த்து வெற்றிக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் உருக்கமான வாழ்க்கை பயணமும், அவர்கள் கட்டிக்காக்கும் குடும்ப ரகசியங்களுமே தொடரின் கதைக் களம்.

    சுஜாதா மனதை தாஸ் அறிந்து கொண்டானா? அவனிடம் சுஜாதா தனது காதலை வெளிப்படுத்தினாளா? சுஜாதாவை ஆதரிப்பதனால் தாஸ் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? கேள்விகளுக்கு பதிலாக வரும் 23-ந் தேதி முதல் பாலிமர் டிவியில் ஆரம்பமாகிறது, தொடர்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #888
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நட்சத்திரத்தேர்வில் பொன்னியின் செல்வன்


    சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க புதினம் ``பொன்னியின் செல்வன்''. சின்னத்திரை தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக, ``பொன்னியின் செல்வன்'' ஒரு நெடுந்தொடராக மக்கள் தொலைக்காட்சியில் வெளிவர உள்ளது.

    10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தை கதைக்களமாகக் கொண்டு இப்புதினம் வடிவமைக்கப்பட்டது. இத்தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கப் போகும் நடிகர் களுக்கான நேர்முகத் தேர்வு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் நடைபெற்று வருகிறது.

    தொடருக்கான நடிகர்கள் தேர்வின் காட்சித் தொகுப்பு நாளை முற்பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #889
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `இதயம் கவர்ந்த' இதயம்

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் தொடர், விறுவிறுப்பு குறையாமல் தொடர்கிறது. கொடியவன் ஒருவனால் அநீதி இழைக்கப்பட்ட தன் மருமகளுக்காக போராடும் பாசமிகு மாமியாராக டாக்டர் கல்யாணி கதாபாத்திரத்தில் சீதா நடித்திருக்கிறார். நந்தினியைக் கெடுத்தவனே அவள் கணவனுக்கு நண்பனாக, அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், அவன் கொலையான பிறகு அதற்கு காரணம் யார்? என்ற சஸ்பென்சுடன் கதையை நகர்த்தும் விதமும் சுவாரசிய எதிர்பார்ப்பை தக்க வைக்கிறது.

    கல்யாணி, தேவராஜன் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கும் போது, பிரசாத் கொலை வழக்கு தொடர்பாக கல்யாணி கைது செய்யப்படுகிறாள். பிரசாத்தை கொலை செய்யவில்லை என கல்யாணி மறுக்க, சாட்சியங்கள் நிலை என்னவாயிற்று? கல்யாணி, பிரசாத்தை கொல்லவில்லையென்றால், அவனை கொன்றது யார்? கேள்விகளை முன்வைத்து தொடர்கிறது தொடர்.

    சீதா, சித்ரா லட்சுமணன், நித்யாதாஸ், நளினி, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம்: `ஆனந்தம்' நித்தியானந்தம். தயாரிப்பு: `சத்ய ஜோதி பிலிம்ஸ்' ஜி. தியாகராஜன்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #890
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சொல்லத்தான் நினைக்கிறேன்


    ஜி தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது கே.பாலசந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடர்.

    மதன் பிரபல சின்னத்திரை நடிகர். நேர்மையானவர். நேரம் தவறாதவர். அவருடைய ஒரே மகள் சாரு. வயது 20. மிகச் சிறிய வயதிலிருந்தே தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணிப் போற்றி சாருவை வளர்க்கிறார் மதன். தந்தை மேல் உயிரையே வைத்திருக்கிறாள் சாரு. அவள் தாய் தன்னை விட்டு பிரிந்து போய் எங்கோ வாழ்ந்து வரும் உண்மையை சாருவிடம் ஏனோ அவரால் சொல்ல முடியாமல் போய் விடுகிறது.

    தாய்ப் பாசமே தெரியாமல் வளர்ந்து வரும் சாருவின் எதிரில் ஒரு நாள் அவளுடைய அம்மா வந்து நின்றால் என்ன நடக்கும்?

    மதனாக ரவி ராகவேந்தரும், சாருவாக `சஹானா' புகழ் காவ்யாவும், சாருவின் தாயாக யுவராணியும் நடித்துள்ளனர். பீலி சிவம், `விழுதுகள்' சந்தானம், பாத்திமா பாபு, பாம்பே ஞானம் ஆகியோர் தொடரின் நட்சத்திரங்கள். தயாரிப்பு: கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •