-
26th September 2009, 09:02 PM
#591
Moderator
Diamond Hubber
கருணமஞ்சரி
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் கருணமஞ்சரி. சின்னத்திரையின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரபுநேபால் இயக்கி தயாரிக்கும் இந்த தொடரில், ஒரே குடும்பத்தில் பிறந்த 4 சகோதரிகளின் வாழ்க்கைப் பின்னணி கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இயக்குனரிடம் கதை பற்றி கேட்டபோது...
"கருணமஞ்சரி என்பது ஒரு ராகத்தின் பெயர். அதேநேரம் இந்த தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கு தலைப்புக்கான இன்னொரு அர்த்தமும் தெரியவரும். அதனால் அதுமட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாக இருக்கட்டுமே'' என்கிறார்.
தொடர்ந்து அவர் சொன்ன கதைப்பின்னணி வருமாறு:
தொழில்அதிபர் கருணாகரனிடம் உதவியாளராக இருக்கும் ராஜேந்திரனுக்கு 4 மகள்கள். இதில் இரண்டாவது மகள் மஞ்சரியைச் சுற்றித்தான் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள். அப்பா வேலை பார்க்கும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக மஞ்சரிக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மஞ்சரி பெற்றோருக்கு இரண்டாவது பெண். அவளது அக்கா இந்திரா திருமணமாகி கணவருடன் இருக்கிறாள். கணவருக்கு ஐ.டி.யில் வேலை. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் சுதாவின் குடும்ப நண்பர் வடிவில் பிரச்சினை கிளம்புகிறது. மூன்றாவது பெண் ரேவதி தங்கள் குடும்பம் மிடில் கிளாஸ் என்பது தெரிந்தும் பணக்கார இளைஞனை விரும்புகிறாள். இந்த விருப்பம் அவளை எதில் கொண்டு விடுகிறது?
கடைக்குட்டி பவித்ரா காதுகேட்காத வாய் பேசமுடியாத பெண். தனது குறைபாட்டைக் கூட பெரிதாக எண்ணாமல் தன் அக்காள்களுடன் எப்போதும் சந்தோஷமாக வளைய வருபவள். இப்போது அவளைத் தேடியும் ஒரு பிரச்சினை இறக்கை முளைத்து பறந்து வருகிறது.
இதற்கிடையே தொடரின் நாயகி மஞ்சரியை அவள் அத்தைமகன் விரும்புகிறான்.ஆனால் மஞ்சரிக்கோ அவன் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் அவன் காதலை புறக்கணிக்கிறாள்.அதேநேரம் அவள் அப்பாவின் முதலாளி மகனுக்கும் மஞ்சரி மேல் காதல் ஏற்படுகிறது.
மஞ்சரி இந்த இருவரில் ஒருவருக்கு மாலையிடுகிறாளா? அல்லது மஞ்சரிக்கென்றே ஒரு ராஜகுமாரன் வரப் போகிறானா?
இப்படி சகோதரிகள் நால்வரும் அவரவர் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தொடரின் சுவாரசிய முடிச்சு.
மஞ்சரியாக நடிப்பவர் புஷ்பலதா. அவரது அக்காளாக வருபவர் நடிகை சுதா சந்திரன். இந்த தொடரில் வித்தியாசமான இளமைத்தோற்றத்துடன் கூடிய சுதாவை பார்க்கமுடியும் என்கிறார் இயக்குனர்.
[html:314f08e970]<div align="center">[/html:314f08e970]
நன்றி: தினதந்தி
-
26th September 2009 09:02 PM
# ADS
Circuit advertisement
-
26th September 2009, 09:04 PM
#592
Moderator
Diamond Hubber
ஆண்டாள்
விடுதலை இயக்கத்தில் நடிகை சுகன்யா நடிக்கும் புதிய தொடர் `ஆண்டாள்.'
சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் உதவித்தலைமை ஆசிரியையாக பணியாற்றும் ஆண்டாள், `தானுண்டு தன் கற்பித்தல் உண்டு...பொதுநல நோக்குண்டு' என்று வாழ்ந்து வருகிறாள். ஆனாலும் அவள் உயிர்த்தோழி சகுந்தலா மூலம் அவளைத்தேடி வருகிறது, பிரச்சினை ஒன்று.
சகுந்தலா ஒரு பணக்கார இளைஞனை நம்பி ஏமாந்து போகிறாள். இப்போது அவள் 3 மாத கர்ப்பிணி. இந்த உண்மை தெரிந்ததும் போலீசில் நியாயம் கேட்க புறப்படுகிறாள். அங்கே நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கை விசாரித்த வக்கிரமனம் கொண்ட இன்ஸ்பெக்டர் அந்த பணக்கார இளைஞனிடம் பணம் வாங்கிவிட்டு நியாயத்தை புரட்டுகிறார்.
ஆனாலும் தோழிக்காக நியாயம் கேட்கத் துடிக்கும் ஆண்டாள் அந்த ஏரியாவில் உள்ள ஆட்டோ பெண் வீரலட்சுமி, உதவி கமிஷனர் ஆகியோர் உதவியுடன் அந்த இளைஞனுக்கு தன் தோழியை திருமணம் செய்து வைக்கிறாள்.
நிர்ப்பந்தத்துக்காக தாலிகட்டும் பணக்கார இளைஞனுக்கு ஆலோசனை சொல்லும் இன்ஸ்பெக்டர் அவனிடம், "இப்போது தாலி கட்டு. அப்புறமாய் போட்டுத்தள்ளி விடலாம். பிரச்சினையானால் உன்னைக் காப்பாற்ற நானாயிற்று'' என்கிறார்.
இதற்குப்பிறகு ஒருநாள் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஆண்டாள் வக்கிர இன்ஸ்பெக்டரின் கண்ணில் படுகிறாள். அவளிடம் விளையாடிப் பார்க்கவிரும்பும் அவர், அவள் பின்னாக வந்து இடுப்பை கிள்ளிவிடுகிறார். கொஞ்சமும் இதை எதிர்பார்த்திராத ஆண்டாள், அதிர்ச்சியிலும் அவமானத்திலும் துடித்துப் போகிறாள். அந்த நடுரோட்டிலேயே செருப்பை கழற்றி இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்து விடுகிறாள்.
இந்த அவமானத்தை அந்த வக்கிர இன்ஸ்பெக்டர் எப்படி மறப்பார்? தனக்
கிருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆண்டாளை விபசார வழக்கில் உள்ளே தள்ளுகிறார்.
ஜெயிலில் இருந்தபடியே தன்மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை கோர்ட்டில் நிரூபிக்கிறாள், ஆண்டாள். விடுதலையாகும்போது உதவி போலீஸ் கமிஷனராக ஊருக்கு வருகிறாள்.
எந்த இன்ஸ்பெக்டர் அவளை அபாண்டமாய் விபசார வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பினாரோ அதே இன்ஸ்பெக்டர் விறைப்பாக சல்ïட் அடித்து ஆண்டாளை வரவேற்கிறார். ஆனாலும் அவளை எப்படி பழிதீர்ப்பது என்ற எண்ணம் அவருக்குள் நீடிக்கவே செய்கிறது. இதற்காக உள்ளூர் ரவுடி ஒருவனுடன் கூட்டணி வைத்துக்கொண்டு கூலிப்
படையை ஏவி விடுகிறார். அவர்கள் ஆண்டாள் தனியாக வரும் இடத்தில் வெட்டி சாய்க்கிறார்கள்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைக்கும் ஆண்டாளை, அவள் பதவியையும் இழக்க வைக்கிறார், வக்கிர இன்ஸ்பெக்டர்.
ஆண்டாளின் சேவை மனப்பான்மையை புரிந்து கொண்ட மக்கள் அவளுக்கு கைகொடுக்கிறார்கள். சமூகசேவகியாக இருந்தபடி அவள் மக்களை எப்படி ஆண்டாள் என்பது மீதிக்கதை.
ஆண்டாள் என்பது பெயர் மட்டுமல்ல, செயலும்.
ஆண்டாளாக நடிகை சுகன்யா வருகிறார். மற்றும் தேவிபிரியா, சிவன்சீனிவாசன், யுகேந்திரன், ஷ்ரவன், வாசவி, சுமங்கலி, கே.ஆர்.வத்சலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை: மூர்த்தி. வசனம்: முதலாம் சின்னதுரை. இயக்கம்: விடுதலை. ஆரிக்மீடியா புரொடக்ன்ஸ் சார்பில் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. தயாரிக்கிறார்.
கலைஞர் டிவியில் இந்த தொடர் விரைவில் ஒளி பரப்பாகவிருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
26th September 2009, 09:12 PM
#593
Moderator
Diamond Hubber
`சாவித்ரி'
சித்தி, அண்ணாமலை, அஞ்சலி, கோகுலத்தில் சீதை தொடர்களைத் தொடர்ந்து டைரக்டர் சி.ஜே.பாஸ்கரின் புதிய தொடர் `சாவித்ரி'
தொடர் பற்றி டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் கூறியதாவது:-
தமிழக மக்களின் பிரதான பொழுது போக்கே சினிமா என்றாலும் சின்னத்திரையில் இதுவரை யாருமே சொல்லாத `சினிமா நடிகை' வாழ்க்கை கதைதான் சாவித்ரியின் மூலக்கதை.
இது `ஒரு நடிகையின் கதை' என்ற போதும் ரத்தமும் சதையுமான ஒரு பெண்ணின் இயல்பான போராட்டங்களையும், ஆழமான மன உணர்வு நுட்பங்களை பார்க்க முடியும்.
``தொடரின் பெயர் மட்டுமே சாவித்ரி. மற்றபடி நடிகையர் திலகம் சாவித்ரியின் வரலாற்றையோ அல்லது வேறு எந்த ஒரு தனிநடிகை வாழ்க்கையோ காட்டப்போவதில்லை. `சங்கவி' ஒரு நடிகையாகவே தோன்றி நடிக்கிறார்.''
இந்த தொடருக்காக `கல்யாணராமன் கமல்' பாணியில் பல்செட் மாட்டி நடித்திருக்கிறார் சங்கவி.
தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: சதீஷ், லட்சுமிராஜ், சினேகா நம்பியார், ரவிக்குமார், நித்யா,
திரைக்கதை வசனம்: ஐஷ்வர்யன். ஒளிப்பதிவு: ரகு
நாதரெட்டி. கதை, இயக்கம்: சி.ஜே.பாஸ்கர், தயாரிப்பு: ஸ்ரீசந்தோஷ் டெலிபிலிம்ஸ். ஜெயா டிவியில் திங்கள் இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி
-
26th September 2009, 09:24 PM
#594
Moderator
Diamond Hubber
கலைஞர் டி.வி.,யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று சிறப்பு கொண்டாட்டத்துடன் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த கொண்டாட்டத்துடன் விமானத்தை கண்டுபிடித்து 100 ஆண்டுகள் ஆன தினமும் சேர்ந்து கொண்டதால், வித்தியாசமான விமான நிலைய செட் அமைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தத்ரூபமான மெகா சைஸ் ஏரோபிளேன் பேக்ரவுண்டுடன், ஏர்போர்ட் போன்ற செட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றால், நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் ஏர்போர்ட் சம்பவங்களை மையமாக வைத்து டயலாக் பேசி ஆட்டம் போட்டது கைத்தட்டலைப் பெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் மற்றும் நடுவர்கள் தங்களது விமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கலா மாஸ்டர் கூறுகையில், ஒருநாள் இரவு நான் ஏரோபிளேனில் சென்னையில் இருந்து வெளியூருக்கு புறப்பட்டேன். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன், மழை பெய்தது. விமானம் கீழே இறங்க தயாரான நேரத்தில் வானிலை மோசமாக இருந்*ததால், அங்கு தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே வந்தது. வானிலை சரியானதும் மீண்டும் விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் பயந்து போய் அந்த விமானத்தில் செல்லாமல் வீட்டுக்கே வந்து விட்டேன், என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:12 AM
#595
Moderator
Diamond Hubber
`கலக்கப்போவது யாரு ஜுனியர்'
விஜய் டி.வி.யில் சிறுவர்களுக்காக வரவிருக்கும் நிகழ்ச்சி, `கலக்கப் போவது யாரு ஜுனியர்' நிகழ்ச்சி.
சிறுவர்களுக்காக கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள சிறுவர்கள் பங்கு பெற்றனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
நடிகர் பாண்டியராஜன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரம்யா.
நாளை இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, தொடர்ந்து ஞாயிறுதோறும் இதே நேரத்தில் காணலாம்.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:12 AM
#596
Moderator
Diamond Hubber
எம்.ஜி.ஆர். நினைவுகள்
பாலிமர் டிவியில் விரைவில் `எம்.ஜிஆர். மலரும் நினைவுகள்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், சின்னி ஜெயந்த் இருவரும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி இது.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:13 AM
#597
Moderator
Diamond Hubber
`பிளாக் அண்ட் ஒயிட்'
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாக்கூட்டம் தொடரில் 5 நாயகியரில் ஒருவராக வரும் அகிலா, வெள்ளித்திரையிலும் வாய்ப்புக்களை அள்ளிக்கொள்கிறார். நடிப்பு தவிர இவர் செய்யும் காரியம் `பிளாக் அண்ட் ஒயிட்' என்ற நிகழ்ச்சியை நடத்துவது. பழம்பெரும் நடிகர்கள் சாயலில் இருக்கிறவர்களாக தேடிப்பிடித்து அவர்களைக் கொண்டு நடத்தும் நடன நிகழ்ச்சியே `பிளாக் அண்ட் ஒயிட்'
பழைய கலைஞர்களை மதிக்கத் தெரிந்த நடிகை.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:16 AM
#598
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் மீண்டும் பாக்யராஜ்
கலைஞர் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் `விளக்கு வெச்ச நேரத்திலே.' இந்தத் தொடருக்கு கதை, திரைக்கதையுடன் வசனமும் எழுதுகிறார் டைரக்டர் கே.பாக்யராஜ். நீண்ட இடை வெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அவர் கதை- வசனம் எழுதும் தொடர் இது.
தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ். இசை: தேவா, பாடல்: வைரமுத்து.
கேமராவை பொன்ஸ் சந்திரா கையாள, சி.ரங்கநாதன் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:16 AM
#599
Moderator
Diamond Hubber
மணமேடை
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நேர்காணல் நிகழ்ச்சி ``மணமேடை.'' இதில் நவீன கால திருமண போக்குகள் குறித்து விவாத மேடை நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில், வரன்கள் பற்றியும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைத்துணை குறித்து எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் மற்றும் பயோடேட்டா ஆகியவை இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகையும், பிரபல கர்நாடக இசைக்கலைஞருமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்குகிறார். திருமண தகவல் இணையதளமான பாரத் மேட்ரிமோனியலின் ஓர் அங்கமான தமிழ் மேட்ரிமோனி.காம் தயாரித்து வழங்குகிறது.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:17 AM
#600
Moderator
Diamond Hubber
இந்த வாரம் `குத்து சுற்று'
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜுனியர்-2 நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் செல்லக்குரலுக்கான தேடல் நடைபெற்று போட்டியின் இறுதிகட்டத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறுவர்களில் இருந்து 25 பேர் முக்கியப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இவர்களுக்கிடையே பலவிதமான குரல் தேர்வுக்கான போட்டிகள் நடைபெற்று சிறந்த குழந்தையை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விட்டது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான முக்கிய நடுவர்களாக பின்னணி பாடகர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா ஆகியோர் இடம் பெறுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகளும் தங்கள் பாடும் திறனை இந்த பிரபல பாடகர்கள் முன் நிரூபிக்க வேண்டும். இவர்களின் திறமையை மதிப்பிடவும் அவர்களுக்கு பல டிப்ஸ்களையும் கொடுக்கவும் இந்த பிரபல பின்னணி பாடகர்கள் களத்தில் இறங்குகின்றனர்.
வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியில் `குத்து சுற்று' இடம் பெற உள்ளது. இதில் சிறுவர்கள், திரைப்படங்களில் வந்த பிரபல குத்துப் பாடல்களை நடுவர்கள் முன் பாட உள்ளனர்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். பின்னணி பாடகி திவ்யா தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
Bookmarks