View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 152 of 159 FirstFirst ... 52102142150151152153154 ... LastLast
Results 1,511 to 1,520 of 1587

Thread: new serials/programs

  1. #1511
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ‛நாகினி-க்கு போட்டியாக ‛மாய மோகினி : விஜய் டி.வியில் புதிய திகில் தொடர்


    "டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி எங்கள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்" என்று ஒரு புறம் சின்னத்திரை நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னொரு புறம் முன்னணி சேனல்கள் போட்டிபோட்டுக் கொண்டு இந்தி சீரியல்களை இறக்குமதி செய்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. முன்னணி சேனல் ஒன்று ஒளிபரப்பி வரும் நாகினி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதையொட்டி அதே போன்ற ஒரு பேண்டஸி திகில் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. இந்தியில் பிரபலமான திகில் தொடரை வாங்கி அதனை மாய மோகினி என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது.


    இரண்டு பெண்கள் முக்கிய கதாபாத்திரம். ஒருவனை தீவிரமாக காதலிக்கும் பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். ஆனால் அவளின் ஆன்மா அந்த இளைஞனையே சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த இளைஞனுக்கு திருமணமாகிறது. மனைவியின் ஆன்மா மூலம் அந்த இளைஞனோடு வாழ துடிக்கிற பெண்ணின் கதை. "உள்ளே உருவம், வெளியே அருவம் விளங்க முடியாத அதிசயம் நான்" என்பதுதான் அந்த கேரக்டரின் தாராக மந்திரம். "அவள் தொடுவாள் நான் பரவசமாவேன், அவள் உடல் நான் உயிர்" என்பது கேரக்டரின் தன்மை.


    மாயமோகினி வருகிற 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு ஒளிப்பாகிறது. இந்த மாயமோகினி அந்த நாகினியை வெல்வாளா என்பது ஒரு சில வாரங்களில் தெரிந்துவிடும்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1512
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தயாராகிறது நாகினி இரண்டாம் பாகம்


    வட நாட்டு சேனலான கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பான பரபரப்பு தொடர் நாகினி. மந்திர தந்திரங்கள் நிறைந்த சமூக கதை. நல்ல பாம்பு பெண்ணுக்கும், கெட்ட பாம்பு பெண்ணுக்கும் நடக்கிற மோதல் கதை. கதையை விட அதில் நடித்திருக்கும் அழகான பெண்களுக்காக ஆண்களையும் பார்க்க வைத்த சீரியல். குறிப்பாக ஹீரோயின் மவுனி ராயின் காந்த கண்கள் பிரபலம்.


    அர்ஜுன், பிஜ்லானி, அதா கான், சுதா சந்திரன் நடித்துள்ள இந்த தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கி கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இந்த தொடர் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.


    இந்த நிலையில் நாகினி தொடருக்கு இந்தியில் கிடைத்த வரவேற்பினால் அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி உள்ளது. வருகிற 8ந் தேதி முதல் கலர்ஸ் டி.வியில் ஒளிபரப்பாகிறது. இதிலும் மவுனிராயின் கவர்ச்சியும், கலாட்டாவும் கலக்க இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாகி வரும் நாகினி முதல் பாகம் முடிந்ததும். அப்படியே இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்புகிறார்கள். ரசிகர்களை சினிமாவில் பேய் பிடித்து ஆட்டுகிறதென்றால் சின்னத் திரையில் பாம்பு பிடித்து ஆட்டுகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #1513
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    இலங்கையில் உருவான காக்க காக்க




    ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் பக்தி தொடர் காக்க காக்க. இதில் தீபா, சூசன், கமல், ஜீவாரவி, எஸ்.வி.எஸ்.குமார், அகில், கிஷன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சரவணன் மீனாட்சி தொடரை இயக்கிய விஜய் இயக்குகிறார். அஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.


    இது முருகனின் மகிமை கூறும் பக்தி தொடர். சூரபத்மனை அழிப்பதற்காக அன்னை பார்வதி தன் சக்தி அனைத்தையும் ஒரு வேலுக்குள் வைத்து அதனை முருகனுக்கு கொடுக்கிறார். அந்த வேலுக்கு பின்னால் பல மர்மங்களும், புதிர்களும் இருக்கிறது என்பதை பேண்டசியாக சொல்லும் சமூக கதை.


    இதன் படப்பிடிப்புகள் திருச்செந்தூர் முருகன் திருத்தலத்திலும், இலங்கையில் உள்ள கதிர்காமகம், கொழும்புவில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்துள்ளது. தொடர்ந்து புகழ்பெற்ற முருகன் திருத்தலங்களில் படமாக உள்ளது. ராதிகாவுக்கு பிறகு இலங்கைக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியிருப்பது காக்க காக்க யூனிட்தான். இந்த தொடர் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #1514
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மருது சகோதரர்களின் பிரமாண்ட வரலாற்றுத் தொடர் தென்பாண்டி சிங்கம்

    கலைஞர் டி.வி தனது 10வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி தென் பாண்டி சிங்கம் என்ற பிரமாண்ட வரலாற்றுத் தொடரை இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது. ரோமாபுரி பாண்டியன் வரலாற்று தொடருக்கு பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில் ஒளிப்பாகும் தொடர். தென் பாண்டி சிங்கம் என்ற பெயரில் அவர் எழுதிய நாவல் இப்போது தொடராகி இருக்கிறது.


    18ம் நூற்றாண்டில் சிவகங்கையை தலைநகராக கொண்டு நல்லாட்சி செய்த மருது சகோதரர்களின் கதை. 1801 முதல் 1857 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் கதை. ரோமாபுரி பாண்டியனை தயாரித்த குட்டி பத்மினியே இதையும் தயாரிக்கிறார். கருணாநிதியின் ராமானுஜர் தொடரையும் இவரே தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #1515
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மெட்டிஒலி திருமுருகனின் அடுத்த மெகா சீரியல்!


    மெட்டிஒலி சீரியலை இயக்கி பிரபலமானவர் திருமுருகன். அதையடுத்து அவர் இயக்கிய நாதஸ்வரம் தொடரும் பிரபலமான நிலையில், தற்போது குலதெய்வம் சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலைத் தொடர்ந்து அவர் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி சில முன்னணி நடிகர்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தவர்கள் யாரும் கால்சீட் தரவில்லையாம்.


    அதனால் குலதெய்வம் சீரியலை இன்னும் இரண்டு மாதத்தோடு நிறுத்தி விட்டு, அடுத்தபடியாக மெட்டி ஒலி ரேஞ்சுக்கு இன்னொரு மெகா சீரியலை இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் திருமுருகன். அதோடு, இதற்கு முன்பு தான் இயக்கிய சில சீரியல்களில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்த அவர், புதிய சீரியலில் பிரபலமான சீரியல் நடிகர் நடிகைளை நடிக்க வைக்கப்போகிறாராம். அதற்கான தேர்வினை தற்போது தொடங்கியிருக்கிறார் திருமுருகன்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #1516
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சுந்தர்.சி தயாரிக்கும் மெகா சீரியல்


    இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சுந்தர்.சி. இப்போது அவர் பரபரப்பாக படங்களில் நடிப்பதில்லை. படத்தயாரிப்புக்கும் பிரேக்விட்டிருக்கிறார். 'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தற்போது 'சங்க மித்ரா' என்ற படத்தை இயக்குகிறார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இது சுந்தர்.சிக்கு இலட்சிய படமாம். எனவே அந்தப் படத்தின் பிரீ புரடக்ஷன் பணியில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவரை நம்பி பல கோடி ரூபாயை கொட்டி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். காரணம் இது அவர்களது 100வது படம். எனவே தான், ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.


    இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ்பதிப்பில் சூர்யா நடிக்க மறுத்தவிட்டதால், தற்போது ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு மொழிகளில் பிரம்மாண்ட படம் என்பதால் இரண்டு வருடம் ஆகும் என்பதால், கிடைக்கும் இடைவெளியில் டிவி சீரியல் தயாரிப்பு ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் சுந்தர்.சி.


    நான்கு தென்னிந்திய மொழிகளில் இந்த சீரியல் உருவாகிறது. 'தேவ சேனா' என இந்த டிவி சீரியலுக்கு பெயரிடப்பட்டிருக்கிறாராம். இந்த மெகா ஹாரர் தொடரை ராஜ் கபூர், செல்வா இணைந்து இயக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #1517
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புதுயுகத்தில் மதன் வழங்கும் மனிதனும் மர்மங்களும்


    பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் மதன் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய புத்தகம் மனிதர்களும் மர்மங்களும். மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத அமானுஷ்ய சக்திகள் பற்றி எழுதியிருந்தார். இப்போது அதனையே தொலைக்காட்சி நிகழ்ச்சியாக வழங்குகிறார்.


    ஆவிகள், பேய்கள், பறக்கும் தட்டுகள், வேற்று கிரகவாசிகள். பெர்முடா முக்கோண ரகசியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுவது, மனோசக்தியால் மனித மூளையை கட்டுப்படுத்துவது, பூர்வ ஜென்ம நினைவுகள், டைம் மிஷின் மூலம் காலத்தை கடந்து செல்வது என பல நிகழ்வுகளை காட்சி தொகுப்புகளுடன் ஆதாரத்துடன் பேச இருக்கிறார் மதன்.


    "உலகில் மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட ஆச்சர்யமமான, அதிசயமான நம்ப முடியாத பல சம்பங்கள் இந்த நிகழ்ச்சியில் காட்சிகளாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக பல ஆண்டுகள் முயற்சி செய்து காட்சிகளை சேகரித்திருக்கிறோம். அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசினாலும் அறிவுபூர்வமான நிகழ்ச்சியா இது இருக்கும் என்கிறார் புதுயுகம் டிவியின் நிகழ்ச்சி அதிகாரி இக்கி. நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #1518
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டி.வியின் அடுத்த அதிரடி - காவிய நேரம்


    டப்பிங் சீரியல்கள் இறக்குமதியால் தமிழ் கலைஞர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் முன்னணி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு டப்பிங் சீரியல்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.


    இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி விஜய் டி.வி. அடுத்த அதிரடியை ஆரம்பிக்கிறது. தனித்தனி நேரங்களில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியர்களை காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை தொடர்ச்சியாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கு காவிய நேரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.


    காலை 8 மணிக்கு மகாதேவ், 9 மணிக்கு சீதையின் ராமன், 9.30 மணிக்கு மங்கையின் சபதம், 10 மணிக்கு கிரன்மாலா, 10.30க்கு என்னுடைய தோட்டத்தில், 11 மணிக்கு அம்மா, 11.30க்கு என்றும் அன்புடன் என தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிறது. வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் தொடங்கும் இந்த காவிய நேரம் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும்.




    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #1519
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சொல்வதெல்லாம் உண்மை'-க்கு போட்டியாக ‛நிஜங்கள்


    தெலுங்கு சேனலான ஜெமினியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ரக்ஷா பந்தா. இந்த நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். அதற்கு தீர்வு காண முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் பேசி, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்வு காணும் நிகழ்ச்சி.


    இப்போது தமிழில் அப்படியே ரீமேக் செய்கிறார்கள். நிஜங்கள் என்ற தலைப்பில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். முன்னணி சேனலில் தினமும் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தேர்வும், தேர்வு பெற்றவர்களுக்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. விரைவில் இது ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இன்னோரு வடிவம்தான் நிஜங்கள்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #1520
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண் வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் டி.வி.நடிகர்கள்


    திரைப்பட நடிகர்களுக்கு பெண் வேடம் போடுவதில் எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். கமலஹாசன் அவ்வை சண்முகி படத்தில் பெண்ணாகவே நடித்தார், ரஜினி, பிரசாந்த், சத்யராஜ், வடிவேலு உள்பட அத்தனை பேரும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். தற்போது இருமுகன் படத்தில் விக்ரமும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனும் பெண் வேடம் போட்டுவிட்டார்கள். ஹீரோக்கள் பெண் வேடம் போட்டால் அந்த படம் ஹிட் என்கிற செண்டிமெண்டும் சினிமாவில் இருக்கிறது.


    தற்போது சின்னத்திரை நடிகர்களும் பெண்வேடமிட்டு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை தொடங்கி வைத்திருப்பவர் மதன். ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியல் பரபரப்பாக போய்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ரம்யாக கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்கள்.


    சமீபத்திய கதைப்படி நந்தகுமாரை கொலை செய்து விட்டதாக நம்பும் மதன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். பல வேடங்கள் போட்டு மறைந்து வாழும் மதன், தற்போது பெண் வேடம் போட்டிருக்கிறார். இந்த வேடத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாலும் மதன் பெண்ணாக நடிப்பதில் வெளுத்துகட்டுவதாலும் இன்னும் பல எபிசோட்களுக்கு பெண் கேரக்டரை நீட்டிப்பார்கள் என்று தெரிகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •