-
8th September 2014, 05:32 AM
#1411
Moderator
Diamond Hubber
ஆண்டாள் அழகரில் இளையராஜா இசை!
செப் 8-ம் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஆண்டாள் அழகர். இது மண்மனக்கும் கிராமிய தொடர். காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாட்டு கிராமிய கலாச்சாரத்தோடு சொல்லப்படுகிற காதல், செண்மெண்ட் கதை. கல்யாணி, பாலா, ரம்யா, ஸ்டாலின் நடிக்கிறார்கள். கதிரவன் இயக்குகிறார்
"இந்த தொடர் பாரதிராஜா சார் பாணியில் சொல்லப்படும் அழகான கிராமத்து காதல் கதை. மண்மனம் மாறாத கிராமத்து கலாச்சாரத்தின் பதிவாக இருக்கும்" என்றார் இயக்குனர் கதிரவன்.
இந்த தொடரின் புரமோஷன் பாடலாக இளையராஜாவின் "அம்மன் கோவில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலோ..." என்ற பாடல் பயன்படுத்ததப்படுகிறது. அதேபோல படத்தின் முக்கியமான காட்சிகளில் புகழ்பெற்ற இளையராஜாவின் பின்னணி இசையை பயன்படுத்துகிறார்கள்.
நன்றி: தினமலர்
-
8th September 2014 05:32 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 03:23 AM
#1412
Moderator
Diamond Hubber
ஜீ தமிழ் டிவியில் அமலா நடிக்கும் ‘உயிர் மெய்’ மெகா தொடர்…
தமிழ் தொலைக்காட்சிகளில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் ‘உயிர் மெய்’.
மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துவமனையை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கியுள்ள மருத்துவத் தொடரே இந்த ‘உயிர் மெய்’ தொடர்.
தயானந்த் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனரான தயானந்தின் வாழ்க்கைக் கனவுதான் இம் மருத்துவமனை. உலகத் தரத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இம்மருத்துவமனையில் அனைத்து மருத்துவ பிரிவுகளும் இருந்தாலும், இதன் அவசர சிகிச்சைப் பிரிவு மற்ற மருத்துவமனைகள் பார்த்து பொறாமைப்படும் விதத்தில் போற்றத்தக்கதாக அமைந்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர்.கவிதா சந்தீப். இவருக்கு கீழே பணியாற்றும் டாக்டர்.புவனா நடராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். கரண் பெல்லா, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.மனோ அருண்மணி, அமெரிக்காவில் மருத்துவம் படித்துவிட்டு அறுவை சிகிச்சையில் பயிற்சி எடுக்க வந்திருக்கும் டாக்டர்.தமிழ்ச் செல்வன், அவசர சிகிச்சை பிரிவு நர்ஸ்.ஜென்னி, ஆகியோரே இத் தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள். இவர்களைத் தவிர முன் அலுவலகத்தில் பணி புரியும் ஏழுமலை, பன்னீர் செல்வம் மற்றும் இதர நர்ஸுகள் சரளா, வித்யா, சுமதி, இப்படி அனைவருமே நமது சமுதாயத்தின் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை நினைவூட்டுவர்.
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரமான நடிகை அமலா இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது,
“சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், ‘உயிர் மெய்’ தொடரின் கதையைக் கேட்ட பிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகக் கூறுகிறார். மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக் கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார். இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் ‘உயிர் மெய்’,” என அமலா கூறுகிறார்.
டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பற்றி அவர் பற்றி கூறும் போது, “பொதுவாக ஒரு மருத்துவமனையில், ஒரு நோயாளியை கவனிக்கும் டாக்டர், அவர் கையாளும் மருத்துவத்தை விட, அவரது கருணையும், ஆதரவும், நம்பிக்கை வார்த்தையுமே அந்த நோயாளியை பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடையச் செய்யும் என மருத்துவர்களின் மகத்துவத்தை உயர்வாகக் கூறுபவர், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதே பெருமையென்கிறார்.
‘உயிர் மெய்’ தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவ மனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.
இந்த உயரிய படைப்பான ‘உயிர் மெய்’தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவை அருண் மொழி ஏற்க, கதை, திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது. இத்தொடர் பற்றி இவர்கள் கூறும் போது, “இது கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் புதிய உணர்வை உருக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான தொடர் போல் அல்லாமல், நேயர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு படைப்பாகவும், ஒவ்வொரு காட்சியும் அழகு பட பார்ப்பவர் மனதை வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கி வருகிறோம் எனக் கூறுகின்றனர்.
இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட இப்படியொரு புதுமையான தொடரை படைப்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சி பிசினஸ் ஹெட் என்.எஸ். ஈஸ்வரன் கூறும்போது, ‘உயிர் மெய்’ தொடர் கட்டாயமாக மக்கள் குடும்பத்தோடு, பார்த்து ரசித்து, அவர்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் உணர்வை சொல்லும் இத்தொடர் பார்ப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் தொடராக அமையப்போவது உறுதி, எனக் கூறுகிறார்.
குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
-
13th September 2014, 10:48 PM
#1413
Moderator
Diamond Hubber
தமிழில் டப் ஆகிறது சிம்ரனின் தெலுங்கு சீரியல்
2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை சிம்ரன் தெலுங்கில் நடித்து ஒளிபரப்பான சீரியல் சுந்தரகாண்டம். இதில் சிம்ரனுடன் சுஜிதா, ரிஷி, சத்யசாய், நடித்திருந்தனர். இது முற்றிலும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பிரமாண்ட சீரியல். அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நியூஜெர்சி, புரூக்ளின் நகரங்களில் கதை நடக்கிறது. இந்தியாவிலிருந்து திருமணமாகி செல்லும் சுஜிதாவின் கணவன் ரிஷி அமெரிக்காவில் தவறான பிசினஸ் செய்கிறான். அது பிடிக்காத அவளை கொடுமைப்படுத்துகிறான். அவனிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் சுஜிதா சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. அந்த பெண்ணுக்கு உதவும் பெண்ணாக சிம்ரன் நடிக்கிறார். இந்த தொடர் அசோகவனம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு நாளை (செப் 15) முதல் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
20th September 2014, 01:25 AM
#1414
Moderator
Diamond Hubber
ஏவிஎம் வழங்கும் புதிய தொடர் மோகினி
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், தற்போது தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறது. அவள் ஒரு மின்சாரம், மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், உறவுக்கு கை கொடுப்போம், சம்சாரம், சவாலே சமாளி, வைர நெஞ்சம் சீரியல்களுக்கு பிறகு இப்போது புதிதாக தயாரிக்கும் சீரியல் மோகினி.
இதில் ராஜா, பெரோஸ்கான், சரத்குமார், சஞ்சய் குமார், சிவரஞ்சனி, ஸ்ரீப்ரியா, சுஜாதா, யமுனா நடிக்கிறார்கள். வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரமணி பரத்வாஜ் இசை அமைக்கிறார். ஆர்.கே.பி. இயக்குகிறார். ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் தயாரிக்கிறார்கள்.
"இது வழக்கமான நெடுந்தொடர்களிலிருந்து வித்தியாசமானது. அழுது வடியும் கேரக்டர்கள் இல்லாமல் கதைக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றவர்களின் விருப்பத்துக்காக காதலித்தவனை கைவிட்டுவிட்டு அவனது நண்பனை மணந்து கொள்ளும் மோகினி முதலிரவில் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்கிறாள். அதன் பிறகு அவள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது" என்று ஏவிஎம் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
நன்றி: தினமலர்
-
2nd October 2014, 07:13 PM
#1415
Moderator
Diamond Hubber
நீலாம்பரி.
தனியொரு பெண்ணாக இருந்து, தன்னுடைய மூன்று மகன்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வருகிறார் நீலாம்பரி.
தன்னுடைய மருமகள்களும் தனக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும் என்று நினைப்பவர், முதல் இரண்டு மருமகள்களையும் அவ்வாறே அடக்கி ஆள்கிறார்.
ஆனால், மூன்றாவதாக வந்த மருமகள் மட்டும் நீலாம்பரிக்குப் போட்டியாக இருக்கிறார். இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தாமல், தனது தேவைகளை சாதித்துக் கொள்வதோடு, மாமியாரின் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
மாமியார் - மருமகள் இடையிலான உறவினை அழகிய கதையாக காட்சிப்படுத்தும் "நீலாம்பரி' தொடர், மக்கள் தொலைக்காட்சியில்
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Last edited by aanaa; 2nd October 2014 at 07:15 PM.
"அன்பே சிவம்.”
-
2nd October 2014, 07:14 PM
#1416
Moderator
Diamond Hubber
ஒரு கை ஓசை
கணவன் பாலு விட்டுச்சென்ற பிறகு நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார் வசந்தி.
ஆனால், பாலுவோ மாயா என்ற பெண்ணுடன் ஊட்டியில் இன்பமாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், வசந்தியின் மூத்த மகள் நிகிதா பெரியவளாக, அதற்குரிய சடங்குகளைக் கூட வசந்தியால் முறையாக நடத்த முடியவில்லை. சாத்தப்பனின் அறிவுரைக்கிணங்க, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பாலுவிடம் வற்புறுத்துகிறார் மாயா.
அதைத் தட்டிக் கழிக்க முடியாமல், திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார் பாலு. "ஒரு கை ஓசை' தொடர்கதையை எழுதுவது யார் என்று தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் விக்ரம், அதைச் சொல்வதற்காக வசந்திக்குப் போன் செய்ய, வசந்தியோ விக்ரமிடம் பேசாமல் தவிர்க்கிறார்.
பாலு - மாயா திருமணம் நடந்ததா? கதையை எழுதுவது யார் என்று வசந்தி அறிந்து கொண்டாரா? பாலு எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதை அடுத்தடுத்த வாரங்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு "ஒரு கை ஓசை' தொடர் ஒளிபரப்பாகிறது.
-
2nd October 2014, 07:16 PM
#1417
Moderator
Diamond Hubber
இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு, முக்கியமான திரைப்படங்கள், திரையுலக பிரச்னைகள், சாதனைகள், சந்திக்கும் சோதனைகள் என சினிமா பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி ஆராயும் நிகழ்ச்சி "சினிமா 360 டிகிரி'.
முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமின்றி, சாதிக்கக் காத்திருக்கும் புது வரவுகள், புதிய படங்களின் கலைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபெறும் சிறப்பு நேர்காணலும் இடம்பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை பாலாஜி தொகுத்து வழங்குகிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கலாம்.
-
6th October 2014, 08:47 PM
#1418
Moderator
Diamond Hubber
சன் தொலைக் காட்சியில்
சந்திரலேகா
இன்று முதல் ( 06 -10 - 2014)
Actress Shwetha Rao talks about the brand new serial Chandralekha which is to be aired on Sun TV from Oct 6, 2014. Chandralekha is about two girls who have different characters & status. Who manages to achieve their goal after crossing paths with each other is the rest of the story. Cast: Shwetha Rao, Nagasri, Meenakumari, Bhuvaneshwari, Surekha, Rishi, Sakshi Siva, Suresh Krishnamoorthy, Dubbing Janaki, Thyagarajan Lyricist: V Saravana Raja Dialogues: Bala Thangam Story: R Selvapandi Music: X Paulraj Screenplay: KS Udhaya Sankar Director: Nimesh Producer: Saregama
Last edited by aanaa; 31st October 2014 at 06:53 AM.
"அன்பே சிவம்.”
-
12th October 2014, 08:50 PM
#1419
Moderator
Diamond Hubber
அமெரிக்காவில் படமான ‘அசோக வனம்’ தொடர்…
‘புது யுகம்’ தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 6ம் தேதி, திங்கள் முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் ‘அசோகவனம்’.
ஜி3 மீடியா ஒர்க்ஸ் சார்பாக மங்களம் தியாகராஜன் இத் தொடரை தயாரிக்கிறார். சிம்ரன், சுஜிதா, ரிஷி, சத்யசாய், பவானி மற்றும் பலர் இத் தொடரில் நடிக்கிறார்கள்.
நியூயார்க், நியூ ஜெர்ஸி, புரூக்ளின் போன்ற அமெரிக்க நகரங்களில் இத் தொடர் படமாக்கப்பட்டுள்ளதால் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சித் தொடர்களில் நிச்சயம் ஒரு புதுப்பொலிவைத் தரும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்க பிசினஸ்மேனான ரிஷிக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார் சுஜிதா. அங்கு சென்ற பிறகுதான் தான் நினைத்து வந்த கணவராக ரிஷி இல்லை என்பது சுஜிதாவிற்குத் தெரிய வருகிறது. அதோடு மட்டுமல்லாது அவருடைய மாமனார் குடும்பத்தைச் சேர்ந்தர்வகளுடைய நடவடிக்கைகளும் சுஜிதாவுக்கு அதிர்ச்சியாக அமைகிறது. அவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். எதுவுமே தெரியாத ஒரு புதிய இடத்தில் சிக்கிக் கொள்ளம் சுஜிதா அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அப்போதுதான் சிம்ரன் ரூபத்தில் சுஜிதாவுக்கு உதவி கிடைக்கிறது. அவரின் உதவியால் அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப வரும் சுஜிதாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘அசோக வனம்’ படத்தின் கதை.
இத் தொடரை புது யுகம் டிவியில் வரும் திங்கள் முதல் இரவு 8 மணிக்கு காணத் தவறாதீர்கள்…
-
15th October 2014, 08:22 AM
#1420
Moderator
Diamond Hubber
Bookmarks