-
25th August 2013, 09:22 PM
#1361
Moderator
Diamond Hubber
காற்றாய் வருவேன்
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘காற்றாய் வருவேன்’ தொடர், முற்றிலும் எதிர்பாராத கதைக்கோணத்தில் வேகம் பிடிக்கிறது.
வித்தியாசமான, அதேநேரம் ஊகிக்கவே முடியாத கதையமைப்பு இந்த தொடரின் ஸ்பெஷல். தொடர்கள் ஒளிபரப்புவதை முடிந்தவரை தவிர்க்கும் மக்கள் தொலைக்காட்சி, இந்த தொடரை ஒளிபரப்ப முன்வந்ததன் பின்னணியிலும் தொடரின் பாசிட்டிவான கதைக்களம் தான் இடம் பிடித்திருக்கிறது.
நட்சத்திரங்கள்: வினோதினி, சதீஷ், மேனகா, பேபி ரித்திகா. இவர்களில் பேபி ரித்திகா குட்டி பத்மினியின் கலைவாரிசு என்பது குறிப்பிடத்தக்கது..
தயாரிப்பு: குட்டி பத்மினி.
நன்றி: தினதந்தி
-
25th August 2013 09:22 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2013, 06:47 AM
#1362
Moderator
Diamond Hubber
-
4th September 2013, 06:30 AM
#1363
Moderator
Diamond Hubber
என்னை எனக்கே தெரியாமல்...
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘குறிஞ்சிமலர்’ தொடர்.
கல்பனா திறமையானவள், தைரியமானவள். ஆனால் கனவு வாழ்க்கையில் வாழ்பவள். சிநேகா, இயல்பானவள். அப்பாவுக்கும் அவள் நேசிக்கும் அம்மாவுக்கும் கட்டுப்படுபவள். கவிதா, கனவும் இல்லாமல், இயல்பும் இல்லாமல் வேறு ஒரு தனித்தன்மையுடன் வாழ்பவள். இந்த மூவருக்கும் ஒரு விஷயம் தெரியாது; இவர்கள் யார் என்று!
தேவராஜ், ஊருக்கு உபதேசம் செய்பவர். ஆனால் அவருக்கு அவர் யார் என்று புரியாது. சத்யமூர்த்தி வழக்கறிஞர், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் வழக்கு புதிரானது. இத்தனை பேர்களின் வாழ்க்கை தான் குறிஞ்சி மலர்.
நடிகர்கள்: ஐஸ்வர்யா, புஷ்பலதா, லதாராவ், ராஜசேகர், சுமங்கலி, நேசன்.
ஒளிப்பதிவு: தனபால். கதை, திரைக்கதை: தேவிபாலா. ஆக்கத்தலைமை: குயில்மொழி. தயாரிப்பு: குயில் கலைக்கூடம். உரையாடல், இயக்கம்: விடுதலை.
நன்றி: தினதந்தி
-
4th September 2013, 06:31 AM
#1364
Moderator
Diamond Hubber
வம்சம்...
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘வம்சம்’ தொடர், தொடக்கம் முதலே வேகம் பிடிக்கத் தொடங்கி விட்டது.
கோடிகோடியாக செல்வமிருந்தும் சொந்தபந்தம் இல்லாத காரணத்தால் இளம்பெண் சக்தியின் திருமண பேச்சு தடைபடுகிறது. அதற்காக ஒரு சராசரி பெண்ணாக அழுது புலம்பாமல், தனது உறவுகளைத் தேடி கிராமத்திற்கு புறப்படுகிறாள் சக்தி.
முப்பது வருட பகையை ஒரே நாளில் தணிப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த சக்தி.. தாய்மாமா போலீஸ் கமிஷனர் வெற்றிவேல் அண்ணாச்சி (விஜயகுமார்) வீட்டிற்குள் நுழைகிறாள்... மருமகள் சக்தியாக அல்ல... சாதாரண சமையல்காரி சக்தியாக!
இயல்பாகவே நல்லவரான அண்ணாச்சி மனதைக் கவர முடிந்த சக்தியால், அவளது அப்பா வழி அத்தை நாகவல்லியின் (வடிவக்கரசி) நல்லெண்ணத்தை சம்பாதிப்பது அத்தனை சுலபமாக இல்லை. காரணம் அண்ணாச்சியும் நாகவல்லியும் பரம வைரிகள். பக்கத்தில் வந்தால் தான் பற்றிக்கொள்ளும் பஞ்சு நெருப்பு பகை அல்ல– தூரத்தில் இருந்து பார்த்தாலே பற்றி எரியும் பாஸ்பரஸ் பகை.
காட்டுத்தீ பகையை, பக்கெட் தண்ணீரால் அணைக்க முடியாது என்பது சக்தியை உணர்த்தியது. அழகுதுரை கொலை! மகனை இழந்த நாகவல்லி, பதிலுக்கு அண்ணாச்சி மகள் உத்ராவையே தனது வீட்டில் சிறைப்பிடித்து விடுகிறாள். அண்ணாச்சியை வெறுத்து நாகவல்லி வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உத்ராவை எப்படி காப்பாற்றுவது என சக்தி திட்டமிடுகையில், அடுத்த இலக்காக நாகவல்லி குறி வைத்திருப்பது அண்ணாச்சி மகன் டாக்டர் ஜெயவேலுவுக்கு என்பது தெரிய வருகிறது.
நாகவல்லியின் ‘ஆக்டோபஸ் பிடி’யிலிருந்து ஜெயவேலுவை சக்தி காப்பாற்றுவாளா? சக்திக்கு அவசர நிச்சயதார்த்தம் நடந்தது அறியாமல் அவளையே சுற்றி சுற்றி வரும் நாகவல்லி மகன் துரைப்பாண்டியனின் காதல் என்னவாகும்? அழகு துரையை கொலை செய்தவனை போலீஸ் நெருங்கி வருகையில், கொலைகாரன் உத்ராவை சந்திக்க வருவதன் மர்மம் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள், வரும் வாரங்களில்..
தொடரின் நட்சத்திரங்கள்: ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், வடிவுக்கரசி, சீமா, காவேரி, தருண் மாஸ்டர், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ஷ்யாம் கணேஷ், சத்யப்ரியா, ஸ்ரீலேகா, சதீஷ், ‘ஊர்வம்பு’ லட்சுமி. திரைக்கதை: சித்திக் ஜஷ்வர்யன். ஒளிப்பதிவு: விஜய். இயக்கம்: சி.ஜே.பாஸ்கர்
நன்றி: தினதந்தி
-
7th September 2013, 06:28 AM
#1365
Moderator
Diamond Hubber
சரவணன் – மீனாட்சி
விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’தொடர் ஐநூறாவது எபிசோடை எட்டவிருக்கிறது.
சரவணன் சென்னையின் ரேடியோ ஜாக்கியாகவும், மீனாட்சி திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியின் பள்ளி ஆசிரியையாகவும் கதை ஆரம்பமானது. சரவணனுக்கு பெண் தேடும் படலம் ஆரம்பிக்க அவர்கள் கல்லிடைக்குறிச்சிக்கு செல்கின்றனர்.
பெண் பார்க்கும் படலத்திற்கு முன்னதாகவே அந்தப் பெண்ணைப் பார்த்து விடும் ஆவலில் அவள்வேலை பார்க்கும் பள்ளிக்கே போய் விடுகிறான், சரவணன். பார்த்த மாத்திரத்தில் மீனாட்சியின்அழகுஅவனை கட்டிப்போட்டு விடுகிறது. ஆனால் பள்ளி முடிந்ததும் அவள் வேறொரு ஆணுடன் பைக்கில் செல்ல, அது அவளது காதலன் என்று ஒருவர் சொல்ல, சரவணன் கோபமாகிறான். அதனால் பெண் பார்க்கும் படலம் அவனால் ரகளைக் களமாகிறது.
ஆனால் மீனாட்சி, தான் பைக்கில் சென்றது உண்மை என்றும், சரவணன் சண்டையிட்டதில் உண்மை இருக்கிறது என்றும் கூற, அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் உண்மையைக் கூறியதைக் கண்டு மனம் மாறுகிறான். மீனாட்சியுடன் திருமணமும் ஆனது.
திருமணத்துக்குப்பின் சரவணனுக்கும் மீனாட்சிக்கும் என்னவாயிற்று? அவர்கள் இதுவரை போட்ட சண்டையில் காதலும், ஊடலும் இருந்தது. ஆனால் இப்போதைய சண்டை அப்படியல்ல. சரவணன் மனதளவில் மிகுந்த பாதிப்படைந்து மீனாட்சி மேல் வெறுப்பில் இருக்கிறான். இது இவர்கள் வாழ்க்கையின் முடிவா தொடக்கமா...? கிளைமாக்சை நெருங்கும் தொடரில், ஐந்து வாரங்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்கலாம்.
நன்றி: தினதந்தி
-
7th September 2013, 06:29 AM
#1366
Moderator
Diamond Hubber
பாமா விஜயம்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘‘பாமா விஜயம் தொடர், 100 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது.
பாமா–விஜயா இருவரும் மாமியார்–மருமகள். இருவரும் செய்யும் லூட்டிகளும், காமெடிகளும் இத்தொடரை கலகலப்பாக வைத்திருக்கிறது. அத்தை நான் தான் அறிவாளி என்க, மருமகளோ உங்களை விட நான் தான் அறிவாளி என்று மல்லுக்கு வர, முட்டி மோதிக்கொள்கிறார்கள். தினமும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு நகைச்சுவை மிளிர தொடர்கிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி
-
7th September 2013, 06:29 AM
#1367
Moderator
Diamond Hubber
சிரித்து சிரித்து...
சன் டிவியில் புதிய வரவான தேனிலவு தொடரில் எடுத்த எடுப்பிலேயே கொடைக்கானல் ஜில்லிப்பை உணர முடிகிறது. மூன்று புதுமணத்தம்பதிகள் தேனிலவு கொண்டாட(!) கொடைக்கானல் வர, அங்கே நடக்கும் அதிரடிச் சம்பவங்களை பரபரவென்று காட்சிப்படுத்துகிற விதத்தில் கூடவே திகிலும் சேர்ந்து கொள்வது தொடரின் பிளஸ். குளுகுளு கொடைக் கானலில் தேனிலவுத் தம்பதியரில் ஒருவராக வந்து பத்தினிப் பெண்ணின் சாபத்தில் மாட்டிக் கொண்டு திருமுருகன் விழிக்கிற இடத்தில் சிரித்து சிரித்து பல் சுளுக்கிக் கொள்கிறது.
நன்றி: தினதந்தி
-
7th September 2013, 06:31 AM
#1368
Moderator
Diamond Hubber
உறவுகள் ஒரு தொடர்கதை
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ‘‘உறவுகள் ஒரு தொடர்கதை.’’
இரு சகோதரிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை அன்றாட நடைமுறை சூழலைக் கொண்டு நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது, தொடர்.
சேத்தன், தேவதர்ஷினி, உமா பத்மநாபன், ஓ.ஏ.கே.சுந்தர், சாருஹாசன், சபீதாஆனந்த் நடிக்கிறார்கள். வரும் திங்கள் முதல் தொடங்கவிருக்கும் இந்த தொடரை பிரியா இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
15th September 2013, 08:30 PM
#1369
Moderator
Diamond Hubber
நட்சத்திரக் கூட்டம் நிறைந்த ‘ரெங்கவிலாஸ்’
ஜெயா டி.வியில் ரெங்கவிலாஸ், வைதேகி, அவள் அப்படித்தான் என 3 புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நட்சத்திரங்கள் நடிக்கும் தொடர் என்ற பெருமை ‘ரெங்கவிலாசுக்கு’ கிடைத்திருக்கிறது. டைரக்டர் மணிபாரதி இயக்கி வரும் இந்த தொடரில் ஜெயசித்ரா, ராதாரவி, வடிவுக்கரசி, டெல்லி குமார், பூவிலங்கு மோகன், அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள்.
‘சின்னத்திரையில் ஒரு சினிமா’ என்ற அடைமொழியுடன் தொடரும் இந்த தொடரின் கதை ஸ்ரீரங்கத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்பும் அங்கேயே நடந்தது. ‘ரெங்கவிலாஸ்’ என்ற பெயரில் உள்ள அந்த பிரமாண்ட வீட்டில் வாழும் கூட்டுக்குடும்பம், அவர்களின் அனுதின ஆசாபாசங்கள் தொடரின் கதைக்களம். ரியல் எஸ்டேட் நடத்திவரும் ஒருவருக்கு அந்த வீடு கண்ணில் பட, தகிடுதத்தம் செய்து அந்த வீட்டை அபகரிக்க முயல்கிறார். முடிவு என்னாகிறது என்பது திருப்புமுனைகளுடன் கூடிய திரைக்களம்.
பஷீர் இயக்கும் ‘வைதேகி’ தொடர் குழந்தைகளின் மெல்லிய உணர்வையும், குழந்தை இல்லாத தம்பதிகளின் வலிய உணர்வுகளையும் சொல்கிறது. ஆண் நடிகர் ஒருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்த தொடரில் நடிகராக அப்பாஸ் நடிக்கிறார், மீனா கார்த்திகா அவரது ஜோடி, வைதேகியாக திரைவலம் வருவது குழந்தை நட்சத்திரம் ஜெனோ.
இளமைக் கனவுகளுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச் செல்வியை விதி சிறைப்பறவை ஆக்குகிறது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துரதிருஷ்டத்திற்கும், துன்பத்திற்கும் அடிபணியாமல் தோல்விகளையும், வேதனைகளையும் ஏணியாக்கி தன் உன்னத லட்சியங்களை வென்றெடுக்கும் ஒரு பெண்ணின் கதையே ‘அவள் அப்படித்தான்’ தொடர்.
தொடரில் தமிழ்ச்செல்வியாக ஈஸ்வரிராவ் நடிக்கிறார். எழுத்து, இயக்கம்:ஆர்.இளவரசன்.
நன்றி: தினதந்தி
-
15th September 2013, 08:31 PM
#1370
Moderator
Diamond Hubber
ஒரு குடும்பத்தின் கதையிது!
மாமனார் திடீர் உடல்நலக் குறைவால் தரையில் விழுந்து கிடக்கிறார். இது தெரியாத மருமகள் பக்கத்து அறையில் இருக்கிறாள். அந்த நேரத்தில் ஷாப்பிங் போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள். பார்த்ததும் பதறியடித்து டாக்டரை வரவழைக்கிறார்கள். அப்போது தான் மருமகளுக்கே மாமனார் மயங்கி விழுந்த விஷயம் தெரிகிறது.
இதனால் மாமனாரை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று மருமகள் மேல் வார்த்தை அம்புகள் பாய்கின்றன. இந்த இடத்தில் பணக்கார வீட்டுப்பெண் நடுத்தர குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதால் நேர்ந்த அலட்சியம் என்ற கோணத்தில் வார்த்தைகள் உரசிக் கொண்டதில் ‘நீ தேவையில்லை. உன் வீட்டுக்கே போய் விடு’ என்று கணவன் சொல்ல...அந்த பெண்ணை முந்திக் கொண்டு மாமனாரே மருமகளுக்காக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் இடத்தில் ஒரு குடும்ப சூறாவளி அப்போதைக்கு சேதாரம் இன்றி முடிந்த அற்புதத்தை உணர முடிந்தது. பாலிமரில் வரும் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ சீரியல் அல்ல..வாழ்க்கை!
நன்றி: தினதந்தி
Bookmarks