-
9th February 2013, 04:03 AM
#1281
Moderator
Diamond Hubber
சரவணன்-மீனாட்சி தொடர்
அப்பாவி கணவன் அடப்பாவி கணவன் ஆனால்...
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரவணன்-மீனாட்சி தொடர்,
இளம் ஜோடிகளுக்கிடையேயான மோதலால் அனல் பறக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சின்னச் சின்ன ஊடல் கூடல்களில் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொண்டிருந்த சரவணன்-மீனாட்சி தம்பதிகளிடையே இப்போது புதிய பிரச்சினை.
சரவணனுடன்அலுவலகத்தில் வேலை செய்யும் அழகுசக்தி, தனது சிநேகிதி மேகியின் பிறந்த நாளை சரவணனின் இல்லத்தில் கொண்டாட விரும்புகிறான். அதற்கேற்ப மேகியின் பிறந்த தினத்தில் ஒரு திருமணத்திற்காக மீனாட்சி வெளியே சென்று விட, அழகு சக்தி தன் சிநேகிதி மேகியுடன் சரவணன் வீட்டுக்கு வருகிறான். கூடவே நடனப்பெண்ணான மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு வந்ததில் தான் சிக்கல் சிறகு விரித்துக் கொண்டது. பார்ட்டியின் உச்சக்கட்டத்தில் டான்சர் மல்லிகா நடனமாட, அவள் விரும்பி கேட்டுக் கொண்டாள் என்பதற்காக அவளுடன் கைகோர்த்து சரவணனும் ஆட, அந்த நேரம் பார்த்தா திருமண நிகழ்ச்சிக்குப் போன மீனாட்சி வீடு வந்து சேர வேண்டும்?
அப்பப்ப சண்டை போட்டாலும் அப்பாவிக் கணவன் என்று எண்ணிக் கொண்டிருந்த மீனாட்சிக்குள், இதைப் பார்த்த மாத்திரத்தில் வெடிக்கிறது ஆத்திரம். இனி என்ன சமாதானம் சொன்னாலும் உன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன் என்று குமுறி விட்டு அப்போதே சூட்கேசும் கையுமாய் பிறந்தகம் போய் விடுகிறாள் மீனாட்சி. தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்களா? அல்லது இந்த மோதல் ஈகோ பின்னணியில் பிரச்சினை இன்னும் சூடாகுமா? பரபரப்பான திருப்பங்களில் ரசிக்க வைக்கிறது தொடர். இயக்கம்: அழகர்.
நன்றி: தினதந்தி
-
9th February 2013 04:03 AM
# ADS
Circuit advertisement
-
9th February 2013, 04:05 AM
#1282
Moderator
Diamond Hubber
கேளடி பெண்ணே! பொதிகையில் புதிய தொடர்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.15 மணிக்கு பொதிகையில் ஏ.கே. கம்யூனிகேஷன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் புதிய தொடர், ‘கேளடி பெண்ணே..!’ பெண்களுக்கான மருத்துவ கல்வி விழிப்புணர்வு தொடரான இது, உயிர் யாரிடம், உங்கள் நினைவிற்கு, கேளுங்கள் சொல்கிறேன் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.
உயிர் யாரிடம்..?
கணவன் மனைவிக்குள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகளை அலசுவது. இதோடு முக்கியமாக இன்றைக்கு பல பெண்கள் படிப்பு, வேலை, வாழ்க்கையில் வசதியாக காலூன்றும் லட்சியம் ஆகிய காரணங்களால் திருமணத்தையும், திருமணத்திற்கு பிறகு குழந்தையைப் பெற்றுக்கொள்வதையும் தள்ளிப் போடுகிறார்கள்? இது நல்லதா? தவறா? இதனைப் பற்றி முழுமையாகவும், முழுவதுமாகவும் அலசும் பகுதி.
உங்கள் நினைவிற்கு...
இதில் மருத்துவ துணுக்குகள், ஆண் பெண் இருவருக்கும் அன்றாடம் நிகழும் மருத்துவ நிகழ்வுகளை மீண்டும் அவர்களுக்கே நினைவுபடுத்தும் பகுதி.
கேளுங்கள் சொல்கிறேன்...
45 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேறு மருத்துவத்தில் ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தான் நேரிடையாக சந்தித்த, சாதித்த மருத்துவ நிகழ்வுகளை நேயர்கள் கேட்கும் வினாக்களுக்கு ஆலோசனையாக வழங்குகிறார், பேராசிரியரும் மருத்துவருமான ஜெயம் கண்ணன். பெண்களின் நலன்களை பெண்களே பேணி காத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் முக்கிய நோக்கம் என்கிறார், தொடரின் தயாரிப்பாளர் அரசு கிருத்திகா.
நன்றி: தினதந்தி
-
9th February 2013, 04:05 AM
#1283
Moderator
Diamond Hubber
பார்த்த ஞாபகம் இல்லையோ-200
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர், இப்போது நேரம் மாற்றப்பட்டு 8.30 மணிக்கே ஒளிபரப்பாகிறது. தற்போது 200-வது எபிசோடை நெருங்கும் இந்த தொடரை தயாரிப்பதோடு கதை எழுதி நாயகியாகவும் நடிக்கிறார், குஷ்பு சுந்தர். கார்த்திக் உருவத்தில் இருந்த ரகுநாத், கார்த்திக்கை கடத்தி அவனை போதைக்கு அடிமையாக வைத்திருக்கிறான். அதேநேரம் கார்த்தி வீட்டில் அவன் மாதிரியே நடித்து அவர்களை நம்ப வைத்து நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறான். இதற்கிடையில் கார்த்திக்கை விட்டே அவன்மனைவி ஓவியாவை கொலை செய்ய அனுப்புகிறான் ரகுநாத். ஆனால் கொல்ல வந்த கணவனிடம் இருந்து உயிர் தப்பிய ஓவியா, கணவன் போதைக்கு அடிமையாகி விட்டதை தெரிந்து அதிர்கிறாள். கணவன் கார்த்திக்கை வில்லன் ரகுநாத்திடம் இருந்து மீட்டு அவனை குணமாக்கவும், ரகுநாத்தை போலீசில் பிடித்துக் கொடுக்கவும் முயற்சி மேற்கொள்கிறாள்.
ஆனால் அதற்குள் ரகுநாத் தப்பி விடுகிறான். தலைமறைவாக இருந்து கொண்டே ஓவியாவுக்கும், அவளது குடும்பத்துக்கும் சிக்கலுக்கு மேல் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான். அந்த சிக்கல்களை முறியடிக்க ஓவியா போராடிக் கொண்டிருக்கிறாள். இந்த போராட்டத்தில் ரகுநாத்தை ஓவியா வென்றாளா என்பது அடுத்தடுத்த திரில் காட்சிகள். ஓவியாவாக குஷ்பு சுந்தர் நடிக்க, கார்த்திக்-ரகுநாத் என இரண்டு வேடங்களில் சீனு நடிக்கிறார். மற்றும் டெல்லிகுமார், ராஜலட்சுமி, டி.ஆர்.லதா, ஷோபனா, சோனியா, சுருதி ரெட்டி, சங்கீதா, ஆதித்யா, தனுஷ், விஜேஷ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம்: எஸ்.அசோக்குமார். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: பிரியன். தயாரிப்பு: அவ்னி டெலிமீடியா.
நன்றி: தினதந்தி
-
9th February 2013, 04:12 AM
#1284
Moderator
Diamond Hubber
நெருங்கும் சித்தி... விலகும் பிரியா...
திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்புத் தொடர், மறுமணம். தன் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராஜேஷை மறுமணம் செய்து கொண்ட ஆர்த்தி, தன் மகன் அருணை மட்டுமின்றி தன் கணவனின் இரண்டு மகள்களையும் தன் மகள்களாகவே பார்த்துக் கொள்கிறாள். இருப்பினும் ராஜேஷின் மகள் பிரியா தனது சித்தி ஆர்த்தியிடம் ஒட்டாமலேயே இருக்கிறாள். பிரியாவிடம் அவள் மீதான தன் பாசத்தை நிரூபிக்கும் முயற்சியில் தொடர் தோல்விகளைத் தழுவும் ஆர்த்தி, அவள் மனதில் இடம் பெற போராடிக்கொண்டிருக்கிறாள். தன் அம்மா இறந்த பின் யாரிடமும் ஒட்டாத பிரியாவால் தன் சக பள்ளித்தோழியர்களிடம் கூட நட்பு பாராட்ட முடியவில்லை. இந்நிலையில் பள்ளியில் பேச்சுப் போட்டி அறிவிக்கப் பட, ஆர்த்தியின் மகன் அருண் உட்பட அனைவரும் உத்வேகத்துடன் தங்களை தயார் செய்து கொள்ளத் துவங்குகின்றனர்.
பிரியாவின் பிரச்சினையை அறிந்த ஆர்த்தி, அவளை பேச்சுப் போட்டியில் வெற்றிபெற வைக்க முன் வருகிறாள். அதன் மூலமாவது அவளிடமான தனது அன்பை நிரூபிக்கலாமே என்பது அவள் எண்ணம். ஆனால் அப்படியெல்லாம் நல்ல விஷயம் நடக்க விடாமல், ஆர்த்தியின் எதிரியான ராஜேஷின் விதவை அத்தை குழந்தை பிரியாவின் மனதில் விஷத்தை விதைக்கிறாள். இதனால் பிரியா ஆர்த்தியிடம் இருந்து இன்னும் விலகிப் போகிறாள். இதற்கிடையில் ராஜேஷ் அருணுக்கு பேச்சுப்போட்டிக்காக எழுதிக் கொடுக்க, ராஜேஷின் விதவை அத்தை அருணின் பையிலிருந்து அதை எடுத்து விட்டு, மாறாக தவறான பேப்பரை பையில் வைத்து விடுகிறாள். பள்ளியில் பேச்சுப் போட்டி துவங்குகிறது. பேச்சுப் போட்டியில் வென்றது யார்...? ஆர்த்தி தன் முயற்சியில் வென்றாளா...? ராஜேஷின் விதவை அத்தையின் பழிவாங்கும் படலம் அரங்கேறியதா...? பரபரப்பான கேள்விகளுடன் தொடர்கிறது தொடர்.
நன்றி: தினதந்தி
-
9th February 2013, 04:19 AM
#1285
Moderator
Diamond Hubber
நாளுக்கு நாள் மெருகேறும் பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் தொடர் தற்போது போகும் பாதையைப் பார்க்கும்போது கே.பாலச்சந்தர் படத்தைப் பார்ப்பது போல இருக்கிறது - அந்த அளவுக்கு அழுத்தமான, ஆழமான வசனங்கள், அழகான காட்சிகள் ஈர்க்க வைத்து வருகின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பொம்மலாட்டம். ஆரம்பத்தில் இந்த தொடர் ஒளிபரப்பானபோது முகம் சுளிக்க வகையிலான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், ரொமான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சீரியல் வித்தியாசமான டிராக்கில் மாறிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கதிர் -பாரதியின் காதல் எபிசோட்.. எவ்வளவு அழகான வசனங்கள், சின்னச் சின்ன காட்சியமைப்புகள்.. பார்க்கவே படு ப்யூட்டியாக இருக்கிறது இந்தக் காட்சிகள். கதிர் வேடத்தில் வரும் அப்சரின் நடிப்பு படு க்யூட்... தனது அனுபவத்தை அப்படியே கொட்டி அழகாக நடித்து வருகிறார் அப்சர். அவர் பேசும் வசனங்களை ஆழமாக நேசித்து ரசி்க்க முடிகிறது. காதலை அவர் வெளிப்படுத்தும் விதம், காதலி தன் மீது காட்டும் பரிவு பாசம் காதலை அவர் ரசிக்கும் விதம், காதலிக்கு தேவையான அறிவுரைகளைக் கூறும்போது காட்டும் பக்குவம், பொறுப்பான பேச்சு, தெளிவான செயல்பாடுகள்.. சூப்பர்ப் அப்சர்.
பாரதி மட்டும் சும்மாவா என்ன.. தனது காதலனை எப்படியெல்லாம் தைரியமூட்ட முடியுமோ, எப்படியெல்லாம் நம்பிக்கை தர முடியுமோ.. அதையெல்லாம் செய்து இப்படி ஒரு காதலி நமக்குக் கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டார். பண்பட்ட நடிப்பைக் கொட்டி வருகிறார். தனது நடிப்பால். பொறுப்பான ஒரு காதலி மற்றும் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் தூண், அழகான சிரிப்பு, காதலன் மீது வைத்துள்ள பாசத்தை, நேசத்தை வெளிப்படுத்தும் பாங்கு, வெட்கப் புன்னகை... சான்ஸே இல்லை பாரதி. பொம்மலாட்டம் வர வர அழகான கவிதை போல மாறி வருகிறது.. குறிப்பாக கதிர், பாரதியின் காதல் காட்சிகள்!.
-
10th February 2013, 06:14 AM
#1286
Moderator
Diamond Hubber
-
14th February 2013, 01:57 AM
#1287
Moderator
Diamond Hubber
மகாபாரதம்
http://www.mayyam.com/talk/showthrea...-Mahabharatham
எத்தனை முறை, எப்படி வந்தாலும் பார்க்கத் தூண்டும் காவியம் ....
Last edited by aanaa; 18th February 2013 at 12:19 AM.
"அன்பே சிவம்.”
-
16th February 2013, 06:46 AM
#1288
Moderator
Diamond Hubber
முதல் மூவர் விருது
ஆண்டு தோறும் வெளியாகும் திரைப்படங்களில் இருந்து சிறந்த அறிமுகக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது, ராஜ் டிவி. 2012-ம் ஆண்டு அறிமுகக் கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள கலைஞர்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், விஷ்வா, உதயநிதி ஸ்டாலின், தினேஷ், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, விஷ்ணு பிரியன்.
நடிகைகள்: ஸ்வாதி, நந்திதா, லட்சுமிமேனன், வரலட்சுமி, மனிஷா, ராதிகாஆப்தே, காயத்ரி.
இயக்குநர்கள்: ஐஸ்வர்யா தனுஷ், ரஞ்சித், பிரபாகரன், எம்.அன்பழகன், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ஜீவா சங்கர்.
இசையமைப்பாளர்கள்: அனிருத், கார்த்திக், சந்தோஷ் நாராயணன், டேனியல், பிரசன்னா, கிரிஷ்.
நகைச்சுவை நட்சத்திரங்கள்: அர்ஜூன், பகவதி, கர்ணா, செந்தில், வித்யு, மதுமிதா.
ஒவ்வொரு பட்டியலில் இருந்தும் முதல் மூவரை தங்கள் வாக்குப் பதிவின் மூலம் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு வசதியாக வாக்குப் பெட்டியுடன் ‘முதல் மூவர் சிறப்பு வேன்‘ இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வலம் வரவிருக்கிறது. ரசிகர்கள் தேர்வுக்குப் பின்னர் விருதுக்குரிய அறிமுகக் கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழு தேர்ந்தெடுக்கிறது. நடிகர்கள் பார்த்திபன், தம்பி ராமையா, இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். வரும் 23-ந் தேதி அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு தலைமையேற்பவர் இயக்குனர் பாரதிராஜா. தேர்வுக்குழுவினரின் இறுதிப் பட்டியலோடு ஒத்துப்போகிற மூன்று ரசிகர்களுக்கு ராஜ் டிவியின் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், ஐம்பதாயிரம் ரூபாய், இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் என 3 பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதியிருந்தால் இருக்கவே இருக்கிறது, குலுக்கல் முறை.
Last edited by aanaa; 17th February 2013 at 06:30 AM.
"அன்பே சிவம்.”
-
16th February 2013, 06:47 AM
#1289
Moderator
Diamond Hubber
ஒரு கோடி இப்போது பிரகாஷ்ராஜ் கையில்
விஜய் டிவியில் சூர்யா நடத்தி வந்த "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தொகுத்து வழங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ். இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சி எதனையும் தொகுத்து வழங்காத பிரகாஷ்ராஜ் முதன் முறையாக களத்தில் இறங்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாள "சால்ட் அண்ட் பெப்பர்" படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து இயக்குகிறார், ராதாமோகன் இயக்கத்தில் "கவுரவம்" படத்தை தயரிக்கிறார். இத்தனை பிசியான ஷெட்யூலுக்கும் இடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நேயர்களுக்கு கோடி கிடைக்கிறதோ இல்லையோ, பிரகாஷ்ராஜுக்கு கிடைத்து விடுகிறது சில கோடி. இனி விஜய் டிவியில் அடிக்கடி செல்லத்தை பார்க்கலாம்
.
-
16th February 2013, 06:48 AM
#1290
Moderator
Diamond Hubber
ராஜ் டி.வி. வழங்கும் முதல் மூவர் விருதுகள்...!
திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை வரவேற்பதில் முதலிடத்தில் இருக்கும் ராஜ் டி.வி., இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களிலிருந்து சிறந்த அறிமுக கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுள் முதல் மூன்று திறமைசாலிகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது!
2012-ம் ஆண்டின் அறிமுக கலைஞர்க*ள் பட்டியலில் இருந்து ராஜ் டி.வி. ரசிகர்கள் முதல்சுற்றில் தேர்ந்தெடுத்துள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டுள்ள ராஜ் டி.வி. நிறுவனம், அதிலிருந்து 3 சிறந்த அறிமுக நடிகர்கள், 3 சிறந்த அறிமுக நாயகிகள், 3 சிறந்த அறிமுக இயக்குனர்கள், 3 சிறந்த அறிமுக இசையமைப்பாளர்கள், 3 சிறந்த அறிமுக காமெடி நட்சத்திரங்கள், 3 சிறந்த அறிமுக தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் ராஜ். டி.வி ரசிகர்களுக்கே வழங்கியுள்ளதுடன், இது சம்பந்தமான விளம்பரங்கள், ஓட்டுப்பெட்டி மற்றும் ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய மெகா சைஸ் வாகனம் ஒன்றையும் தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்து, சுமார் 2 லட்சம் ராஜ் டி.வி. நேயர்களிடம் ஓட்டுபதிவுகளையும் பெற்று, அதிலிருந்து மேற்கண்ட ஒவ்வொரு தலைப்பிலும் முதல் மூன்று சிறந்த அறிமுக கலைஞர்களை *தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெரீனா, எப்படி மனசுக்குள் வந்தாய், ஒரு கல் ஒரு கண்ணாடி, அட்டக்கத்தி, நான், கும்கி, மை, ராட்டினம், சுந்தரபாண்டியன், போடா போடி, தோனி, 3, சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மதுபானக்கடை, உடும்பன், காதலில் சொதப்புவது எப்படி, கலகலப்பு என்று 2012ம் ஆண்டில் வெளிவந்த சுமார் 42 தமிழ்த் திரைப்படங்களில் இருந்து அறிமுக கலைஞர்கள், இந்த போட்டியில் பங்கு பெற்றிருப்பதும், அவர்களில் மேற்படி தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் சிறந்த மூவரை ராஜ் டி.வி. நேயர்கள் தேர்ந்தெடுக்க இருப்பதும், ரசிகர்கள் தேர்வுக்கு பின்னர் விருதுக்குரிய அறிமுக கலைஞர்களை கே.பாக்யராஜ் தலைமையிலான நடுவர் குழுவினர் தேர்ந்தெடுக்க இருப்பதும், இந்த விருது விழாவிற்கு "முதல் மூவர்" பரிசளிப்பு விழா என்று ராஜ் டி.வி பெயர்சூட்டி வரும் பிப்ரவரி-23ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் மிகப்பிரமாண்டமாக இவ்விழாவினை நடத்த இருப்பதும் கோலிவுட் புதுமுகங்கள் - அறிமுகங்கள் இடையே உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தந்துள்ளது!
சிறந்த அறிமுக கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் ராஜ் டி.வி ரசிகர்களுக்கும் ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபதைந்த*ாயிரம் என்று மூன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கும் இந்த முதல்மூவர் விழாவிற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமை ஏற்பது ஹைலைட்!
Bookmarks