View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 121 of 159 FirstFirst ... 2171111119120121122123131 ... LastLast
Results 1,201 to 1,210 of 1587

Thread: new serials/programs

  1. #1201
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1202
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரூ.5 லட்சம் பெற்ற ஆயிரத்தில் ஒருத்தி!

    "ஆயிரத்தில் ஒருவன்'' ரியாலிடி வினாடி வினா நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பிரபலமாகி வரும் இந்நிகழ்ச்சி, பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து விளக்கேற்றி உள்ளது. ஒளிபரப்பான 12 எபி சோடுகளிலும் போட்டியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு மெருகேற்றி வருகின்றனர்.


    சென்னையைச் சேர்ந்த மணிமாலா என்னும் போட்டியாளர் கடைசி கனவுக் கேள்விக்குச் சரியான விடையைக் கூறி ரூ.5 லட்சம் பரிசு பெற்றுள்ளார். ஆயுள் முழுமையும் அரவணைப்பும், ஆதரவும் தேவைப்படும் பெருமூளை பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயான மணிமாலாவிற்குக் கிடைத்த இந்தப் பரிசு, குழந்தையின் வாழ்வில் ஒளியேற்ற உதவுமென நெகிழ்ந்தார்.


    ரூ.62 ஆயிரம் ஜெயித்த மாற்றுத் திறனாளியான மதுரையைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளரான பக்கிரிசாமி தனது வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்தப் பரிசு உதவுமென மகிழ்ந்தார்.


    இந்த வினாடி வினா நிகழ்ச்சியின் புனிதமான நோக்கத்தை தெரிந்து கொண்டு பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக `அபியும் நானும்' படத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வைத் திறனில்லாத பிரபாகரன் மற்றும் தமிழ்வேலன் ஆகியோரின் எதிர்காலத்திற்காக விளையாடி ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஜெயித்துக் கொடுத்தார். இவ்விருவரும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தற்போது லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது..

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1203
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    திரும்பிப் பார்க்கிறேன்

    திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வெள்ளித் திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான்`திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சி. பிரபல திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் சுயசரிதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.


    மேடை நாடகங்களிலிருந்து , 1965-ம் ஆண்டு நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இத்திரைப்படம் மிகுந்த வெற்றிப் படமாக அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், புன்னகை, கண்ணா நலமா, இரு கோடுகள், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்று முடிச்சு போன்ற தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர்.


    ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சுஜாதா என பல முன் னணி நடிகர்-நடிகைகளை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். இவர் இயக்கியவை பெரும்பாலும் மனித உறவுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கூறும் திரைப்படங்களாக திகழ்ந்தன. இதுதவிர பல வெற்றிப்படங்களையும் தயாரித்தார்.


    வரும் தலைமுறையினருக்கு இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் நிச்சயம் ஒரு பாடமாக அமையும்.


    இந்நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் தாம் கடந்து வந்த திரையுலக பயணத்தை பற்றியும், சக கலைஞர்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வதோடு, அவர் இயக்கிய படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.


    இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1204
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரிகமப சேலஞ்ச்-2012

    இசை உலகில் `உங்கள் குரலுக்கான மாபெரும் தேடல்' என்ற அடைமொழியோடு தமிழகத்தின் மிகச் சிறந்த குரல் தேடலில் களம் இறங்கியுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. 1995 ஆம் ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் இசைப்போட்டி ஜீ டி.வி.யின் `சரிகமப.' இந்த இந்தி நிகழ்ச்சி சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ் போன்ற சிறந்த பாடகர்களை உருவாக்கியது. இப்போது தமிழில் மீண்டும் கால் பதிக்கிறது "சரிகமப'' நிகழ்ச்சி.


    இதற்கான நான்கு கட்ட குரல் தேர்வு, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து முதல் கட்ட தேர்வில் சுமார் 300 பேர் தேர்வு பெற்று, இரண்டாம், மூன்றாம் சுற்றுக்களில் இதுவே வடிகட்டப்பட்டு நான்காவது சுற்றின் இறுதியில் 30 முத்தான பாடகர்களை தேர்வு செய்துள்ளனர்.


    இந்த 30 போட்டியாளர்களும் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடுவர்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை காட்டி, அவர்களது குரல் தமிழகத்தின் சாய்ஸாக அமைய மாபெரும் சங்கீத மகாயுத்தம் நடத்தவுள்ளனர். பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி மற்றும் மோகன் வைத்யா நடுவர்கள்.


    சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1205
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பத்தே கேள்விகள்... பரிசோ 5 கிலோ தங்கம்!


    ராஜ் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் `கோல்டு கேசினோ' போட்டி நிகழ்ச்சியில் பத்தே பத்து கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி 5 கிலோ தங்கத்தை அள்ளிச் செல்லலாம்.


    நடிகை சுஹாசினி மணிரத்னம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


    நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முதலில் 20 தங்க காசுகள் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விக்கு போட்டியாளர் தன் கையில் இருக்கும் எத்தனை தங்க காசுகளை வேண்டுமானாலும் பந்தயம் வைக்கலாம். போட்டியாளர்கள வைக்கும தங்க காசின்அளவைப் பொறுத்து பேங்கரும் அதேஅளவு தங்க காசுகளை வைப்பார். இதில் ஜெயித்தால் பந்தயத்தில் வைக்கப்பட்ட அத்தனை காசுகளும் போட்டியாளருக்கு போய்ச் சேரும். தோற்றாலோ பந்தயம் வைத்த காசு மட்டும் பேங்கருக்கு சென்று விடும். இதைத்தொடர்ந்து போட்டியாளர் தன்னிடம் இருக்கும் மீதமுள்ள தங்க காசுகளுக்கு ஆட்டத்தை தொடரலாம்.


    போட்டியாளர் 40 தங்க காசுகளை ஜெயித்ததும், முதலில் பேங்கரிடம் இருந்து பெற்ற 20 தங்கக் காசுகளை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடடு ஆட்டத்தை தொடரலாம். மொத்த தங்கக்காசுகளையும் பந்தயம் வைத்து விளையாடி, 10 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்கிறவர்கள் 5 கிலோ தங்கத்தை தட்டிச்செல்லலாம்.


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி இது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1206
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுகள்-850


    சான் மீடியா நிறுவனம் தயாரித்து சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர், தற்போது 850 வது எபிசோடை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, தொடரின் இயக்குனர் ஷிவா.கே. அவரிடம் தொடரின் வெற்றி ரகசியம் பற்றி கேட்டபோது...


    "சித்ரா, ஸ்வேதாவையும் தன் குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என விரும்புகிறாள். அதற்காக ஸ்வேதாவை சந்தித்து, `நம் இருவருக்கும் கணவர் முகுந்தன். நாம் இனி தனி தனியாக வாழ வேண்டிய அவசியம் இல்லை. நாம் இனி ஒரே வீட்டில் வாழ்வோம்' என்கிறாள். அதற்கு ஸ்வேதா, `எங்க அப்பா அம்மா ஆசை ஆசையாய் கட்டிய வீடு முகுந்தனால் விற்கப்பட்டு நடுத்தெருவுக்கு வந்தோம். இப்ப நான் பெற்றோருக்கு ஒரு வீடு வாங்கி கொடுக்காமல் வர முடியாது' என்கிறாள்.


    சித்ரா தன் கணவன் மற்றும் மாமனார் மாமியாரிடம் ஸ்வேதாவின் எண்ணத்தை சொல்லி, `இந்த வீட்டை ஸ்வேதா பெயருக்கு எழுதி வைப்போம்' என்கிறாள். இதற்கு மாமனார் அழகேசன் மட்டும் சம்மதிக்கிறார். மற்றவர்கள் சம்மதிக்கவில்லை, மாமியாரோ இந்த வீட்டின் பங்குதாரர்கள் முகுந்தன், கிருஷ்ணன், ரஞ்சனி, கவுரி அனைவரும் சம்மதித்தால் மட்டுமே வீட்டை ஸ்வேதா பெயருக்கு மாற்ற முடியும் என்கிறாள். அழகேசன் அனைவரையும் சந்தித்து போராடி சம்மதம் வாங்குகிறார்.


    வீடு ஸ்வேதா பெயருக்கு மாற்றி எழுதப்படுகிறது, அப்பொழுது ஸ்வேதா ஒன்றாக இருக்க சம்மதித்து குடும்பத்துடன் அந்த வீட்டிற்கு குடிபெயர்கிறாள், அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததும், "எங்க அப்பா அம்மா எப்படி வீடு இல்லாமல் வெளியே வந்தார்களோ, அதே மாதிரி உங்களையும் வெளியே அனுப்பவே இந்த வீட்டிற்கு வர சம்மதித்தேன்'' என்கிறாள். அதோடு நில்லாமல் முகுந்தன், சித்ரா, அழகேசன், விசாலம் அனைவரையும் வெளியே அனுப்புகிறாள்.அப்போது அழகேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது,


    கிருஷ்ணனும் காயத்ரியும் ஜோதிடரால் 90 நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு பிரிந்து இருக்கும் போது, ஒரு நாள் தற்செயலாக அனாதை குழந்தைகளுக்கு சாப்பாடு போடும் சம்பவத்தால் இருவரும் சந்திக்க நேரிடுகிறது. 90 நாட்களுக்கு சந்திக்கவே கூடாது என்ற நிலையில் சந்தித்ததால் கிருஷ்ணன் மீண்டும் ஜோதிடரை சந்திக்கிறான், அவரோ `பிரிந்து இருக்க வேண்டும் என்பது விதி. இப்போது திடீரென்று சந்திக்க வைத்ததும் அந்த விதி தான், இருந்தாலும் நீங்கள் இருவரும் சந்தித்ததனால் ஏற்படும் விளைவை ஏற்கத்தான் வேண்டும்' என்று அதிர்ச்சி ஏற்படுத்துகிறார், இருவருக்கும் என்ன ஆகுமோ என்று குடும்பமே பயப்படுகிறது.


    இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியோ அடிபட்டு ஆஸ்பிட்டலில் சேர்க் கப்படுகிறாள், டாக்டரோ `தாய், குழந்தை இருவரில் ஒருவரையே காப்பாற்ற முடியும்' என்கிறார்.


    கிருஷ்ணன் பிழைத்தானா? காயத்ரிக்கு குழந்தை பிறந்ததா? மாரடைப்பு ஏற்பட்ட அழகேசன் நிலைமை என்ன? வீட்டை விட்டு வெளியே வந்த சித்ரா, முகுந்தன் இனி என்ன செய்யப் போகிறார்கள்? பரபரப்பாக தொடரும் தொடர் விளக்கும்'' என்கிறார், இயக்குனர். திரைக்கதை: எஸ்,குமரேசன். வசனம்: பாலசூர்யா. இசை: இமான். பாடல்: வைரமுத்து. ஒளிப்பதிவு: கே.எஸ். ஷங்கர்,


    தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, அப்சர், ராஜ்காந்த். அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், நீபா, ஜெயப்பிரகாசம், சிவகவிதா, சோனியா, பரத், ஜெயந்த். கே.எஸ். ஜெயலட்சுமி. ஜெ. லலிதா. வைரவராஜ், சுதா, ஆர்த்திகாஸ்ரீ. வத்சலா ராஜகோபாலன். பாஸ்கர் ராஜா. கிச்சா. எம்.எல்.ஏ தங்கராஜ்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1207
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்ன மருமகள்

    ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `சின்ன மருமகள்' தொடர், எதிர்பாராத திருப்பங்களில் பயணிக்கிறது.


    தான் தொலைத்த தேவா அருகில் இருந்தும் அவனுடன் சேர்ந்து வாழ முடியாத நிலையில் தவிக்கிறாள், ராதிகா. அவளுக்காக அவ்வப்போது கவலைப்படும் தேவா, தன் மனைவி கன்னிகா தான் என்று உறுதியாகக் கூறி ராதிகாவை புறக்கணிக்கிறான்.


    இதற்கிடையில் சுய நினைவின்றி தம் மாப்பிள்ளையாக இருப்பவர் அபய் தேவா தான் என்று தெரிந்து கொண்ட கன்னிகாவும் அவளுடைய குடும்பத்தினரும் மஹாபண்டிதர் பதவி மற்றும் 600 கோடி ரூபாய் சொத்திற்காக தேவாவை ராதிகாவிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத் திட்டமிடுகின்றனர். அதை செயல்படுத்தும் விதத்தில் தேவா-கன்னிகா திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.


    இந்நிலையில் இறந்து விட்டதாக நினைத்த கன்னிகாவின் உண்மைக் காதலன் அபய் போன் பண்ண, முதலில் நம்பாத கன்னிகா, பின்பு சின்னக்குழந்தை போல் அவனை நோக்கி ஓடுகிறாள். கன்னிகாவும், அபயும் சந்தித்தார்களா? கார்த்தியாயினி தேவியின் எண்ணம் நிறைவேறியதா? ராதிகாவின் எதிர்காலம் என்னாகும்? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1208
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மும்பையில் தேடிய கதாநாயகி!

    மும்பை, தமிழுக்கும், தமிழ், மும்பைக்கும் ஆற்றிய கதாநாயகி பரிமாற்றம் உலக சினிமா வரலாற்றில் இடம் பிடித்த ஒரு விஷயம்.


    நமது வைஜயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, வித்யாபாலன், அசின் போன்றோரை மும்பைக்கும், மும்பை தனது நக்மா, சிம்ரன், ஜோதிகா, பூமிகா, நமிதா, சமீரா ரெட்டி, ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், போன்றோரை தமிழுக்கும் அனுப்ப...!


    அந்த வகையில் மேலும் சில தமிழ் பேசும் அழகுப்பதுமைகளை ராஜ் டிவியின் `தமிழ் பேசும் கதாநாயகி'க்காக தேடி ஒரு பயணம்.


    கொட்டும் மழையிலும் மும்பை அழகு பெண்கள் கதாநாயகி தேடலுக்கு வந்ததில் அவர்களின் ஆர்வம் தெரிந்தது.


    தொகுப்பாளர்கள் பாலாஜி, பூஜா மற்றும் ஷில்பா நிகழ்ச்சியினை நடத்தினார்கள். கல்லூரி மாணவிகளுடன் பல நடனப்பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.


    `கழுகு' புகழ் கிருஷ்ணா, `காதலில் சொதப்புவது எப்படி' இயக்குனர் பாலாஜி மோகன், மும்பையின் பிரபல நடனமணிகள் நந்தினி அசோக், கவுரிராவ் மேதா ஆகியோர் நடுவராக இருந்து 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை அவர்களின் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முதல் சுற்றில் முப்பது பேர் தேர்வானார்கள். அதுவே இரண்டாம் சுற்றில் 15 ஆக குறைந்தது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ஆட்டம் பாட்டம், நடிப்பு முகம் அத்தனையும் சுவாரஸ்ய காட்சிப் பதிவுகள்.


    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ராஜ் டிவியில் இந்த கதாநாயகி தேர்வை ரசிக்கலாம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1209
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இமயத்துடன்..!

    பாட்டு என்றதுமே உடனடியாக நினைவுக்கு வருபவர் டி.எம்.சவுந்தர்ராஜன். கணீர்க்குரல், கம்பீரக் குரல், ஆண்மைக் குரல் என்று அவரது குரல் வளம் பற்றி பிரபல இசையமைப்பாளர்களே பாராட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரி, சிவாஜிக்கு அவர் மாதிரி என்று யாருக்கு பாடினாலும் நடித்தவர்களே பாடினார்களோ என்று பிரம்மையை ஏற்படுத்திய குரல் வளத்துக்கு சொந்தக்காரர். 7வயதில் பாட ஆரம்பித்தவர் இன்று 90 வயதிலும் பாடுகிறார்.


    இந்த இசையரசர் பற்றி இப்போது ஒரு தொடர் உருவாகி வருகிறது. பாட்டுடைத் தலைவனின் இசையோடு இணைந்த வாழ்க்கைப் பதிவான இந்த தொடரை விஜயராஜ் இயக்குகிறார். இந்த தொடருக்காக கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டூடியோ, பட்சிராஜா ஸ்டூடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இவற்றுக்கெல்லாம் டி.எம்.சவுந்தர்ராஜனே நேரடியாக சென்று அந்த ஸ்டூடியோவில் தான் பாடிய அனுபவங்களை அவரே மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.


    அந்த நாட்களில் பாட்டுப் பாட அவருக்கு மாத சம்பளம் 50 ரூபாய் என்ற தகவல் ஆச்சரியம் என்றால், பாட்டுப்பாடும் ஸ்டூடியாவுக்கு மூன்று மைல் தூரத்திலுள்ள தனது தங்குமிடத்தில் இருந்து நடந்தே வருவார் என்பது அடுத்த கட்ட ஆச்சரியம்.


    இந்த காலகட்டத்தில் பி.ï.சின்னப்பா நடித்த `சுதர்சன்' படம் கோவையில் உள்ள ராயல் டாக்கீசில் ரிலீசாகி இருக்கிறது. அதில் பி.ï.சின்னப்பா பாடிய ஒரு பாடலை டி.எம்.எஸ் ரசித்து பாடுவதுண்டாம். ஒருமுறை ஸ்டூடியோ மாடியில் பி.ï.சின்னப்பா தனது நண்பர்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். கீழே இருந்தபடி சின்னப்பா பாடிய சுதர்சன் படப்பாடலை உணர்ச்சி பொங்க பாடியிருக்கிறார், டி.எம்.எஸ்.


    அப்போது சின்னப்பாவின் நண்பர் ஒருவர், `அண்ணே கீழே யாரோ ஒருத்தன் உங்க பாட்டை கன்னாபின்னான்னு பாடிக்கிட்டிருக்கான். நான் போய் சத்தம் போட்டு: பாட்டை நிறுத்திட்டு வரேன்' என்று சொல்ல, சின்னப்பாவோ, `அந்தப் பாட்டை நான் பாடினதை விடவும் அற்புதமா பாடறான்யா. வேணும்னா பாரு, பின்னாளில் பெரிய பாடகனா வரப்போறான். அதனால் அவன் பாடுறதை தடை பண்ணாதே' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அங்கிருந்த பிரபல இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பின்னாளில் இந்த தகவலை டி.எம்.எஸ்.சிடம் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தை மகிழ்ச்சியுடன் விவரித்த டி.எம்.எஸ்., `என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்' என்கிறார்.


    இந்த தொடரில் டி.எம்.எஸ்.சை இன்றைய பிரபல இசையமைப்பாளர்கள் சந்தித்து அளவளாவுகிறார்


    கள். டி.எம்.எஸ்.சின் `பாடல் பெற்ற' நடிகர்கள் எஸ்.எஸ்.ஆர், சிவகுமார் போன்றோர் சந்தித்து உரையாடுகிறார்கள். இந்த வயதிலும் பழைய சம்பவங்கள் எதையும் மறக்காமல் டி.எம்.எஸ். பேசுகிற அழகை அவர்கள் வியக்கிறார்கள். அவர்கள் மட்டுமா, நாமும்


    தான்.முத்தாய்ப்பாக ஒரு காட்சி. டி.எம்.எஸ். முதன் முதலில் சினிமாவில் பாடியதை தன் தந்தையிடம் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார். ஆனந்தத்தில் குரல் தழுதழுத்துப் போன தந்தை, `நீ நல்லா வருவப்பா' என்றபடி உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார். இந்த காட்சிக்கு டி.எம்.எஸ்.சாயலில் உள்ள அவரது மகள் வயிற்று பேரன் சுந்தரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த காட்சியில் டி.எம்.எஸ்.சின் அப்பாவாக நடித்திருப்பவர் சினிமா பத்திரிகையாளரான மேஜர் தாசன்.


    இசை வரலாறான டி.எம்.எஸ்.சின் இசையுடன் கூடிய இந்த வாழ்க்கைப் பதிவு, விரைவில் தனியார்சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1210
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனம் கவர்ந்த வீடு

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீ தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புகுந்தவீடு தொடர், நேயர்களின் மனம் கவர்ந்த தொடராகி இருக்கிறது. 50 எபிசோடுகளை கடந்து தொடரும் இந்த தொடரை பி.நித்யானந்தம் இயக்குகிறார்.


    புகுந்த வீட்டில் வாழப்போன தன் மகள் ராதா கடந்த ஆறு வருடங்களாக மாப்பிள்ளை விசுவுடன்மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று நம்பிக் கொண்டிருந்தார், அப்பா ராமநாதன். ஆனால் மருமகன் விசு தன் மகளை திருமணம் செய்த பின்னணியில் ஜோதிடம் இருப்பதும், `முதல் மனைவி தங்க மாட்டாள்; இரண்டாவது மனைவி தான் செட்டாவாள்' என்று ஜோதிடர் சொன்னதைக் கேட்டே தன் மகளை முதல் தாரமாக விசு திருமணம் செய்திருக்கிறான் என்பதை அறிந்ததும், நொறுங்கிப் போகிறார். வேதனையில் சம்பந்தி வீட்டுக்கு வருபவர், சம்பந்தி வீட்டாரிடமும், மாப்பிள்ளை விசுவிடமும் சண்டை போடுகிறார். தனது மருமகன் அனுஷா வலையில் விழுந்து கிடப்பதை குறிப்பிட்ட ராமநாதன், "என் மகளை ஏமாற்றி விட்டு நீ வாழ முடியாது'' என்று எச்சரிக்கிறார்.


    விசு, ராதாவுடன் சேர்ந்து வாழ்வானா? அனுஷாவை திருமணம் செய்து கொள்வானா? கேள்விக்கு விடையாக தொடர்கிறது பரபரப்பான காட்சிகள்.


    கதை: இந்திரா சவுந்தர்ராஜன். இசை: கிரண். ஒளிப்பதிவு: சுதாகரன். வசனம்: ஐ.அசோகன்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •