-
26th August 2012, 05:55 PM
#1191
Moderator
Diamond Hubber
உதிரிப்பூக்கள்-200
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், 200-வது எபிசோடை எட்டியிருக்கிறது.
தொடரில் இப்போது ஷக்தியின் சொந்த அப்பா தட்சிணாமூர்த்திக்கும் வளர்ப்பு அப்பா சிவநேசனுக்குமான `ஈகோ' மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அதன் விளைவாக வளர்ப்பு அப்பா சிவநேசன் நடத்த விரும்பிய ஷக்தியின் திருமணத்தை சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி தடுக்கிறார். ஆனால் வளர்ப்பு அப்பா சிவநேசன் சாமர்த்தியமாக செயல்பட்டு ஷக்திக்கு அவள் விரும்பிய இடத்திலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுகிறார்.
தன் மகனுக்கு நடந்த திருமணத்தின்போது ஒவ்வொரு கணமும் விபரீதம் நடந்து விடுமோ என்று பதட்டத்தின் உச்சியில் இருந்த அலமேலு, திருமணம் முடிந்ததும் மருமகள் ஷக்தியிடம் போட்ட முதல் கண்டிஷன் இது தான். `இனி உன் சொந்த அப்பா குடும்பத்தில் இருந்தோ, வளர்ப்பு அப்பா குடும்பத்தில் இருந்தோ யாரும் உன்னைப் பார்க்க இந்த வீட்டுக்கு வரக்கூடாது. நீயும் இவர்கள் யார் வீட்டுக்கும் போகக்கூடாது.'
மாமியாரின் இந்த கட்டளை ஷக்தியை பெரிதும் பாதிக்கிறது. தன் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்த குழப்பம் தான் தனது மாமியாரை அப்படியொரு முடிவு எடுக்க வைத்து இருப்பதை அவள் உணர்ந்தாலும், அந்த பாசத்தடை அவளை பாதிக்கவே செய்கிறது.
ஷக்தியின் திருமணம் முடிந்த அன்று இரவே தன் இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு போகிறார், தட்சிணாமூர்த்தி. நடந்ததை போதையில் அவளிடம் சொல்லிப் புலம்ப, அவள் கொடுத்த யோசனையின் பேரில் அந்த ராத்திரியிலேயே மீண்டும் ஷக்தி வாழ்க்கைப் பட்ட வீட்டுக்கு வந்து கத்தி கலாட்டா செய்கிறார். இதனால் திருமண வீட்டில் உள்ளவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் தள்ளி விட, அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தட்சிணாமூர்த்தி மீது சில அடிகள் விழுகிறது. தட்சிணாமுர்த்தியுடன் வந்த அவரது சின்ன வீட்டு மகள் பிரியா இதனால் கோபமாகி, `எங்க அப்பா மேல கைவைக்கிறதுக்கு நீங்க யாரு? என்று எகிறுகிறாள்..
இதனால் தட்சிணாமூர்த்திக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் 20 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்பது வரை அந்த நேரத்தில் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது. இந்த விஷயம் தட்சிணாமூர்த்தியின் முதல் மனைவி வள்ளியம்மாளுக்குத் தெரிந்தால் அவள் நிலைமை என்னவாகும்? தன் கணவர் தனக்கு மட்டுமே உரிமையானவர் என்று இதுகாறும் நம்பிக்கொண்டிருந்த அவள், இந்த உண்மை தெரிய வரும்போது எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?
கணவன் வீட்டில் வாழவந்த ஷக்திக்கு மாமியார் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் என்ன மாதிரியான பிரச்சினைகள் நேரப்போகிறது? அதை அவள் தன் வளர்ப்பு அப்பாவிடமோ குடும்பத்தினரிடமோ பகிர்ந்து கொண்டாளா? பிரச்சினைக்கு தீர்வு கண்டாளா? என்பது அடுத்தகட்ட அதிர்ச்சித் திருப்பம்.
தொடரில் நட்சத்திரங்கள்: சேத்தன், வடிவுக்கரசி, மானசா, ஷர்வன், எல்.ராஜா, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ, கருணா, பாரதி, அகிலா, மகாலட்சுமி, சுரேகா.
திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: `சம்யுக்தா'ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யாசீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். `ஹோம் மூவி மேக்கர்ஸ்' சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.
நன்றி: தினதந்தி
-
26th August 2012 05:55 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2012, 05:57 PM
#1192
Moderator
Diamond Hubber
வணக்கம் தமிழா
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "வணக்கம் தமிழா.''
கைத்தொழில், எண்சாண் உடலை எழிலாக்குவோம், நோய் நாடி நோய் முதல் நாடி, திருவாசகத்தேன், வெற்றியை நோக்கி, மருந்தில்லா மருத்துவம், தெரியும் தெரியாது, வீரக்கலை என மக்களுக்கு தேவையான அனைத்தையும் பல்வேறு பகுதிகளாக உள்ளடக்கி தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி இது.
ஜாஸ்மின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
26th August 2012, 05:58 PM
#1193
Moderator
Diamond Hubber
கொஞ்சம் அரட்டை... கொஞ்சம் சேட்டை...
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை.
இந்த வாரம் இடம் பெறும் நிகழ்ச்சியில் நேயர்களின் அறிவுக் கூர்மையினை நொடிக்கு நொடி சோதிக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை பொது இடங்களில் தோன்றி கேட்கிறார்கள். அதற்கு நேயர்களின் முக பாவனைகளையும், நகைச்சுவையான பதில்களையும் வரும் வாரத்தில் பார்த்து மகிழலாம்.
அத்துடன் விளக்கம் கேட்டும், பொதுமக்களிடம் அந்த நேர சிந்தனை உத்திகளை சோதிக்கும் பொருட்டும் கொஞ்சம் அரட்டையுடன் கலந்த சேட்டையையும் வழங்குகிறார்கள், நிகழ்ச்சியாளர்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பு: நெல்லை சங்கரபாண்டி.
நன்றி: தினதந்தி
-
26th August 2012, 05:58 PM
#1194
Moderator
Diamond Hubber
சாதனை சிறுவர்கள்
சித்திரம் தொலைக்காட்சியில் சிறுவர்-சிறுமிகளை சிந்திக்க வைக்கும் வண்ணமாக "வீ வில் மீட்'' என்ற நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகிறது. பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கள், ஷரவன் குமரன் (வயது 12) மற்றும் சஞ்சய் குமரன் (வயது10).
இருவரும் இந்த சிறுவயதில் ஆப்பிள் கணினி மென்பொருள் நிறுவனத்திற்கு மென்பொருள் உருவாக்கி சாதனை படைத்தவர்கள். இந்த சாதனை சிறுவர்கள் பிரபல வர்த்தகர்களை பேட்டி காணும் நிகழ்ச்சியே "வீ வில் மீட்!''
நாளை முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கட்டுமான நிறுவனத்தலைவர் சிட்டிபாபுவை பேட்டி காண்கிறார்கள். அடுத்த ஞாயிறன்று வி.ஜி.பி நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிதாசை பேட்டி காண்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
26th August 2012, 05:59 PM
#1195
Moderator
Diamond Hubber
லிட்டில் மாஸ்டர்ஸ்-சீசன்-4
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `லிட்டில் மாஸ்டர்ஸ்' நடன நிகழ்ச்சி, மூன்று ஆண்டுகளில் மூன்று வெற்றிகரமான சீசன்களை கடந்து சீசன் நான்கை எட்டியுள்ளது.
முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.
தமிழகத்தின் மூன்று முக்கிய நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குட்டி நடனப் புயல்கள் தங்களது அடுத்த சுற்றுக்கு தயாராகிறார்கள். இந்த சுற்றில் `டாப் 40 குட்டி நடனப் புயல்கள்` நிகழ்ச்சியின் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களான நடிகர்கள் பிருத்விராஜ். ராகவ் இவர்களோடு பிரபல நடன இயக்குநர் ஜானியும் இணைந்துள்ளார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாலாஜி.
வரும் இரண்டு வாரங்கள் வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி
-
26th August 2012, 06:01 PM
#1196
Moderator
Diamond Hubber
கணவனுக்காக பெண் தேடும் அமுதா!
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அமுதா ஒரு ஆச்சரியக்குறி' தொடர், விறுவிறுப்பான திருப்பங்கள் மூலம் 50 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது.
செல்வனுக்கு விவாகரத்து தர சம்மதிக்கிறாள், அமுதா. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கிறாள். செல்வன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. தனது கணவனுக்காக தானே பெண் தேடுகிறாள். அப்போது அவள் சந்திக்கும் பெண் தான் விமலா.
விமலாவிடம் அமுதா உண்மைகளை சொன்னாளா? விமலா செல்வனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாளா? செல்வனின் நிலை என்ன? தன்னை பிரிந்த பிறகும் தனது கணவனின் வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்க வேண்டும். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று நினைக்கும் அமுதா, உண்மையிலேயே ஒரு ஆச்சரியக்குறி தான்! அவளது இந்த உயர்ந்த எண்ணம் ஜெயித்ததா?
அருந்ததி உண்மையிலேயே இறந்து விட்டாளா? அல்லது கார்த்திக்கை துன்புறுத்தவே அப்படி நடிக்கிறாளா? அருந்ததியால் கார்த்திக் மன நோயாளியாகிறானா? அருந்ததி இப்படி அவனை பழிவாங்க காரணம் தான் என்ன?.
சுவாரஸ்யமான கேள்விகளுக்கு யதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பதில் சொல்கிறது தொடர். டைரக்டர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் வழங்கும் தொடர் இது.
நன்றி: தினதந்தி
-
26th August 2012, 06:02 PM
#1197
Moderator
Diamond Hubber
மதுரையில் தேடிய நாயகி
ராஜ் டிவியின் `தமிழ் பேசும் கதாநாயகி'க்கான தேடல் மதுரையில் நடந்தது. மதுரையின் பாரம்பரிய நடனக் கலைஞர்களின் நடன வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் பேசும் கதாநாயகியை மதுரை சவுராஷ்டிரா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி என எல்லா இடங்களிலும் தேடினார்கள்.
நடுவர்களாக மதுரையின் பிரபல நடனக்கலைஞர்கள் பாலா நந்தகுமார், மாலா ராஜன் பொறுப்பேற்று வசன உச்சரிப்பு, விதவித பாவனைகள், நடனம் ஆகியவற்றின் அடிப்படையில் அழகுப் பெண்களை தேர்ந்தெடுத்தனர். இவர்களில் அர்ச்சனா என்ற அழகுப்பெண் `மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன' என்ற `தில்லானா மோகனாம்பாள்' பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.
டாப்-10 பெண்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக நடிகர் அசோக், அழகாக தமிழ் பேசும் அமெரிக்கரான கோஸ்டாஸ், நடிகை வடிவுக்கரசி ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். இவர்களில் அமெரிக்கரான கோஸ்டாஸ் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் என்ற சிறப்புத் தகுதியும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் டிவியில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ரசிக்கலாம்.
நன்றி: தினதந்தி
-
31st August 2012, 10:18 PM
#1198
Moderator
Diamond Hubber
சொந்த பந்தம்
September 03- 2012 .
-
2nd September 2012, 08:11 AM
#1199
Moderator
Diamond Hubber
மீண்டும் `சிவம்'
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த `சிவம்' பக்தித் தொடர், சில தொழில் நுட்ப காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு, இப்போது மீண்டும் கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
சிவம் மற்றும் சக்தி இணைந்த கதை தான் சிவம்.
விஷ்ணு பக்தரான தட்ச மகராஜனின் மகள் சதி, சிவனிடம் எப்படி ஈர்க்கப்படுகிறாள்?தடைகளுக்கிடையே எப்படி சிவனை மணக்கிறாள் என்பது தொடரின் கதைக் களம்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த தொடர்.
நன்றி: தினதந்தி
-
2nd September 2012, 08:12 AM
#1200
Moderator
Diamond Hubber
கார்த்திகை பெண்கள்
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் `கார்த்திகைப் பெண்கள்' தொடர் சின்னத்திரை நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரு பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில், `கல்கி' படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி நாயகியாக நடிக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பானுசந்தர், ஸ்ருதியின் கணவனாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஸ்வேதா, ஸரவந்திகா, ஆனந்தி, `பாண்டி' கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தனது மகளின் திருமணம் முடிந்ததும் சாருலதா கணவன் மூர்த்தியை விவாகரத்து செய்து லேடிஸ் ஹாஸ்டல் ஒன்றை தனது வீட்டிலேயே துவங்குகிறார். அங்கு ப்ïலா, செண்பகா, ஆர்த்தி ஆகிய மூன்று பேர் தங்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள். இவர்களது வாழ்வில் குறுக்கிடும் பிரச்சினைகள் சாருவை பாதிக்கிறது. சாருவின் பிரச்சினைகள் இவர்களையும் பாதிக்கிறது. இவற்றை எல்லாம் சாருவுடன் இணைந்து எப்படி எதிர்கொள்கிறார்கள், சமாளிக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து சொல்லப்படுகிறது.
இந்த ஹாஸ்டலுக்கு இவர்கள் தவிர மேலும் மூன்று பெண்கள் வர இருக்கின்றனர். ஆக ஆறு இளம்பெண்களின் வாழ்க்கை இந்த ஹாஸ்டலில் இணைகிறது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர். அவர்கள் தான் முருகனை வளர்த்தவர்கள் என்று புராணம் சொல்கிறது. ஆண்களைச் சார்ந்து இராத தனித்தன்மையுடய கார்த்திகைப் பெண்களைப் போன்றவர்கள் தான் இத்தொடரில் வரும் பெண்கள் என்று டைட்டிலுக்கு விளக்கம் கொடுக்கிறார், தயாரிப்பாளர் திருமுருகன்.
"இந்த ஆறு பெண்களுக்கும் மையமாக இருந்து அடைக்கலம் கொடுக்கிறாள். சாருலதா. தன் கணவன் தரும் இடைïறுகளைச் சமாளித்து அத்துடன் வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு இந்தப் பெண்களுக்கு தோழியாகவும் தாயாகவும் இருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பதே இந்த கதை'' என்கிறார் இயக்குநர் கவிதாபாரதி.
ஒளிப்பதிவு: சரத் கே.சந்திரன். எடிட்டிங்: பிரேம். இசை: சஞ்சீவ் ரத்தன். திரைக்கதை வசனம்: பாஸ்கர்சக்தி. கதை எழுதி திரு பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கிறார், இயக்குநர் எம்.திருமுருகன்.
நன்றி: தினதந்தி
Bookmarks