View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 119 of 159 FirstFirst ... 1969109117118119120121129 ... LastLast
Results 1,181 to 1,190 of 1587

Thread: new serials/programs

  1. #1181
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பன்னீர் பூக்கள்

    மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `பன்னீர்ப்பூக்கள்.' 6 பெண்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுவதை கருவாக கொண்டுள்ளது, இந்த குறுந்தொடர்.


    தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தின் கதையையும் தனித்தனியே காட்சிப்படுத்தியிருந்தாலும், கதைப்போக்கில் இவர்கள் ஒன்றாக இணைகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால் களை யதார்த்தமாக அமைத்துள்ளனர். பெண் நினைத்தால் முடியாதது இல்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது, தொடர்.


    தேவதர்ஷினி,தேவிப்பிரியா, ஷில்பா, டெல்லி கணேஷ், ஷ்யாம் கணேஷ் நடிக்க, ராம் குமார் இயக்கியுள்ளார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1182
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பார்த்த ஞாபகம் இல்லையோ!

    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், பார்த்த ஞாபகம் இல்லையோ. நடிகை குஷ்பு தனது அவ்னி டெலிமீடியா சார்பில் இந்த தொடரை தயாரிப்பதோடு, தொடரில் நாயகியாகவும் நடிக்கிறார்.


    தன் கணவன் கார்த்திக்கின் குடும்பத்தை பழி வாங்க வந்த ஓவியா, தன் தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா? அல்லது அந்த குடும்பத்தை பாதுகாப்பதாக சின்ன மாமனார் தாமோதரனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதா என்று தடுமாறுகிறாள்.


    ஓவியாவுக்கு கார்த்திக் மீது ஏற்படும் அன்பும் காதலும் கைகூடுமா? கலவரம் ஆகுமா?


    கார்த்திக்ரகுநாத் அசப்பில் தன்னைப் போலவே இருக்கும் கார்த்திக்கை ரத்தினவேல் கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்கிறான். அதை முறியடிக்க ஓவியா முயற்சி மேற்கொள்கிறாள். இதில் வெற்றி பெற்றது யார்?


    கார்த்திக்கின் அத்தை அகிலா, ஓவியாவை வீட்டை விட்டு விரட்டவும், கார்த்திக்கின் சொத்துக்களை அபகரித்து கார்த்திக்ரகுநாத்திடம் ஒப்படைக்கவும் திட்டமிடுகிறாள். அவளின் திட்டம் நிறைவேறியதா?


    ஓவியாவின் வீட்டிற்கு வந்து அங்குள்ள அத்தனைபேரின் மனதையும் கிறங்கடித்த ஆசிரமக் குழந்தை சாருலதா யார்? அந்தக்குழந்தை ஓவியாவை சித்தி என்று அழைக்க காரணம் என்ன?


    கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை விடை சொல்கிறது. தொடரில் நடிகை குஷ்பு தாய் வீட்டில் அருந்ததி என்ற பெயரிலும், கணவன் வீட்டில் ஓவியா என்ற பெயரிலும் நடிக்கிறார். குஷ்புவுடன் சீனு, டெல்லிகுமார், பானுமதி, ஷோபனா நடிக்கிறார்கள்.


    கதை: குஷ்பு. திரைக்கதை-வசனம்: அசோக்குமார். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: பிரியன்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1183
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    என்னைப்பார்த்து பயப்படுறாங்க: காஞ்சனா சீரியல் பூஜா



    எஸ்.எஸ் மியூசிக் தொகுப்பாளராக இருந்த பூஜாவிற்கு இளம் ரசிகர் பட்டாளங்கள் ஏராளம். சின்னத்திரையில் இருந்த போதே காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


    கூடவே நல்ல பெயரும் கிடைத்தது. சினிமாவை விட சின்னத்திரையே மேல் என்று நினைத்த பூஜா இப்போது விஜய் டிவியில் காஞ்சனா சீரியல் மூலம் களம் இறங்கியிருக்கிறார். தனது சின்னத்திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் பூஜா.


    அம்மா, அப்பா பெங்களூர்ல இருக்காங்க. நானும், தங்கை ஆர்த்தியும் படிக்கவும், வேலை பார்க்கவும் சென்னை வந்தோம். எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்த்த போதே எனக்கு திருமணம் ஆயிருச்சு. என்னோட கணவர் க்ரேக் அவரும் எஸ்.எஸ். மியூசிக்கில் வேலை பார்க்கிறார்.


    நான் எஸ்.எஸ்.மியூசிக்கில் வேலை பார்த்தபோதே சினிமாவிலும், சீரியலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
    அதற்கு காரணம் எனக்கு சினிமா மேல் இருந்த பயம்தான். காதலில் சொதப்புவது எப்படி பட இயக்குநர் பாலாஜி மோகன் என்னிடம் வந்து கதை சொன்னதும், கதை பிடித்து போய் ஓ.கே., சொல்லிவிட்டேன்.
    ஏனென்றால் படம் முழுக்க காமெடி சப்ஜெக்ட். படத்தில் என்னுடைய கேரக்டர் பிடிச்சது, அதனால் இந்தபடத்தில் நடிச்சேன். படம் பார்த்து நிறைய பேர் பாராட்டுனாங்க. சித்தார்த்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.


    எஸ்.எஸ். மியூசிக்கில் இருந்து விலகி ஒருவருடம் ஆகிவிட்டது. திடீர்னு ஒருநாள் காஞ்சனா சீரியல் கதை கேட்டேன். த்ரில்லிங் கதைக்காகவே நடிக்க ஒத்துக்கொண்டேன்.
    இப்பதான் அதோட கஷ்டம் தெரியுது.
    நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலை 2 அல்லது 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனா சீரியலுக்காக 15 மணிநேரம் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.
    தென்காசி, குற்றாலம்னு காடுமேடெல்லாம் சுத்த வேண்டியிருக்கு. இப்பல்லாம் சின்னப்பசங்க என்னைப்பார்த்து காஞ்சனா பேய்னு பயப்படுறாங்க என்று குஷியாக சொல்லிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் பூஜா.
    "அன்பே சிவம்.

  5. #1184
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிவிக்கு வரும் அனுராக் காஷ்யப்: க்ரைம் தொடர் இயக்குகிறார்
    .
    அனுராக் காஷ்யப் என்றாலே க்ரைம், ரத்தம், வன்முறை இன்றி இருக்காது. பாலிவுட் திரை உலகின் தவிர்க்க முடியாத நபர் அனுராக் காஷ்யப். இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, தயாரிப்பாளராக, நடிகராக பன்முகம் காட்டி வரும் அனுராக் இப்பொழுது சின்னத்திரையில் காலடி பதிக்க இருக்கிறார்.


    வெள்ளித்திரையைப் போல சின்னத்திரையும் பவர்ஃபுல் மீடியா என்பதால் டிவி தொடர் இயக்க முடிவு செய்துள்ளதாக அனுராக் தெரிவித்துள்ளார். புதிய சூழல் முழுக்க, முழுக்க புதிய குழுவினருடன் களமிறங்கப் போவதால், மனதுக்குள் அவ்வப்போது படபடப்பு ஏற்படுவதாகவும் அனுராக் கூறியுள்ளார்.


    இந்த க்ரைம் தொடரில் இந்தி வில்லன் நடிகர் குல்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் அனுராக்குடன் சைத்தான் படத்தில் நடித்துள்ளார்.
    பிரபல, "டிவி சேனலுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில்,
    தொடர் சம்பந்தமான முன்னோட்ட காட்சிகளை படம் பிடித்து பார்த்த அனுராக், காட்சிகள் திருப்தி அளித்ததால், உற்சாகமாக இருக்கிறார். க்ரைம் கலந்த இந்த தொடர் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது
    "அன்பே சிவம்.

  6. #1185
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    ஜெயா டிவிக்காக இசை மேடையேறும் எம்.எஸ்.விஸ்வநாதன்

    தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் இசை ராஜாங்கம் நடத்தியவர்...இப்போதும் நடத்திக் கொண்டிருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரது இசை சாதனையில் ஒரு மைல் கல்லாய் அமையவிருக்கிறது ஜெயா டிவிக்காக அவர் நடத்தவிருக்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி.


    வருகிற 22-ம்தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆச்சரிய அதிசயம், ஜெயா டிவி அன்று தான் தன் 14-வது பிறந்தநாளையும் கொண்டாடி மகிழ்கிறது.


    தொடக்க காலத்தில் எம்.எஸ்.வி. ஒரு நடிகராகவே வரவேண்டும் என விரும்பினார். கிடைத்ததோ கே.வி.மகாதேவனின் இசைக் குழுவில் கோரஸ் பாடகர் வாய்ப்பு.


    1950-ம் வருடம் எம்.ஜி.ஆர். நடித்த `ஜெனோவா' என்ற திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளர் அடையாளம். 1952-ல் பிரபல இசையமைப்பாளர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின்னர் அவர் இசையமைத்த `தேவதாஸ்' மற்றும் `காதல்' திரைப்படங்களை முடித்து கொடுக்கும் வாய்ப்பு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் கிட்டியது. அதிலிருந்து தொடர்ந்தது, இந்த இரட்டையர்களின் இசைப்பயணம். இவர்களின் முதல் வெற்றித் திரைப்படமாக என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய `பணம்' திரைப்படம் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து 1963-ல் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் இந்த இரட்டையர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.


    "நீராரும் கடலுடுத்த'' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். உலக திரை இசையின் பல்வேறு வடிவங்களை தமிழ் திரைப்படப் பாடல்களாக அறிமுகம் செய்த இந்த மெல்லிசை மன்னர் சுமார் 500 தனிப்பாடல்களை தன் இசையில் மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப்பாடல்கள்.


    தமிழ் திரை இசைக்கு இவரின் மகத்தான பங்களிப்பை பாராட்டி தமிழ்நாடு அரசும், அரசு சாரா நிறுவனங்களும், ரசிகர்களும் அளித்த விருதுகளும், வாழ்த்துக்களும் ஏராளம். ஆனால் மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் எதுவும் இவருக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. எனவே, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பொது மக்கள் தேர்வு செய்யும் உயரிய பட்டத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கவிருக்கிறது, ஜெயா டிவி.


    நிகழ்ச்சிக்காக நிருபர்களை சந்தித்த எம்.எஸ்.வி., "சினிமாவில் நடிக்கத்தான் வந்தேன். ஆனால் சூழ்நிலையும் இறைவன் விருப்பமும் என்னை இசையமைப்பாளராக்கி விட்டது. நிகழ்ச்சியில் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் ரசிகர்களுக்கு பாட்டு கிடைக்கும். என்னோடு `இசை இரட்டையர்கள்' என்று நாங்கள் புகழ் பெறக் காரணமான ராமமூர்த்தியும் கலந்து கொள்கிறார்'' என்றார்.


    சமீபத்தில் எம்.எஸ்.வி.யை வருத்தப்படுத்திய ஒரு இசை நிகழ்வு, ரீமிக்ஸ் பாடல்கள். அதுபற்றி பேச்சு வந்தபோது, "ஒரு பாட்டை மறுபடியும் ரீமிக்ஸ் பண்றது தப்பான காரியம். ஆனா அதைப்பண்றதுக்கும் ஒரு தைரியம் வேணும். என்னைப் பொறுத்தவரை ரீமிக்ஸ் பண்றது `ரேப்' பண்றதுக்கு சமானம். இசையமைக்கிறவங்க உங்க கற்பனையை பயன்படுத்துங்க'' அறிவுரை தினுசில் ரீமிக்ஸாளர்களுக்கு வைத்தார் ஒரு குட்டு.


    நிகழ்ச்சிக்காக தனது இசையில் சிறந்த 82 பாடல்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார், எம்.எஸ்.வி. அப்படீன்னா இசை ரசிகர்களுக்கு கொழுத்த வேட்டை தான்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1186
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    மலேசியாவில் மானாட... மயிலாட...

    கலைஞர் தொலைக் காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் "மானாட... மயிலாட'' நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு.


    வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வரும் நேயர்கள் "மானாட மயிலாட'' நிகழ்ச்சி ஒளிப் பதிவு அரங்கிற்கு விஜயம் செய்வது வழக்கம்.


    வெளிநாடுவாழ் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு களின் எதிரொலியாக, முதல் முறையாக துபாயில், இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.


    அதனைத்தொடர்ந்து "மானாட மயிலாட'' நிகழ்ச்சியின் பாகம் 7-ன் இறுதிப் போட்டி, அடுத்த மாதம் 8-ந்தேதி மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.


    பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் முன்னிலையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு பங்கேற்பாளர்களுடன், நிகழ்ச்சியின் இயக்குனர் கலா மாஸ்டர், நடிகைகள் குஷ்பு, நமீதா ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.


    மலேசியாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு விலை மதிப்பற்ற பல பரிசுகள் காத்திருக்கின்றன.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1187
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    நாவல் சினிமா

    சின்னத்திரை வரலாற்றில் நிச்சயம் இது புதுமை. பொதுவாக எழுத்தாளர்களின் நாவல்களை டிவி தொடர்களாக தயாரிப்பதுதான் வழக்கம். இந்த தொடர்களும் நெடுந்தொடர்களாக மாறி வருடக்கணக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும். இந்த பாணியிலிருந்து கலைஞர் டிவி முற்றிலும் மாறுபட்டு பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்களை `சின்னத்திரை சினிமா' என்ற தலைப்பில் இரண்டு மணி நேர திரைப்படமாகவே உருவாக்கி ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் சினிமாவுக்கே உரித்தான பாடல்களோ, சண்டைக் காட்சிகளோ கிடையாது. அதேநேரம் விறு விறுப்பான சம்பவங்களுக்கு பஞ்சம் இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் கதையில் திருப்பங்கள் அமைந்து காட்சிகளை பரபரப்பாக்கி விடுகின்றன.


    இது குறித்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் கூறும்போது, "என்னுடைய நாவல்கள் பல தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. ஆனால் `இந்த சின்னத்திரை சினிமா' எனக்கு ஒரு புது அனுபவம். நான் எழுதிய ஒவ்வொரு நாவலும் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாகவே உருவாவதும், அது வாரந்தோறும் ஒளிபரப்பாவதும் என்னுடைய எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நினைக்கிறேன். நாவல்களைப் படிக்கும் பழக்கம் இல்லாத வாசகர்களின் வீட்டு வரவேற்பறைகளுக்கும் `சினிமா' வடிவில் என் நாவல்கள் சென்று விடுவதால், எனக்கு இப்போது புது வாசகர்கள் கிடைத்துள்ளார்கள்'' என்கிறார், உற்சாக தொனியில்.





    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1188
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    சூரிய புத்ரி-100

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "சூர்ய புத்ரி'' தொடர், நூறாவது எபிசோடை நோக்கி தொடர்கிறது.


    தொடரில் புதுமையாக பறக்கும் விமானத்திலேயே கதாநாயகன், நாயகி பங்கு பெறும் காட்சிகள் இடம் பெறுகின்றன. சின்னத்திரை தொடர் வரலாற்றில் இதுவரை இப்படி பறக்கும் விமானத்தில் காட்சிகள் படமானதில்லை. நாயகி விமானப் பணிப் பெண் கதாபாத்திரத்தில் வருவதால் நிஜ விமான நிலையத்தின் உள்பகுதிகளிலேயும் ஆகாயத்தில் பறக்கும் நிஜ விமானத்திலும் எடுக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களின் மனதை கவரும் வகையில் அமையும் என்கிறார் , தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி.


    கதையில் இந்த விமானப் பணிப்பெண் கேரக்டர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த கேரக்டர் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி ரசிகர்களை பரபரப்பாய் ரசிக்க வைக்கும் என்கிறார்கள்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1189
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    திரும்பிப் பார்க்கிறேன்

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "திரும்பிப் பார்க்கிறேன்.''


    திரையுலகில் அன்றைய நாளில் சாதனை படைத்து ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதமே இது.


    வரும் திங்கள் முதல் பிரபல திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்தின் சுயசரிதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.


    தொழில்நுட்ப கலைஞராக திரைத்துறைக்கு வந்த இவர், உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தார். பின்னர் இயக்குனராக பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பற்பல சிறந்த படங்களை கொடுத்தவர். குறிப்பாக `சங்கராபரணம்' என்ற சிறந்த திரைப்படத்தை இயக்கி திரையுலகில் புகழின் உச்சம் தொட்டவர். 80-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.


    தனது நீண்டகால திரையுலக வாழ்க்கை நிகழ்வுகளை அவர் இயக்கிய திரைப் படங்களின் பாடல்கள், காட்சிகள் வாயிலாக `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பதிவு செய்கிறார்.





    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1190
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அவள்-200

    விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `அவள்' தொடர், 200-வது எபிசோடை கடந்து தொடர்கிறது.


    மலையாளத்தில் "குங்குமப்பூ'' என்னும் பெயரில் 400-வது எபிசோட்டை கடந்து ஏசியாநெட்டில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் தமிழ் பதிப்புதான் இந்த "அவள்.''


    கேரளாவில் ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஏசியா நெட் விருதுகளில் முறையே சிறந்த மெகாத் தொடர், சிறந்த கதை, திரைக்கதை, சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த நடிகர், நடிகையர் உள்ளிட்ட பதினைந்து விருதுகள் உள்பட இருபத்தைந்துக்கும் அதிகமான விருதுகளை `குங்குமப்பூ' தொடர் வாரிக்குவித்திருக்கிறது.


    தொடரில் சஞ்சீவ், லட்சுமி ராமகிருஷ்ணன், மகாலட்சுமி, ஏ.ஆர்.எஸ்., ஸ்ரீகலா, விஜய்பாபு, பாரதி, மதுமோகன், சங்கீதா பாலன், ஸ்ரீதர், ஷமந்தா, ஸ்ரீவித்யா, பாலாஜி நடிக்கிறார்கள்.


    கதை, திரைக்கதை: பிரதீப். வசனம்: ஜே.ஆர்.தர்மலிங்கம்; ஒளிப்பதிவு: அனில்வாஸ்; தயாரிப்பு, மேற்பார்வை: கே.ஸ்ரீகாந்த். ஜே.நேதாஜி; எபிசோட் இயக்குனர்: தாமரைக்கண்ணன்; ரோல் பெட்டல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து இயக்குபவர் ஜி.ஜெயக்குமார்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •