View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 118 of 159 FirstFirst ... 1868108116117118119120128 ... LastLast
Results 1,171 to 1,180 of 1587

Thread: new serials/programs

  1. #1171
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அந்த 10 நாட்கள்

    SUN TV

    16-07-2012 to 27-072012

    Last edited by aanaa; 30th July 2012 at 10:12 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1172
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கார்த்திகைப் பெண்கள்

    SUN TV - 30-07-2012 ...





    Last edited by aanaa; 30th July 2012 at 10:12 PM.
    "அன்பே சிவம்.

  4. #1173
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டைரக்டர் மவுலியை பாதித்த செல்வரங்கம்!




    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளி பரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை உணர்ச்சிக் கொந்தளிப்புடன் திரைப்படுத்துகிறது.


    இந்த தொடரில் செல்வரங்கமாக நடிப்பில் ஸ்கோர் பண்ணி வரும் ராகுல், இப்போது திருப்புமுனைக் கதைக்களத்தில் இன்னும் கவனிக்கப் படுகிறார்.


    கதைப்படி அந்த குடும்பத்தின் கெட்ட மருமகனாக இருந்த செல்வரங்கத்திடம், இப்போது ஒரு இனிய மாற்றம். அக்கா-மாமா இருவரும் மருமகனிடம் நேர்ந்த மாற்றம் தெரியாமல் தொடர்ந்து தங்கள் தவறுகளை மருமகன் மூலம் அரங்கேற்ற விரும்புகிறார்கள். அப்போது தான் மருமகன் மாறிய விஷயம் தெளிவாகிறது.


    இப்படி செல்வரங்கம் மாறும் காட்சியில் ராகுலின் நடிப்பை மனமுவந்து பாராட்டியிருக்கிறார், நடிகரும் டைரக்டருமான மவுலி. `நானும் பார்த்துக் கிட்டே வர்றேன். இந்த கேரக்டருக்குள் நீ அப்படி ஆழமா போயிட்டே. வாழ்த்துக்கள்' என்று அவர் சொன்ன போது சிகரம் தொட்ட சந்தோஷம் எனக்குள். 5 படங்களில் நாயகனாக நடித்தும் கிடைக்காத பெயர் இந்த ஒரே கேரக்டர் மூலம் கிடைத்ததில் அத்தனை மகிழ்ச்சி'' என்கிறார், ராகுல்.


    மவுலி இந்த தொடரில் சொக்கலிங்கம் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.


    மவுலியின் பாராட்டு குறித்து ராகுல் மேலும் கூறியதாவது: "சிறந்த இயக்குனர், தேர்ந்த நடிகர் அவர். கடந்த இரண்டரை வருடமாய் சொக்கலிங்கம் கேரக்டராகவே வாழும் அவரை இந்த தொடரில் பார்த்து பிரமித்தவன் நான். ஆனாலும் என் மனதில் ஒரு ஏக்கம். `நாம் நடிப்பதை பார்க்கிறார்.ஆனால்அதுபற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன் என்கிறாரே' என்று எண்ணியிருக்கிறேன். அனால்அமைதியாயிருந்தஅந்தநாட்களிலும்என் நடிப்பை அவர் ரசித்திருக்கிறார். அதையெல்லாம்சேர்த்து தான் இப்போது மொத்தமாக பாராட்டியிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்'' என்கிறார், நெகிழ்ச்சிக் குரலில்.


    "சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். அங்கே என்னை பார்த்தவர்கள் செல்வரங்கம் என்று தான்அழைத்தார்கள். அந்த அளவுக்கு நாதஸ்வரம் தொடர் என்னை உலகம் முழுக்க கொண்டு போயிருக்கிறது. இந்த பெருமையெல்லாம் இயக்குனர் திருமுருகனையே சாரும்'' என்றவர், தொடர்ந்து கூறும்போது, "அங்கே பலரும் டைரக்டர் திருமுருகனை `கோபி சார் எப்படியிருக்கிறார்?'என்று தான் நலம் விசாரித்தார்கள். ஏற்கனவே `மெட்டி ஒலி' தொடரில் கோபியாக நடித்தவர், இந்த தொடரிலும் அதே பெயரில் நடிக்கவே ரசிகர்களுக்கு அவர் `கோபி'யாகவே தெரிகிறார்'' என்றார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1174
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தாமரைக்கு குழந்தை பாக்கியம் உண்டா?

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் துளசி தொடர் 100 எபிசோடுகளைத் தாண்டி தொடர்கிறது.


    `தாமரைக்கு குழந்தை பிறக்குமா?' என்ற எதிர்பார்ப்போடு மாமியார் தெய்வானை தன் மருமகள் தாமரையை ஜோதிடரிடம் அழைத்துச் சென்று ஜாதகம் பார்க்கிறாள். தாமரைக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆனால் அவள் கணவன் செல்வாவிற்கு தகப்பனாகும் பாக்கியம் இருக்கிறது என ஜோதிடர் கூற, அதிர்ச்சியடைகிறாள், தாமரை. தன் வாழ்வில் துளசி குறுக்கே வந்துவிடுவாளோ என்ற பயத்தில் தன் கணவன் செல்வாவிடம் "உனக்கு தகப்பனாகும் பாக்கியம் இல்லாமல் இருக்க நீ அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்'' என்று நிர்ப்பந்திக்கிறாள்.


    இதற்கிடையே செல்வாவின் தாய், தந்தை இருவரும் துளசியை சந்தித்து "என் குடும்பத்தில் உன்னால் தான் வாரிசு உண்டாக வேண்டும், தாமரைக்கு அந்த பாக்கியம் இல்லை என்று கூறி, நீயே மருமகளாக வந்து விட்டால் உன் தங்கை தாமரையை நீ அனுசரித்து போக முடியும். நீ இழந்த வாழ்க்கையை செல்வா மூலமே திரும்ப பெற வேண்டும்'' என்று சொல்ல... துளசி யோசிக்கிறாள்.


    செல்வாவையே துளசி மணமுடித்தாளா? தாமரை சொல்படி செல்வா அறுவை சிகிச்சை செய்தானா? திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1175
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண்ணின் போராட்டம்

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகுந்த வீடு தொடர், வாழப் புகுந்த வீட்டில் ஒரு மருமகளுக்கு ஏற்படும் பிரச்சினையை அவள் எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை மையப்படுத்துகிறது.


    வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டஇந்த தொடரின் ஸ்பெஷல், எதிர்பாராத திருப்பங்கள். கதாநாயகியின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை சுவாரஸ்யமாக திரைப்படுத்தியிருக்கும் தொடர் இது. பெண் என்பவள் பொறுமையைக் கடைப்பிடிப்பதால் புகுந்த வீட்டையும் பிறந்த வீடாக மாற்றும் ஆற்றலைப் பெறுவாள் என்பதே தொடரின் விறு விறுப்பான கதைக்களம்.


    இயக்கம்: நித்தியானந்தம்.


    கதை: இந்திரா சவுந்தர்ராஜன்; இசை: கல்யாண் ஜி.; ஒளிப்பதிவு: சுதாகரன்; வசனம்: ஐ.அசோகன்; தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1176
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கிரிவல மகிமை

    திருவண்ணாமலை மண்ணின் மகிமை பற்றியும், அருணாசலேஸ்வரின் உன்னதமான மகத்துவம் குறித்தும், திருவண்ணாமலையில் முக்தி பெற்ற சித்தர்களின் சிறப்பு பற்றியும் விவரிக்கும் தொடராக உருவாகி வருவதே, `திருவண்ணாமலை கிரிவல மகிமை'.


    இந்த தொடரில் மேலும் இடம் பெறும் முக்கிய அம்சங்கள்: பவுர்ணமியில் கிரிவலம் வருவதால் என்னென்ன பலன்கள் கிட்டும்? கிரிவலம் எப்படி சுற்ற வேண்டும்? அப்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன?


    இந்த ஆன்மிக தொடரை அர்ஜீன் மூவிஸ் சார்பில் கே.ஜி.கோவிந்தராஜ் தயாரிக்கிறார். இவர் யோகாசன ஆசிரியரும் ஆவார். தொடருக்கு இசை: ராஜ்பாஸ்கர். முகப்பு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம்: பி.பாலாமணி. தனியார் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1177
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சதிவலைகளை முறித்து ஷக்தி திருமணம் நடந்ததா?

    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் உதிரிப்பூக்கள். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் இந்த தொடரை டைரக்டர் விக்ரமாதித்தன்இயக்கி வருகிறார்.




    வளர்ப்பு அப்பாவுக்கும் சொந்த அப்பாவுக்கும் இடையே நடந்து வரும் `நீயா நானா' போட்டியில் பாதிக்கப்பட்டது அவர்களின் பாசமகள் ஷக்தியின் திருமணம் தான். முதல் தடவை வளர்ப்பு அப்பா சிவநேசன் ஏற்பாடு செய்த திருமணத்தை சொந்தஅப்பா தட்சிணாமூர்த்தி தனது திரை மறைவுவேலைகள் மூலம் நிறுத்தி விடுகிறார். இதற்குப் பிறகு வளர்ப்பு அப்பா சிவநேசனின் தீவிர முயற்சியில் மீண்டும் அதே மாப்பிள்ளையுடன் ஷக்தி திருமணம் நடக்க ஏற்பாடாகிறது.


    இம்முறை ஷக்தியின் சொந்த அப்பா இந்த திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டே மறைமுகமாக அந்த திருமணத்தை மணமேடையில் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடு செய்கிறார். அவரது திட்டம் மகள் ஷக்தியை தனது அக்கா மகன் இளங்கோவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அதற்காக தாலிகட்டப் போகும் நேரத்தில் மாப்பிள்ளை மீது ஒரு பெரும்பழியை போடவும் பெண்ணொருத்தியை ஏற்பாடு செய்து விடுகிறார்.


    தட்சிணாமூர்த்தியின் சாகச நாடகம் அரங்கேறும் கல்யாண தினமும் வருகிறது. மணமேடையில் ஷக்தி விரும்பிய மணமகனுடன் திருமணம் நடந்ததா? அல்லது அவளது சொந்த அப்பா தட்சிணாமூர்த்தியின் திட்டப்படி இளங்கோ அவளுக்கு மாலையிட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.


    வளர்ப்பு அப்பா சிவநேசனாக சேத்தனும் , சொந்த அப்பாவாக எல். ராஜாவும் நடிக்கிறார்கள். ஷக்தியாக மானசா நடிக்கிறார். மற்றும் வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, ஷ்ரவன், பாரதி, அகிலா, ரேவதிப்பிரியா, ஹரி, கிரேசி, ரூபஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.


    திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: ஆனந்த். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. இயக்கம்: விக்ரமாதித்தன். `ஹோம் மீடியா மேக்கர்ஸ்' சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1178
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஒளிமயமான எதிர்காலம்

    வெள்ளிக்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `ஒளிமயமான எதிர்காலம்' நிகழ்ச்சியை பிரபல வாஸ்து நிபுணர் மகேஷ்வர்மா வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 120 எபிசோடுகளை தாண்டி தொடர்கிறது.


    வாஸ்து முறையில் தொழிற்சாலைகளை அமைப்பது, வீடு கட்டுவது, குறித்த டிப்ஸ்களை இந்த நிகழ்ச்சியில் மகேஷ்வர்மா தருகிறார். ஏற்கனவே வாஸ்து முறைப்படி கட்டாத வீடுகளை வாஸ்து முறையில் எப்படி மாற்றியமைப்பது என்பதற்கும் ஆலோசனைகளை வழங்குகிறார். வாஸ்து முறைப்படி எப்படி ஓட்டல்களை வடிவமைப்பது என்பதற்கும் நிகழ்ச்சியில் டிப்ஸ் தருகிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1179
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அப்பாஸ் நடிக்கும் `தர்மயுத்தம்'

    விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், தர்மயுத்தம். இந்த தொடர் மூலம் நடிகர் அப்பாஸ் சின்னத்திரைக்கு வருகிறார்.


    இரண்டு குடும்பங்கள் எதிரும் புதிருமாக நின்று தங்கள் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கப் போராடும் கதை தான் `தர்மயுத்தம்.' இதில் பிரபல வழக்கறிஞர்களாக பெரிய திரை நடிகர்கள் அப்பாஸ், கார்த்திக் குமார் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் கிட்டி, ராகவேந்தர், நடிகை அனுஜா ஐயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் தொடர் இது.

    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 9th August 2012 at 10:16 PM.
    "அன்பே சிவம்.

  11. #1180
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை சினிமாவில் ராஜேஷ்குமார் கதைகள்

    கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, சின்னத்திரை சினிமா. பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள் இந்த நிகழ்ச்சியில் திரை வடிவம் பெற்று ஒளிபரப்பாகிறது.


    இன்று இரவு ராஜேஷ்குமாரின் `கோகிலா கொலைவழக்கு' நாவல் இடம் பெறுகிறது. தேவ், ராம்கி, சுருளி மனோகர், கராத்தே கார்த்திக், பஞ்சாட்டி, நீலிமா ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்கம்: பிரேம்நாத்.


    மர்மமான முறையில் இறந்துபோன கோகிலாவின் மரணத்தை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த திகில் கதை, ஏற்கனவே நாவலாக வந்த நேரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •