விஜய் டிவியில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் காஞ்சனா என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.
பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
அழகர் இயக்க இந்தத் தொடர் ஒரு அழகான கிராமத்திற்கு நேயர்களை அழைத்துச் செல்கிறது.
கல்வி மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் வாழும் காஞ்சனா தன் கிராமத்தையும், தன் தாத்தா *பாட்டியையும் பார்க்கும் ஆவலில் அவளது கிராமத்திற்கு வருகை தருகிறாள்.
காஞ்சனாவை பார்க்கும் அவளது சொந்தங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களுக்குள் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து கவலை தொற்றிக்கொள்கிறது.
அதற்கான காரணம் என்ன.அவள் எதிர் நோக்கும் சம்பவங்கள் பல அவளை பல உண்மைகளை அறியத்தூண்டுகிறத.
அவள் ஆசையாக விரும்பி வாங்கும் ஒரு பட்டுப்புடவையில் நைதிருக்கும் படங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கின்றன.
ஒரு புதிராக செல்லும் அவளது வாழ்க்கையில் அவருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கின்றன.
அதில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? அவள் யார்? எதற்காக அவள் அந்த ஊருக்கு வரவேண்டும்?
காஞ்சனா எனபவள் ஒரு தனி நபர் அல்ல, அவளைப்போன்று ஏழு சக்தி உள்ளன என்ற உண்மையை அவள் அறியும் நேரம் வருகிறது.
அந்த சக்திகளை அவள் தேடிச்செல்வாளா? இல்லையா? என்று காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்விருக்கிறார் அழகர்.
வரும் ஜூலை 23ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது காஞ்சனா என்ற புத்தம் புதிய மெகா தொடர்.
காஞ்சனா
விஜய் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளி பரப்பாகவிருக்கும் புதிய தொடர் காஞ்சனா.
கிராமத்திற்கு தனது தாத்தா-பாட்டியை பார்க்க வருகிறாள், காஞ்சனா. முதன் முதலாக அந்த கிராமத்திற்கு அவள் வந்தாலும், பல நாள் அவளிடம் பழகியது போல் அங்குள்ள மக்கள் அவளிடம் பேசி பழகுகின்றனர். ஆனால் அவளை பார்த்த தாத்தா-பாட்டியோ பயப்படுகிறார்கள்.
தாத்தா - பாட்டி பயந்தது போலவே அடுத்து நடக்கும் பல சம்பவங்கள் அவளை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.
அவள் யார்? அவளைப் பார்த்தும் ஊரே மகிழ்ச்சி முகம் காட்ட, அவள் வருகையில் அவள் தாத்தா-பாட்டி மட்டும் எதற்காக பயப்பட வேண்டும்? சஸ்பென்சான இந்த தொடரை இயக்குபவர் அழகர். இவர் சரவணன்-மீனாட்சி தொடரின் இயக்குனரும் கூட.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த தொடர்.
நித்தியானந்தம் இயக்கத்தில் புகுந்த வீடு! ஜீ டி.வி.யில் புதிய தொடர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புகுந்த வீடு என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இந்திரா சவுந்திர ராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்த தொடரை நித்தியானந்தம் இயக்குகிறார்.
கதைப்படி, தமிழாசிரியர் ராமநாதனின் ஒரே மகள் ராதா.
தன் மனைவியை ராதா குழந்தையாக இருக்கும்போதே இழந்து விட்ட ராமநாதன் ஒரு தாயாய், தந்தையாய் ராதாவுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து திருமணத்துக்கு நாள் குறிக்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாய் அந்த திருமணம் தடைபட்டு மண மேடையில் மாப்பிள்ளையை போலீஸ் கைது செய்கிறது.
இந்த நிலையில் திருமணத்துக்கு வந்திருக்கும் தாசில்தார் ஜாதகக் கோளாறுள்ள தன் மகன் விசுவநாதனை இதுதான் சந்தர்ப்பம் என்று மேடையேற்றி தாலிகட்டச் செய்கிறார்.
நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்ற கனவுடன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் ராதா, வீடு நிறைய உறவுகள் இருந்தும் ஆதரவின்றி அனாதை போல் வாழ நேரிடுகிறது.
இருப்பினும் தன் தந்தையின் நிம்மதியை மனதில் கொண்டு புகுந்த வீட்டில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மறைத்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்.
ராதா சந்தித்த பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்நோக்கி நடை போடுகிறாள் என்பது கதைக்களம்.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இத்தொடர், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி, `லிட்டில் மாஸ்டர்ஸ்.'
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக குருகுலம் முறையை பயன்படுத்திய நிகழ்ச்சி, இது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் இன்று சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.
2012-ல் லிட்டில் மாஸ்டர்ஸ் சீசன் நான்கிற்கான முதற்கட்ட தேர்வு சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் நடைபெற்றது. இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது போட்டியாளர்கள் பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற இருக்கும் இந்த நடன யுத்தத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பரிசோதிக்கும் பல்வேறு வகையான நடன சுற்றுக்கள் இடம் பெறும்.
நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் ராகவ் நடுவர்களாகவும், போட்டியாளர்களை வழி நடத்தும் குருக்களாகவும் இடம் பெறுவர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பாலாஜி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவு பெற்ற `பிரிவோம் சந்திப்போம்' தொடர், முற்றிலும் புதிய கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த தொடராகி இருக்கிறது. இந்த தொடரில் கஸ்தூரி என்ற கேரக்டரில் கலகலப்பாக வந்துபோன ஹேமலதா, சிறந்த காமெடி நடிகையாகவும் ரசிகர்களிடம் பதிந்து போனார்.
தொடரில் வேலைக்காரியாக வந்து ஒவ்வொரு முறையும் நாயகனை கலாய்ப்பதும், ஏமாற்றி காசு வாங்குவதுமாய் இவரது காமெடி கலகலப்பின் உச்சம்.
ஹேமலதாவை `மலைக்கோவில்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தபோது, "ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு நல்ல காமெடி நடிகை என்ற இடத்துக்கு வந்து விட்டீர்கள் போலிருக்கிறதே?'' கேட்டோம்.
பதிலுக்கு கொஞ்சம் வெட்கம் கலந்த புன்னகையை உதிர்த்தவர், "நகைச்சுவை நடிப்பில் சிகரம் தொட்ட அவர்கள் எங்கே? நான் எங்கே? என்றாலும் அவர்கள் காட்டிய காமெடிப் பாதையில் நான் அடியெடுத்து வைத்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பு `பிரிவோம் சந்திப்போம்' தொடரில் அமைந்தது. இந்த தொடரில் வரும் கஸ்தூரி கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு இனி காமெடி பாதையில் தொடரலாம் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்திருக்கிறது. அது மட்டும் உண்மை'' என்கிறார்.
அத்திப்பூக்கள் தொடரில் இதற்கு நேர்மாறான கேரக்டரில் வருகிறீர்களே?
"அதில் கதை வேறு. என் கேரக்டருக்கான நடிப்புக்களம் வேறு. அடுத்து வரும் தொடர்களில் காமெடிகேரக்டர் அமைந்தால் உற்சாகமாக நடிப்பேன்.''
சினிமாவிலும் இனி காமெடி நடிப்பை கெட்டியாக பிடித்துக் கொள்வீர்களா?
"பெரியதிரையில் `மலைக்கோவில்' படத்தில் சுமன்ஷெட்டியுடன் காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வெளுத்துக்கட்டு, மந்திரப்புன்னகை, சட்டப்படி குற்றம் போன்ற படங்கள் என்னை ஒரு நடிகையாக வெளிப்படுத்தின. இப்போது தான் என் இயல்புக்கேற்ற காமெடிக்களம் அமைந்திருக்கிறது. அதற்காக `பிரிவோம் சந்திப்போம்' தொடரின் இயக்குனருக்குத் தான் என் நன்றி சேரவேண்டும்.''
தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலந்து கட்டி கலக்கும் கமல்ஹாசனின் புதல்வி ஸ்ருதிஹாசன், முதல்முறையாக `டி.வி.'யில் அறிமுகமாகிறார். `எம்டிவி ரஷ்' என்ற அந்த புதுமையான நிகழ்ச்சி, எம்.டி.வியில் ஒளிபரப்பாகிறது.
நடிகை ஸ்ருதிஹாசனின் அதிகம் அறியப்படாத முகம், அவர் ஓர் இசையமைப்பாளர் என்பது. அதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தும் என்கிறார்கள். பிஜோய் நம்பியாரால் இயக்கப்படும் `எம்டிவி ரஷ்', அட்டகாசமான 13 பகுதிகள் கொண்டதாம்.
இதில் ஓர் அத்தியாயத்தில் ஸ்ருதிஹாசன் தனது சொந்த இசைக்கோர்வைகளை அரங்கேற்றுவாராம். இசை மீதான தனது காதல்தான் இந்நிகழ்ச்சிக்குத் தான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் என்கிறார் ஸ்ருதி.
``பிஜோய் என்னை அணுகி இந்த கான்செப்டை சொன்னதுமே எனக்கு பிடிச்சுப் போச்சு. எம்டிவி ரஷ் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கு. இதில் நான் உருவாக்கிய இசைக்கோர்வையை நானே இசைப்பதை ரசிகர்கள் கண்டு, கேட்டு மகிழலாம். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் ஸ்ருதி, சந்தோஷப் பரபரப்புடன்.
`இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக...' என்று கூறத்தக்க இந்த நிகழ்ச்சிக்காக நாமும் ஆர்வத்தோடு காத்திருப்போம்!
திரைப்படத்துறையில் தங்கள் திறமைகளை நிரூபித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையும், அவர்களின் பசுமையான நிகழ்வுகளும் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைப்பட காட்சிகளும், பாடல்களும் ரசிக்கத் தக்கவை. இந்த பதிவுகளை ஜெயா தொலைக்காட்சி `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த வாரம் நடிகை ரஞ்சனியின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது. சிங்கப்பூரில் பிறந்த இவர், டைரக்டர் பாரதிராஜாவால் `முதல் மரியாதை' படத்தில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் இடம்பெற்ற `அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்' என்ற பாடல் இப்போதும் இவருக்கான தனி அடையாளம்.
தொடர்ந்து தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடிப்பைத் தொடர்ந்த ரஞ்சனி, அப்புறமாய் படஉலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது இந்த நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கும் ரஞ்சனி, தன்கலை வாழ்வில் நடந்த மறக்க முடியாத பல நிகழ்வுகளை நிகழ்ச்சியில் பட்டியலிடுகிறார்.
நிகழ்ச்சியில் அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் இடம் பெறும்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும நிகழ்ச்சி இது.
திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடர், எதிர்பாராத திருப்பங்களில் வேகம் பிடிக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் குடும்பத்தில் இணையும் சாந்தனு தன்னை ஒதுக்கி வைத்த குடும்பத்தை பழி வாங்கத் துடிக்கிறான். தான் மஹாபண்டிதராக முடியாது என்று அறிந்து மேலும் சினங்கொள்கின்றான். சாந்தனுவை பண்டிதர் குடும்பத்தில் இணைக்கும் விழா நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தேவா ஒரு அவசர காரியமாக வெளியே செல்ல, பின் அவனின் மரணச் செய்தி தான் ராதிகாவிற்குக் கிடைக்கிறது.
இதனால் குடும்பத்தில் மூத்தவனான சாந்தனுவை மஹா பண்டிதராக்கும் விழா நடந்து கொண்டிருக்க, தேவாவைக் கொன்ற காரணத்திற்காக போலீஸ் சாந்தனுவை துரத்த, சாந்தனு விபத்தில் சிக்கி, தேவா விழுந்த அதே மலையடிவாரத்தில் விழுந்து உயிர் துறக்கிறான்.
இந்நிலையில் பல நாட்களுக்குப் பிறகு சுயநினைவு இல்லாத நிலையில் தேவாவை மற்றொரு பெண்ணுடன் கண்டு அதிர்ச்சி கொள்கிறாள் ராதிகா. தேவாவை எவ்வளவோ அழைத்தும் அவளை கண்டு கொள்ளாமல் செல்கிறான்.
ராதிகா தேவாவின் இருப்பிடத்தை அறிந்து கொண்டாளா? தேவா ராதிகாவை அடையாளம் கண்டு கொண்டானா? பண்டிதர் குடும்பத்தின் தற்போதைய நிலை? வினாக்களுடன் தொடர்கிறது சின்ன மருமகள் தொடர்.
Bookmarks