-
16th June 2012, 08:56 PM
#1141
Moderator
Diamond Hubber
பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா?
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `நாதஸ்வரம்' தொடரின் முக்கிய திருப்பமாக சொக்கலிங்கம்-மீனாட்சி தம்பதியரின் அறுபதாம் கல்யாணம் நிகழவிருக்கிறது.
இந்த விழாவை வைத்து இவரின் தம்பி மயில்வாகனம் என்ன செய்யப் போகிறார்? இந்த கல்யாணம் சிறப்பாக நடைபெறுமா? அல்லது சொக்கலிங்கம் குடும்பத்தை அழிக்க நினைக்கும் மயிலின் எண்ணம் பலிக்குமா?
காலம் தான் சிலரை மனதளவிலும் செயல் அளவிலும் பிரித்து வைக்கிறது. அதே காலம் தான் சம்பந்தமில்லாத பலரை ஒன்றாக சேர்த்தும் வைக்கிறது.
சொக்கலிங்கத்தை மயிலிடம் இருந்து பிரித்து வைத்த காலம் திரும்பவும் இருவரையும் ஒன்று சேர்க்குமா? அண்ணன்-தம்பி உறவுக்கு உதாரணமான அந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா?
மேலும் கதையின் முக்கிய கட்டமாக பாண்டியை கொலை செய்த மரக்கடை உரிமையாளர், தான்செய்த தவறுக்கு மாட்டிக் கொள்ளப் போகிறாரா?அல்லது சிக்காமல் தப்பித்துக் கொள்வாரா? இவரின்போக்கை வைத்துத்தான் சொக்கு-மயிலின் நிலைமை எப்படி மாறப்போகிறது என்பது வரும் வாரங்களின் சுவாரஸ்ய சம்பவங்களாக அமையும்.
நெல்லி வீட்டிற்கு மூன்றாவது மருமகளாக வந்துள்ள பரமுவின் நடவடிக்கைகள் காமுவிற்கு சாதகமாக அமையப் போகிறதா? அல்லது காமுவிற்கும் பரமுவிற்குமே சிக்கல்களை ஏற்படுத்தப் போகிறதா? கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் இருந்தாலும் காமுவும் மூர்த்தியும் மனதளவில் எப்போது இணையப் போகிறார்கள்?
பாவம் காமு..! இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கவே கூடாது என்று நினைக்கக் கூடிய நேரம் வரப்போகிறது. பரமுவின் செயல் அப்படி அமையப் போகிறது.
ராகினியை துரத்தி துரத்தி அவள் பின்னால் சென்று அவளுக்காக நடைஉடைகளை மாற்றிக்கொண்ட குமாரின் நிலை என்ன? குமாருக்கும் ராகினிக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? சொக்கலிங்கம் இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வாரா? குமார் ராகினியின் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான காதல் வெற்றியடையுமா? குமார் செய்யப்போகும் தில்லுமுல்லுகள் என்ன? அது அவனுக்கு சாதகமாக அமையுமா?
செல்வரங்கம்-மகேஷூக்குள் உண்டான பிரச்சினைகள் மேற்கொண்டு எப்படி போகப்போகிறது? திவ்யா உண்மையிலேயே திருந்தி விட்டாளா? செல்வரங்கம் திருந்தி நல்லவனாக மாறிவிட்டானா? அல்லது திருந்தியது போல் இருவரும் நடிக்கிறார்களா? மகேஷ் இந்த இருவரையும் எந்த அளவிற்கு நம்புகிறாள்?
சொக்கலிங்கத்துக்கு மருமகளாகவும், கோபிக்கு மனைவியாகவும் தன்னை மாற்றிக் கொண்ட மலரும் கோபியும் இந்த அனைத்து பிரச்சினைகளையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? செல்வரங்கத்தை மலர் நம்புகிறாளா?
மேலும் கோகுலின் சுயரூபம் தெரியாமல் உண்மையிலேயே அவனை கணவனாக ஏற்றுக்கொண்டு அக்கா மலரிடமே சண்டை போடும் அளவுக்கு வளர்ந்து விட்ட ரோகிணியின் நாளைய நிலை என்ன?கோகுலின் சுயரூபம் தெரிய வரும்போது ஜெகநாதனுக்கும் கோகுலுக்கும் இடையே எந்த மாதிரியான பிரச்சனைகள் எழப் போகிறது? கோகுல் என்ன முடிவு எடுக்கப் போகிறான்? ஜெகநாதன் மலரை மருமகளாகவும் கோபியை மருமகனாகவும் ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைக்கப் போகிறானா?
சொக்கலிங்கத்தை பிரிந்த மயில்வாகனம்!
திவ்யாவை இழந்த செல்வரங்கம்!
மலரை மறந்த ஜெகநாதன்!
காமுவை தள்ளி வைத்த மூர்த்தி!
பாண்டியை இழந்த மகாவிற்கு இன்னொரு வாழ்க்கை அமையுமா?
வரும் வார எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்த இந்த கேள்விகளுக்கு விடை தரப் போகிறது.
தொடரை தயாரிப்பதோடு இயக்கி நாயகன் கோபி கேரக்டரிலும் நடிக்கிறார், எம்.திரு முருகன்.
நன்றி: தினதந்தி
-
16th June 2012 08:56 PM
# ADS
Circuit advertisement
-
16th June 2012, 08:59 PM
#1142
Moderator
Diamond Hubber
திரும்பிப் பார்க்கிறேன்
திரைப்படத்துறையில் நெஞ்சை விட்டு நீங்காத பல நிகழ்ச்சிகள் உள்ளன. ஒருசில காட்சிகளாகவும், பாடல்களாகவும் ரசிகர்களைக் கவர்ந்தவை. ஆனால், அதன் பின்னணியில் அமைந்த அரிய பல ரசிக்கத்தக்க சம்பவங்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, திரைப்படத்துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையும், அவர்களது பசுமையான நினைவுகளும் பதிவு செய்யப்பட வேண்டியவை.
இந்தப் பதிவுகளை ஜெயா தொலைக்காட்சி, `திரும்பிப் பார்க்கிறேன்' என்ற சிறப்பு நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் இந்த வாரம் பிரபல திரைப்பட நடிகை மேனகாவின் திரையுலக நினைவுகள் ஒளிபரப்பாகிறது.
மேனகா 1980களில் திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். சில படங்களை தயாரித்தும் உள்ளார். சிறிய இடைவேளைக்குப் பிறகு இப்போது மீண்டும் நடித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தனது கலை வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்கிறார். அப்போது அவர் இடம் பெற்ற திரைப்பட காட்சிகளும் பாடல்களும் இடம் பெறுகின்றன. திங்கள் முதல் வியாழன் வரை தொடர்ந்து இரண்டு வாரங்களாக ஜெயா டிவியில் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
நன்றி: தினதந்தி
-
16th June 2012, 09:04 PM
#1143
Moderator
Diamond Hubber
ஒய்.ஜி.மகேந்திரன்!
வெள்ளித்திரையில் தனக்கென காமெடியில் தனி பாணி உருவாக்கியவர் ஒய்.ஜி.மகேந்திரன். நீண்ட காலமாக வெள்ளித்திரையில் தலைகாட்டாத அவர், சின்னத்திரையில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் வசந்த் டி.வியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய நகைச்சுவை தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஆல் இன் ஆல் ஆறுமுகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சென்னையில் வசிக்கும் ரவுடி, கிராமத்தில் வசிக்கும் ரவுடி என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நகைச்சுவைத் தொடரை ஜெயமணி என்பவர் இயக்கியுள்ளார்.
நன்றி:தினமலர்
Last edited by aanaa; 16th June 2012 at 09:06 PM.
"அன்பே சிவம்.”
-
16th June 2012, 09:05 PM
#1144
Moderator
Diamond Hubber
பிரபுதேவா வியந்து பாராட்டிய அடுத்த பிரபுதேவா
பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இன்றைக்கு நடன இயக்குநர்களாக பிரபலமானவர்களில் பெரும்பாலானோர் பிரபுதேவாவிடம் பணிபுரிந்தவர்கள்தான். பிரபுதேவாவை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மறுபடியும் தொடங்கியுள்ளது. பல்வேறு சுற்றுக்களைக் கடந்து முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியின் நாயகன் பிரபுதேவா பங்கேற்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபுதேவா போட்டியாளர்களையும் அவர்களது நடனத்தையும் வியந்து பாராட்டி வருகிறார்.
நன்றி: தினமலர்
-
23rd June 2012, 05:45 AM
#1145
Moderator
Diamond Hubber
800 எபிசோடை நெருங்கும் `உறவுகள்'
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் 800-வது பகுதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொடரில் அடுத்து அடுத்து ஏற்படும் சுவாரஸ்யமான திருப்பங்களை இயக்குனர் கே.ஷிவா பகிர்ந்து கொண்டார்.
"காயத்ரி கர்ப்பம் அடைந்தது தெரிந்து கிருஷ்ணனும், பார்வதியும் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். காயத்ரி கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலுக்கு செல்ல, அங்கு பூஜைக்கான தேங்காய் அழுகி இருக்க - அதிர்ச்சி அடையும் காயத்ரி, அதனால் தன் கணவனுக்கோ தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கோ ஆபத்து வந்துவிடக்கூடாது என வேண்டுகிறாள்.
முகுந்தன் ஒரு பக்கம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்க, கிருஷ்ணன் ஒரு பக்கம் தொழிலில் முன்னேறி வசதியான நிலையை அடைகிறான். ஆனால் காயத்ரிக்கு தொடர்ந்து அப சகுனமான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
பார்வதி தனது குடும்ப ஜோதிடரை வரவழைத்து ஜாதகம் பார்க்க, ஜோதிடர் காயத்ரியின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கூறுகிறார். அதோடு அவள் கருத்தரித்த நேரமும் சரியில்லை. இதற்கு பரிகாரமாக கிருஷ்ணனும் காயத்ரியும் 90 நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசாமல் பிரிந்து இருக்க வேண்டும். மீறி சந்தித்து விட்டால் காயத்ரியின் உயிருக்கோ, குழந்தையின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்று கூற - கிருஷ்ணன், காயத்ரி பிரிகின்றனர்.
முகுந்தன் தங்கராஜிடம் ரியல் எஸ்டேட் பிஸினசிற்காக கொடுத்த பத்து லட்சம் பற்றி கேட்க, அவர் இன்னும் ஐம்பது லட்சம் இருந்தால்தான் பெரிய அளவில் வியாபாரத்தை செய்ய முடியும் என்கிறார். முகுந்தன் ஸ்வேதாவிடம் இதைச்சொல்லி வருத்தப்பட, ஸ்வேதாவோ தனது அப்பா, அம்மாவிடம் பேசி விட்டு பத்திரத்தை தருகிறாள். முகுந்தன் தங்கராஜ் மூலமாக ஒரு பைனான்சியரிடம் பத்திரத்தை வைத்து ஐம்பது லட்சம் வாங்கி விட, தங்கராஜ் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுகிறான். பைனான்சியர் வீட்டை ஜப்தி செய்து, ஸ்வேதா குடும்பத்தை வெளியேற்றி விட, முகுந்தன் ஸ்வேதா குடும்பத்தை தேடி அலைகிறான்.
இதற்கிடையே கிருஷ்ணனின் தங்கை கவுரியின் கணவன் பாபு சிறைத்தண்டனை முடித்து திரும்புகிறான். பாபு திருந்தி புது மனிதனாக வந்திருப்பதாக கூறியும், குடும்பத்தார் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆனால் கிருஷ்ணன் மட்டும் பாபு திருந்தி விட்டதை உணர்ந்து ஏற்றுக்கொள்கிறான். தனது வாட்டர் கம்பெனியிலேயே சேர்த்துக் கொள்கிறான். பாபுவால் கிருஷ்ணனுக்கு அவமானம் ஏற்படும் என அனைவரும் பயம் கொள்ள, பாபுவோ கிருஷ்ணனின் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைகிறான். இதுவரை கிருஷ்ணன் மற்றும் அழகேசன் குடும்ப வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்து வந்த தங்கராஜை பாபு சிறைக்கு அனுப்புகிறான். இதனால் ராஜேந்திரன் மற்றும் தங்கராஜ் வெறி கொண்டு கிருஷ்ணன் குடும்பத்தை அழிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் எடுக்கிறார்கள். அதற்கான முயற்சியிலும் இறங்குகிறார்கள்.
முகுந்தன், ஸ்வேதா குடும்பத்தை கண்டுபிடித்து காப்பாற்றினாரா? கிருஷ்ணனை விட்டு பிரிந்த காயத்ரிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததா? கேள்விகளுக்கான விடை தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோடுகளில்'' என்கிறார், இயக்குனர்.
திரைக்கதை: எஸ்.குமரேசன். வசனம்: பாலசூர்யன். இசை: டி.இமான். பாடல்: வைரமுத்து.
தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, ராஜ்காந்த், அப்சர், அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஜெயப்பிரகாசம், சிவகவிதா, நீபா, சோனியா, பரத், ஜெயந்த், கே.எஸ்.ஜெயலட்சுமி, ஜெ.லலிதா, வைரவராஜ், சுதா, ஆர்த்திகாஸ்ரீ, வத்சலா ராஜகோபாலன், பாஸ்கர் ராஜா, கிச்சா, எம்.எல்.ஏ.தங்கராஜ்.
தொடரை சான் மீடியா லிமிடேட் தயாரிக்க, இயக்கம்: கே.ஷிவா.
நன்றி: தினதந்தி
-
23rd June 2012, 05:46 AM
#1146
Moderator
Diamond Hubber
ஆஹா...
சினிமா உலகில் 25 ஆண்டுகளில் 50 படங்களை இயக்கியவர் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.
ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, கமலுக்கு சத்யா, ஆளவந்தான் என இயக்கி வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். இந்நிலையில் தான் கொஞ்சமும் எதிர்பாராமல் ஒரு அழகான காதல் கதையை புதுமுகங்களை வைத்து எடுத்தும் வெற்றி பெற்றார். அந்தப் படமே ஆஹா. அந்தப்படத்தில் புதுமுகங்கள் தவிர விஜயகுமார், பானுப்பிரியா, ரகுவரன், ஸ்ரீவித்யா என முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இப்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.
ஆஹா படத்தை பார்த்த ரஜினி டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவிடம், `இதுவரை நீங்கள் எத்தனை படங்கள் இயக்கினாலும் `ஆஹா' உங்கள் இயக்கத்தில் ஒரு மைல்கல் ' என்று வாழ்த்தினார்.
இந்தப்படத்தில் முதலில் சுரேஷ்கிருஷ்ணா நடிக்க வைக்க விரும்பியது அஜித்தை. அவரோ கதை பிடித்தும் உடனே கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல். அதனால் அவரால் சிபாரிசு செய்யப்பட்டவர் தான் ராஜீவ் கிருஷ்ணா. படத்தை பார்த்த அஜித், "இந்தப் படத்தில் நானே நடித்து இருக்கலாம் போலிருக்கிறதே...அற்புதமான படத்தை தந்திருக்கிறீர்கள்'' என்று மனம் உவந்து பாராட்டியது தனிக்கதை.
இந்த சுவாரசிய தகவல்களை இப்போது நினைவுகூறக் காரணமே, சின்னத்திரையிலும் இதே ஆஹா என்ற பெயரில் ஒரு தொடரை சுரேஷ்கிருஷ்ணா இயக்கி வருவது தான்.
"இதுவும் கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை சொல்லும் கதை தான். மற்றபடி சினிமா ஆஹாவுக்கும் இதற்கும் கதை சம்பந்தம் இல்லை. அதேநேரம் `ஆஹா'வில் ராஜேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த பானுப்பிரியா இந்த தொடரிலும் அதே பெயரில் நடிக்கிறார். ஆஹா படத்தில் சமையல்காரர் கேரக்டரில் வந்து கலக்கிய டெல்லிகணேஷூக்கும் இந்த தொடரில் முக்கிய வேடம்.''
சின்னத்திரையில் தனது தொடர் பற்றி இப்படி சுருக்கமாக முன்னுரை தந்த இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம், "எப்படி இருக்கிறது., சின்னத்திரை இயக்குனர் அனுபவம்?'' கேட்டோம்.
"நன்றாகவே இருக்கிறது. சினிமாவில் எப்படி செய்வேனோ அதே மாதிரிதான் இதிலும் என் உழைப்பு இருக்கிறது. ரஜினி நடித்த அண்ணாமலை படத்தை 45 நாட்களிலும், பாட்ஷா படத்தை 60 நாட்களிலும் முடித்தேன். இரண்டும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். கதைக்களம் சரியாக அமைந்து விட்டால் சின்னத்திரையிலும் ஜெயிக்க முடியும் என்பதை இப்போது `ஆஹா' தொடர் நிரூபித்து இருக்கிறது.
அதோடு சினிமா மாதிரியே இந்த தொடரில் பா.விஜய் எழுதி, கார்த்திக்ராஜா இசையமைத்த நாலு பாடல்களை இடம்பெறச் செய்திருக்கிறேன். 2 பாடல்கள் ஒளிபரப்பானபோது அத்தனை ரெஸ்பான்ஸ். சின்னத்திரையில் சினிமாவைப் பார்க்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.''
தொடரில் இதுவரை சின்னத்திரைக்கே உரிய வில்லன், வில்லிகள் வரவில்லையே?
"கதை இப்போது தான் அதற்கு இடம் கொடுத்திருக்கிறது. இப்போது அந்த வீட்டு மாட்டுப்பெண் வில்லி முகம் காட்டப் போகிறாள். அந்த வீட்டின் மாப்பிள்ளையும் அடுத்தடுத்த காட்சிகளில் வில்லனாக தெரிவார். இது கும்பகோணத்தில் நடக்கிற கதை. கூட்டுக் குடும்பம், அதற்குள் ஒரு அழகான காதல்ஜோடி. அவர்களுக்குள் வந்து போகும் சின்னச் சின்ன நிகழ்வுகள்... இப்படியான கதைப்பின்னணி ரசிகர்களை சுலபத்தில் தொடருக்குள் கொண்டு வந்து விட்டது. இப்போது அவர்களை அதிலேயே நிலைத்திருக்கச் செய்ய அடுத்தடுத்த திருப்புமுனைக் காட்சிகள் தொடரும். தொடரைத் தொடர்கிற அத்தனை ரசிகர்களும் தொடரின் தலைப்பை (ஆஹா) தொடர்ந்து சொல்லணும். அப்போதுதான்இயக்குனராக சின்னத்திரையிலும் ஜெயித்த சந்தோஷம் நிலைக்கும்.''
சினிமாவையும் தொடருவீர்கள் தானே?
"நிச்சயமாக. இப்போது கூட கன்னடத்தில் நான் இயக்கி வெளிவந்த 3 டி படமான கட்டாரி வீரா சுர சுந்தராங்கி, பெரிய ஹிட். திட்டமிட்டு பணியாற்றி பெரிய திரை சின்னத்திரை இரண்டிலுமே நீடிப்பேன். இரண்டிலுமே வெற்றி மட்டுமே பேசப்படும் என்பதால், வெற்றிக்கான என் உழைப்பும் கடுமையாக இருக்கும்.''
நன்றி: தினதந்தி
-
3rd July 2012, 11:39 PM
#1147
Moderator
Diamond Hubber
-
3rd July 2012, 11:40 PM
#1148
Moderator
Diamond Hubber
-
6th July 2012, 04:51 AM
#1149
Moderator
Diamond Hubber
Last edited by aanaa; 6th July 2012 at 04:55 AM.
"அன்பே சிவம்.”
-
6th July 2012, 04:51 AM
#1150
Moderator
Diamond Hubber
Saravanan Meenatchi Tirunelveli & Coimbatore Event To Air on 17th & 24th June on Vijay TV
Serials on Vijay TV have always been unique and not formulaic. Vijay TV has always stood out with unique storylines that have appealed to audiences of all ages; be it love stories, family dramas or stories on day-to-day lives. Saravanan Meenakshi is one of the most popular serial which is airing on Vijay TV Monday – Friday at 2030 hrs for more than 180 episodes now.
Vijay TV had conducted an event at Tirunelveli and Coimbatore to celebrate the pre-wedding ceremony of the most popular characters of the soap Saravanan and Meenakshi. As per the story line of 'Saravanan Meenakshi' the marriage sequences of the couple will be telecast during the end of July 2012 in the serial which is airing Monday to Friday at 2030 hrs. This is the first time ever that a couple which is so popular amongst viewers is celebrated and their wedding is anxiously watched by one and all.
A grand event celebrating the wedding ceremony of Saravanan and Meenakshi titled 'Hero Saravanan Meenakshi Thirumana Varaverppu powered by RMKV' was held at Tirunelveli and Coimbatore on 13th and 19th May 2012. Popular faces of Vijay TV including the cast and crew of the serial, Mirthi Senthil (Saravanan), Srija (Meenakshi), Rajasekar, Kuyili, Y.V. Subramaniam, Stalin, Ramya, Suchitra, Sai and many others graced the occasion and performed on stage. The serial is directed by Azhagar, story, screenplay, dialogue Kadhiravan and cinematography by Gopal.
The entire event held at Tirunelveli and Coimbatore will be aired on Vijay TV as special episodes on 17th and 24th June 2012 at 1230 hrs.
Story of "Saravanan Meenatchi"
Saravanan Meenakshi is a story of love, life and marriage; as the title establishes; the story revolves around the lives of the two characters Saravanan and Meenatchi. The story began as the two families of Saravanan & Meenatchi meet to for the traditional "visiting of the girl's house"; but things go wrong; and an enemity rises between the two families and the wedding doesn't happen. As their lives continue after that incident; Saravanan and Meenatchi find themselves falling in love with some twist of fate. The couple then decides to face all odds; convince their families and get married. After so many hurdles the marriage date is fixed for the couple and every one is eager to witness their wedding ceremony.
Last edited by aanaa; 6th July 2012 at 06:07 PM.
"அன்பே சிவம்.”
Bookmarks