View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 113 of 159 FirstFirst ... 1363103111112113114115123 ... LastLast
Results 1,121 to 1,130 of 1587

Thread: new serials/programs

  1. #1121
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    ‘புலிவேஷம்’, ‘அய்யன்’, ‘விளையாடவா’ படங்களில் நடித்தவர் திவ்ய பத்மினி.


    பிள்ளை நிலா

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `பிள்ளை நிலா.' இரண்டு தாய்-ஒரு பிள்ளை என்ற மையச்சுற்றில் பரபரப்பாக நகரும் திரைக்கதை தொடரின் பலம்.


    சத்திரப்பட்டி தென்தமிழகத்தின் சிறிய ஊர். அவ்வூரின் சிறப்புகளில் ஒன்று கோகிலா-ஹேமாவின் நட்பு. கோகிலா அவ்வூரின் தலைவரும், அடாவடி பணக்காரனுமாகிய தங்கதுரையின் தங்கை. உள்ளூர் தபால்காரர் நட்ராஜின் மகள் ஹேமா. சாதாரண குடும்பம்.


    பணம், அந்தஸ்து எதுவும் தடையின்றி கோகிலா-ஹேமாவின் நட்பு வளர்கிறது. நட்பு மட்டுமா? கோடீசுவர கோகிலாவுக்கும், ஏழை ஹேமாவின் அண்ணன் சந்தோஷூக்குமான காதலும் தான் வளர்கிறது.


    ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் கோகிலாவின் அண்ணன் தங்கதுரைக்கு தெரியவர, அந்தஸ்து வெறியில் சந்தோஷை கொன்று விடுகிறான், அவன். இதனால் அதிர்ந்த ஹேமா, உயிர்த்தோழி கோகிலாவுடனான நட்பை முறித்துக் கொண்டு ஊரை விட்டே போகிறாள்.


    இதற்கிடையே காதல் தந்த நெருக்கத்தில் கோகிலா கர்ப்பம் தரிக்க, பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுகிறான் அண்ணன் தங்கதுரை. கண் விழித்து குழந்தையை தேடிய தங்கையிடம் குழந்தை இறந்தே பிறந்ததாக சொல்கிறான்.


    காலம் ஆற்றிய மனக்காயத்தில் கோகிலா பெரிய ஜமீன்தார் குடும்பத்தில் வாழ்க்கைப் படுகிறாள். ஆண்டுகள் மூன்று உருண்டோடியும் குழந்தை பாக்கியம் இல்லை.


    கோகிலாவின் தோழி ஹேமாவுக்கும் திருமணம் நடக்கிறது. கருவுறுகிறாள். அவளை அவள் கணவன் சேகர் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும் அவன் அக்கா கல்யாணி ஹேமாவை கொடுமைப்படுத்துகிறாள். ஒருநாள் இந்த கொடுமையின் உச்சக்கட்டத்தில் ஹேமாவின் கர்ப்பம் கலைந்து விடுகிறது.


    இதனால் ஹேமாவின் மனநிலை பாதிக்கப்படுகிறது. டாக்டர்கள் ஆலோசனைப்படி அனாதை விடுதியில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அந்தக் குழந்தையே அவள் அண்ணனுக்கும் உயிர்த்தோழி கோகிலாவுக்கும பிறந்த குழந்தை. இது தெரியாமல் குழந்தையை உயிராக வளர்த்து வருகிறாள், ஹேமா.


    குழந்தை வளர்ந்து ஒரு கட்டத்தில் தான் அனாதை என்பதை கல்யாணி மூலம் தெரிந்து கொள்கிறாள். தன் தாயை தேடிப்போய் கண்டுபிடிக்கவும் செய்கிறாள்.


    குழந்தை இல்லாத கோகிலா... குழந்தை மீது உயிரையே வைத்திருக்கும் ஹேமா...இவர்களில் யாரை குழந்தை ஏற்றுக் கொள்கிறாள்?


    `அய்யன், புலிவேஷம், விளையாட வா' ஆகிய படங்களில் நாயகியாக நடித்த திவ்யபத்மினி முதன்முதலாக இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார். மேலும் ஷமிதா, ராகவ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீ, ஷியாம் கணேஷ், சாந்திவில்லியம்ஸ், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, `வியட்நாம் வீடு' சுந்தரம், தாட்சாயிணி, ராஜசேகர், சங்கீதா பாலன், விஷ்வா நடிக்கிறார்கள்.


    கதை, திரைக்கதை: ராஜஸ்ரீ என்.ராய், கூடுதல் திரைக்கதை, வசனம், கிரியேட்டிவ் டைரக்டர்: செல்வபாண்டியன். ஒளிப்பதிவு: பாலா. இசை: எக்ஸ்.பால்ராஜ். பாடல்: டாக்டர் கிருதயா. இயக்கம்: நந்தகுமார். கிரியேட்டிவ் டைரக்டர்: பிரின்ஸ்.

    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 12th May 2012 at 08:54 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1122
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆண் பாவம்

    தான் நினைத்தபடி, தான் பார்க்கும் பெண்ணைத் தான் தன் பிள்ளைகள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் மகாலட்சுமி...


    தன் மனதிற்குள் 25 ஆண்டுகளாக மறைத்து வைத்திருக்கும் உண்மையை சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருக் கும் கோபால்சாமி...


    இந்த இரு துருவங்களுக்கிடையே சிக்கித்தவிக்கும் பிள்ளைகள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு காதல்...


    பிள்ளைகளின் காதல் வென்றதா? அல்லது மகாலட்சுமியின் எண்ணம் பலித்ததா?


    பிடிக்காத குடும்பத்தில் இருந்து மாதவனை திருமணம் செய்து கொண்டு வந்த தன் அக்கா கிரேசை வெறுத்து ஒதுக்கும் மேரி, பின்னாளில் அக்காவுடனும் மாதவனுடனும் சமாதானமானாளா?


    இப்படி ஒவ்வொருவர் குடும்பத்தில் இருக்கும் போராட்டங்களையும் மையமாக்கி சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து ஒளிபரப்பாகி வரும் தொடரே `ஆண்பாவம்.'


    சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ராஜேஷ், மீரா கிருஷ்ணன், ராஜ்கமல், இந்திரஜா, ரம்யா, ஐஸ்வர்யா, பரத் கல்யாண் நடிக்கிறார்கள்.


    திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஐ.அசோகன். இயக்கம்: டி.சி.பாலா. `சத்யஜோதி பிலிம்ஸ்' தியாகராஜன் தொடரை தயாரிக்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1123
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நல்லதொரு குடும்பம்

    புதன் தோறும் இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `பிளையிங் வைல்ட் அலாஸ்கா.'


    அலாஸ்காவின் ஆபத்தான வான்வெளியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தியாசமான டிவிட்டோ குடும்பத்தவரை பின்தொடர்கிறது, இந்த தொடர் நிகழ்ச்சி. எரா அலாஸ்கா என்ற அவர்கள் குடும்ப நிறுவனம் நடத்தும் விமான சேவையானது, மிகக் கொடுமையான அலாஸ்கா பருவ நிலையை எதிர் கொள்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை தொலைதூர அலாஸ்காவுக்கு கொண்டு செல்லும் பணியில் அவர்கள் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.


    பேரிங் கடலோரப் பகுதியில் வாழும் கிராமப்புற மக்களுக்கு வேறெந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில், எரா அலாஸ்கா தான் அவர்களுக்கான ஒரே வழி. நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருந்துகள், சுரங்கத் தொழிலாளர்களுக்கான மளிகைப்பொருட்கள் என அனுதின வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் துணிச்சலாக அப்பகுதிக்கு எடுத்துச்செல்வது எரா அலாஸ்காவின் துணிச்சல் மிக்க பைலட்டுகள் தான்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1124
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    7C



    you-c..basically naanga romba lazy
    i-c..
    eee-c..enga kita mothum munne yo-c..yo-c

    padipukku engala pudikala
    athan padikavum engaluku pudikala
    kurumbu-nu nenacha engala
    katterumba kadippom ungala

    paadathukum engalukum dhooram
    padippu sonnale surrunu yerum
    vaarathuku oru puthu vathiyaaru
    vanthu mudinja engala nee maathi paaru

    yo-c..theethuko prachanaiye pe-c

    come to my cabin

    ennodaya arumai
    ullirukkum theramai
    uthupaatha ulagukku perumai
    pesalana niyani
    basicave niyani
    ..dhoni..

    you-c..basically naanga romba busy da dai
    eee-c..prachana-la enga kaal dusi da

    you-c..basically naanga romba lazy
    padippu suthama varathu athu enga ra-c
    ethuku melayum enga kitta vachukanuma yo-c

    yen na naangalam 7-C



    "அன்பே சிவம்.

  6. #1125
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Aval

    "அன்பே சிவம்.

  7. #1126
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டிவி யின்
    கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

    மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

    இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.

    சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

    ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.
    "அன்பே சிவம்.

  8. #1127
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சத்யம் டிவியில் காமெடி கலாட்டா: சேதி கேளு ரெட்டை வாலு

    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி கலந்த நிகழ்ச்சிகளுக்கு எப்போமுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் தொலைக்காட்சியின் புதிய வரவான சத்யம் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சேதி கேளு வித் ரெட்ட வாலு' நையாண்டி நக்கள் கலந்த நிகழ்ச்சி நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

    தினசரி செய்திகள், செய்தியின் நடுவே இருக்கும் சூட்சுமங்களையும் செய்தியை உருவாக்கும் மனிதர்களின் சுவாரஸ்யங்களையும் உலகுக்கு கொண்டு வந்து, வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டா நிகழ்ச்சி இது. அதில் ஒரு குட்டி வெடி, குறும்பு ஜோடியின் கடி... என நிகழ்ச்சி முழுக்க குலுங்கிச் சிரிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளர்களின் உடல்மொழியும் நன்றாக பொருந்தி வருவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

    வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை நினைவுபடுத்தும் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பில் மறுநாள் காலை 11 மணிக்கும் காணலாம். கண்டு ரசித்து சிரியுங்களேன்.
    "அன்பே சிவம்.

  9. #1128
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நிலா வந்தாச்சு!



    சரிகம இன்டியா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான `பிள்ளை நிலா' தொடர், `இரண்டு தாய்க்கு ஒரு பிள்ளை' என்ற கதைக்களம் என்பதால் பெண்களை ஈர்க்கும் தொடராகி இருக்கிறது. இந்த தொடரின் தென் மண்டல பொறுப்பில் இருக்கும் பி.ஆர்.விஜயலட்சுமி கூறும்போது, "குடும்பத்தில் நடக்கும் நிகழ்வு தான் கதையின் மையம் என்றாலும், அதில் பிள்ளைப் பாசம் தான் பிரதானம். தொடரில் நிலாவாக வரும் குட்டி நட்சத்திரம் நேகா, நடிப்பில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விடுவாள். அத்தனை சூட்டிகை'' என்றார்.


    அவர் சொன்னதை உண்மையாக்கிக் கொண்டிருந்தார், அன்று செட்டில் நாம் பார்த்த நிலா. அதாவது நேகா. டைரக்டர் சொன்ன காட்சியை ஒரே டேக்கில் நடித்து விட்டு, கணத்தில் அடுத்த காட்சிக்குத் தயாரான அந்த நடிப்பு நிலாவை பார்த்தபோது, வருங்கால திரை நட்சத்திரம் கண்ணில் தெரிந்தது. இனி நிலா அதாவது நேகா பற்றி...


    சென்னை புழல்அருகில் சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 6-வது படிக்கிறார். 5 வயதில் இருந்து கற்றுக் கொண்டதால் நடனம் அத்துப்படி. பாட்டில் `கீதம்' வரை வந்திருக்கிறார். இன்னும் ஆசிரியர் மூலம் பாட்டுப்பயிற்சி தொடர்கிறது. பெற்றோர் ராஜேஷ்-பிரசன்னாவின் ஒரே வாரிசு. அப்பா என்ஜினீயர். அம்மா குடும்பத்தலைவி.


    `பின்ளை நிலா' தான் நேகாவுக்கு முதல் தொடர். வாய்ப்பு வந்தது எப்படி?


    இந்த மாதிரி கதைக்கு ஒரு சுட்டிப்பெண் தேவை என்பதை அறிந்து இயக்குனரைப் பார்க்கப் போனோம். அங்கே இவள் மாதிரி நிறைய பெண்கள் இருந்தார்கள். எல்லாருமே பெற்றோருடன் வந்திருந்தார்கள். இவள் அழைக்கப்பட்ட போது, டைரக்டர் `எனக்கு எங்க அம்மா வேணும்' என்ற டயலாக்கை பேசச்சொன்னார். டைரக்டர் சொன்னது தான் தாமதம், இவள் அந்த டயலாக்கை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து விட்டாள். அப்போதே டைரக்டர் உற்சாகமாகி, `எங்க கதைக்கான நிலா கிடைச்சாச்சு' என்றார். மாதத்தில் 12 நாட்கள் படப்பிடிப்புக்கு வர வேண்டியிருக்கும் என்றார்கள்.''


    "இப்போது பள்ளி விடுமுறைக்காலம். பள்ளி திறக்கும்போது விடுமுறை கிடைக்குமா?''


    "பள்ளியில் இதை சொன்னபோது அதுவரை அவள் சம்பந்தப்பட்ட ரெக்கார்டு எல்லாம் பார்த்தார்கள். `குழந்தை எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்வாள். அதனால் நடிப்பு நேரம் தவிர ஒரு அம்மாவாக அவள் படிப்பையும் நீங்கள் பார்த்துக் கொள்வதாக இருந்தால் ஓ.கே.' என்றார்கள்.


    சீரியலின் டைட்டில் பாடலுக்கான காட்சியை மகாபலிபுரம் கடற்கரையில் 2 நாட்கள் எடுத்தார்கள். நடித்தது மாதிரியே இல்லாமல் அவள் அத்தனை இயல்பாக காட்சிகளை ஓ.கே. செய்தபோது அவள் அம்மாவாக எனக்கே ஆச்சரியம்.''


    "வீட்டில் நேகா எப்படி?''


    "இரண்டாம் வகுப்பு முதலே அவள் வேலையை அவளே செய்து கொள்வாள். அவள் ïனிபார்மை அவளே அயர்ன் செய்து போட்டுக் கொள்வாள். தலை வாரிவிட வேண்டிய ஒரு வேலையை மட்டும் தான், எனக்கு தருவாள்.அதுவும் அவளுக்கு தலை வார வராததால் என்னை செய்யச் சொல்வாள். இந்த பொறுப்பு தான் அவளை இப்போது சீரியலுக்குள் நிலாவாக்கி இருக்கிறது.


    டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இப்போது இயக்கி வரும் `மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்'தொடரிலும் நேகாவுக்கு ஒரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அவர் நேகா பற்றி சொல்லும்போது அன்றைய குட்டி மீனாவை பார்த்ததுபோல் அத்தனை துறுதுறுப்பாக இருக்கிறாள். மீனா மாதிரியே கலைத்துறையில் பெரிய நட்சத்திரமாக வருவாள் என்று வாழ்த்தினார். உண்மையில் படிப்பில் நேகாவை பெரிய லெவலுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பெற்றோரான எங்கள் ஆசை. ஆனால் காலத்தின் கட்டளை எப்படியோ..! ''
    Last edited by aanaa; 20th May 2012 at 09:08 PM.
    "அன்பே சிவம்.

  10. #1129
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அம்முவின் சொல்லத் துடிக்கும் மனசு
    கேப்டன் டிவியில் "அம்முவின் சொல்லத் துடிக்கும் மனசு'' என்ற மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இந்தியாவின் உயிர் நாடியான விவசாயிகளை பற்றிய இந்த தொடரில், கதாநாயகி அம்முவே பிரதான பாத்திரம். ஏழை விவசாயியின் மகளாக பிறக்கும் அம்மு, ஜமீன்தாரின் வேலைக்காரன் ராதாவால் தாலி கட்டப்பட்டு ஜமீன்தாருக்கு படுக்கையை பகிர்ந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.


    வேலைக்காரன் ராதாவோ முதலாளிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அப்பாவி இளைஞன். அம்முவின் மீது ஆசை வைத்துள்ள ஜமீன்தார் அம்முவை அடைய கால சந்தர்ப்பம் பார்க்கிறார். இதனிடையே ஜமீன்தாரின் ஆசை பற்றி அவர் மனைவி ஊர்மிளாவிற்கும் அவருடைய அம்மாவிற்கும் தெரிகிறது. அவர்கள் ஜமீன்தாரை கண்டிக்கிறார்கள்.


    இதற்கிடையே அம்முவின் மீது கணவன் ராதாவிற்கு காதலும் அன்பும் அதிகமாகிறது. இச்சூழ்நிலையில் ஜமீன்தார் அம்முவை அடைந்தாரா? அல்லது அம்மு ஜெயித்தாளா? தொடரும் கதை விடை சொல்லும்.

    "அன்பே சிவம்.

  11. #1130
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கொண்டாட்டம் புதுசு

    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடர், 50-வது எபிசோடைத் தாண்டி விறுவிறுப்புடன் தொடர்கிறது. இரண்டு தோழிகளுக்குள்ளான மோதல் தான் கதைக்களம். இனி ஆயுள்வரை சந்திக்கப் போவதில்லை என்று சவால் விட்டுப்போன கல்லூரித்தோழிகள் ரஞ்சனியும் அமுதாவும் இப்போது ஒரு தோழியின் நிச்சயதார்த்த விழாவில் நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் சந்தித்த பிறகு நடக்கும் பூகம்பம் தொடரும் பரபர எபிசோடுகள்.


    50-வது எபிசோடு ஒளிபரப்பான தினத்தில் செட்டில் ஒரு திடீர் பரபரப்பு. பிரமாண்ட கேக் ஒன்றை தொடரின் நட்சத்திரங்களும் டெக்னிஷியன்களும் இணைந்து கொண்டு வந்தார்கள். டைரக்டர் தளபதியிடம், "நம் தொடரின் 50-வது எபிசோடு இன்று ஒளிபரப்பாவதையொட்டி கேக் வெட்டி கொண்டாட இருக்கிறோம். நீங்கள் தான் கேக் வெட்ட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.


    அடுத்தகணம் செட் பரபரப்பானது. டைரக்டர் தளபதி கேக் வெட்டி முதல் துண்டை நாயகன்உதய்க்கு ஊட்ட, நாயகன் உதய் ஒரு துண்டை வெட்டி டைரக்டர் வாயில் ஊட்ட, மொத்தக் கூட்டமும் கைதட்டலால் அரங்கை ஆர்ப்பரிக்க வைத்தது.


    இந்த கேக் ஊட்டும் வைபவம் அதோடு நின்று விடவில்லை. நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் வரை தொடர்ந்தது. அதோடும் நில்லாமல் பாத்திரம் சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் இருந்த பெண்மணி வரை அழைத்து கேக்கை ஊட்டினார். ஊட்டிய கேக்கை பெறும் அனுபவம் அதுவரை அல்லாத பலரும் கொஞ்சம் சம்மதம், நிறைய கூச்சத்துடன் வாங்கிக் கொண்டது தனி சுவாரஸ்யம்.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •