View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 110 of 159 FirstFirst ... 1060100108109110111112120 ... LastLast
Results 1,091 to 1,100 of 1587

Thread: new serials/programs

  1. #1091
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுகள்

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் முற்பகல் 11.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வகும் "உறவுகள்'' தொடர், வெற்றிகரமாக 700 பகுதிகளைக் கடந்து தொடர்கிறது.


    இத்தொடரின் நாயகன் கிருஷ்ணன் தன் அண்ணனின் குழந்தையை காப்பாற்றப்போய் ஒரு கொலைப்பழியில் சிக்கிக்கொள்ள, அவன் மனைவி காயத்ரி அவனை காப்பாற்றுகிறாள்.


    அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தன், கிருஷ்ணனின் நல்ல குணத்தை புரிந்து கொள்ளாமல் வெறுக்கிறான்.


    முகுந்தனின் இரண்டு மனைவிகளான சித்ரா, சுவேதா இருவரும் இப்பொழுது எதிர் எதிர் துருவங்களாக மாறி விட, அனுதினமும் சண்டை. இதில் முகுந்தன் யாருடன் இருப்பது என்பது புரியாமல் மேலும், மேலும் குழப்பத்தில் குடித்து தன்னிலை மறக்கிறான்.


    இந்நிலையில் நண்பன் தங்கராசுவுடன் தொழில் செய்ய முகுந்தனுக்கு 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அப் பணத்தை சுவேதா தருவதாக சொல்வதோடு, அவன் தனது வீட்டில் இருக்க வேண்டும் என்று கண்டிஷனும் போடுகிறாள்.


    முகுந்தன் 10 லட்சம் பணத்தை தங்கராசுவிடம் கொடுக்க போகிறான் என்று தெரிந்த கிருஷ்ணன், முகுந்தனை சந்திக்கிறான். "நீ பணம் கொடுத்து தொழில் பண்ண போகிறவன் நம் எதிரி ராஜேந்திரனோட ஆள். நீ கொடுக்கும் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு உன்னை ஏமாற்றி விடுவான்'' என்கிறான். ஆனால் முகுந்தன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் பணத்தை தங்கராசுவிடம் கொடுத்து விடுகிறான்.


    அதே சமயம் காயத்ரியின் தங்கை சுதாவின் கணவன் விஷ்ணுவுக்கு மூளையில் கட்டி இருப்பதும், தான் இறந்து விடுவோம் என்பதும் தெரிய வருகிறது. விஷயத்தை வீட்டில் மறைக்கும் அவன், தன் மனைவிக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கவும், தன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் முடிவு செய்கிறான்.


    விஷ்ணுவுக்கு இருக்கும் நோயை வீட்டில் கண்டுபிடித்தார்களா? இல்லையா?


    தங்கராசு முகுந்தனை ஏமாற்றினானா?


    கிருஷ்ணன் - முகுந்தன் சண்டை என்ன ஆனது?


    சித்ராவும், சுவேதாவும் எப்போது சரியாவார்கள்?


    சுவாரஸ்யமான கேள்விகளோடு தொடர்கிறது, `உறவுகள்' தொடர்.


    தயாரிப்பு: சான் மீடியா லிமிடெட்; இயக்கம்: கே.ஷிவா; திரைக்கதை: எஸ்.குமரேசன்; வசனம்: பாலசூர்யன்; இசை: டி.இமான், பாடல்:வைரமுத்து.


    தொடரின் நட்சத்திரங்கள்: ஸ்ரீகுமார், பாவனா, ஸ்ரீதுர்கா, அப்சர், ராஜ்காந்த், அமரசிகாமணி, ராமச்சந்திரன், சாந்தி வில்லியம்ஸ், டி.ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஜெயப்பிரகாசம், சிவகவிதா, சோனியா பரத், ஜெயந்த், கே.எஸ்.ஜெயலட்சுமி, ஜெ.லலிதா, வைரவராஜ், சுதா, ஆரத்திகாஸ்ரீ, வச்தலா ராஜகோபாலன், பாஸ்கர் ராஜா, கிச்சா, எம்.எல்.ஏ. தங்கராஜ்.
    Attached Images Attached Images
    Last edited by aanaa; 14th April 2012 at 06:18 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1092
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்ன வீடு பெரிய வீடு

    வசந்த் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர், "சின்ன வீடு பெரிய வீடு.''


    நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடாக வாழும் பிரபல வழக்கறிஞர் பரசுராமன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் கங்கா என்ற நடிகை. அவளுடைய சினேகத்தால் குடும்பத்தில் புயல் வீசுகிறது. சின்ன வீடு பெரிய வீடு இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்ட வக்கீல் அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.


    வக்கீலாக ஒய்.ஜி.மகேந்திரனும், குமாஸ்தாவாக காத்தாடி ராமமூர்த்தியும் நடிக்கிறார்கள். வக்கீல் மனைவியாக யுவஸ்ரீ, நடிகையாக கங்கா, சாமியாராக `வியட்நாம் வீடு' சுந்தரம், மற்றும் ஜெயதேவி, சுருதி கண்ணன், கல்யாண்ஜி ஆகியோரும் நடிக்கிறார்கள்.


    ஒளிப்பதிவு: முத்துராமன்; கதை வசனம், டைரக்ஷன்:கே.ஜெயமணி.





    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1093
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உதிரிப்பூக்கள்-100

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் உதிரிப்பூக்கள் தொடர், நூறாவது எபிசோடை எட்டியிருக்கிறது. குடும்ப உறவுகளின் பின்னான மர்ம முடிச்சை திருப்பங்களுடன் காட்சிப்படுத்தும் இந்த தொடர், விறுவிறுப்பான கதையோட்டத்திலும் கவர்ந்த தொடராகி இருக்கிறது.


    இதுவரை தங்களை உயிருக்கும் மேலாக பாசம் காட்டி வளர்த்த அப்பா சிவநேசன், தங்கள் சொந்த அப்பா இல்லை என்ற உண்மை சக்தி-திலீபன், நிலா மூவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. என்றாலும் அப்படியே இருந்து விடாமல் வளர்ப்பு அப்பா மீது வழக்கு எதுவும் பாயாமல் இருக்க தன்னாலான முயற்சியை செய்யத் தொடங்குகிறாள், மூத்தவள் சக்தி.


    ஆனால் அதற்குள் துரதிருஷ்டவசமாக சக்தி உள்பட பிள்ளைகள் மூவரும் கடத்தப்படுகிறார்கள். போலீஸ் தேடுகிறது. சிவநேசன் அதிர்ச்சியாகிறான். நம்மால் பிள்ளைகள் கஷ்டப் படக்கூடாது என்ற எண்ணத்தில் போலீசில் சரண்டர் ஆகிறான். பிள்ளைகள் கடத்தப்பட்டதன் பின்னணியில் அவன் பங்கு எதுவும் இருக்கிறதா என்பதை போலீஸ் துருவுகிறது.


    உண்மையில் அவர்களை கடத்தியது யார்? எதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவரும் போது அடுத்த கட்ட அதிர்ச்சி காத்திருக்கிறது.


    தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, எல்..ராஜா, ஸ்ரீலேகா. ஒளிப்பதிவு: சாஹித்யா சீனு. திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: ஆனந்த் சம்யுக்தா. இயக்கம்: விக்ரமாதித்தன்.


    ஹோம் மீடியா சார்பில் தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1094
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தாமரை

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `தாமரை.'


    ஏழைக் குடும்பத்தில் பிறந்த கீர்த்தனாவின் லட்சியமே பி.டி.ஓ. ஆபீசர் ஆகவேண்டும் என்பது தான். ஆனால் கீர்த்தனாவின் முன்னேற்றத்தை அறவே வெறுக்கும் அவளின் சித்தப்பா பாலாஜி, கீர்த்தனாவிற்கு பல வழிகளில் பிரச்சினைகளை உண்டாக்குகிறார். தகுதியே இல்லாத தனது பெண்ணை சுந்தர் என்ற பணக்காரனின் உதவியோடு பி,டி.ஒ. தகுதித்தேர்வில் இடம் பெறுவதற்கான தகுதிச் சுற்றில் பாசாக வைக்கிறார்.


    கீர்த்தனாவின் எண்ணத்தை நன்கு உணர்ந்த பாலு அவளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதன்படி பிடிஓ ஆபீசருக்கான இன்டர்விïவில் கீர்த்தனா பங்கு பெற உதவுகிறார். இன்டர்விïவிற்காக தன் தந்தை ராஜேந்திரனின் உதவியோடு கலெக்டரை சந்திக்கிறாள் கீர்த்தனா. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ராமன் என்பவன் ஸ்வீட் பாக்கெட்டில் லஞ்சப் பணத்தை வைத்து ராஜேந்திரன் மூலம் கலெக்டருக்கு கிடைக்கும்படி செய்கிறான். இந்த வஞ்சம் எதுவும் அறியாத ராஜேந்திரன், ஸ்வீட் பாக்கெட்டோடு கலெக்டரை சந்திக்கச் செல்கிறார்.


    ராஜேந்திரன் லஞ்சப் பணம் கொண்ட ஸ்வீட் பாக்கெட்டை கலெக்டரிடம் கொடுத்தாரா? கீர்த்தனாவின் பி.டி.ஓ. ஆபீசராகும் கனவு நனவானதா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது தாமரை தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1095
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உன் வாசம் என் நேசம் - சீசன் 3

    ஜெயா டிவி வழங்கிய "உன் வாசம் என் நேசம் - சீசன் 2 நிகழ்ச்சியில் ஏராளமான இளம் தம்பதிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற தம்பதியருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கியது, ஜெயா டிவி.


    இந்நிகழ்ச்சி இப்போது "உன் வாசம் என் நேசம் சீசன் 3''-யை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் தம்பதியருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இறுதிப்போட்டியில் பங்கு பெறும் 3 தம்பதியருக்கும் தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.


    திருமணமாகி அதிகபட்சமாக 5 வருட மணவாழ்க்கையில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.


    "உன் வாசம் என் நேசம் - சீசன் 3'' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நேர்முகத்தேர்வு சுற்றுக்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக திருச்சி மற்றும் கோவையில் நடைபெற்றதில் எண்ணற்ற இளம் தம்பதிகள் பங்கேற்றனர். நாளை சென்னை மகாபலிபுரம் அய்யப்பன் கோவில் அருகிலுள்ள எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் இதற்கான தேர்வு நடைபெறவுள்ளது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1096
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனதோடு மனோ

    ஜெயா டிவியில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு "மனதோடு மனோ'' என்ற இசை நிகழ்ச்சி இசைப்பிரியர்களுக்காக ஒளிபரப்பாகி வருகிறது.


    இந்த நிகழ்ச்சியில் பாடகர் மனோவை சந்திக்கும் ஒவ்வொரு பிரபலங்களும், தங்கள் மனதின் ரகசியங்களை, சாதனைகளை... இசையாய், பாடலாய், பேச்சாய் மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.


    இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி சுஜாதாவின் மகளும் பாடகியுமான சுவேதா மோகன் தனது இசைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மனோவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1097
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மஞ்சுளா நடிக்கும் `சந்திரலேகா'

    மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் `சந்திரலேகா.' நடிகை மஞ்சுளா விஜயகுமார் முதன் முறையாக நடிக்கும் தொலைக்காட்சி தொடர் இது.


    இது அக்கா, தங்கை இருவரிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கதைக்களம். மஞ்சுளா - மோகன் சர்மா தம்பதியினருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. பெண் பிறக்கிறாள். பெற்றெடுத்த குழந்தையையும், தத்தெடுத்த குழந்தையையும் வளர்த்து வருகின்றனர்.


    இந்த அக்கா, தங்கை இடையே போட்டி, பொறாமை புகுந்து கொள்கிறது. அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.


    தேவிபாலாவின் கதை வசனத்தில் உருவாகியுள்ள இத் தொடரை, சுதர்சன் இயக்கியுள்ளார். தயாரிப்பு: மெகா டிவி.


    எம்.ஜி.ஆர். பட கதாநாயகி மஞ்சுளாவுடன் வரலெட்சுமி, புஷ்பலதா, ரவிகுமார், விஜயலெட்சுமி ஆகியோரும் தொடரின் நட்சத்திரங்கள்.


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறுஒளிபரப்பு: இரவு 8.30 மணிக்கு.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1098
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நாலாவது சுற்றில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு'

    தமிழகத்தின் தங்க குரல் தேடலுக்கான ராஜ் டிவியின் விறுவிறுப்பான 4-வது சுற்று பிரமாண்டமான அரங்கில் நடந்தேறியது.


    இதில் 4 வித்தியாசமான சுற்றுக்கள் நடந்தன. துள்ளல் மற்றும் வெஸ்டர்ன் பாடல்கள் சுற்றில் பாடகி கல்பனா, மக்களிசைச் சுற்றில் பாடகி அனிதா குப்புசாமி, சோகம் மற்றும் மெலடி சுற்றுக்களில் மஹதி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் பாடகர் ஸ்ரீராம், பாடகி தேவி நெய்தியார், அப்துல் ஹமீது ஆகியோர் இணைந்து 12 போட்டியாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்க இருந்தனர். ஆனால் போட்டியாளர்களின் அசாதாரண பாடும் திறமையால் பரவசமான நடுவர்கள் இறுதியாக 15 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியளித்தனர்.


    ஒவ்வொரு சுற்றுக்கும் `சிறந்த குரல்' பட்டம் வழங்கி மொபைல்கள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு சுற்றுக்களில் வென்ற போட்டியாளர் ஜெயபிரகாஷ் இரண்டு மொபைல்களை வென்றது நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம்.


    15 பேரில் `வாய்ஸ் ஆப் தமிழ்நாடு' பட்டத்துக்கு உரியவர் யார்? வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சியை காணலாம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1099
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தள்ளிப்போகும் முதலிரவு

    திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `சின்ன மருமகள்.'


    விஷாகாவின் பாட்டியால் பலமுறை பல்வேறு வகைகளால் தடைப்பட்ட ராதிகா, தேவ் இருவரின் திருமணம் நடைபெறுகிறது. அனைவரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, விஷாகாவின் பாட்டி மட்டும் ராதிகாவை கொல்லும் திட்டத்தை தீட்ட, அதில் விஷாகா மாட்டிக்கொள்ள, விஷாகாவை காப்பாற்றும் முயற்சியில் ராதிகா பலத்த தீக்காயம் அடைகிறாள்.


    கோவில் பண்டிதர் சொன்னவாறு ஐந்துவிதமான புனித நீரால் ராதிகாவை தேவ் குளிப்பாட்ட, ராதிகாவின் உடம்பிலிருந்த காயங்கள் மறைந்தோடுகின்றன. வெகு நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த தேவ்-ராதிகா இருவரின் முதலிரவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அச்சமயம் வீட்டிலிருந்து தன் பெற்றோரால் துரத்தப்பட்ட விஷாகா யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் வந்து ஸ்டோர் ரூமில் தங்குகிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத ராதிகா நிலைகுலைந்து போகிறாள்.


    தன் சின்ன மருமகள் பதவியின் பொறுப்புகளை உணர்ந்த ராதிகா, தேவுடன் இணைய முடியாமல் போக, அதனால் ராதிகாவை தேனிலவுக்காக கோவாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறான் தேவ்.


    தான் வீட்டில் இல்லை என்றால் நிச்சயம் விஷாகா தன் புகுந்த வீட்டாரிடம் மாட்டிக்கொள்வாள் என்று உணர்ந்த ராதிகா எடுத்த முடிவு என்ன? விடைக்கான காட்சிகள் தொடரில்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1100
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆண்பாவம் - ஒரு கண்ணோட்டம்

    Last edited by aanaa; 4th April 2012 at 08:05 PM.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •