View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 105 of 159 FirstFirst ... 55595103104105106107115155 ... LastLast
Results 1,041 to 1,050 of 1587

Thread: new serials/programs

  1. #1041
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    300ஐ தாண்டிய வந்தாளே மகராசி!



    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி தொடர் 300 எபிசோடுகளை கடந்து தொடர்கிறது. பெண்ணின் பெருமைகளைச் சொல்லும் தொடர் என்பதால் தொலைக்காட்சி நேயர்களிடம் வரவேற்பு பெற்ற தொடர் இது. குறிப்பாக இந்த தொடருக்கு பெண் ரசிகைகள் அதிகம். எந்தவொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அழைக்கிற வார்த்தை தான் தொடரின் தலைப்பு. பெண் மணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும் இதை வார்த்தையைத்தான் சொல்வார்கள். இந்த வார்த்தையையே தலைப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    சொர்ணமால்யா, ஐஸ்வர்யா, ஸ்ரீ, இளவரசன், லதாராவ், சுக்ரன், ஸ்ரீலதா, அமரசிகாமணி, ஷண்முகசுந்தரம், புவனா, சுதா, சுமங்கலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை: ராஜ்பாஸ்கர். இயக்கம்: செந்தில்குமார். இவர் சுந்தர் சி.யின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த `புதிய கீதை மற்றும் பள்ளிக்கூடம், சாணக்யா, குப்பி, பகைவன் போன்ற படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வி.சுந்தர் இத்தொடரை தயாரித்து வருகிறார்.




    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1042
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சென்னை வந்த சிண்ட்ரெல்லா

    `இந்தியாவின் மிகப் பிரபலமான டிஸ்னி இளவரசிகளுள் சிண்ட்ரெல்லா முக்கியமானவர். `டிஸ்னி இளவரசி தொடர்பான கற்பனைக் கதைகள் என்றைக்குமே சுவாரஸ்யமானவை. நேர்மை, கவுரவம், அன்பு என குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து விட்டாள், சிண்ட்ரெல்லா. இவளுடன் ஸ்நோ வொயிட், பெல், அரோரா, ஜாஸ்மின், ஏரியல் என டிஸ்னி இளவரசிகள் யாராக இருப்பினும் குழந்தைகள் மகிழும் வகையில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக குணமும், சுவாரஸ்யமான கதையும் இருப்பது சிறப்பு அம்சம்.

    கற்பனைக் கதாபாத்திரம் என்றாலும், சிண்ட்ரெல்லாவை குழந்தைகள் கொண்டாடு கிறார்கள். இந்த கதாபாத்திரம் உயிர்பெற்று வந்தால் எப்படி இருக்கும்? அதுவும் தன்னை உயிராய் நேசிக்கும் குழந்தைகளை ஒட்டு மொத்தமாக சந்தித்தால் எப்படி இருக்கும்?

    இந்த சிந்தனையின் விளைவாகவே சிண்ட் ரெல்லா நிஜ உருக்கொண்டாள். பெங்களூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள குழந்தைகளைக் குதூகலப்படுத்தியதைத் தொடர்ந்து இளவரசி சிண்ட்ரெல்லா மற்றும் இளவரசன் சார்மிங் ஆகியோர் சென்னை வந்தார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அம்பா ஸ்கைவாக் மாலில் நேரடியாகத் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். இதற்காக ஸ்கைவாக் அரங்கில் சிண்ட்ரெல்லாவின் கதை மீண்டும் சொல்லப் பட்டது. குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் இளவரசி சிண்ட்ரெல்லா, தன் காதலன் இளவசரன் சார்மிங்குடன் வால்ட்ஸ் நடனமாடி குதூகலித்தார். இது இளவரசியின் முதல் இந்திய விஜயம் மற்றும் முதல் சென்னை வருகையும் கூட!

    சிண்ட்ரெல்லாவின் வருகை, அவரைப்பார்த்ததும் குழந்தைகளின் கொண்டாட்டம், ரசிகர்களுக்காக சிண்ட்ரெல்லா மேடையில் ஆடிய நடனங்கள் என அனைத்தும் டிஸ்னி சேனலில் இடம்பெறுகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1043
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரவணன்- மீனாட்சி நிச்சயதார்த்தம்


    விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், சரவணன் -மீனாட்சி'.

    சரவணனாக செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நிஜ காதலர்களோ என்று கேட்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார்கள்.

    பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து, பெரியவர்களால் நிச்சயித்த கல்யாணமாக முடிந்திருக்க வேண்டிய கதையில் திடீரென `ஜாதகம்' வில்லனாகி விடுகிறது. அந்த ஜாதக குளறுபடியில் மனதை கல்லாக்கிக் கொண்டு சரவணனை மறக்க சம்மதம் தெரிவிக்கிறாள் மீனாட்சி. ஆனாலும் எல்லா உறுதிமொழிகளையும் தாண்டி, ஜாதக தடைகளை மீறி காதல் ஜெயிக்கிறது.

    இப்போது காதல் ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம். காரைக்குடியில் பிரம்மாண்ட பங்களாவில் நடை பெறும் இந்த நிச்சயதார்த்த பகுதிகள் மிகவும் சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் பொங்கி வரும் காதலும், குறும்பான ஊடலும் கூடலும் கரும்பாக நேயர்களை கவரும்.

    சரவணனின் அப்பாவாக வரும் ராஜசேகர், அம்மா குயிலி இருவருமே நகைச்சுவை நடிப்பிலும் கலக்குகிறார்கள்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1044
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காதம்பரியாக மாறிய மிதுனா!

    கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா `மாமதுரை' படத்தில் அறிமுகமானவர். தமிழிலும், தெலுங்கிலும் நடித்தவர் இப்போது சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சாப்ரன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் `காதம்பரி' மெகா தொடரில் இவர்தான் கதையின் நாயகி. இவருடன் சுதா சந்திரன், லஷ்மிராஜ், காயத்ரி, பாலாஜி, செம்புலி ஜெகன், சுந்தரி, சூரி, தேசிங்கு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

    பிரபு சங்கர் கதை எழுதி இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மணிமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு நடித்து கொண்டு இருந்த மிதுனாவிடம் பேசினோம்.



    "அந்த காலத்தையும், இந்த காலத்தையும் இணைக்கும் கதை. 200 ஆண்டுகளுக்கு பிறகு மறுஜென்மம் எடுத்து சந்திக்கும் காதம்பரியின் வாழ்க்கை சம்பவம். 2 கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். அதிலும் அந்த காலத்து வேடத்துக்காக நான் ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி, கொண்டை போட்டு, அந்த கால நகைகளை மாட்டிக்கொண்டு நடிப்பது புது அனுபவம் தான். இந்த தொடருக்கு பிறகு என்னை காதம்பரி என்றே அழைப்பார்கள். எனக்கு எதிரான பாத்திரத்தில் சுதா சந்திரன் நடிப்பில் மிரட்டியிருக்காங்க. அவுங்களுக்கும் பெரிய அளவில் பேர் கிடைக்கும். ''

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1045
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் நடிகை காவேரி

    தியாகம் தொடரில் நடிக்கிறார்



    `தங்கம், வசந்தம், மாமா மாப்ளே..' போன்ற பல வெற்றித் தொடர்களை தயாரித்து வரும் விஷன் டைம் நிறுவனம் இப்போது `தியாகம்' என்ற புதிய தொடரை தயாரிக்கிறது.

    முற்றிலும் குடும்ப பின்னணியில் மனித உறவுகளின் மகத்துவத்தை சொல்லவிருக்கும் இந்த தொடரில், கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவம் கதைக்களமாக்கப் பட்டிருக்கிறது. அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் இயல்பான முகங்கள்.. அவதாரம் எடுக்காத யதார்த்தமான கதாபாத்திரங்கள் தொடரின் உயிர்நாடி.

    கவிஞர் வைரமுத்து இந்த தொடருக்காக ``தியாகம் என்பது யாகம்..'' என்ற பாடலை எழுதி உள்ளார். தினா இசையமைக்கிறார். சமுத்திரம், காசி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் காவேரி, இந்த தொடரின் மூலம் சின்னத் திரையில் கால் பதிக்கிறார். கன்னடத்தில் நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீநாத் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சபிதா ஆனந்த், கவுதமி, உதய், துர்கா, சூசன், பிர்லாபோஸ், விஜய் ஆனந்த், கீர்த்தி ஆகியோர் தொடரின் ஏனைய நட்சத்திரங்கள்.

    கதை, திரைக்கதை வசனம்: குரு சம்பத்குமார். ஒளிப்பதிவு: செல்லப்பாண்டி. டைரக்ஷன்: ஏ.அப்துல்லா.

    தொடருக்கான படப்பிடிப்பு காரைக்குடி, கும்பகோணம், திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

    விஷன் டைம் நிறுவனத்தின் சார்பில் வைதேகி ராமமூர்த்தி இந்த தொடரை தயாரிக்கிறார். விரைவில் சன் டி.வி.யில் பகல் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1046
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வைரமங்கை-175


    தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திறமையான பெண்களை அடையாளம் காட்டும் பிரத்தியேக நிகழ்ச்சி `வைரமங்கை.' கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி 175-வது எபிசோடை கடந்து தொடர்கிறது.

    நிகழ்ச்சியில் பெண்களிடம் உள்ள அத்தனை திறமைகளையும் அரங்கேற்றும் விதத்தில் தமிழச்சி, அழகே அழகாய், உன்னால் முடியும் பெண்ணே, ஆஸ்கார் அரசி என நான்கு தகுதிச்சுற்றுகளையும் சிந்தனைத் திறன் எனும் பொது அறிவுச் சுற்றினையும் கொண்டுள்ளது, இந்த நிகழ்ச்சி.

    இந்த சுற்றுகளை கடந்து வரும் வெற்றியாளர்களுக்கு இறுதிச் சுற்றான `சமயோசிதம் சுற்று' ஒரு சிறந்த பெண்மணியை அடையாளம் காட்டும் வித்தியாசமான சுற்றாக அமைந்துள்ளது.

    இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறமையான பெண்களை அடையாளப்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சியை சின்னத்திரை பிரபலங்கள் சுஜிதா மற்றும் நிஷா தொகுத்து வழங்குகிறார்கள். கிரியேடிவ் கிரியேஷன்ஸ் சார்பில் மதுரை இரா.ரவிச்சந்திரன் தயாரித்து, இயக்குகிறார்.

    இதுவரை 16 மாவட்ட வைர மங்கைகளை அடையாளம் கண்டுள்ள இந்த நிகழ்ச்சி, இன்னும் பல மாவட்டங்களில் வலம் வர உள்ளது.

    இறுதியில் தமிழக அளவில் நடைபெறும் வைரமங்கை போட்டியில் வெற்றிபெறும் பெண்மணிக்கு 5 லட்சம் மதிப்புள்ள வைரக் கிரீடம் காத்துக் கொண்டிருக்கிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1047
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உலகை உலுக்க வரும் வன்னிக்காடு!

    சீமான் நடித்த ’மகிழ்ச்சி’ படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு “சினிமாவுக்குப் போன சித்தாளு” என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர்.

    இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “சந்தணக்காடு” மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது.

    இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபமாகி வருகிறார். இதனால் இவரிடம், “சந்தணக்காடு தொடரைப் போலவே, ஈழவிடுதலை வரலாற்றை வன்னிக்காடு என்ற தலைப்பில் ஏன் மக்கள் தொலைகாட்சிக்கு தயாரிக்கக் கூடாது” என்று நண்பர் கேட்க, ஏற்கனவே உணர்வாளராக இருக்கும் கௌதமன் இதை கற்பூரமாக பிடித்துக் கொண்டு விட்டார்.

    தற்போது “வன்னிக்காடு” மெகா தொலக்காட்சித் தொடருக்கான திரைக்கதை மும்முரமாக எழுதிவருகிறேன். விரைவில் மக்கள் தொலக்காட்சி வன்னிகாட்டை தொடங்க இருகிறோம். இது மாபெரும் மக்கள் வரலாறாக இருக்கும். கோவை சத்தியமங்கலம் பகுதியையே வன்னிக்காடு தொடருக்கும் கதைக்களமாக பயன்படுத்த இருகிறேன். கொழும்பு, மற்றும் யாழ் நகர்களை கோவா மற்றும் மங்களூர் பாண்டிச்சேரி ஆகிய நகரங்களை வைத்து மேச் செய்ய இருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் கிளிநொச்சிக்கு அப்படியே பொருந்தும். வன்னிக்காடு தமிழனின் வீரவரலாறாக இருக்கும். ஈழத்தை விரைவில் தமிழினம் வெல்லும்” என உணர்ச்சி பொங்க நம்மிடம் கூறினார் கௌதமன்.


    தமிழ் மீடியா
    "அன்பே சிவம்.

  9. #1048
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நானும் ஒரு பெண்

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `நானும் ஒரு பெண்' தொடர், பரபரப்பான திருப்பங்களுடன் விரைகிறது.

    திருமணமே கனவாக இருந்த காலம் போய் ஒரு வழியாக சங்கீதா ஜெய்குமாரை மணம்முடித்து மாமியார் வீடு செல்கிறாள். அங்கு அவளுக்கு பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள். தென்றலாக இருந்த ஜெய்குமாரின் குடும்பத்தில் அவனது சித்தி காஞ்சனாவின் வருகை பெரும் புயலை கிளப்புகிறது.

    அவள் சங்கீதாவை ஜெய்குமாரின் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிக்க சூளுரைக்கிறாள். அவள் எண்ணம் நிறைவேறியதா? சங்கீதா, ஜெய்குமார் இருவரின் நிலையும் என்னாயிற்று? தொடர்கிறது, தொடர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1049
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விருது விழா



    ஜெயா டி.வி.யில் வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் விருதுவிழா நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு சாதனை புரிந்த திரைப்பட கலைஞர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

    தமிழ் சினிமாவின் 80-வது ஆண்டை கொண்டாடும் வகையில் `வி 4' அமைப்பு தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை விருது வழங்கி கவுரவப்படுத்தியது. சென்னை சேத்துப்பட்டு லேடிஆண்டாள் பள்ளியில் நடந்த இந்த விழாவுக்கு பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

    விழாவில் கலைப்பொக்கிஷங்கள் நடிகர் `காகா' ராதாகிருஷ்ணன், இயக்குனர் கே.பாலசந்தர், கவிஞர் வாலி, வசன கர்த்தா ஆரூர்தாஸ், நடிகை அஞ்சலிதேவி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, கலை வித்தகர் பிலிம் நிïஸ் ஆனந்தன் ஆகியோர் கலை உலக சாதனையாளர் விருது பெற்றார்கள்.

    நடிகர் சத்யராஜ் அறிஞர் அண்ணா விருதும், பிரபு நடிகவேள் எம்.ஆர்.ராதா விருதும், இயக்குனர் சந்தானபாரதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருதும், பி.வாசு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் விருதும் பெற்றனர்.

    சிறந்த படமாக விஜய் நடித்த வேலாயுதம் விருது பெற்றது. சிறந்த நடிகராக `ஆடுகளம்' படத்தில் நடித்த தனுஷ், சிறந்த நடிகையாக `பவானி' படத்தில் நடித்த சிநேகா விருது பெற்றனர்.

    சிறந்த இயக்குனராக ஜெயம் ராஜாவும், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும், பாடலாசிரியராக விவேகாவும் விருதுகளை பெற்றுக்கொண்டார்கள்.

    திரையுலகம் திரளாக திரண்ட இந்த விழாஏற்பாடுகளை `வி-4' அமைப்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் அகமது செய்திருந்தனர்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1050
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `வெள்ளைத் தாமரை'



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் சன் டிவியில் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வெள்ளைத்தாமரை. அனுபல்லவி தொடரைத் தொடர்ந்து அபிநயா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய தொடர் இது.

    தொடருக்காக கவிஞர் காதல்மதி எழுதிய "வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்...'' என்கிற பாடலை ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். `எங்கேயும் எப்போதும்' வெற்றிப்படத்தின் இசையமைப்பாளர் சத்யா இந்தப் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். தொடருக்கான பின்னணி இசையும் இவரே.

    இந்தப் பாடலுக்கு ஏவி.எம். மற்றும் கனவுப்பட்டறை ஸ்டூடியோக்களில் பிரமாண்ட செட் அமைத்து, அதில் கேசவன் நடன அமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன், தர்ஷினி, தனலட்சுமி இருவரும் போட்டி போட்டு பரத நாட்டியம் ஆடினர். பி.சித்திரைச்செல்வன், ஏ.சபாபதி, ஆர்.வி.பார்த்திபன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்தனர். தொடருக்கான படப்பிடிப்பு கும்பகோணம், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும், சென்னையில் உள்ள சில படப்பிடிப்பு தளங்களிலும் நடைபெற்று வருகிறது.

    தொடரின் நட்சத்திரங்கள்: அபிஷேக், புஷ்பலதா, வாசு விக்ரம், நேசன், தனுஷ், அறிமுகநாயகி தர்ஷினி, தனலட்சுமி, காயத்ரி, நித்யா ரவீந்தர், கூத்துப்பட்டறை ரவி, அழகு, வீரா, பிரசன்னா, நவீன், எம்.எல்.ஏ. தங்கராஜ், குகன்.

    மணிபாரதி, தண்டபாணி இணைந்து இயக்கும் இந்தத் தொடருக்கு ஆர்.எஸ்.பாலமுருகன் வசனம் எழுதுகிறார். கதை, திரைக்கதை, ஆக்க தலைமை ஜே.கே. தயாரிப்பு: அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் ராதா கிருஷ்ணசாமி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •