View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 101 of 159 FirstFirst ... 519199100101102103111151 ... LastLast
Results 1,001 to 1,010 of 1587

Thread: new serials/programs

  1. #1001
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அவள்!



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது `அவள்' தொடர். தாய், மகள், கணவன், மனைவி, அண்ணன், தங்கை ஆகியோர்களிடையே நடக்கும் பாசப்போராட்டக் கதை. தாய் ஜெயந்தி மகளுக்குத் திருமணம் நடத்தி முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பிய பின்னும், மகளை பிரிந்திருக்க முடியாமல் தவிக்கும் பாசம் ஒரு பக்கம். கணவன் மேல் உள்ள பாசத்தால் அவளை சந்தேகிக்கும் மனைவி ஒரு பக்கம் அண்ணனாக நினைத்திருப்பவனோடு சம்பந்தப்படுத்திப்பேசும் உறவுகள் ஒரு பக்கம். இப்படி குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் கதைதான் `அவள்'.

    இயக்கம்: வள்ளிமுத்து.

    நடிப்பு: சஞ்ஜீவ், மகாலட்சுமி, ஸ்ரீகலா. `பாஸ் என்ற பாஸ்கரன்' `யுத்தம் செய்' படங்களில் முத்திரை நடிப்பை வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முறையாக `அவள்' தொடரில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    நன்றி: தினதந்தி


    Last edited by aanaa; 7th November 2011 at 06:58 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முத்தாரம் - சன் - தொலைக்காட்சி

    "அன்பே சிவம்.

  4. #1003
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உதிரிப்பூக்கள்



    வரும் திங்கள் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `உதிரிப்பூக்கள்' `மேகலா' வெற்றித்தொடரை இயக்கிய இயக்குனர் விக்ரமாதித்தன் இயக்குகிறார். `மாதவி' தொடரை தயாரித்த ஹோம் மீடியா நிறுவனம் இந்த புதிய தொடரை தயாரிக்கிறது.

    கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு சின்னத்திரையில் மீண்டும் இந்த தொடர் மூலம் நடிப்பு முத்திரை பதிக்க வருகிறார், சேத்தன்.

    நடிகர் விக்ராந்த்தின் மனைவியும் நடிகையுமான மானசா, இந்த தொடர் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமாகிறார்.

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதை, யதார்த்த குடும்ப பின்னணியுடன் தொடங்குகிறது. சிவநேசன் தனது இரண்டு மகள்கள் சக்தி, நிலா, மகன் திலீபன் இவர்கள் தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பான அப்பா. பிள்ளைகளிடம் அன்பை கொட்டுவதோடு அவர்களை பொறுப்பு மிக்கவர்களாகவும் வளர்க்கிறார். பிள்ளைகளும் அப்பா மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். தாயில்லை என்ற குறை தெரியாமல் தாய்க்குத் தாயும் தந்தைக்கு தந்தையுமாக நேசிக்கும் சிவநேசனின் அன்பில் பிள்ளைகள் உருகிப்போகிறார்கள்.

    இப்படி ஒரு அப்பாவா என்று மற்ற பெண்களே பொறாமைப் படும் அளவுக்கு சிவநேசனின் பாசத்தின் எல்லை விரிந்துகொண்டே போகிறது.

    இவர்கள் வீட்டுக்கு எதிர்வீடு அலமேலுவின் வீடு. சிவநேசனை `தம்பி' என்றும் அவர்மகள் சக்தியை `மருமகளே' என்று அவர் வார்த்தைக்கு வார்த்தை அழைப்பவள் அலமேலு.

    இந்த உறவு முறை நெருக்கம் அவர்கள் இருவர் குடும்பத்திலும் அதிகப்படியான நெருக்கத்தை ஏற்படுத்தி வைக்கிறது.

    அலமேலுவுக்கு ஒரு மகன். 3 மகள்கள். பெண்களில் இருவருக்கு திருமணமாகி அவர்கள் கணவர்களும் வீட்டோடு மாப்பிள்ளைகளாக அங்கேயே இருக்கிறார்கள். திருமணமான பெண்கள் இருவருமே அக்கா- தங்கை மாதிரி நடந்து கொள்ளாமல் எப்போதும் சக்களத்திகள் மாதிரி சண்டைபோட்டுக் கொள்வார்கள்.அதுபோதாதென்று இவர்கள் கணவர்கள் அடிக்கும் லூட்டி வேறு. உழைக்காமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் வெட்டி பந்தாவை விட்டு விடாத மாப்பிள்ளைகள் இவர்கள்.

    அலமேலுவின் மகன் லட்சுமிபதி. சிறுவயது முதலே சிவநேசன் குடும்பத்துடன் இவர்கள் குடும்பம் நட்பு பாராட்டி வந்ததில் சக்தி இவனது அன்பான சிநேகிதி. இந்த நட்பு இவர்கள் இருவரின் பருவ வயதில் காதலாக மொட்டவிழ்ந்து ஒருவர் மற்றவரிடம் வெளிப்படுத்த தவிக்கிறது. ஆனால் யார் காதலை முதலில் சொன்னாலும் நட்பு சிதைந்து விடுமோ என்ற பயத்தில் காதலை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கிறார்கள்.

    இதற்கிடையே அலமேலு தன் மகன் லட்சுமிக்கு தங்கள் ஜாதிசனத்தில் பெண் தேடுகிறாள். இனம் இனத்தோடு தான் சேரவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருக்கிறாள்.

    இந்தமாதிரியான ஒரு சூழ்நிலையில் சக்தி-லட்சுமி தங்கள் காதலை வெளிப்படுத்தினார்களா? அலமேலுவின் ஜாதிவெறியைத் தாண்டி இவர்களால் வாழ்க்கையில் இணைய முடிந்ததா? என்பது தொடரின் அடுத்த கட்டம்.

    தொடரின் நட்சத்திரங்கள்: சேத்தன், மானசா, ஹரி, கிரேசி, வடிவுக்கரசி, ரூபஸ்ரீ, சுவேதா, சர்வன், ரேவதிபிரியா, பாரதி, அகிலா, எல்.ராஜா, ஸ்ரீலேகா.

    பாடல்: யுகபாரதி. பாடல் இசை: இலக்கியா. பின்னணி இசை:கிரண். ஒளிப்பதிவு: சாகித்யா சீனு. திரைக்கதை: சி.முத்துச்செல்வன். வசனம்: பா.ராகவன். இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


    நன்றி: தினதந்தி


    "அன்பே சிவம்.

  5. #1004
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேகம் பிடித்த `ஒற்றன்'



    மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணி மற்றும் 10 மணி செய்திகளுக்கிடையே ஒளிபரப்பாகி வருகிறது `ஒற்றன்' பகுதி. அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசு வட்டாரங்களின் அந்தரங்க செயல்பாடுகள், முக்கிய கட்சிகளின் பின்னணி நடவடிக்கைகள் என முழுக்க, முழுக்க பரபரப்பு தகவல்களை சொல்லும் இந்த `ஒற்றன்' பகுதி, சின்னத்திரைக்கு புதியது. சமீப காலங்களாக இந்த ஒற்றன் பிரபலங்கள் பற்றி தரும் அதிரடி செய்திகளுக்காக பார்வையாளர்கள் அதிகரித்திருப்பது நிகழ்ச்சிக்கான சிறப்பு.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #1005
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆத்மா உறங்குவதில்லை



    உலகம் முழுவதும் கடவுள் `உண்டு என்றும்', `இல்லை' என்றும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதேபோல், ஆவி உலகைப்பற்றியும் எதிரும், புதிருமான கருத்துக்கள் அவ்வப்போது சொல்லப்பட்டு வருகின்றன.

    இதுபோன்று உலகில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஆவி பற்றிய உண்மைச் சம்பவங்களை தொகுத்து தருகிறார் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்.

    ஆவிகளைப் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் இவர் கூறும் கருத்துக்கள் ஆணித்தரமானவை. ஒவ்வொரு சனிக் கிழமையும் இரவு 9.30 மணிக்கு ``ஆத்மா உறங்குவதில்லை'' என்ற தலைப்பில் கேப்டன் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1006
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நம்பினால் நம்புங்கள்



    அமானுஷ்யம், ஆவிகள், வித்தியாசமான மனிதர்கள், மக்களின் நம்பிக்கைகள், புரியாத புதிர்கள் என அனைத்திற்கும் விடை தேடும் ஒரு நிகழ்ச்சியாக `நம்பினால் நம்புங்கள்' நிகழ்ச்சி ஜி டிவியில் இடம் பெறுகிறது. நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்குகிறார்.

    முதல் வார சிறப்பு பகுதிகளாக, நடுக்கடலில் நடக்கும் சுறா வேட்டையில் பிரத்தியேக நிபுணர்களோடு நமது குழு கடலில் இறங்கி வேட்டையாடும் காட்சிகள். பதிமூன்று வருடங்களாக தனி அறையில் யாருமே கண்டிராத ஒரு மனிதன் வெளியே வரும்போது எப்படி இருப்பான்? அவனது நிலை என்ன? தமிழகத்தின் ஒரு காட்டில் ஒரு சமூக மக்கள் தொட்டால் மட்டுமே பூக்கும் பூ ஒன்று உள்ளது. அது ஏன் அப்படி? அது எங்கே உள்ளது? இப்படி பல கேள்விகளை எழுப்பும் பல வித்தியாசமான பகுதிகளை தரவிருக்கிறது, இந்த நிகழ்ச்சி.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு இடம்பெறும் நிகழ்ச்சி இது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1007
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குடும்பமா? மனைவியா? -தடுமாறும் கோபி!

    திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர், விறுவிறுப்பும் பரபரப்புமாய் ஊகிக்க முடியாத காட்சிகளுடன் விரைகிறது.

    கோபி - மலர் திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளோடு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது `நாதஸ்வரம்' தொடர். நடிப்பில் பட்டை கிளப்பும் புதுமுக நடிகர்கள் ஒருபுறம். அனுபவமிக்க பிறவிக் கலைஞர்களான மவுலி, பூவிலங்கு மோகன், ரங்கதுரை ஆகியோர் மறுபுறம். இரு தரப்பாரும் கதாபாத்திரங்களாகவே மாறி தொடருக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

    கோபி-மலரின் திருமணத்தால் காமு-பரமுவின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் மயில்- தெய்வானை தம்பதிகளுக்கு. அதனால் அவர்கள் கோபியின் மீது கோபத்தில் இருக்க, சொக்கு குடும்பத்தோடு கோபி - மலர் சேர முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    சொக்கு, கோபி-மலரை ஏற்றுக்கொண்டால் மயில் குடும்பம் அண்ணன் குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை வருமா? அல்லது குடும்பத்துக்காக கோபி, மலரை விட்டு பிரியும் சூழ்நிலை நேருமா? இதுதான் இப்போதைய முக்கிய கட்டம்.

    மகா தன்னைக் கெடுத்த பாண்டிக்கு தண்டனை கொடுக்க, அவன் வீட்டிலேயே அவனோடு வாழ்கிறாள். தன் வாழ்க்கையை கெடுத்த கோபி-மலரை பழிவாங்க அவள் எடுக்கும் முடிவு அடுத்தகட்ட திருப்பம்.

    மலரால் சொத்து, தொழில் என அனைத்தும் இழந்த கோகுல், தந்திரமாக ரோகிணியை திருமணம் செய்வதற்கு ஒத்துக்கொள்வது போல நாடகமாடுகிறான் இதற்காக அவன் செய்யும் ஒரு செயல் எதிர்பாராத விதமாக கோபி-மலர் வாழ்க்கையை பாதிக்கிறது.

    பரமு திருமணத்தை நிறுத்த நீலாவதியும், மூர்த்தியும் போராட... நெல்லியும், காமுவும் பரமுவின் திருமணத்தை நடத்த... இதற்கிடையே சம்பந்தம் தனது திருமணத்திற்காக செய்யும் ஆர்ப்பாட்டம் இன்னொரு பக்கம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வைக்கிறது.

    இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல கோபி-மலர் தேனிலவு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட, அங்கு நடக்கும் எதிபாராத சம்பவம் நாதஸ்வரம் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. பரபரப்பான அந்த நிகழ்வுகள் எந்த மாதிரியானவை என்பது சஸ்பென்ஸ் என்கிறார், தொடரின் இயக்குனர் திருமுருகன்.





    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #1008
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மகாராணியின் சூழ்ச்சி

    ஜி தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சரித்திரத் தொடர் `ஜான்சி ராணி.'

    இங்கிலாந்து மகாராணி விக்டோரியாவின் தனி அதிகாரி ஹீரோஸ், ஜான்சி ராணி லட்சுமி பாயை சந்தித்து சமாதானப் பேச்சுக்கு அழைக்கிறார். ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை நன்கு உணர்ந்தாலும், லட்சுமி பாய் சமாதானப் பேச்சிற்கு ஒத்துக் கொள்கிறார்.

    ஒரு புறம் ராணி விக்டோரியாவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகை தரும் லட்சுமிபாயையும், அவருடன் வரவிருக்கும் அண்டை மாநில மன்னர்களையும் தீர்த்துக் கட்ட ஹீரோஸுக்கு உத்தரவிடப்படுகிறது. மறுபுறமோ லட்சுமி பாய் தன் சகாக்களுடன் சேர்ந்து ஆங்கிலேய மேலதிகாரிகளை ஒரே இடத்தில் கொல்ல திட்டம் தீட்டுகிறார்.

    இதற்கிடையில் ரானா சாஹேப், ஹீரோஸை சந்தித்து சமாதானப் பேச்சில் தன் பங்கை உறுதிப்படுத்தச் செல்ல, அங்கு ராவ் துலாஜைப் பார்க்க, அவன் தான் ஆங்கிலேயர்களின் உளவாளி என்பதை அறிந்ததும் அதிர்ச்சி.

    சமாதானப் பேச்சு நடந்ததா? யார் திட்டம் வென்றது? பரபரப்பான வினாக்களுக்கு விடை, அதிர்ச்சிïட்டும் திருப்பங்களுடன் வெளிப்படுகிறது.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #1009
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டீச்சர் தேவயானி



    `கொடிமுல்லை' தொடர் முடிந்ததைத் தொடர்ந்து இடைவெளி இன்றி உடனே தேவயானி நடிக்க ஒப்புக்கொண்ட தொடர், முத்தாரம். இந்த தொடரில் அவர் டீச்சராக வருகிறார். அதுவும் அன்பான டீச்சர். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே இந்த கேரக்டரை ரொம்பவே ரசித்து செய்திருக்கிறார்.விஷயம் தெரிந்ததும் தேவயானியிடம், "டீச்சர் கேரக்டர் மேல் அப்படியென்ன அதீத ஈடுபாடு?'' கேட்டோம்.

    "நான் பள்ளியில் படிக்கிற காலத்திலேயே பிற்காலத்தில் டீச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்கள் அந்தஅளவுக்கு எனக்குள் பதிந்துபோனார்கள். எதிர்காலத்தில் நாமும் இவர்கள் மாதிரி டீச்சராக வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் காலம் என்னை நடிகையாக்கி விட்டது. என்றாலும் இந்த தொடரில் எனக்கு டீச்சர் கேரக்டர் என்றதும் பழைய நினைவுகளுக்குப் போய்விட்டேன்.''

    சொல்லும்போதே நெகிழ்கிறார், தேவயானி.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #1010
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    nanri aanaa!

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •