View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 158 of 159 FirstFirst ... 58108148156157158159 LastLast
Results 1,571 to 1,580 of 1587

Thread: new serials/programs

  1. #1571
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பிரமாண்ட சரித்திர தொடர் தயாரிக்கிறார் குட்டி பத்மினி


    சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி. அதன்பிறகு சின்னத்திரையிலும் நடித்து வந்தவர், பல மெகா தொடர்களையும் தயாரித்து வருகிறார். அந்தவகையில், தற்போது வீரமங்கை வேலு நாச்சியார் என்ற பெயரில் ஒரு பிரமாண்ட சரித்திர தொடரை தயாரித்து வருகிறார் குட்டி பத்மினி. இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.


    விஜய் டிவியில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகயிருக்கும் இந்த தொடர் வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு தொடர் என்பதால், அவரது குழந்தை பருவம் முதல் இறுதி காலம் வரை அவர் கடந்து வந்த பாதை அனைத்தும் படமாக்கப்படுகிறதாம். அதோடு, தற்போது குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைப்போன்று பல மொழிகளில் தயாராகும் இந்த தொடரும் மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1572
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழில் ஒளிபரப்பாகும் மாலினி ஐயர்


    கடந்த 2004ம் ஆண்டு சகாரா டி.வியில் ஒளிபரப்பான இந்தி தொடர் மாலினி ஐயர். சினிமாவில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த ஸ்ரீதேவி நடித்த முதல் டி.வி.தொடர். இதனை அவரது கணவர் போனி கபூர் தயாரித்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற அந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ஒரு காமெடி தொடர்.


    தமிழ்நாட்டு பிராமண பெண்ணான ஸ்ரீதேவி ஒரு பஞ்சாபியை திருமணம் செய்து கொண்டு வடநாட்டில் செட்டிலாகிறார். பஞ்சாபி கலாச்சாரத்திற்கும், தமிழ் பிராமணாள் கலாச்சாரத்திற்கும் ரொம்பவே வித்தியாசம், இதனை மாலினி ஐயர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் தொடர். அப்பாவியான மாலினி ஐயர் செய்யும் கலாட்டாக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவியின் நடிப்பை ரசிக்கும் வாய்ப்பும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #1573
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜீ தமிழில் இரண்டு புதிய தொடர்கள் ஆரம்பம்


    சமீபகாலமாக டப்பிங் தொடர்களுக்கு மவுசு குறைந்து நேரடி தமிழ் தொடர்கள் அதிகரித்து வருகிறது. எல்லா சேனல்களும் போட்டி போட்டு புதிய தொடர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் நேற்று முதல் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி என இரண்டு தொடர்களை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது.


    இரண்டு தொடர்களுமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. பூவே பூச்சூடவா இரவு 8 மணிக்கும், யாரடி நீ மோகினி இரவு 8.30 மணிக்கும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது. இரண்டுமே பெண்களை மையமாக கொண்ட தொடர்கள். பூவே பூச்சூடவா நதியா நடிக்க பாசில் இயக்கிய திரைப்படத்தின் டைட்டில். யாரடி நீ மோகினி தனுஷ், நயன்தாரா நடித்த படத்தின் டைட்டில். இரண்டு வெற்றிப்பட டைட்டில்களுடன் ஒளிபரப்பாகும் தொடர்களை நேயர்கள் வெற்றி பெற வைப்பார்களா? என்பது இன்னும் சில வாரத்தில் தெரிய வரும்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #1574
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பிரபல டிவி சானலில் மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருப்பது தெய்வம் தந்த வீடு சீரியல். இதற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் சீரியல் என்ற நிலை மாறி இளவட்டங்களும் பார்க்க தொடங்கிவிட்டனர்.


    அதிலும் இந்த தெய்வம் தந்த சீரியலுக்கு பல பெண்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இதில் நடித்துள்ள மேக்னா வின்செண்ட். கதை முழுக்க இவர் தான் லீட். ஒரு நல்ல மருமகளாக இவரே சீரியல் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.


    1000 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் தற்போது நிறைவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இதற்காக இந்நாடக குழுவினர் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
    "அன்பே சிவம்.

  6. #1575
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சுமங்கலி சீரியல் நாயகனாகிறார் கன்னட நடிகர் சுஜித்


    நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


    அதையடுத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே சுமங்கலி தொடரின் எபிசோடுகள் நகர்த்தப்பட்டு வந்தன. அதோடு, பிரதீப் நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலணையும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுஜித் என்ற கன்னட சீரியல் நடிகர் சுமங்கலி தொடரில் பிரதீப் நடித்து வந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #1576
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    100 எபிசோட்களை நிறைவு செய்த நீலி.


    திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடினால் அதனை கொண்டாடுவதைப்போல இப்போது ஒரு தொலைக்காட்சி தொடரும் 100 எபிசோடை தாண்டினால் பெரிய சாதனையாக கொண்டாடப்படுகிறது. காரணம் இந்த 100 எபிசோட்கள்தான் சீரியலின் பரிசோதனைக் காலம். முதல் 100 எபிசோட்களை தக்க வைத்து விட்டால் அதாவது டி.ஆர்.பி இறங்காமல் பார்த்துக் கொண்டால் அது சீரியலின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீலி தொடர் 100 எபிசோட்களை கடந்துள்ளது. அதை அதன் கலைஞர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள்.


    கடந்த ஆண்டு டிசம்பர் 12ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்கிய நீலி தொடரை சி.ஜெரால்டு இயக்குகிறார். சவி, நவீன், நிரஞ்சனி, திவ்யா, கவிதா, ரேகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது இறந்து போன ஒரு தாய், தன் மகளை ஆவியாக இருந்து பாதுகாக்கிற கதை. குழந்தை பாசம், ஆவி செண்டிமெண்ட் கலந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 100 எபிசோட்களை கடந்திருக்கிறது. இதனை அதில் நடித்த நடிகர் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.






    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #1577
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நெஞ்சம் மறப்பதில்லை: 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது


    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் நெஞ்சம் மறப்பதில்லை. தற்போது விஜய் டி.வி வித்தியாசமான தொடர்களை பிரமாண்டமாக ஒளிபரப்புகிறது. பாகுபலி பிரமாண்டத்தில் தமிழ் கடவுள் முருகன் தொடரை ஒளிபரப்புகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சின்னத்தம்பியை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் நெஞ்சம் மறப்பதில்லை குளுகுளு கொடைக்கானில் நடக்கிறது.


    இதில், காதல் முதல் கல்யாணம் வரை புகழ் அமித் பார்கவ் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் சரண்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிஷா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அமித் பார்கவ் கொடைக்கானலுக்கு புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொடைக்கானில் ஒரு காலத்தில் அவர் காதலை நிராகரித்த சரண்யா இருக்கிறார். இவர் வந்த நேரம் சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். அவரும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சரண்யா அமித் பார்கவ் மீது சந்தேகம் கொள்கிறார். இப்படி தொடங்குகிறது சீரியல். காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரா தயாராகிறது சீரியல். வருகிற 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #1578
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கிங்ஸ் ஆப் டான்ஸ்: 7-ம் தேதி முதல் ஒளிபரப்பு


    சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த ஆரம்பித்திருக்கிறது.


    வருகிற 7ந் தேதி முதல் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட செட்டுகளில் பிரமாண்ட நடன கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் பிரமாண்ட அரங்கில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் நடத்துகிறார்.


    இந்த நடன நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்தும் நடனமாடுகிறார்களாம். இதுவரை ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் இதுவே பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #1579
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் ஒரு பாகுபலி: தமிழ் கடவுள் முருகன் பிரமாண்ட தொடக்கம்


    சின்னத்திரை வரலாற்றின் புதிய தொடக்கமாக அமைந்திருக்கிறது விஜய் டி.வியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள தமிழ் கடவுள் முருகன் தொடர். பல லட்சம் செலவு செய்து பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்திருந்தனர். தமிழ் கடவுளின் கதை என்பதாலும், தங்களுக்கு தெரிந்த கதை என்பதாலும் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொடரை பலரும் பார்க்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தது. நவீன தொழில் நுட்பத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்தி இருந்தார்கள்.


    அசுர குலத்தை அழித்துவிட்டு கேளிக்கையில் விழுந்து கிடக்கிறான் இந்திரன். அரசுகுலத் தலைவனின் மகள் மீண்டும் அசுரகுலத்தை உருவாக்கி தேவர் குலத்தை அழிப்பேன் என்று தன் தந்தையின் பிணத்தின் முன் சபதம் கொள்கிறாள். அசுரகுலத்தின் குரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் காட்டில் கடும் தவம் புரியும் பிரமனின் மகன் பார்த்திபனை தன் அழகால் மயக்கி மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். நரகாசுரனும் அவரது சகோதர்களும், சகோதரி அஜிமுகியும் பிறக்கிறார்கள். அனைவரும் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து அற்புதமான வரங்களை பெறுகின்றனர்.


    வரத்தை பெற்ற அசுரர்கள் தேவர் குலத்தை அழிக்கும் வேலையைத் துவங்குகிறார்கள். கண்ணில் பட்டவர்களை வெட்டி சாய்கிறார்கள். அடுத்து இந்திரலோகத்துக்கு படையெடுக்க திட்டமிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் செல்லவே சிவன் விழிப்படைகிறார். அரசுரர்களை அழிக்க அவர் ஒரு சக்தியை உருவாக்க நினைக்கிறார். இதோடு முதல் ஒரு மணி நேர எபிசோட் நிறைவடைந்தது. அவர் உருவாக்கும் சக்திதான் முருகன்.


    குறைந்த விளம்பரங்களுடன் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பானது அனைவருக்கும் ஆச்யர்த்தை ஏற்படுத்தியது. தொடர்ந்த அப்படி ஒளிபரப்பாகுமா என்று சொல்ல முடியாது. திரைப்படங்களுக்கு முதல் ஓப்பனிங் கிடைப்பதை போன்று முதன் முறையாக ஒரு சீரியலுக்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்தது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #1580
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரைக்கு திரும்பினார் பிரஜின்: சின்னத்தம்பியாக ரீ எண்ட்ரி


    ஒரு காலத்தில் சின்னத்திரையில் நட்சத்திரமாக கலக்கியவர் பிரஜின். பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, காதலிக்க நேரமில்லை தொடர்களில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.<p>அவ்வப்போது சிறிய கேரக்டர்களில் சினிமாவில் நடித்து வந்த பிரஜின் தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடித்தார். இந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுமார் 10 வருடங்கள் சினிமாவில் போராடி விட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார்.


    விஜய் தொலைக்காட்சியில் வருகிற அக்டோர் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் சின்னத்தம்பி தொடரில் நாயகனும், சின்னத் தம்பியும் அவர்தான். ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கிராமத்து கதை. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் சின்னத்தம்பி, பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு திமிரான பெண்ணை எப்படி அடக்குகிறான் என்பதுதான் கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •