-
12th January 2014, 11:06 PM
#1401
Moderator
Diamond Hubber
10 மணி கதைகள்
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘10 மணி கதைகள்’ தொடரில் முதல் கதையாக இடம் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது, ‘எதிர் வீட்டுப் பையன்’. வி.சி.ரவி இந்த தொடரை இயக்குகிறார்.
மாதம் ஒரு கதைத்தொடர் என்ற வரிசையில் ஒரு தொடர் அந்த மாதத்துடன் நிறைவு பெற்று விடும். இதனால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை இந்த தொடர் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அந்த வகையில் இந்த தொடர், ஜனவரி மாதம் 18 எபிசோடுடன் முடிவுக்கு வந்து விடும். பிப்ரவரி மாதம் அஸ்வின் பாஸ்கர் இயக்கும் 18 எபிசோடுகள் கொண்ட புதிய தொடர் இடம் பெறுகிறது.
தொடர்ந்து மாதம் ஒரு இயக்குனரின் படைப்பு சின்னத்திரையை அலங்கரிக்கும். சின்னத்திரையில் இது புதுமுயற்சி என்ற விதத்தில், தொடர்கள் மீதான எதிர்பார்ப்பும் நேயர்களிடையே அதிகரித்திருக்கிறது.
தொடர்களுக்கு பாடல்: யுகபாரதி. இசை: சஞ்சீவ் ரத்தன். தயாரிப்பு: ‘திரு பிக்சர்ஸ்’ திருமுருகன்.
நன்றி: தினதந்தி
-
12th January 2014 11:06 PM
# ADS
Circuit advertisement
-
12th January 2014, 11:08 PM
#1402
Moderator
Diamond Hubber
உறவுகள் சங்கமம்
ராஜ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், உறவுகள் சங்கமம்.
தொடரின் கதை பின்னணி வருமாறு:–
அத்தை மகள் கங்காவிடம் தனிமையில் பேச, தசரதன் வர, ராம் குறுக்கிட்டு வழிமறிக்கிறான்.
மகள் ஜனனியிடம் எப்போதும் கண்டிப்பாக நடந்து கொள்ளும் தன்ராஜ், அவள் செல்போனில் வாலிபன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து போனை பறிக்கிறான். அவளை கண்டித்துக் கொண்டிருக்கும்போது வழக்கம்போல் அவளது அம்மா, தன் கணவன் தன்ராஜிடம் ‘மகளை ஏன் திட்டுகிறீர்கள்?’ என்று குறுக்கிடுகிறாள்.
கவுதம் தன் காதலை சொன்னதில் இருந்து கலக்கத்துடன் காணப்படும் புவனா, தனது மனக் குமுறலை ஆசிரமத்தில் இருக்கும் கதிர் என்பவரிடம் கொட்டுகிறாள்.
தசரதனின் நண்பன் ராஜாராமிடம், அவனது மாமியார்? ஏன் இன்னும் உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை? என்று காரணம் கேட்க, மனம் நொந்த அவனை, மனைவி மாலதி ஆறுதல் சொல்லி தேற்றுகிறாள்.
ராஜாராமுக்கு குழந்தை பிறந்ததா? கவுதமின் காதலை புவனா ஏற்பாளா? அத்தை மகள் கங்காவை அடைய வேண்டும் என்ற தசரதனின் எண்ணம் நிறைவேறுமா? எதிர்பார்ப்பை தக்கவைத்தபடி தொடர்கிறது, தொடர்.
நன்றி: தினதந்தி
-
12th January 2014, 11:09 PM
#1403
Moderator
Diamond Hubber
விழித்தெழு தமிழா!
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி ‘‘விழித்தெழு தமிழா.’’
இந்நிகழ்ச்சி வாரம் ஒரு தலைப்பைக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டியும், அதற்கான தீர்வுகளையும் காட்சிப்படுத்துகிறது, நிகழ்ச்சி.
எதையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்ளாமல், பிரச்சினைகளுக்கான காரணிகளை அலசி ஆராய்வதோடு, துறை சார்ந்த வல்லுனர்களே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளக்கமளிக்கின்றனர். நிகழ்ச்சியை விஜய் ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
12th January 2014, 11:11 PM
#1404
Moderator
Diamond Hubber
மடிப்பாக்கம் மாதவன்–50
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘மடிப்பாக்கம் மாதவன்’ நகைச்சுவைத் தொடர் ஐம்பதாவது எபிசோடை எட்டியிருக்கிறது. ராம்ஜி, நளினி, மதுமிதா ஆகியோரின் கலக்கல் காமெடி, சிரிப்பில் வீடுகளை குலுக்குகிறது.
வெளிநாட்டு மந்திரவாதியால் ஒரே குடும்பத்தின் மாதவன், பண்டரிபாய், கவுசல்யா, ஆகிய மூவரும் சுண்டு விரல் அளவு தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆகி விடுகின்றனர். இம் மூவரும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டார்கள் என்பது அடுத்தடுத்த காமெடி.
கதை திரைக்கதை தயாரிப்பு: சினி ஸ்டார் மீடியா பிரைவேட் லிமிடெட். வசனம்: எம்.ரவிக்குமார். ஒளிப்பதிவு: ஆர்.வெங்கடேஷ். இசை:மனீஷ். கிரியேடிவ் டைரக்டர்: ஈ.ராம்தாஸ். நிர்வாகத் தயாரிப்பு: அனில் சுந்தர். இயக்கம்: எஸ்.மோகன். இவர் மாமா மாப்ளே, சூப்பர் சுந்தரி போன்ற வெற்றித் தொடர்களை இயக்கியவர்.
நட்சத்திரங்கள்: காத்தாடி ராமமூர்த்தி, சாந்தி ஆனந்தராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீஜீத், முல்லை, டெலிபோன் மணி, மங்கீ ரவி, சிவராஜ், ஸ்ரீமதி அம்மாள், கலாதர், ரங்கம்மா பாட்டி, கண்ணாயிரம்./quote]
நன்றி: தினதந்தி
-
28th January 2014, 05:07 AM
#1405
Moderator
Diamond Hubber
மரகத வீணை
SUN TV Serial - Jan 27, 2014
-
6th February 2014, 12:58 PM
#1406
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th February 2014, 07:55 AM
#1407
Moderator
Diamond Hubber
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாதம் ஒரு தொடர் வரிசையில் இந்த மாதம் இடம் பெற்றிருக்கும் தொடர், ‘தெரியாமல் ஒரு கொலை.’
ஒரு மனிதன் பழி உணர்ச்சியை தீர்க்க கொலை செய்வது உண்டு. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொலை செய்வது உண்டு. ஆனால் இந்தக் கதையின் நாயகன் சந்துரு தெரியாமல் ஒரு கொலை செய்கிறான். அவன் கொல்ல நினைத்தது ஒருத்தியை. கொன்றது வேறொருத்தியை. தவறை உணர்ந்து வருந்தும் சந்துருவை சரணடைய விடாமல் தடுக்கிறது காதல்.
அதேநேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கதிர் தன் மனைவியை கொன்றவனை கண்டுபிடித்து பழி தீர்க்கப் புறப்படுகிறான்.
சந்துரு சட்டத்தால் தண்டிக்கப்பட்டானா? அல்லது கதிரால் பழி வாங்கப்பட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் இந்த மாதத்தை ‘திக்...திக்’ என திகிலாக வைத்திருக்கப் போகிறது, தொடர்.
தொடரின் நட்சத்திரங்கள்: அரவிந்த், ஸ்ருதி, ரித்திஸ் வர்தன்.
கதை: எழுச்சூர் அரவிந்தன். திரைக்கதை: எழுச்சூர் அரவிந்தன்–ஜோதிஅருணாசலம். இயக்கம்: அஸ்வின் பாஸ்கர். தயாரிப்பு: ‘திரு’ பிக்சர்ஸ் எம்.திருமுருகன்.
-
7th June 2014, 07:40 PM
#1408
Moderator
Diamond Hubber
தென்கொரியாவில் தயாராகும் சீரியல் மற்றும் சினிமாக்கள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. கதையம்சம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையும் இளமையும் கலந்திருப்பதால், இந்த நாட்டின் சீரியல்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் முதல்முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில், ‘கே சீரிஸ்' வரிசையில் புகழ்பெற்ற கொரியன் படைப்புகள் வெளிவர உள்ளன. 'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்', ‘ஐரிஸ்', ‘பிளேஃபுல் கிஸ்', ‘கிரேட்டஸ்ட் லவ்', பாஸ்தா' போன்ற உலகப்புகழ் பெற்ற சீரியல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் வரிசையாக தமிழில் ஒளிபரப்பாக உள்ளன. பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ் மே 12-ம் தேதி முதல் நம்பர் ஒன் தென்கொரிய படைப்பான ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகிறது. பள்ளி பருவ காதல் ஒரு பள்ளியில் நடக்கும் காதல், பிரிவு, நட்பு, மோதல்களை உணர்வுபூர்வமாக நகைச்சுவையுடன் சொல்லும் இந்தத் தொடர் கார்ட்டூன் வடிவத்திலும் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது பேரனுக்காக பள்ளி இந்தத் தொடரில், தென்கொரியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர், தன்னுடைய பேரன் படிப்பதற்காக ஷின்க்வா ஹைஸ்கூலை பிரமாண்டமாக தொடங்குகிறார். நான்கு பையன்கள் பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கக்கூடிய அந்தப் பள்ளியில் ‘எஃப் 4' கும்பலைச் சேர்ந்த நான்கு பையன்கள் ஏகப்பிரபலம். அவர்களிடம் நட்பு கொள்வதற்கு அத்தனை பெண்களும் ஏங்குகிறார்கள். குரூர தண்டனை அதேநேரம் இந்த கும்பலை எதிர்ப்பவர்களுக்கு மிக குரூரமான தண்டனை கிடைக்கிறது. அதனால் இவர்களிடம் அனைவரும் விலகியே இருக்கிறார்கள். ஏழை சிறுமி இந்த சூழலில் லாண்டரி கடை நடத்தும் ஏழைப் சிறுமி ஜான்ஸிக்கு இந்தப் பள்ளியில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைக்கிறது. அழகும் துணிச்சலும் நிறைந்த ஜான்ஸி நட்புக்காக எதையும் செய்யக்கூடியவள். தனியாக போராடும் கதாநாயகி தன்னுடைய தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்காக ‘எஃப் 4' கும்பல் மாணவர்களை எதிர்த்து நிற்கிறாள். மாபெரும் பணக்கார மாணவர்களை எதிர்த்து தன்னந்தனியாக போராடுகிறாள் ஏழை ஜான்ஸி. மோதலில் தொடங்கி காதல் மோதலில் தொடங்கும் இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அதன்பிறகு ஜான்ஸியின் காதலைப் பிரிப்பதற்கான போராட்டத்தை நாயகனின் பெற்றோர் தொடங்குகிறார்கள். நகைச்சுவையும் காதலும் பள்ளியில் தொடங்கும் இந்தப் போராட்டம், அவர்கள் கல்லூரியில் நுழைந்தபிறகு உச்சகட்ட மோதலை சந்திக்கிறது. மாணவர்களின் உலகத்தைக் காட்டும் இளமை துள்ளலுடன் சொல்லும் இந்தத் தொடரில் காதலும் நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது. ஹாலிவுட் கதாநாயகி ஹாலிவுட் படங்களிலும் ஏராளமான தொடர்களிலும் நடித்திருக்கும் நடிகை கூ கை சன், இந்தத் தொடரின் நாயகியாக நடித்திருக்கிறார். விருது பெற்ற சீரியல் ஆசியன் டெலிவிஷன் அவார்டு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும், ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' தொடரை தினமும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. டப்பிங் சீரியல்கள் இதுவரை இந்தி தொடர்கள்தான் டப்பிங் செய்யப்பட்டு வரிசை கட்டி தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக கொரியன் தொடர்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேச வரப்போகிறது. இனி வரிசையாக ஹாலிவுட் சீரியல்கள் தமிழ் பேசினாலும் ஆச்சரியமில்லை.
நன்றி: oneindia
-
14th August 2014, 07:19 PM
#1409
Moderator
Diamond Hubber
தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புது முயற்சியாக மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி புத்தம் புது தொடராக வரவிருக்கும் தொடர்தான் 'உயிர்மெய்'.
மாறுபட்ட தொடர்களை தருவதில் எப்போதும் முதன்மையாக இருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மேலும் அடுத்த கட்ட புது முயற்சியாக ஒரு மாபெரும் மருத்துமனையை கதைக்களமாக கொண்டு உருவாகும் மருத்துவத் தொடரே இந்த உயிர்மெய் தொடர்.
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சினிமா நட்சத்திரம் நடிகை அமலா, இக்கதையின் முக்கிய கதாபாத்திரமான டாக்டர்.கவிதா சந்தீப் நடிக்கிறார். மேலும், இந்த தொடரில் நடிக்க வந்தது பற்றி அவர் கூறும்போது, சின்னத்திரையில் நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நான், உயிர்மெய் தொடரின் கதையைக் கேட்டபிறகு இப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட தொடரில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். இது போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.
மேலும் தான் நடிக்கும் இத்தொடர் சராசரியான தொடர்போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடராக அமைந்திருப்பதாகவும், மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடும் மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைக்கையாளும் மருத்துவர்களின் சேவை, அவர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் திரைக்கதையாக பிரதிபலிப்பதாக தெரிவத்தார். இது மக்களுக்கான தொடர். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு தொடர் தான் உயிர் மெய் என அமலா கூறினார்.
உயிர் மெய் தொடரில் ஒரு முக்கிய பிரம்மாண்டமும் இருக்கிறது. அது கதையின் களமான ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை மாபெரும் கலை இயக்குனர் தோட்டாதரணி அவர்களால் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான மருத்துவமனை செட் அமைத்து, படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இது தமிழ் தொலைக்காட்சியில் ஒரு பிரம்மாண்ட படைப்பாகும்.
இந்த உயரிய படைப்பான உயிர்மெய்த்தொடரை பூஷன் மற்றும் ப்ரியா இயக்க, ஒளிப்பதிவு DOP யை அருண்மொழி ஏற்க, கதை திரைக்கதையை ராதிகா எழுத, இவர்கள் கூட்டணியில் இந்த பிரம்மாண்ட தொடர் உருவாகிவருகிறது. இத்தொடரின் அழகுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, இதன் தலைப்பு பாடலுக்கான இசையை, இயைமைப்பாளர் தரண் அமைக்க, பாடலை சினேகன் எழுத, ஹரிச்சரண் பாடலைப்பாடினார்.
குளோபல் ஒன் ஸ்டுயோ இத்தொடரை தயாரித்து வழங்க, வரும் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
நன்றி: தினமலர்
-
24th August 2014, 05:35 AM
#1410
Moderator
Diamond Hubber
Bookmarks