View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 153 of 159 FirstFirst ... 53103143151152153154155 ... LastLast
Results 1,521 to 1,530 of 1587

Thread: new serials/programs

  1. #1521
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விண்ணைத்தாண்டி வருவாயா - விஜய் டி.வியில் புதிய தொடர்.


    டப்பிங் சீரியல்களை காவிய நேரம் என்ற தலைப்பில் சகட்டுமேனிக்கு ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி. அடுத்து ஒரு யூத்புல்லான நேரடி தமிழ் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். பல திரைப்படங்களையும், டி.வி. தொடர்களையும் இயக்கிய சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.


    ஆபீஸ், தாயுமானவன், அச்சம் தவிர் தொடர்கள் மற்றும் மாப்ளசிங்கம், ரோமியோ ஜூலியட், பூஜை திரைப்படங்களில் நடித்திருக்கும் மதுமிலா ஹீரோயினாக நடிக்கிறார். நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விக்ரம் தொடரின் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரியமானவள் தொடரில் நடித்து வரும் கிரிதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


    "விண்ணைத்தாண்டி வருவாயா யூத்புல்லான ஒரு காதல் கதை, அழுதுவடியும் சீரியல்களும் பயறுமுத்தும் மாந்த்ரீக சீரியல்களும் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் பார்த்து, ரசிக்க, சுவைக்க தகுந்த சீரியலாக விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகி இருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1522
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புதுயுகம் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 24 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மற்றும் இரவு 10.30 மணிக்குஒளிபரப்பாகவிருக்கும் புத்தம்புதிய மெகா தொடரான ’கல்லூரி பறவைகள்’ இளமை தொடர்.
    கல்லூரி என்பது பறவைகள் சங்கமிக்கும் சரணாலயம் போன்றது. எங்கோ பிறந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள்.
    வானத்தை தாண்டியும் பறக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி காலம்தான் வசந்தகாலம். கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான நட்பு, நேசம், கலகலப்பு, காதல், மோதல், பிரிவு, போராட்டங்களை இளமை துள்ளலுடன் விவரிக்கிறது புத்தம்புதிய மெகா தொடரான கல்லூரி பறவைகள்.
    பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவள் நந்தினி. அந்த விபத்தில் பேச்சை இழந்துவிட்ட தம்பியை குணப்படுத்துவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வருகிறாள்.
    மும்பையில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் ஒரு பிரபலமான கல்லூரியில், ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் வாய்ப்பு நந்தினிக்கு தற்செயலாக கிடைக்கிறது. அந்தக் கல்லூரியின் நிர்வாகியின் மகனான மாணிக்கும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து கல்லூரி மாணவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.
    யாராலும் தட்டிக்கேட்க முடியாத பெரிய இடத்துப் பிள்ளைகளைக் கண்டு அத்தனை மாணவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். அந்த அராஜக மாணவர் குழுவின் தலைவன் மாணிக்குடன் நந்தினிக்கு மோதல் உண்டாகிறது. யாரும் எதிர்பாராதவகையில் மாணிக்கை அடித்துவிடுகிறாள் நந்தினி.
    அதனால் நந்தினியை பழிவாங்கவும், கல்லூரியில் இருந்து வெளியேற்றவும் மாணிக் துடிக்கிறான். அவன் கோபத்தை நந்தினி தாக்குப்பிடித்து கல்லூரியில் நீடிக்க முடியுமா என்பதை, ‘கல்லூரி பறவைகள்’ தொடரில் கண்டுகளியுங்கள்.
    இந்தத் தொடரின் நாயகி நந்தினியாக பிரபல நடிகை நிட்டி டெய்லர், நாயகனாக பார்த் சம்தானும் நடிக்கிறார்கள்.
    இவர்களைத் தவிர வீபா ஆனந்த், அஜஸ் அகமது, சார்லி சவுகான், கரன் ஜோத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
    புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.00 மற்றும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை மறுநாள் பகல் 1.30 மணிக்கும், வாராந்திர தொகுப்பை வாரத்தின் இறுதியிலும் காணலாம்.
    "அன்பே சிவம்.

  4. #1523
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேந்தர் டிவி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடும் தொடர் கண்ணே என் கண்மணியே இப்போது இரண்டாம் பாகமாக ரசிகர்களின் பேராதரவுடன் 100 எபிஸோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறது.
    நேர்மை தவறாத போலீஸ் குடும்பத்தை சேர்ந்த கதையின் நாயகி ஆரோகியை நிழல் உலக தாதா சின்ஹானியாவின் வளர்ப்பு மகன் அர்ஜுன் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாலும், ஆரோகிக்கு அர்ஜுன் மீது இருக்கும் வெளியே காட்ட முடியாத காதலால் அவனை விட்டு பிரியவும் மனம் இல்லாமல் அவனுடன் சேர்ந்து வாழவும் வழியில்லாமல்துடிக்கும் ஆரோகி அர்ஜுன் காதலை சுவாரஸ்யமாகவும் இளமைத்துள்ளலுடனும் சொல்லும் காதல் காவியம் கண்ணே என் கண்மணியே .
    இதில் கதாநாயகனாக கரண் குன்ரா (அர்ஜுன்) கதாபாத்திரத்திலும் கதாநாயகியாக நடிக்கும் ஆரோகி (கிருத்திகா கம்ரா) கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர் .
    திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் கண்ணே என் கண்மணியே நெடும் தொடர் வேந்தர் டிவி யில் ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  5. #1524
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மாப்பிள்ளை.

    மீண்டும் சின்னத்திரையில் செந்தில்-ஸ்ரீஜா


    சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நடிகர் ஆனவர். சரவணன் மீனாட்சியில் உடன் நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணனாக சினிமாவில் அறிமுகமானவர். செங்காத்து பூமியிலே, பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவண்டா நீ உள்பட சில படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு உதவவில்லை.


    இதனால் சினிமா வாய்ப்பு இன்றி இருந்தவர் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். அதுவும் தனது மனைவி ஸ்ரீஜாவுடன். சரவணன் மீனாட்சி ஜோடி மாப்பிள்ளை என்ற தொடரில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறது. இந்த தொடர் விஜய் டி.வியில் வருகிற நவம்பர் 7ந் தேதி முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. செந்திலும், ஸ்ரீஜாவும் இணைந்து நடித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குள் வருகிற ஈகோதான் கதை களம்.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #1525
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    தெய்வ சக்தி பெரிதா? மனித சக்தி பெரிதா?: களைகட்டுகிறது காக்க காக்க


    சீரியல்களை பொறுத்தவரை ராஜ் டி.வி சற்று பின் தங்கிய நிலையில் தான் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் காக்க காக்க தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. காரணம் பக்தி கலந்த பேண்டசியாக கதை விறுவிறுப்புடன் நகர்கிறது.


    காஞ்சனா, யாமிருக்க பயமேன், ஏழாம் உயிர் தொடர்களை இயக்கிய அழகர் இயக்குகிறார். இது முருக கடவுளை மையப்படுத்திய கதை. முருகன் கையில் இருந்த ஒரு நவபாஷான வேல் காணாமல் போகிறது. அது கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புடையது. அதை காலம் காலமா தேடி வருகிறார்கள். அப்படி தேடுகிறவர்கள் வாழ்க்கையில் முருகன் எப்படி திருவிளையாடல் செய்கிறான் என்பதுதான் கதை. தெய்வ சக்தி பெரிதா? மனித சக்தி பெரிதா? இரண்டுக்கும் இடைப்பட்ட அமானுஷ்ய சக்தி பெரிதா என்ற கேள்விகளோடு விறுவிறுப்பாக பயணிக்கிறது தொடர்.


    இலங்கையில் உள்ள முருகன் கோவில்களில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கான விறுவிறுப்புடன் தொடரை நகர்த்திச் செல்கிறாகள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 9.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #1526
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நிஜங்கள்
    SUN TV
    2016-10- 24 தொடக்கம்

    Actress Khushboo tries to resolve family disputes by discussing the problems in detail with the concerned people.



    http://www.suntamil.net/sun-tv-shows...6-sun-tv-show/

    "அன்பே சிவம்.

  8. #1527
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5: குரல் தேடல் தொடங்கியது


    விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 5வது சீசனை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார்கள். முந்தைய சீசன்களில் இருந்து ஏராளமான திறமையாளர்கள் திரைப்பட பாடகர், பாடகிகாளவும், நடிகர், நடிகைகளாவும் உயர்ந்திருக்கிறார்கள். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், எஸ்.பி.பாலசுப்பிரணியம், பி.சுசீலா, ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கிறார்கள்.


    இப்போது இதன் 5வது சீசனுக்கான குரல் தேடல் துவங்கி உள்ளது. உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சியில் தங்கள் குழந்தைகளும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்கள் குழந்தைகள் வயது 6 முதல் 14 வயதிற்குள் இருந்தால் குழந்தை பற்றிய முழு விபரங்களுடன் அவர்களை பாடச் செய்து அதனை ஒரு சி.டியில் பதிவு செய்து அனுப்பலாம்.


    திறமையான குழந்தைகள் தபால் மூலமாக நேரடியாக அழைக்கப்பட்டு நேர்முக தேர்வின் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று விஜய் டி.வி.தெரிவித்துள்ளது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #1528
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டப்பிங் சீரியல் மூலம் தமிழுக்கு வருகிறார் ஸ்வேதா பாசு


    ரா ரா மற்றும் சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்வேதா பாசு, கடந்த ஆண்டு ஒரு விவகாரமான விஷயத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு 15 நாள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டார். பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்டார். வறுமையின் காரணமாகவே பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக அப்போது ஸ்வேதா தெரிவித்தார். அவரின் பரிதாப நிலை கண்ட இந்தி இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்தனர். அவர்களில் முக்கியமானவர் ஏக்தா கபூர்.


    தற்போது அவர் தான் தயாரிக்கும் சந்திர நந்தினி என்ற இந்தி தொடரில் ஸ்வேதா பாசுவை ஹீரோயின் ஆக்கிவிட்டார். சந்திரகுப்த மவுரியரின் வரலாற்று தொடரான தொடரில் சந்திரகுப்த மவுரியரை வீழ்த்திய இளவரசி நந்தினியாக நடிக்கிறார் ஸ்வேதா. இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 31ந் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடரை காணலாம். தமிழ் படங்களில் நடித்த ஸ்வேதா பாசு டப்பிங் சீரியல் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #1529
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டி.வியில் புதிய சரித்திர தொடர் சந்திர நந்தினி


    விஜய் தொலைக்காட்சி டப்பிங் சீரியலை ஒளிபரப்புவதில் சரித்திர சாதனை படைத்து வருகிறது.

    விஜய் டி.வியின் தாய் டி.வியான ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகும் அத்தனை டப்பிங் சீரியல்களையும் இறக்குமதி செய்கிறது. அந்த வரிசையில் அடுத்து களம் இறக்குகிறது சந்திர நந்தினியை.


    இது முன்பு ஒளிபரப்பான பழைய தொடர் அல்ல. கடந்த 10ந் தேதி முதல் ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய இந்தி சரித்திர தொடர். அதனை அப்படியே சுடச்சுட டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. வருகிற 31ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.


    ஏக்தா கபூர், ஷோபா கபூர் இதனை வடிவமைத்துள்ளனர். சந்திரகுப்த மவுரியரின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. ராஜன் குமார் சிங் இயக்குகிறார். ரஜத் டோக்ஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். ஸ்வேதா பாசு பிரசாத் நந்தினியாக நடிக்கிறார். தனுகான் துருதராக நடிக்கிறார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #1530
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வது எப்படி? ரம்யா விளக்கம்


    சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகை ரம்யா. தற்போது பெப்பர்ஸ் டி.வியில் சாட் வித் ரம்யா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும் ரம்யாவோடு ஷேர் பண்ணிக்கலாம். அதற்கு அவர் ஆலோசனையும், தீர்வும் சொல்வார். கிட்டத்தட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மாதிரிதான். பங்கேற்பாளர்கள் தொலைபேசியில் பேசுவார்கள். அதுதான் வித்தியாசம். ரம்யா மனநல நிபுணரோ, அல்லது வழக்கறிஞரோ அல்ல, பிறகு எப்படி பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார். அவரே அளித்துள்ள விளக்கம்...


    "இதை பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியாக பார்க்க வேண்டாம். மனதுக்குள் இருப்பதை பூட்டி வைத்திருப்பதை விட மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் மன ஆறுதல் கிடைக்கும் அல்லவா அப்படியான ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம். பிரச்சினைகளை என்னுடன் பேசி தங்கள் மன பாரத்தை இறக்கிக் கொள்கிறார்கள். முடிந்த வரை நான் யோசனை சொல்கிறேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். டி.வியில் நான் நடித்த கதாபாத்திரங்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறது. நான் நடித்த படங்கள், பார்த்த படங்கள் வாயிலாக நிறைய கற்றிருக்கிறேன். அதை வைத்து அவர்களோடு பேசுகிறேன். ஒருவர் மனதை புரிந்து கொண்டு அதை ஆறுதல் படுத்த நல்ல மனசு இருந்தாலே போதும். வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான மனிதர்களையும், பயணங்களையும் கொண்டது என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியுள்ளது" என்கிறார் ரம்யா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •