-
25th December 2006, 05:30 AM
#11
Senior Member
Senior Hubber
அனுமான் பிறப்பு
(இந்திர லோகத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை-இல் ஒருவர் அல்லது ஐந்தாவது நபராக கூட இருக்கலாம். பெயர் தெரியவில்லை.)
.... வாயு பகவான் மெல் கொண்ட காதலால் மனம் சஞ்சல பட்டு ஒரு முனிவரை மதிக்காமல் நடந்துக்கொள்ள, முனிவரின் சாபத்தால் சஞ்சல புத்தி உள்ள வானரமாக மாறுகின்றாள். அதே போல் ஒரு அரசனும் சாபத்தால் வானரமாக மாறுகின்றான். இருவரும் ஈசனை பிறார்த்திக்க, அவர்கள் முன் பிரசனமாகும் இறைவன் ஒரு பிறவி மனித வானரமாக வாழ்ந்து, என் ருத்ர அவதாரத்திற்கு தாய் தந்தையாக வாழ்ந்து சாப விமோட்சம் பெறும் வழி கூறி மறைகின்றார்.
அடுத்த பிறவில், அந்த அரசன் "கேசரி" என்ற பெயருடன் வானர அரசனாக பிறக்கின்றான். "அஞ்சனை" யை மணக்கின்றான். இருவருக்கும் பிள்ளை இல்லாததால், அஞ்சனை திருமலையில் சிவனை நோக்கி விரதம் இருந்து அனுமனை பெற்றெடுக்கிறாள். இதலால், அனுமனை "அஞ்சனை புத்திரன்" என்று அழைக்கின்றனர்.
-
25th December 2006 05:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks