ENTRY NO. #20
வானத்துக்கு மேலே...

மரத்தடியில் நிற்காமல்
மரமாகவே நின்றுகொண்டும்
பூக்களையெல்லாம் பறிக்காமல்
பூக்களாகவே சிரித்துக்கொண்டும்
வண்டுகளை விரட்டாமல்
வண்டாக தேனுறிஞ்சிக்கொண்டும்
மழையில் நனையாமல்
மழையாகவே நனைந்துகொண்டும்
பறவைகளை வீழ்த்தாமல்
பறவையாகவே சிறகுவிரித்துக்கொண்டும்
சரித்தரங்களை படிக்காமல்
சரித்தரம் படைத்துக்கொண்டும்
வானம்பாடிகளை தேடாமல்
வானம்பாடியாக பாடிக்கொண்டும்
சங்கீதம் கேட்காமல்
சுரங்களாகவே மாறிக்கொண்டும்
ரத்தசத்தங்கள் இல்லாமல்
மாந்தர் கண்படாமல்
மந்திரஉலகம் இருக்குமா?
வானத்துக்கு மேலே?

-மோ.அபிலாஷ்