-
6th April 2009, 03:56 PM
#131
Senior Member
Seasoned Hubber
When four was more
Vocalists did Carnatic music proud.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350120300.htm
-
6th April 2009 03:56 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2009, 12:21 PM
#132
Senior Member
Seasoned Hubber
1. Enlightening literary meet
The meet effectively highlighted the human values in our ‘puranas’.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350230200.htm
2. In honour of a doyen
A festival lauded the efforts of Gutala Krishna Murthy towards promoting and preserving Telugu literature.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350240200.htm
3. Befitting World Theatre Day
‘Raaga Vaasistham’, scripted and executed with finesse, was a treat for theatre lovers.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350280200.htm
4. For inner peace
Renu Jain strikes a chord with her sitar recital at Ravindra Bharathi.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350320300.htm
5. Universally adored
The celebrated story of Rama appeals to the common humanity of the people.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350340300.htm
-
8th April 2009, 12:57 PM
#133
Senior Member
Seasoned Hubber
A legacy lives on
Padma Subramaniam remembers her abhinaya guru, Gowri Amma.
http://www.hindu.com/fr/2009/04/03/s...0350360300.htm
-
8th April 2009, 02:28 PM
#134
Senior Member
Seasoned Hubber
கலையின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்!
தெளிவான பேச்சில் இழையோடும் தன்னம்பிக்கை. சங்கீதம், வரைகலை இரண்டிலும் ஆழ்ந்த ஞானம். உளவியல், ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பு. செதுக்கிச் செதுக்கி வார்த்தைகளை வடிக்கும் சிற்பியாய் நமக்குத் தெரிந்தார் கர்நாடக இசைப் பாடகி சவிதா நரசிம்மன். இனி, உங்களின் செவிகளைக் குளிர்விக்க அவரின் குரலோசை!
‘‘சங்கர சர்மாதான் என் முதல் குரு. இவர், சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கிய ஆலத்தூர் சகோதரர்களில், சுப்பைய்யரின் தகப்பனாரான வெங்கடேச ஐயரிடம் சங்கீதம் கற்றவர். சர்மா சாரிடம் எட்டு வருடங்கள் சங்கீதம் கற்றுக்கொண்டேன். தில்லி ராகவன் சாரிடம் திருப்புகழ் சொல்லிக் கொண்டேன். சென்னையில், ரமா ரவி, ரவிகிரண் ஆகியோரின் மாணவி. எனது தகப்பனார் சிதம்பரத்தைச் சேர்ந்தவர், அழகாகப் புல்லாங்குழல் வாசிப்பார். தாயார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் பாடுவார். எனது சகோதரிகளும், சர்மா சாரிடம் கற்றவர்கள். எங்களது இல்லத்தில் சங்கீத சிரோன்மணிகள் வருவதும் தங்குவதும் பல காலமாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. சங்கீதத்தின் புனித மணம் எங்கள் வீட்டில் எப்போதும் வீசிக்கொண்டே இருக்கிறது.
என்னுடைய முதல் முழு அளவிலான மேடைக் கச்சேரி 1995-ஆம் ஆண்டு திருச்சியில் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. அதே வருடம் நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலில் பாடினேன். அதுவரை ஒரு சேம்பர்- வீட்டளவு கச்சேரி கூடச் செய்ததில்லை. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமையவேண்டிச் செய்த அப்பியாசம், தனியான தயாரிப்புகள், வரவேற்று ஆதரித்த தேர்ந்த ரசிகர்கள் கூட்டம் எல்லாமே மறக்க முடியாத அனுபவங்கள்தான்.
அலர்மேல்வள்ளியின் நாட்டியத்திற்கு 1997 முதல் 2001 வரை பாடியுள்ளேன். பின்னர் நான் பிஸியாகிவிட்டதால், நீண்ட பயணங்கள் அவருடன் மேற்கொள்ள இயலவில்லை. மேடையில் நடனமாடுபவர் மூலமாக, அவரது பாவத்தையே நாம் பிரதிபலிக்க வேண்டும். நடனக்கலைஞரின் உணர்வின் அளவும், பாடுபவரின் உணர்வும் ஒன்றியிருத்தல் மிக அவசியம். நடனத்திற்குப் பாடுவதால் கச்சேரியில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் வீண் பேச்சு. அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறந்த வித்துவான்கள் யாவருமே டான்ஸுக்குப் பாடியவர்கள்தான். ஒரே வரியை- ‘தெருவில் வாரானோ', என்பதையோ, ‘நடமாடித் திரிந்த' என்பதையோ, எண்ணற்ற முறை, அழகு நடையுடன், அலுப்புத் தட்டாமல் பாடும் விதத்தை இது கற்றுக் கொடுக்கும். பல நீண்ட நேர ஒத்திகைகளுக்கு ரெடியாகவும் இருக்கணும்.
ரவிகிரண் சார் தில்லிக்கு வரும்பொழுது எங்கள் வீட்டில் தங்குவது வழக்கம். அப்பொழுது நான் சின்னப் பெண். எனது பெற்றோர் ரவிகிரணின் முறை, பாணி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே நான் கற்கவேண்டும் என்ற எண்ணத்தை வகுத்து வைத்திருந்தார்கள் போலும். 1994-ல், நான் சென்னை இசை விழாவிற்கு வந்திருந்த நேரத்தில் அவருடன் இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு அவரிடமே முழு நேர மாணவியாகச் சேர்ந்தேன்.
நமது சங்கீதத்தின் மரபுத்தன்மை குன்றாமலும் சற்றும் சிதையாமலும், கற்றுக் கொள்பவரின் குணவாகுக்கு ஏற்பவும் கற்றுக் கொடுக்க வல்லவர். ஒரு நவீன கண்ணோட்டத்துடன் கண்டு கூறும் தனித்துவம் மிக்கவர்.
‘‘இசை தொடர்பான தொழில் நுட்பங்கள் பற்றி முதலில் கற்றுக் கொள்ளுங்கள், அடுத்து விடாமுயற்சியுடன் மேற்கொண்டு அதில் ஒரு நிபுணத்துவம் பெறுங்கள். பின்பு அதை மறந்துவிடுங்கள். அதைத் தாண்டி நிற்க வேண்டுமென்பது உங்கள் இலக்காக இருக்கட்டும்'' என்பார். அவருடைய கருத்தாக்கத்தில் உருவான நமது வாக்கேயக்காரர்களின் உயர்ந்த உருப்படிகளது தொகுப்பைக் கொண்ட குறுந் தகட்டிலும், ‘காஸ்மோஸ்' என்று வெளிவந்த மற்றொரு குறுந் தகட்டிலும் பாடும் கௌரவம் எனக்குக் கிடைத்தது.
2006-ஆம் வருடம், க்ளீவ்லாண்டில் பல வித்துவான்கள் முன்னிலையில் பாடினேன். அங்கு வந்திருந்த சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமன் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசியது எனக்குக் கிட்டிய அரிய சான்றிதழ். சமீபத்தில் ‘கல்கி' விருதை நான் பெற்ற பின் செய்த கச்சேரியைக் கேட்க, எம்.எஸ். அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்தியது, என்னை ஆனந்தமடையச் செய்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கானடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கச்சேரி செய்து அனுபவம் பெற்றுள்ளேன். அந்த அரங்குகளின் இருக்கை அமைப்பு, எல்லா இடங்களிலும் நாதம் ஒரே சீராக இருக்கும் வண்ணம் செய்யப்பட்டிருந்தது. மைக்கை துல்லியமாகக் கையாளக் கூடிய நுண்பொறியாளர்கள் ஒவ்வொரு அரங்கிலும் இருப்பார்கள். பாடுபவரின் குரலைக் கேட்டு அதற்குண்டான அளவு ஒலியைக் கூட்டவோ குறைக்கவோ செய்து, ஒரு நாதானுபவத்தைக் கொடுக்கிறார்கள். கண்ணும், கருத்தும், கவனமும் இதற்காக நிறையவே செலவிடுகிறார்கள். இந்த விஷயத்தில் நாம் பின் தங்கிதான் இருக்கிறோம்.
அப்பியாசத்திற்கு ஒதுக்கவேண்டிய நேரம், நீண்டதா அல்லது குறுகியதா என்பதெல்லாம், சங்கீதப் பயணத்தில் ஒருவர் இருக்கும் நிலையைப் பொறுத்தது. ஆரம்ப நாட்களில், சுமார் 7 அல்லது 10 வருடங்கள், கட்டாயமாக ஆறு அல்லது எட்டு மணி நேரம் கொஞ்சம் வருத்திப் பயிற்சி செய்தாக வேண்டும். பயிற்சி இல்லாமல் குரல் வளம், இயற்கையாக அமைந்த திறன், இவற்றை வைத்து கோட்டை கட்ட முடியாது. நமது இசையின் ஜாம்பவான்கள் இதைத் தாரக மந்திரமாகக் கொண்டதனால்தான், உயர்ந்த நிலைக்கு வந்தார்கள். அவர்களுக்கென்று தனிப் பாணிகளை உருவாக்கினார்கள்.
பள்ளியில் 12 வருடங்கள் படிக்கிறோம். உடனே பலனை எதிர்பார்க்கிறோமா? எந்தக் கலையை கற்பதிலும் இதே அணுகுமுறை தேவை. கலையின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளுதல் என்பது இன்றியமையாத ஒன்று. இரண்டு வருடத்தில் அரங்கேற்றம் என்ற ‘பாக்கேஜ்' முறையில் செயல்பட்டால் அரங்கேற்றத்தோடு நின்றுவிடும். கச்சேரி செய்வதிலேயே நாட்டம் என்றில்லாமல் இசையைக் கற்பதிலே நாட்டம் செலுத்த வேண்டியதை ஆசான்களும், ஏன் பெற்றோர்களும் இன்றுள்ள இளைஞர்களுக்கு வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் தன்னூற்றாக அவர்களின் உள்ளிருந்து வெளிவரும் சங்கீதம் உயர் தரத்தில் இருக்கும்.''
http://www.dinamani.com/sunday/sunda...Yo+v%FAP%F4%AC
-
15th April 2009, 01:43 PM
#135
Senior Member
Seasoned Hubber
High on emotion
Both music and dance lovers had something to look forward to in Mysore last week
http://www.hindu.com/fr/2009/04/10/s...1051350300.htm
-
15th April 2009, 01:50 PM
#136
Senior Member
Seasoned Hubber
1. Seventy and going strong
Gandharva Mahavidyalaya’s festival saw both seasoned and young dancers in excellent form.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050060200.htm
2. Tell me a new one
Impresario India should rethink its role as a catalyst.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050120300.htm
-
15th April 2009, 01:54 PM
#137
Senior Member
Seasoned Hubber
In search of a miracle
“Chimte Wale Baba” asks questions about the nature of spiritual pursuit and what nature does to men.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050110300.htm
-
15th April 2009, 02:02 PM
#138
Senior Member
Seasoned Hubber
Absorbing offering
Ananda Shankar Jayant presented episodes from the epics.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050230200.htm
2. A showcase of dance traditions
Nritya Sangam was a confluence of dances, much to the delight of connoisseurs.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050290200.htm
3.Ballet on the battle
Dancers transported audience to Ashoka’s kingdom.
http://www.hindu.com/fr/2009/04/10/s...1050320300.htm
-
17th April 2009, 01:28 PM
#139
Senior Member
Seasoned Hubber
Bangkok goes Balle Balle
The Zee Nite Bangkok 2009 saw Indian singers and dancers set the Bangkok stage on fire.
http://www.hindu.com/fr/2009/04/17/s...1751090100.htm
-
17th April 2009, 01:32 PM
#140
Senior Member
Seasoned Hubber
1. Howrah Bridge (1958)
Madhubala, Ashok Kumar, K.N. Singh, Madan Puri
Cassettes CDs
http://www.hindu.com/fr/2009/04/17/s...1750390400.htm
2. Cassettes CDs
More than her singing, her lyrics hold forth. A young Lily Allen is a thinking artiste. Each of her songs in this album, her second, is a slice of her thought, the things that you think when you are in your ’20s.
http://www.hindu.com/fr/2009/04/17/s...1750410400.htm
Though the first ...
Bookmarks