-
20th May 2007, 04:35 PM
#121
Senior Member
Devoted Hubber
Naan Marai is always Vedas
Balarāma and Kṛiṣhṇa in Bactrian coins
Dr. R. Nagaswamy, Former Director of Tamilnadu Archealongical Dept.
Balarāma, the brother of Kṛṣhṇa, was an influential god in early centuries of the current era, His sculptural representations are found in many places of India as at Nagarajunakonda in early period. He is shown generally with a drinking cup and standing by the side of his sister and brother Kṛṣhṇa. He is also said to be given to drink and pleasures (Bhōga)
Balarāma in a Bactrian coin
Obverse: Balarāma, with Greek legends on either side : Reverse: Kriṣhṇa with Brāhmi legend; the conch is held vertically: courtesy Wikipedia
Balarāma is shown in a square silver coin ( a standard drachma) issued by the Bactrian King Agathocles (c.180 BC) portrayed Kriṣhṇa and Balarāma that was excavated Ai-Khamun, an important archaeological site on the Oxus (ref. Arts Asiatique XXXVI ( 1973), 52-57 and Journal of the Numismatic Society of India XXXV (1973) , 1873-77. I am thankful to Prof Ḍevendra Handa for this reference) The obverse of this coin, shows Balarāma standing with two hands holding a (hala) plough and (musala) pestle. The pestle may be identified with the dhyānaśloka of Balarāma who is interestingly called Kāmapāla i.e protector of love or desires.
sphurad-amala-kirīṭam kiṇkiṇī-kaṅkaṇārham
calad-alaka-kapōlam kuṇḍala-śrī-mukhābjam
tuhina-giri-manōjñam nīla-meghāmbarāḍhyam
hala-musala-viśālam kāma-pālam samīḍhe
By the side is written the name of the king “Basiles Agatokleus” in greek characters while on the reverse is shown Kṛṣhṇa also standing with two arms holding a wheel and a conch. The wheel is so big it seems to do justice to the name Rathāngapāṇi. The Wikipedia, which illustrates this coin, identifed the object in the right hand of Kṛṣhṇa as kamaṇḍalu (Vase) but in fact it represents a conch held vertically in hand (śankha).
On both the sides of Kṛṣhṇa is the name of the king written in perfect Brahmi script in Prakrit reading “Rane Agathuklayeṣa”.
The first letter “Ra” is in serpentine form. Whether there is a second letter is not very clear for it merges with the big cakra held in the hand of Kṛṣhṇa. The next letter is “ne”. so the actual reading is “rane”. These letters are seen to the left of Kṛṣhṇa while on to his right is the name of the king “agathuklayeṣha”.
Both the images of Kṛṣhṇa and Balarāma are in greek attire. Kṛṣhṇa wearing a long sword and Balarāma an unidentified handled weapon (probably a ring with twisted rope), tucked in their waist band. They also wear the Bactrian crown with two horn like projections on either side and a jeweled umbrella over his head resembling a horizontal cap. Both are also seen wearing shoes. But what is important is that the figure of Balarāma is shown on the obverse where the Greek name occurs and the figure of Kṛṣhṇa occurs on the reverse. It seems to emphasize the importance of Balarāma as the elder as it appears on the side of the issuer and depicts his prowess while Kṛṣhṇa with his conch signifies “spreading fame”. The conch is that which blows the fame of Kṛṣhṇa through out the world. The choice of the two figures also seem to show the Bactrian kings made this choice of Balarāma and Kṛiṣhṇa to exhibit their strength (by Balarāma) and fame (by Kṛṣhṇa) on their coins.
-
20th May 2007 04:35 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2007, 05:15 PM
#122
Senior Member
Veteran Hubber
Re: parithaapam
Originally Posted by
bis_mala
þó¾ò ¾¢Ã¢Â¢ý ¾¨ÄôÒ : ¿¡ýÁ¨È.
A black cat crossing your path signifies that the animal is going somewhere.
-
20th May 2007, 09:22 PM
#123
Junior Member
Newbie Hubber
Vedas are Naan Marai.
[tscii]Dear Friends,
Excellent Historical proofs, more and more are coming from Oneside, other side keep repeating meaningless blabbers.
I Just happen to read an article from Thinnai e-zine Tamil as below.
தமிழரைத் தேடி - 2
பிரகஸ்பதி
திராவிட மாயை அல்லது வேளாள மாயை
ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழர் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளை தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல் பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
அ) திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், தங்களை ஆரியருடன் அடையாளங் காட்டிக்கொள்ளும் பிராமணர்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அந்நியர்.
ஆ) திராவிட மொழிகளைத் தாயாகக் கொண்டு உலக மொழிகள் பிறந்துள்ளன. திராவிட மொழிகளுள் தமிழ் உயர்தனிச் செம்மொழி.
இ) உலகின் சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே, இதனைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதியினரான வேளாளர்களாவர். பதினெண் குடி வேளிரும், மூவேந்தர்களும் வேளாளர்களேயாவர்.
இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனைத் திராவிட மாயை என்பர். வேளாளரின் பெருமையை நிலைநாட்டுவதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதனால் இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்தரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.
“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்தரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கி தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.
“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று ...”
அடிகளார், தற்கால சமூக நிலைமைகள தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று ‘பார்ப்பானுக்கு முந்திய பறையோன்’ எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியர் என்றும் அழைக்கப்பட்டு பார்ப்பாருக்கு நிகரானச் சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் ‘வைத்யா’ என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த பஞ்ச கம்மாளர் என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை ‘வேளாப் பார்ப்பார்’ என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்தரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்பு பற்றி வே.கனகசபைப்பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
“இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.”
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி யொழுகின்று (வாகைத் திணை 10 : 165)
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது.
வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்,
ளதெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, “மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்” என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணையதள இதழில் பிரசுரிக்கப்பட்ட, "நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை” என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, “நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்” என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர்.
வேளிரும் வேளாளரும்
வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாக, எழுதுதற்குச் சுகமானதாக இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் தயாரில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். ‘வேளாண்மையாகிய உழவுத் தொழில்’ செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:
“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத் தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)
துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை’ எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.
வேளாண்மை - உபகாரம்
தொல்காப்பியத்தில்தான் ‘வேளாண்’ என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105 ஆம் சூத்திரத்தில் “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, ‘தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்’ என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு ‘வேளாண்’ என்ற சொல், ‘உபகாரம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112 ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி” என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், ‘வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க’ என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்’ என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கலித்தொகை 101 ஆம் பாடலில் “வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு ‘தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன’ என்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மை’ என்ற சொல்லிற்கு ‘விருந்தோம்பல்’ என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் ‘வேளாண்மை’ என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:
“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” குறள் 81
“விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதற்கு ‘விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு’ என்பது பரிமேலழகர் உரை. பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு ‘உபகாரமும் மெய்யுபசாரமும்’ என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.
“உழவுத் தொழிலும் வேளாளரும்
வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” தொல். பொருள். 628
முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்’ என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக
-
20th May 2007, 10:16 PM
#124
Senior Member
Seasoned Hubber
Re: Vedas are Naan Marai.
Originally Posted by
mms
[tscii]Dear Friends,
Excellent Historical proofs, more and more are coming from Oneside, other side keep repeating meaningless blabbers.
I Just happen to read an article from Thinnai e-zine Tamil as below.
தமிழரைத் தேடி - 2
பிரகஸ்பதி
திராவிட மாயை அல்லது வேளாள மாயை ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழர் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளை தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல் பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
.................................................. ...........உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்’ என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமத'//
This rubbish is not about naanmarai and is to be discarded to the dustbin. Please do not discuss caste in this thread.
Last edited by bis_mala; 29th June 2012 at 10:21 PM.
Reason: PUNCTUATION AND QUOTE
B.I. Sivamaalaa (Ms)
-
22nd May 2007, 12:03 AM
#125
Senior Member
Devoted Hubber
Naan Marai is always Vedas
Friends,
Excellant Article by Famous Tamil Scholarly Author Jayamohan from E-zine Thinnai
வையாபுரிப்பிள்ளை குறித்து ஜெயமோகன்
எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே.
1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ?
அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ ஐம்பதுவருடங்கள் ஆகின்றன. இத்தனைகாலம் அவரது ஆய்வுமுடிவுகள் அனைத்தும் அபப்டியே நீடித்து நிற்கும் என்று எவருமே வாதிட இயலாது. முதல்நிலைக் கோட்பாடுகளை உருவாக்கிய ஆய்வாளன்கூட அத்தனைகாலம் நீடித்திருக்கமாட்டான். காரணம் ஆய்வு தொடர்ந்து முன்னேறும் ஒரு பயணம்.
எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆய்வுகளை நிகழ்த்தியபோது தமிழின் முக்கியக் கல்வெட்டுகள் பல படிக்கப்படவில்லை. இன்று தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் முதல்தள தாரமாகக் கணிக்கப்படும் பல புதைபொருள் சான்றுகள் விளக்கப்படவில்லை. மானுடவியல், வேர்ச்சொல்லியல் முதலிய பிற அறிவுத்துறைகளுடன் இலக்கிய, தொல்பொருள் சான்றுகள் உரையாடவைக்கப்பட்டு முழுமையான ஆய்வு நிகழ்த்தும் முறையியல் உருவாகி வரவில்லை. அவரது காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்த முறைமையை கையாண்டு வையாபுரிப்பிள்ளை தன் முடிவுகளுக்கு வருகிறார். வையாபுரிப்பிள்ளையின் பல முடிவுகள் ஆய்வாளர்களால் மறுக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஆய்வாளராக அவரது முக்கியத்துவம் சில அடிப்படைக் காரணிகளால் அமைந்தது. ஒன்று ஆய்வுக்கு கொள்கைப்பிடிப்போ உணர்ச்சிகரமான ஈடுபாடுகளோ தடையே ஆகும் என்றும் ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது புறவயமான முறைமையே என்றும் அவர் நம்பியமை. இரண்டு ஆய்வுக்குப் பின்புலமாக தமிழ்நாட்டில் அன்று இருந்த சமூக அதிகாரத்துக்கான போட்டியில் அவர் பக்கம் சாராமல் நின்றது.
இன்று அச்சூழலை புரிந்துகொள்ளும் உதாரணமாக இரு நூல்களை வாசகர்கள் பரிசீலித்து நோக்கவேண்டுமென்று எண்ணுகிறேன். சு .கி ஜெயகரன் அவர்கள் எழுதிய சமீப கால நூலான ' ' குமரி நில நீட்சி ' ' [காலச்சுவடு பதிப்பகம்.] குமரிக்கண்டம் என்ற கருதுகோள் எவ்வாறு தமிழில் உருவாகி பரப்பப்பட்டது என்பதை விவரிக்கிறது. பிரம்மஞானசங்கத்தைச் சேர்ந்த சிலர் 'உள்ளுணர்வு ' மூலம் இந்துமகாசமுத்திரத்தில் ஒரு பெருங்கண்டம் இருந்ததாக ' கண்டடைந்து ' அதற்கு லெமூரியா என்று பேரிடுகிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் குமரிக் கோடு பஃறுளி று முதலியவற்றை கடல்கொண்டதாக சில வரிகள் வருகின்றன. இங்குள்ள திராவிட இயக்க தமிழறிஞர்கள் இரண்டையும் எளிதாக இணைத்து குமரிக்கண்டம் என்ற பெரிய நிலப்பகுதி தமிழ்நாட்டுக்குத் தெற்கே பரந்து விரிந்துகிடந்ததாகவும், அங்குதான் தமிழ்ப்பண்பாடு பிறந்து ஓங்கியதாகவும் , மானுட இனமே அங்கே தோன்றியிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். 'மேலைநாட்டு ' அறிஞர்களை மேற்கோள்காட்டி குமரிக்கண்டத்தை அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட உண்மையாகவே முன்வைத்தார்கள். அது அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு அரசு சார்பில் உலகத்தமிழ்மாநாட்டில் வெளியிடப்பட்ட செய்திப்படங்களில் கூட காண்பிக்கப்பட்டது. இன்றும் தமிழில் அது நிறுவப்பட்ட உண்மையாகவே காணப்படுகிறது. அதை ஐயப்படுவது தமிழ்துரோகமாக கணிக்கப்படுகிறது. தமிழாய்வுகள் எத்தகைய விருப்பக் கற்பனைகளாக இருந்தன என்பதற்கான ஆதாரம் இது. உண்மையில் இவர்களுடைய அப்பாவித்தனத்துக்கு உலக அளவில் கூட ஒரு சமான உதாரணம் இருக்காது.
சு கி ஜெயகரன் குமரிக்கண்டம் என்ற கருத்து எப்படி அறிவியலடிப்படையே இல்லாத ஆய்வுகள் மூலம் அபத்தமாக உருவாக்கப்பட்டது என்று விரிவாக விவரித்து அடிப்படையான சில வினாக்களை எழுப்புகிறார். இக்கருத்து தமிழில் பேசப்பட்ட இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் இந்த எளிமையான அடிப்படைவினாக்கள் எவராலும் எழுப்பபடவில்லை என்பதைத்தான் நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். [உதாரணம் குமரிக்கடலில் அடித்தரை எவ்வளவு ஆழம் உள்ளது என்ற கேள்வி] அத்தகைய ஒரு விவாதத்துக்கான சூழலே இங்கே இருக்கவில்லை. இத்தகைய ஒரு நிலை கொண்ட ஆய்வுச்சூழல் தான் ஆபத்தானது ? எப்படி அது உருவாயிற்று ? இவ்வாறு குமரிக்கண்டத்தை 'நிறுவிய ' அதே அறிஞர்கள்தான் எஸ் வையாபுரிப்பிள்ளையை தூக்கிக் கடாசியவர்கள் என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும் . வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு நெறி இத்தகைய அசட்டுத்தனங்களுக்கு முற்றிலும் எதிரானது.
இன்றும் இதேபோக்கு தொடர்வதற்குச் சிறந்த உதாரணம் தஞ்சை தமிழ் பலகலையைச்சேர்ந்த நெடுஞ்செழியன் எழுதிய 'தமிழிலக்கியத்தில் உலகாயதம் ' என்ற 'ஆய்வு ' நூல். என் நோக்கில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நகைச்சுவைப்படைப்பு இது. கிரேக்க பொருள்முதல்வாதச் சிந்தனைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவை என்று சொல்லாராய்ச்சி மூலம் நிறுவும் நூல் இது. நம் மேடைகளில் இதை தினமும் காணலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பெரியார் தாசன் சொன்னதாக கேள்விப்பட்டேன். 'பெற்றோரொத்தல் ' என்ற சொல்லில் இருந்தே Betrothal என்ற ஆங்கிலச்சொல் வந்திருக்கிறதாம். வையாபுரிப்பிள்ளை போரிட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த 'ஆய்வா 'ளர்களுடன்தான். இன்றும் அவருக்கு இங்கே இடமில்லாமல் இருப்பதும் இதனால்தான். இந்த ஆய்வுகளை தமிழுணர்வின் பகுதிகளாகக் காண்பவர்கள்தான் வையாபுரிப்பிள்ளை பேரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள். கல்விநிலைய ஆய்வுகளில் அவரது ஒரு மேற்கோளைக் காட்டினாலே அவற்றை விழத்தட்டுகிறார்கள்.
இரண்டாவதாக சமூக அதிகாரப்போட்டி. அன்றைய தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இடையே நடந்த அதிகாரப்போரைப்பற்றி இந்தக் குறிப்பில் கோடி காட்ட விழைகிறேன். வெள்ளையர் எடுத்த இரு மக்கள்தொகை கணக்குகள் இந்திய அளவில் பெரிய சமூகக் கொந்தளிப்புகளை உருவாக்கின. முதல் கணக்கு சாதி அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு வருண அடிப்படையிலும் எடுக்கப்பட்டது. வருண அடிப்படையில் சாதிக்கணக்கு எடுக்கப்பட்டபோது பல வேளாண் சாதிகள் தங்களை சத்ரியர் என்று அடையாளப்படுத்தின. உதாரணமாக நாடார் மற்றும் தேவர். இது வைசியர்களாக மட்டுமே கூறத்தக்க வேளாளர் , முதலியார் போன்றவர்களை கொதிப்படையச் செய்தது. சத்ரியர் வைசியர்களைவிட மேலானவர்கள் ஆயிற்றே. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோர் இதற்கு எதிராக எப்படி வேளாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டிப் போரிடமுற்பட்டனர் என்பதெல்லாம் வரலாறு . ஆரிய வருணப்பிரிவை முற்றாக நிராகரித்து தங்களை மிகத்தொன்மையான ஒரு இனமாகக் அடையாளம்காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது இவ்வாறுதான்.
அன்றைய சூழலில் வேளாளர், முதலியார் முதலிய பிராமணரல்லாத உயர்சாதிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் ஒருபக்கம். நாடார் போன்ற சாதிகள் தங்கள் இடத்தைக் கோரி நடத்திய போராட்டம் ஒருபக்கம். தலித்துக்கள் முதலியோரை முன்னிலைப்படுத்தும் நோக்குடன் ஆங்கில ஆய்வாளர் செய்த ஆய்வுகள் ஒருபக்கம் என்று மூன்று இழுவிசைகள் அன்று நிலவின. திருநாவுக்கரசரின் காலம் குறித்த கால்டுவெல்லின் ஆய்வுதான் அந்த நூற்றாண்டுகால ஆய்வுப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி எனலாம். அது பக்தி இயக்கம் மற்றும் சைவசித்தாந்தத்தின் காலத்தை வெகுவாக பின்னால் கொண்டுவந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கு. அவருக்கு வேளாளரின் ஆதிக்கம் பிந்திய காலத்தது என்று காட்டி பறையர் சாதியினரை முதற்குடிகளாக முன்னிறுத்தும் நோக்கம் இருந்தது என்று ஆய்வாளர் வேத சகாய குமார் சொல்கிறார்.
அந்நூலுக்கு எதிராக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை செய்த கால ஆராய்ச்சியும் மாணிக்கவாசகர் காலம் குறித்து மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியும் அக்காலத்தை வெகுவாக முற்காலத்துக்குக் கொண்டுசென்றன. அதற்குரிய தரவுகள் சேர்க்கப்பட்டன, தர்க்கங்கள் உருவாக்கபப்ட்டன . இந்த நோக்கின் நீட்சியாகவே அடுத்த கட்டத்தில் தமிழின் தொன்மையை மேலும் பின்னகர்த்தி குமரிக்கண்டத்துக்குக் கொண்டுசெல்லும் திராவிட இயக்க அலை எழுந்தது
இதில் வையாபுரிப்பிள்ளை கால்டுவெல்லையே அதிகம் சார்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவர் வேளாளராக தன்னை உணரவில்லை. அவருக்கு இருந்த ஐரோப்பிய ஆய்வுநெறிகள் மீதான நம்பிக்கையே வென்றது. அவரது முக்கியக் குறைபாடு என்னவென்றால் அவர் ஐரோப்பிய ஆய்வு முறைமை மீதான நம்பிக்கையை ஐரோப்பிய ஆய்வாளர் மீதான நம்பிக்கையாக மாற்றிக் கொண்டார் என்பதுதான். இங்கு கால்டுவெல் பின்னகர்ந்த போது வையாபுரிப்பிள்ளையும் பின்னகர்ந்தார். ஆனால் பொதுவாக தென்தமிழகத்தின் சீரிய ஆய்வாளர்களில் கணிசமானபேருக்கு வையாபுரிப்பிள்ளை முக்கியமான முன்னோடி . கெ கெ பிள்ளை, ப.அருணாச்சலம், பேராசிரியர் ஜேசுதாசன் , அவரது மாணவர்களான அ கா பெருமாள், எம் வேத சகாயகுமார் முதலியோர் உதாரணம்.
ஆய்வுகள் முன்னகரும்தோறும் வையாபுரிப்பிள்ளையை எதிர்த்த 'கடற்கோள்வாதிகள் ' மேலும் மேலும் கேலிக்குரியவர்களாக மாறி காலக்கோளுக்கு ஆளாகி மறைவதையே காண்கிறோம். சமீபத்தில் வெளிவந்த ஐராவதம் மகாதேவனின் நூலும் வையாபுரிப்பிள்ளையின் பாதையிலேயே நகர்கிறது. அதனாலேயே அந்த மகத்தான நூல் குறித்தும் பல தமிழறிஞர்கள் ஐயத்துக்கு இடமான மெளனம் சாதிக்கிறார்கள்.[தொன்மையான தமிழ் எழுத்துரு பிராம்மி என்பது எப்படிப்பட்ட ஒரு சர்ச்சையை உருவாக்கியிருக்கவேண்டும்! ]
வையாபுரிப்பிள்ளை சம்ஸ்கிருத ஆதரவாளரா ?
எந்த ஒரு ஆய்விலும் ஒட்டியும் வெட்டியும் தரப்புகள் விவாதிக்கவேண்டியுள்ளது . தமிழ் சம்ஸ்கிருத உறவைப் புரிந்துகொள்வதில் மூன்று சாத்தியக்கூறுகளை நாம் உருவகிக்கலாம். தமிழ் தொன்மையும் தனித்தன்மையும் உடையது. சம்ஸ்கிருத உதவி இல்லாமலேயே நிலைநிற்கும் வலிமை கொண்டது. தமிழில் சம்ஸ்கிருதம் கலப்பது ஒரு வரலாற்று மோசடி-- இது ஒருவாதம். தமிழ் சம்ஸ்கிருதத்த்தை ஒட்டி வளர்ந்த ஒரு இரண்டாம்கட்ட மொழி என்பது இன்னொரு வாதம். தமிழும் சம்ஸ்கிருதமும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பது மூன்றாம் தரப்பு.. மூன்று தரப்புகளும் தொடர்ந்து விவாதிக்கும்போதே ஒரு ஆய்வுச்சூழல் உருவாகிறது. இதில் வையாபுரிப்பிள்ளை நடுநிலையான தரப்பை எடுத்தார். இந்திய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்துடன் உரையாடி வளர்ந்தவை என்றும் தமிழுக்கு சம்ஸ்கிருதத்தின் கொடை மிக மிக முக்கியமானது என்றும் அவர் வாதிட்டார் எனலாம். சம்ஸ்கிருதம் சார்ந்த கருத்துக்கள்ளை வையாபுரிப்பிள்ளை வலுவாக முன்வைத்தமைக்குக் காரணம் அவர் ஐரோப்பிய ஆய்வாளர்களை அதிகம் சார்ந்திருந்தமைதான். அப்போது இந்தியவியலில் சம்ஸ்கிருதத்தை மையமாக்கி ஆராய்வதே பொதுவான போக்காக இருந்தது. இன்றும் அப்போக்கு வலுவாக உள்ளது.அன்று சம்ஸ்கிருத வேர்ச்சொல்லாராய்ச்சி வலுவாக இருந்தமையால் அவரது நோக்கு சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியின் சாத்தியங்களை அவர் அங்கீகரித்தார். அன்று நிலவிய பொதுவான போக்கு முதல்தரப்புதான். அது வையாபுரிப்பிள்ளைக்கு எதிராக ஒரு பெரிய காழ்ப்பு அலையை உருவாக்கி அவரை ஆரிய அடிவருடி தமிழ்த்துரோகி என்றெல்லாம் முத்திரைகுத்தச் செய்தது.
நிரூபணவாதம் சாராத அறிவுத்துறைகளில் எந்த தரப்பும் இறுதியாக நிறுவப்படுவது இல்லை, எந்தத் தரப்பும் முற்றாக அழிவதுமில்லை. ஆகவே மேலே சொன்ன மூன்று தரப்பும் எப்போதும் இருக்கும். எந்த ஒரு புது கருத்தையும் மூன்று கோணங்களும் தங்கள் நோக்கில் ஆராய்ந்து தங்களுக்குள் விவாதித்து தெளிவுபடுத்துவதே ஆரோக்கியமானதாகும். நானறிந்தவரை கேரளக் கலாச்சார ஆய்வில் தமிழ்மைய நோக்கு சம்ஸ்கிருத மைய நோக்கு என்ற இரு நோக்குகளும் ஆக்கபூர்வமான விவாதத்தையே நிகழ்த்திவருகின்றன. இவற்றின் முரணியக்கமே அங்குள்ள ஆய்வு நகரும் விசை. தமிழில் காழ்ப்பும் வசையும் மூலம் பிற தரப்புகள் அடக்கப்பட்டமையால்தான் ஆய்வுகள் அசட்டுத்தனத்தின் எல்லைக்கே சென்றன. [ ஒரு வேடிக்கை நினைவுக்கு வருகிறது . ஆய்வுக்கோவை என்ற வருடாந்தர பிரசுரம் தமிழறிஞர்களால் வெளியிடப்படுகிறது. அதில் ஒரு கட்டுரை கண்ணகி ஒரு கன்னி என்று விரிவாக பேசி நிறுவ முயல்கிறது. அதை இந்து நாளிதழில் திறனாய்வுசெய்த இந்திரா பார்த்த்த சாரதி 'இத்தனை ஆதாரம் காண்பித்த ஆசிரியர் ஒரு டாக்டர் சர்டிஃபிகெட்டையும் இணைத்திருக்கலாம் ' என்று எழுதினார்] சம்ஸ்கிருதச் சார்பு உள்ள அறிஞர்கள் பலர் மிக முக்கியமான ஆய்வுகள் செய்துள்ளனர்[ உதாரணம் பக்திகாலகட்டம் குறித்த ப அருணாச்சலம் ஆய்வு] அவை இங்கே உதாசீனம் செய்யபப்டுகின்றன.
வையாபுரிப்பிள்ளையின் தரப்பு வலுவாக நிறுவப்படவேண்டும். அது ஒரு சக்தியாக சூழலில் செயல்பட வேண்டும். அதன் மறுதரப்பு ஆரோக்கியமாக இருப்பதற்குக் கூட அது அவசியம்.
வையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன ?
என் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் என
-
22nd May 2007, 12:09 AM
#126
Senior Member
Devoted Hubber
Naan Marai is always Vedas
Contd.
வையாபுரிப்பிள்ளை குறித்து என் கருத்து என்ன ?
என் நண்பர்கள் முழுக்க முழுக்க வையாபுரிப்பிள்ளை ஆதரவாளர்கள். ஆனால் எனக்கு சில ஐயங்கள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. ஆய்வாளன் அல்ல என்பதனால் நான் அது குறித்து எழுதுவது இல்லை.
குமரிக்கண்டம் என்ற கருத்து அறிவியல் அடிப்படை இல்லாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் நம் மொழியின் சொற்கள், எராளமான தொன்மங்கள் ஆகியவற்றை குமரிக்கண்டம் கடல்கொண்டது என்ற மையக்கருத்து இன்றி இணைக்கவோ புரிந்துகொள்ளவோ இயலாது என்று எனக்குப் படுகிறது.[உதாரணம் தென்புலத்தோர் என்றால் மூதாதையர்] நான் இப்போது எழுதும் 'கொற்றவை ' என்ற நாவலில் புனைவுசார்ந்து அதை செய்ய முயல்கிறேன். ஒரு கருதுகோளாக, விவாதத் தரப்பாக குமரிக்கண்டம் இருந்தபடியேதான் இருக்கவேண்டும். அதை முழுக்க நிராகரித்துவிட இயலாது.
தமிழ் வேர்ச்சொல்லாக்கம் பலவகையான உள்நோக்கங்களும் அசட்டுத்தனங்களும் உடையது என்றாலும் அதில் முக்கியமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று எண்ணுகிறேன். பாவாணரின் வேர்ச்சொல்லாக்கமுறைமையை நான் ஐயப்படுகிறேன்.ஆனால் அவரது மொழிசார்ந்த நுண்ணுணர்வு பல வாசல்களை திறந்துள்ளது. என் மரபை புரிந்துகொள்ள அவர் மிக மிக முக்கியமானவர். வையாபுரிப்பிள்ளை அளவுக்கே முக்கியமானவர். சொல்லப்போனால் ஒரு படைப்பாளியாக எனக்கு அவர் வையாபுரிப்பிள்ளையை விடவும் முக்கியமானவர். நான் கையாளும் சொற்களை அறிய அவரை நான் சார்ந்திருக்கிறேன். அவர் வையாபுரிப்பிள்ளை மீது கொண்ட காழ்ப்பை ஒருவகை புலமைக்காய்ச்சலாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். அவரது தரப்பு தமிழில் எப்போதும் வலுவாகவே இருக்கும் -- இருக்க வேண்டும்.
ஆக நான் விழைவது ஒரு பெரிய விவாதப்புலத்தை. அதில் வையாபுரிப்பிள்ளையும் பாவாணரும் இரு முக்கியமான வல்லமைகள். பாவாணர்மீது இன்று குருட்டுத்தனமான பற்று கட்டப்படுகிறது. அவரது பாணியில் அசட்டு ஆய்வுகள் குவிந்து சூழல்சீர்கேட்டை உருவாக்குகின்றன. ஆகவே அவரை எதிர்த்து எழுத நேர்கிறது. வையாபுரிப்பிள்ளையின் மகத்தான சாதனைகள் கூட முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆகவே அவரைப் பற்றி பேசவேண்டியுள்ளது அவ்வளவுதான்.
வையாபுரிப்பிள்ளை பற்றி இன்று செய்யவேண்டியது...
வியாபுரிப்பிள்ளையின் மகன் -- அமெரிக்கர் என்றார்கள்-- அவரது நூல்களை முழுமையாக பிரசுரிக்க முயன்று சில தொகுதிகலுடன் நின்று விட்டது. தமிழ்ச்சுடர்மணிகள் போன்ற நூல்களை இன்று மீண்டும் கொண்டுவரவேண்டும். யாரிடம் பதிப்புரிமை உள்ளது என்பது சிக்கலாக உள்ளது
வையாபுரிப்பிள்ளை குறித்து நூல் எழுத முற்றிலும் தகுதியானவர் முனைவர் அ கா பெருமாள். அவர் ஏற்கனவே எழுதிய நூலை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்றுடன் சேர்த்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் தமிழினி பிரசுரமாக நூல்வெளிவரக்கூடும்
**
-
24th May 2007, 01:13 AM
#127
Senior Member
Seasoned Hubber
You want international scholars to say it?
Sanskrit is an Invented Language
This above examples show that the Sanskrit words examined were composed with the use of the Saharan/Basque vocabulary. Almost all these Sanskrit words were manufactured from the VCV half of the Basque language. Only if the right word were not available, such as in pitar (father) or manus (man), would they go to the CV half of the vocabulary, just as was done in English. The people who made up this language used exactly the same technique as those who invented the Greek language. Nyland (2001) believed that most probably, they were missionary scholars sent out by the Proto-Judaic religion from Anatolia. (fr faculty.ucr.edu)
Well, I didn't manufacture the above! It is from international scholars in a western university.
vEtham is composed from Tamil word vEi(thal). vid - given as root by the Sanskrit etymologist is also from Tamil "viththu" seed - vithaiththal - planting or seeding = to show that knowledge is induced or planted.
FSG has clearly demolished the demonic devapriya (&Co) 's blabs!
-
24th May 2007, 10:13 PM
#128
Senior Member
Devoted Hubber
Naan Marai is always Vedas
Dear Friends,
Old Lies made up with Authors of Partial repute and totally rejected lies are repeated and of No use.
The Article given clearly tells this method of interpreting other Language word recorded 1000 years earlier with your own foolishness is not Linguistics. No use in quoting old meaningless Blabbers, un accepted by No Reputable Scholars.
Tamil research was done with Caste motives by Church and Tamil Upper Castes and Marai are always Vedas.
-
25th May 2007, 03:39 PM
#129
Senior Member
Seasoned Hubber
Re: Naan Marai is always Vedas
Originally Posted by
devapriya
Dear Friends,
Old Lies made up with Authors of Partial repute and totally rejected lies are repeated and of No use.
Old lies are yours. Theirs is fresh research. Your old lies have become garbage.
Originally Posted by
devapriya
The Article given clearly tells this method of interpreting other Language word recorded 1000 years earlier with your own foolishness is not Linguistics.
Yes demon devapriya's method of interpreting other language with her own foolishness is Linguistics because it suits your blabber.
Originally Posted by
devapriya
No use in quoting old meaningless Blabbers, un accepted by No Reputable Scholars.
Because if you accept it, that will be the end of the road for you!
Continue your blabs and foolish old Sanskritist lies. In any case you do not have any repute to go there and counter them! For you: only those saying it is devabhasha have repute.
Originally Posted by
devapriya
Tamil research was done with Caste motives by Church and Tamil Upper Castes and Marai are always Vedas.
Sanskrit research was done with what motives?
Keep repeating until you go cuckoo! People know that you can't answer the scholar who wrote what I cited.
Sanskrit was invented by nomadic mathravathis. Marai is not arya vedas. Arya is not Brahmana. Sanskrit has nothing to do with Brahmin.
It is just their working language.
You asked for international scholar. I gave one and you have started your foolish posts again. Submit your counter-thesis to them with a copy to us if you have the guts and the knowledge. You have become totally useless to everybody here.
-
25th May 2007, 06:50 PM
#130
Member
Junior Hubber
Naan Marai is Vedas
Friends,
Tamilnadu has been surcharged with the Nonsense, and nobody can give True Opinions. Even the reputed Magazines are attacked for them.
Kushbu was attacked for telling her mind, where as Kanimozi when she said Sangam Lit HAS more of Pre Martial Sex, no reflection. Suhasini says they are attacked. The Ananthavikatan Magzine office needed protection because it carried an artilce by Gnani, saying words in support of Kushbu.
E-Magazine Thinnai.com be given Due Credits.
Bismala said this
Please do not discuss caste in this thread.
,
but when she says
Sanskrit was invented by nomadic mathravathis. Marai is not arya vedas. Arya is not Brahmana. Sanskrit has nothing to do with Brahmin. It is just their working language.
Can Mala give any other World Language with such Grammatical worth which is artificial. No one claimed that Sanskrit totally belongs to Brahmins. In fact Vedas or the Marais have serveral Munivars who are not Brahmins.
Vedic Chief God Shiva is not Brahmin. Rama or Krishna Avathars are not Brahmins.
Calling Brahmins as Outsiders who came or Vadakkus You only go by Europeans who brought this because they said Indians cannot have such Knowledge by 2000 BCE or Earlier.
Why do you not get One University to support any of your lies. Please get them before putting them in this Thread.
Your Quality is known well by your calling proves that you stand in shreads of lies.
Love India; Love Tamil.
Love God ; Love Truth
Bookmarks