-
27th July 2006, 08:13 PM
#81
Senior Member
Diamond Hubber
VEYYIL
Anbe Sivam
-
27th July 2006 08:13 PM
# ADS
Circuit advertisement
-
27th July 2006, 08:27 PM
#82
Senior Member
Veteran Hubber
என் கேள்விக்கென்ன பதில்?
யாராவது இவற்றுக்கு பதிலளியுங்கள்:
anonymous:தமிழாக்கம் யாது?
யாரேனும் "திரைப்படம் தன் வரலாறு கூறுதல்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
இங்கு எழுதியிருந்த மேற்கோள்களுள் உங்களைக் கவர்ந்தது எது?
-
29th July 2006, 02:20 PM
#83
Senior Member
Diamond Hubber
sooooooooo sad.............ennaala indha fonda padikka mudiyala
Anbe Sivam
-
4th August 2006, 06:04 PM
#84
Senior Member
Veteran Hubber
அத்தியாயம் # 10.
நாளை நான் ஓர் கட்டுரைப்போடிக்கு செல்லவிருக்கிறேன்.தமிழ் யானைகள்,இந்த இம்சையை பொறுத்துக்கொள்வார்களாக.சமீபத்தில் அனுபவித்த சில சுக நொடிகளை பகிரக்கடமைப்பட்டிருக்கிறேன்.யாருக்கும் எந்த மேற்கோள் கவியும் பிடிக்கவில்லையா என்ன?(கடந்த அஞ்சலின் கேள்வி)
" வாகன இரைச்சலினூடே
கேட்கும்
மாட்டுவண்டிமணி. "
(அம்பலம்.காம்)
ஏற்கனவே அறிமுகப்படுத்திய பிரசன்ன வெங்கடேசனின் ஆலய குடமுழுக்கு தான் தலம்.அரைத்தூக்கத்தில் நீராடிவிட்டு ஜிப் போடாமலேயெ கோயிலடைந்தேன்.அதிகாலையிலிருந்து பகல் வரை விண்மலர் விரிவதை சுகித்துக்கொண்டிருந்தேன்,ஜிப் போட்டபடி.பழகிய முகங்கள்,தெருக்கள்,கடைகள் எல்லாவற்றையும் நான் பெருமாளுக்கு காட்டிக்கொண்டிருந்தேன்.அதற்குள் நடை திறக்க எல்லோரும் முந்திக்கொண்டு சுவாமியை சேவித்துக்கொண்டிருந்தார்கள்,நான் மெல்ல மேல்தளத்திற்கு ஏறிவிட்டேன்,மரக்கட்டை மார்க்கமாக.அங்கு நீரை கும்ப நீரோடு dilute செய்துகொண்டிருந்தார்கள்.புளியோதரை, தயிர்சோறு, சர்க்கரைபொங்கலோடு கொஞ்சம் பக்தி.பக்கத்தில் பலூன்கள்,ராட்டினமென மழலைக்கொண்டாட்டங்களும்,பட்டாசு.ராக்கெட் என்று மறுபுறம் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்த ஏரியாவும் விழித்திரையில் பட்டு ஒளி பரவிக்கொண்டிருந்தது.புகை இன்னும் சூரியனை புலப்படுத்தவில்லை.ராக்கெட் ஒன்று கிளியாட்டம் ஆகாயஜாலம் புரிந்து குபுக்கென வெடித்து விழ, அருகிலிருந்த குளம் வளையல்களை அணிவித்துக்கொண்டது.நிறங்கள் நிரலாக தாவணியிலும்,பட்டு வேட்டிகளிலும்,சாத்தப்படும் மாலைகளிலும் மிளிர்ந்தது.கவிதை ஒன்று யோசித்துக்கொண்டிருக்கையில் ஜலம் மாயிலையினூடே என்னை அடைந்தது.சிலிர்ப்பினை வாங்கிக்கொண்டு கவிதையை எடுத்துக்கொண்டு வடிந்தது.பன்னீர் பாட்டலொன்றில் அதை நிரப்பி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கீழே இறங்கியாகிவிட்டது.தெய்வ வழிபாட்டில் ரசனை,அழகியல்,நுட்பம் எல்லாம் இருக்கிறது அல்லவா?
அப்புறம் பள்ளி சார்பில் யுனானி அறிவியல்மையத்திற்கு பாதசாரித்தது.பாதசாரிப்பதென்பது இங்கு ஆகுபெயர்:நாங்கள் தேர்வு செய்த வாகனம் சுவராஜ் மஜ்தா ஊர்தி.வழிநெடுக அது எங்களுக்கு நகரத்தின் ரணங்களையும்,துர்கதியில் துவளும் மானிடர்களையும் காட்டிக்கொண்டே வந்தது புகையுமிழ்ந்தபடி.அப்போது சிவாஜி சிலை இல்லை.மீதி சிலைகளுக்கு அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு கருவாட்டுப்பூவை முகர்ந்தோம்,கைக்குட்டைகளால்.ராயபுரத்தின் மீன்வாசத்தையும்,மண்தொடும் கடல்நுரையையும் தாண்டி மூலிகைச்செடி பராமரிக்கப்படுவது தெரியாது, உணர்ந்தேன்.வேண்டாவெறுப்பாக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன் துளசிமணத்தில்.அந்த குறிப்பிட்ட இடம் போகப்போக நீண்டுகொண்டே இருந்தது,கண்மூடுகையிலும் மூடாதபோதிலும்!.புராதன முறைப்படி விவசாயம் செய்து மருந்துகளை தயாரிப்பதும் உள்ளது,டிஜிட்டல் முறையில் செய்யும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன,தமிழ்நாட்டைப்போலவே.அந்த இசுலாமிய பேரா. நிகழ்த்திய உரை மறந்துபோய்விட்டது.கூடவே அவர்கள் எழுதிக்கொள்ளச்சொன்ன தாவரவியல் பெயர்களும்.ஆனால் நாசியில் அந்த நறுமணம் நினைவிருக்கிறது.திரும்புகையில் கால் வலித்தது,அந்த கானகத்தை கடந்த காரணத்தால்.ராத்திரி கடனுக்கு அந்த ரிப்போர்ட்டை முடித்துவிட்டு வானம் காணுகையில் நட்ச்சதிரங்கள் கண்ணடித்து குட் நைட் சொன்னது.
பதிலுக்கு நான் சொல்வதற்குள் சூரியன் குட் மார்னிங் என்றது!
-
6th August 2006, 05:38 PM
#85
Senior Member
Veteran Hubber
நண்பன் அபிலாஷ் நேற்றைய கவிதைப்போட்டியில் பாடிய கவியிது.ஆனால் அவனுக்கு பரிசு தரவில்லை.வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
என் நாடு இந்தியா.
முக்கடல்கள் படை சூழ
வீற்றிருந்தாள் ஒரு நங்கை.
இமயமலை கிரீடமாயேற்றி
ஆட்சிபுரிந்தாள் இம்மங்கை.
அவள் பெயர் இந்தியா!
அவள் வாழும் இடம் இந்தியா!
இமயம் முதல் குமரிவரை
பரந்திருந்தது அவளது சிவப்பழகு மேனி.
செலவ வளத்தில் செழித்திருந்தாள்
பண்பாட்டில் வளர்ந்திருந்தாள்!
அவளுடைய அமைச்சர்களின் புகழை
சொல்லாமலிருக்க முடிய்முமோ?
வீரம் நிறைந்தவன் பஞ்சாப்
அறிவு நிறைந்தவன் வங்காளம்
அழகில் சிறந்தவன் காஷ்மீர்
சரித்திரம் படைப்போன் இராஜஸ்தான்
படிப்புதேறியவன் கேரளம்
இரும்பு உள்ளம்படைத்தவன் பீஹார்
சிலை வடிப்பவர் ஒரிசா
பால்வடியும் பிள்ளை ஹரியானா
கடமை தவறாதோன் தமிழ்நாடு!
நதிகளவர் சகோதரியர்!
அவள் செல்வவளம் கண்டு
அவளை ஆட்சி செய்யத் துணிந்ததோர்
அயல்நாட்டுப்படி.
வாளே ஆயுதமாய்க்கொண்டோர்க்கு
தோட்டா என்றதும் புரியவிலை!
திகைய்த்தனர்,திடுக்கிட்டனர்
திக்குமுக்கு தெரியாமல் தவித்தனர்.
வழியேதும் தெரியாமல்
விழித்திருந்த அவளுக்கு
பிறந்தானோர் மகன்
கதருடை சாத்திக்கொண்ட
அச்சீமான் காந்தி மகாத்மா!
என்செய்தான் அம்மாவீரன்
கத்தியெடுத்தானா?
தோட்ட நம்பினானா?
குண்டேதும் வைத்தானா?
அவன் நம்பியது அகிம்சையை,
அவனது மந்திரம் ஹேராம்!
இதுவரை யாரும்
கையாளா ஆயுதத்தால்
வந்தவர் வணங்க,வாழ்த்த
தியாக உணர்வை
தோற்கடிக்க இயலாது
விடுதலை வழங்கினான் பரங்கியன்!
இன்றோ...
நாமென்ன செய்துகொண்டிருக்கிறோம்?
விடுதலை நாளை விடுதலை நாளாகி
நட்ச்சத்திரப்பேடிகல் காணுகிறோம்!
நாட்டுக்காக படுபட்ட சிலருக்கு
சிலை வெண்டாம்,பட்டம் வேண்டாம்;
சிந்துகின்ற இருதுளி கண்ணீரால்
பல்கோடி புண்ணியம் கிட்டுமே!
"என் நாடு இந்தியா"
என்றுரையாமல்
"நம் நாடு இந்தியா"
என்ரு மனமோங்கி
இளைஞர் சரித்திரம் படைப்போம்!
-
6th August 2006, 06:37 PM
#86
Senior Member
Platinum Hubber
வெறும் இயைபிற்காக தாயுடன் நாயை கோத்தோருகெல்லாம் முதற்பரிசு வழங்கப்பெற்றது.வாழ்க ஜனநாயகம்.
ÐÂÃÁ¡É ¾¡÷ò¾õ! ¿øÄ ¸Å¢¨¾¨Â, ¿øÄ ¸Õò¨¾, ¿øÄ ¯½÷¨Å þíÌ ¦¸¡Îò¾¨ÁìÌ ¿ýÈ¢!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
7th August 2006, 12:49 PM
#87
Senior Member
Diamond Hubber
-
9th August 2006, 03:23 PM
#88
Senior Member
Veteran Hubber
அவர்கள் எங்களுக்கு சொன்ன சமாதானம் பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே ..."பாடல் கூட இரண்டாம் பரிசு பெற்றது என்பதுதான்.நான் சில சிறுகவிகளின் சரமாக அங்கு சென்று படித்தேன்,extempore:இதற்கும் தமிழ்ப்பதமறியேன்.ஏற்கனவே இதே போல anonymus-க்கும் தமிழ்க்கிளவி கேட்டிருந்தேன்.
வானை அளப்போம்.
நிலாச்சோறு சாப்பிட்டது
போதும் - நிலாவில்
சோரு சப்பிடலாம் வா!
தோல்வீதிகளில் நடந்தது
போதும் - பால்வீதிகளில்
நடக்கலாம் வா!
கிரகப்பெயரில் சோதிடம் கேட்டது
போதும் - கிரகத்திற்கு நம்
பெயர் வைக்கலாம் வா!
நட்சத்திரங்களிடம் கையெழுத்து ஏந்தியது
போதும் - நட்சத்திரத்தில்
கையெழுத்திடலாம் வா!(நிலாச்...)
சேனை வளர்ப்போம் - அதனால்
வானையளப்போம்.
பாலைவனங்களை சோலைவனமாக்கி,
விறகைக்கூட வைரமாக்குவோம்.
வெறுங்கை மூலதனங் கொண்டு
பெருஞ்செல்வம் அறுவடை செய்வோம்.
மதி வெல்வோம் - அதனால்
மதி செல்வோம்.(சேனை...)
கரங்கள் கோத்து,
மனங்கள் சேர்த்து,
கால்கள் இணைத்து,
சிரங்கள் புணர்ந்து
மொழியால் மட்டுமின்றி
விழியாலும் வானையளப்போம்!
பாதசாரியைத் தொடர்கிறேன்.
-
9th August 2006, 03:28 PM
#89
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th August 2006, 04:12 PM
#90
Senior Member
Veteran Hubber
பவளமணி அம்மையார் கைதட்டுமளவு அக்கவி இருந்ததென்றால்,எனக்குப் பெருமை தான்.அடுத்த அஞ்சலில் தொடரும்படி ஆகிவிட்டதற்கு மன்னிக்கவும்,நான் திரிகளில் உலவும் கட்டுரைகளை வரிசைப்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறேன்.
Bookmarks