-
9th August 2006, 04:23 PM
#91
Senior Member
Platinum Hubber
þó¾ §Å¸õ, þó¾ °ì¸õ, þó¾ò ¾¢¼õ, þó¾ ¸É×ò¾¢Èý -«ò¾¨ÉÔõ þ¨Ç»¸Õ째 ¯Ã¢ò¾¡ÉÐ - þ¨¾ò¾¡§É «ôÐø ¸Ä¡õ Ó¾ø þó¾ º¡Á¡ýÂû Ũà «¨ÉÅÕõ Á¨Ä¡ö ¿õÒ¸¢§È¡õ!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th August 2006 04:23 PM
# ADS
Circuit advertisement
-
9th August 2006, 05:31 PM
#92
Senior Member
Veteran Hubber
ஏன் யாரும் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?(தன்வரலாறு கூறுதல்,சிறந்த மேற்கோள்,இத்தியாதி வினாக்கள்)பரவாயில்லை,மீண்டும் தொடர்கிறேன்.
BLACK AND WHITE.
படங்களில் கொசுவர்த்தி சுற்றி தத்தம் வரலாற்றை டைரி,பேச்சு,மனோதத்துவம் முதலிய மார்க்கங்களால் விவரிப்பது ஒத்து என் முயற்சி இது.விடுமுறைக்கு விடுமுறை ஏன் விடுமுறை விடுகிறார்கள் என்ற சந்தேகம் மனதில் எழும்,என் தொடை வரை இருந்த எனக்கு.எண்ணற்ற வேலைகள் தந்துவிட்டு "ஹேப்பி ஹாலிடே" சொல்லும் ஆசிரியைகளின் வீட்டை அமளிதுமளிபடுத்த என்று கற்பிதங்கள் பயிற்றுவித்துக்கொண்டேன்.பசுவின் சாணத்தின் மையத்தில் வெடி வைத்தால்,அருகிலிருக்கும் மிஸ் வீட்டு சுவர் நாஸ்தி;கிரிக்கெட் மட்டைகள் ஜன்னல்களுக்கு குறி வைத்து பந்துகளை ஏவூஉம்;டாபர்-மேன்கள் மீது கல்மாரி பொழியூஉம்;வாகன சக்கரங்களிலிருந்து காற்று விடுதலை செய்யப்பெரூஉம்.இவற்றிற்கான கர்த்தாக்களை குறிப்பிட்டவர்கள் புலன்விசாரணை செய்வதற்குள் நாண்க்கள் பூர்விகங்களுக்கு புறப்பாடாவோம்.ஊர்களில் வீடியோ கேம்கள் இருக்காது என்பதொழிய பிறிதொரு இம்சை வாய்த்திருக்கவில்லை.எனது அத்தகு பயண நினைவுகள் வரிக்குதிரைகளின் மீது பதிந்த கோடுகள் நிகர சுவடுடுத்தியிருக்கின்றன.
சிலபல வீட்டுப்பாட நோட்டுகளை மாமிகளிடம் ஒப்படைத்துவிட்டு,விடைகளை குறித்துவிட்டு சிறகு விரிக்கவேண்டியதுதான்.முதல் நாள் காலை,நாளேடு விளம்பரங்களை புரட்டிவிட்டு,தோப்பிற்கு பயணப்படலாம்.உலகிலேயே மனிதன் நிம்மதியாக இருக்குமிடம் என்று கண்டாயப்பட்ட கழிவறைக்கு தான் நாங்கள் சென்றுகொண்டிருந்தோம்.ஏனெனின்,அங்கு ஃபிளஷ்ஷுடன் கூடிய வகையறாக்களெல்லம் "லேது".மிகப்பெரிய திறந்தவெளி-பெயர் தெரியாத மரங்களின் நிழல்,குளம்,விநாயகர் ஆலயம்,புளியந்தோப்பு இவை தான் லொக்கேஷன்கள்.கடன்களை அடைத்தப்புறம்,நாளைய கடனுக்கான சோறு.பெரும்பாலும் இட்டலி/தோசை,சாம்பார்.ஞாயிறுக்கு ஆப்பம் அல்லது இடிஆப்பம்.காலைகள் எப்போதுமே சற்று வெறுமையானவை.மதியங்கள் தான் வேட்டைருது.பெண்டிரெல்லாம் குறட்டை விடும் பொழுதில் கரப்புகளோடு கூட்டணை வைத்து வீட்டுச்சிற்றுண்டிகளை களவாடுவது தான் சாகசம்.ஏப்பங்கலை தானஞ்செய்துவிட்டு தோப்புக்கு போகலாம்.ம்ஹூம்,இப்பொது புளியந்தோப்பிற்கு.அதை தாண்டி பிள்ளையாரின் இடப்புறம் தான் "அந்த"ப்புரம்.அடுப்புக்கில்லையென்றாலும் விளையாட கிரிக்கெட் மட்டைகள் இருக்கும் ஐயன்பெட்டையில்.("தில்லுமுல்லுக்காக இரஜினிகாந்த் கடன் வாங்கிக்கொண்ட நெசவுக்கிராமம்,காஞ்சி மாவட்டம்)பெரியம்மாள் பிள்ளைகளோடு செஞ்சுரிகள் அடிக்கவேண்டியது பாக்கி.நிலா வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடும்.சில நேரங்களில் பாண்டி,புல்-கோட்டி(கில்லி),கோலி விளையாட்டுக்கள்(சோங்கு,இத்தியாதி),கண்ணாமூச்சி முதலியன அனுமதிக்கப்படும்.பாட்டி முக்காடத்தை(தாழ்ப்பாளின் வட்டாரச்சொல்)இழுத்துக்கொண்டு பவம் புரிந்த ஃபியட்டில் ஏறச் செருமுவார்.சுமார் பதினைவரோடு செல்லும் ஊர்தி!விலை சல்லிசு என்பதால் மாம்பலத்திலிருந்து காஞ்சி செல்வோம்:இப்போது கூட இங்கு எழுபதிற்கு விற்கும் அனுமதிசீட்டு அங்கு பதினைந்து!பெரியம்மாள் வீடும்,பாட்டியின் வீடும் அருகருகே இருந்தது மற்றொரு வசதி.பங்காளிகள் ஐவரும் சேர்ந்து தேன் மிட்டாய்,பல்லி மிட்டாய்,புரை,எல்லாம் வாங்கித்தின்போம்.பபுள்கம் வாங்கினால் கிரிக்கெட் கார்டுகள் இனாம் என்பதால் அவற்ரை வாங்கி சேகரிப்போம்.சகோதரர்கள் நால்வரும் ஏரத்தாழ ஐந்நூறு செகரித்திருந்தோம்!
"எந்த இடத்திலிருந்தும்
சொர்க்கம் சமதூரத்தில்
இருக்கிறது."
நாம் நெருங்கிவிட்டோம்.
-
9th August 2006, 07:46 PM
#93
Senior Member
Platinum Hubber
¦¾Ç¢Å¡É À¾¢×, «Æ¸¢Â ¯Å¨Á¸Ù¼ý. ±ØòÐôÀ¢¨Æ¸û ¸ÅÉ¢ì¸ôÀ¼§ÅñÎõ.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
12th August 2006, 05:57 PM
#94
Senior Member
Veteran Hubber
மிக்க நன்றிகள் பாதசாரியை மாபெரும் வெற்றியாக்கியமைக்கு.ஒரே மாதத்தில் 1500 கிளிக்குகள் பதிந்திருக்கின்றன அவன் மேல்.சென்ற மாதம் 1425,இப்போது 2921!இதற்கு எஞ்ஞான்றும் நன்றி மறக்கிலன்.
ஐயன்பேட்டை புராணம் பாதி தின்ற ஆப்பிள் போல பழுப்பாகித் தொங்கிக்கொண்டிருக்கிறது.முடித்துவிடுகிறேன்.
தோப்புகளில் விளையாடியதும்,காஞ்சிக் கோவில்கள் 1008க்கு சென்றதும்,புளியங்காய்(அதுதான் டிரிங்க்ஸ் பிரேக்கின் போது ஆகாரம்)அடித்ததும் உறைந்த பனிக்கட்டியாகிவிட்டன.அதை காட்சிகளாகவே மனமூர்ந்து செல்லும்படி செய்த இயற்கைக்கு நன்றி.பனை நுங்கு இறக்கப்படும் சனிக்கிழமைகளில் மாலுமிகள் ஒத்து திட்டமிட்டு பங்கீடு செய்து கொடுப்போம் அவற்றை.வெட்டி வைக்கப்பட்டிருக்கும் விறகுப்பிரம்புகளை "சுட்டு" ஸ்டம்ப் நட்டதுகூட ஞாபகம் இருக்கிறது.பெயர்கள் தரும் வினோதம் அளப்பெரியது.என் அம்மாவின் பாட்டி பெயர்:செல்சா!நன்பனொருவனது பெயர்:பட்டு ரோஸ்!ஆனால் அவை அரிதாரம் பூசிக்கொள்வதில்லை நகரமாந்தர்களை நிகர்த்து.எவ்வளவு பெரிய படிப்பாளியும் அங்கு நெசவு செய்வார்.ஊர் முழுக்க சாயமும்,தராசு முள்ளாட்டும் நூற்கண்டுமணமும்,பவர்லூமிடி சப்தங்களுமென பட்டணிவிக்கப்பட்டிருக்கும்.நகரமோ கிழிந்த ஜீன்ஸும் பெர்பியூமும் சூடியிருக்கிறது.இல்லையில்லை வாடியிருக்கிறது.மேலும் அங்கு நடக்கும் திருவிழாக்கள் அழகானவை.இன்று அப்போதிருந்த மிடுக்கு குறைந்தாலும்,கிராமம் கிராமமாகவே இருக்கிறது.மெகா சிரியல்களால் மட்டும் கொஞ்சம் உருகி.எஸ்.இராமகிருஷ்ணன் ஒருமுறை எழுதினார்:
"உலகம் ஒரு தின்னமுடியாத பெரிய பழம்.அதன் ஒரு பகுதியை தின்பதற்குள்ளேயே நம் ஆயுள் முடிகிறது....."
நான் தொடர்கிறேன்:ஒவ்வொருவனும் தின்று முடித்த பகுதி மீண்டும் பழத்திற்குள்ளேயே போய் பழத்தை நிரப்பிவிடுகிறது,ஆதலால் இன்றுவரை உலகம் உருண்டை.திருவிழாக்கள் தொடரும் அஞ்சலில்.
-
29th August 2006, 09:29 PM
#95
Senior Member
Veteran Hubber
நகராத பயணம்.
இம்முறை என் கட்டுரை சற்று மலினமாகிவிட்டது,அருள்க.ஆயினும் அற்புதமானதோர் மேற்கோளுடன் தொடங்கலாம் என்று உத்தேசித்தவுடன் கிறீச்சிட்ட வரிகளும் அவற்றின் சொந்தக்காரரும் இதோ:
" காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு
வாடா வாடா வாடா வாடா
வாட்டர் பாக்கெட்டு! "
(பேரரசு) (விஷ்க் விஷ்க் விஷ்க்)
இது ஒத்த அமரக்கவியை குமரித்தமிழில் பரிமாற இவரால் மட்டுமே இயலும்.வள்ளுவரும்,தொல்காப்பியரும் இவரது சொல்வங்கியிலிருந்து கந்துவட்டிக்கு கொஞ்சம் வாங்கிக்கொள்ளலாம்.அர்த்தமற்ற தமிழைப்போல நகாரத பயணமென்றும் ஒன்றுண்டு,அஃது தொலைக்காட்சி!
[தயை கூர்ந்து நடுநிசியில் வேறு சில பாதசாரிப்புகளை களிக்குஞ்சிலரை மன்னித்துவிடலாம்.]பால்யத்திலேயே டி.வி-யெனும் கயிறு ஆட்டுவிக்கும் பம்பரமாகத்தான் ஜனித்திருக்கிறேன்.இப்போதுங்கூட போகோவில் மிஸ்டர் பீன் - தி அனிமேட்டட் சீரீஸ் பார்க்கையில் உள்ளம் மழலையுருவெடுக்கிறது.சென்ற வருடமென் நண்பன் பிரசன்ன கோபாலது பெற்றோர் சொன்ன புகாரென்ன தெரியுமா?அவன் ரொம்ப கார்ட்டூன் பார்க்கிறான் என்பதே.இத்தனைக்கும் எழுபது கிலோ தாஜ்மஹாலனான அவனது வயது பதினேழு!கண்ணீர் தெறிக்கும் சீரியல்களைக்காட்டிலும் கார்ட்டூன்கள் உத்தமமே.சிறுவயதில் அநேகம் பேர் பார்க்கிற கார்ட்டூன்களாகவே மாறுவார்களாம்.எனக்கோ நேரெதிர்!உலகமனைத்தும் கார்ட்டூன்களால் நிரம்பி வழிந்தது.நான் ஒண்டி மனிதன்.மீதியெல்லாம் வர்ணமடிக்கப்பட்ட கார்ர்ட்டூன் படங்களே!நான் சுகித்த நிகழ்ச்சிப்பெயர்கள் அநேகமாக உங்களது இரசனைப்பட்டறையில் பத்திரமாக இருக்கலாம்.தூர்தர்ஷனின் ஸ்ரீ கிருஷ்ணா,மகாபாரதம் எல்லாம் ஞாயிறின் ஞாயிறு உதிக்கையில் வந்தென் வைகறை நித்திரை கலைக்கும்.கொஞ்சம் உயரமானதும் 'மேன்'களின் மேனியா என்னைத் தாக்கியது.கேபிள் கனெக்ஷன் பிரபலமானதும் தொடர்களின் நோய்.ஆனாலும் தூர்தர்ஷனே இன்னும் சில வருடம் வரவேற்பறையின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.குறிப்பாக சிறார்களின் மனம் ஈர்த்தது சூப்பர் ஹியூமன் சாமுராய்.அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்ட நாடகம் அஃது.இந்தியத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்ற மெகா மகா தொடர் ஜுனூன்.கார்ட்டுன் நெட்வொர்க் பிற்பாடு வந்தது.அஃது பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் போர் மூள காரனமாய் அமைந்தது வேறு விஷயம்.ஸ்கூபி டூவும்,பாப்பாயும் அமரத்துவம் பெற்றவை.அதிலும் பாப்பாயின் நான்கு புத்திரர்களும்,ஸ்கூபி/ஸ்க்ராப்பி டப்பிங் குரல் பொருத்தமும் அசர வைத்தன.மனித முகம் தேடிய போது தான் மெல்ல தொடர்கள் வந்தன.'நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்' ஒரு புராதன குடும்பத்தைக்காட்டியது.கோவை அனுராதா மெல்லிய நகைச்சுவையை அறிமுகப்படுத்தினார்.அவ்வப்போது தாய்வீடு புகும் மருமகளொத்து DD-யும் பார்த்தேன்.கிரேஸி மோகனுக்காகவும்,எஸ்.வி.சேகருக்காகவும்.திடீரென் று கார்ட்டூன் நெட்வொர்க் ரெவல்யூஷன் என்ற பெயரில் மனங்களைத் திருட திட்ட்டம் தீட்டினர்.அவற்றுள் முக்கியமானவை centurions,fantastic four,laff-a-lympics,road-runner ஆகியன.சன் தொலைக்காட்சி தன் வேர்களை பிஞ்சுகளில் ஊன்ற மாலையிருள் கவியும் நேரத்தில் கார்ட்டுன்களை பெயர்த்து ஒளிபரப்பியது.அவற்றின் பெயர்கள் மட்டும் நினைவிலில்லை.மெல்ல தொலைக்காட்சிப்பெட்டி தன் சாயலை இழந்து வெள்ளித்திரையின் நகலாகத்தொடங்கிய போது ஆபத்பாந்தவர்களாக வந்தனர் சில இயக்குனர்கள்.அவர்களது பெயர்கள்.....
-
2nd September 2006, 01:24 PM
#96
Senior Member
Diamond Hubber
-
6th September 2006, 08:10 PM
#97
Member
Junior Hubber
good
tat was really good and i hope i have read d same in the class da...
who lives if india dies:who dies if india lives?
-
6th September 2006, 08:44 PM
#98
Senior Member
Veteran Hubber
IDHUKKU MUNTHINA PAGE ELLAM PADI KAUSHIK MACHI!I'VE NOT SHOWN U THOSE!
BTW,WHY RAGAV?
-
12th September 2006, 07:07 PM
#99
Senior Member
Veteran Hubber
கே.பி!பாலச்சந்தர் தொலைக்காட்சியை முற்றுகையிட்டு அனைத்து அலைவரிசிகளிலும் தன் கவிதாலயா நிறுவனத்தின் தொடர்கள் தான்.திருவள்ளுவர் இலையராஜாவின் 'அகர முதல் எழுத்தெல்லாம்..' குரலுக்கு உலகை சுழற்றலாயினார்.மறுபுறம் சன் தொலைக்காட்சியின் வேர்கள் அனைத்து மனங்களிலும் வேர்பரப்பியிருந்தது.முதன்முதலில் ஹிட்டான சீரியல் சாங் நானறிந்து 'பிரேமி'.நாகா மர்மதேசம் வழியாக எனக்கு என் திகிலுறையும் ரேகையை அறிவித்தார்.ஏறத்தாழ பத்து வருடங்கலாக தரமான நாடகங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.தலையாய படைப்பு:ரமணி vs ரமணி பாகம் இரண்டு.நகரத்து நியூக்ளியர் குடும்பத்தின் நகைச்சுவையை மையலாகக்கொண்டது.கொஞ்ச நாள் கழித்து தமிழுதடுகள் அனைத்திலும் பதிந்த சொற்கள்:கண்ணின் மணி கண்ணின் மணி...."ஆம் சித்தி தொடரது பாடல்.ஸ்ரீரங்கத்தையும் நட்பையும்,ஊனத்தையும் வெகு ரம்மியமாக வெளிக்கொணர்ந்த தொடர் அது.அதை வழிமொழிந்த அலைகளும்,மெட்டி ஒலியும் ஜஸ்ட் பாஸ்.பிறகு கிளிசரின் கண்ணாம்பூச்சிகளால் நிறைந்து அலறிக்கொண்டிருக்கிறது இன்று.காலப்போக்கில் காணாமற்போகும் காளானாக மாறியிருக்கிறது தொலைக்காட்ட்சி.சிறுவயதில் நாம் விரும்பும் பலவும் பெரியவர்களானதும் அலுத்துவிடுமாம்,அதுபோலத்தானா இதுவும்?எது எப்படியாயிருந்தாலும் மீன்தொட்டியை விட கடல் எப்போதும் பிரும்மாண்டமானது தான்.அந்தக்கடலானது பயணம்,நீண்ட நெடிய பயணம்.பாவம் பேரரசு,அவரை அதிகப்படியாக நகையாடிவிட்டேன்,அவருக்காக மட்டுமின்றி:
" வேருக்கு நீரு
ஊத்தித்தான் பாரு
பூவிலெல்லாம் உன் பேரு "
(பேரரசு,திருப்பதி..... வந்தா பாடலிலிருந்து)
-
12th September 2006, 10:37 PM
#100
Senior Member
Diamond Hubber
yes i do remeber ramani vs ramani.............i enjoyed it! hm.......
perarasu
Anbe Sivam
Bookmarks