-
17th September 2012, 12:33 PM
#331
Senior Member
Seasoned Hubber
வெடு > வெட்டு.
வெட்டு
வெட்டு என்பது ஒரு கூரான அல்லது சுணைப்பு உள்ள ஆயுதத்தால் அறுத்தல் அல்லது கூறுபடுத்தல் என்று பொருள்படும். இதை இன்னும் பயன்பாட்டுக்குத் தக்கபடி பொருள் விரிக்க இடமுண்டு.
இதன் அடிச்சொல்லான "வெடு" என்பதை வெடு > வெடுப்பு (பேச்சு வழக்கு ) என்பதினின்று அறியலாம். இது பிளவு என்று பொருள்தரும். வெடித்தல் என்பது சற்று வேறுபட்டது ஆனால் தொடர்புடையது.
வெடு > வெட்டு. இப்படி இது வினைச்சொல்லாய் ஆக்கம் பெறுகிறது.
வெட்டு என்பது "முகவெட்டு" என்ற தொடரிலும் வருகிறது. முகவெட்டென்பதில், வெட்டுதல் என்னும் வினை (the act of cutting with instrument) ஒன்றும் நிகழவில்லை.
இங்கு வெட்டு = அமைப்பு என்று பொருள். முகம் வெட்டி அமைக்கப்படுவதில்லை எனினும், வெட்டி அமைப்புறும் பொருள்களின் வாயிலாக இதற்கு இப்பொருள் விரிந்து அடைவு பெறுகிறது என்பது தெளிவு.
சிலர் "ஃவேஸ்கட்" (facecut or face-cut) என்று ஆங்கிலம் பேசும் போதும் குறிப்பிடுகிறார்கள். இப்படிப் பேசுவதும் (இச்சொல் அமைப்பும்) ஏற்றுக்கொள்ளத் தக்கது போலும்.
ஒப்பு நோக்குக.:- கஜம் என்ற சங்கதச் சொல் கடையப்பட்டது (முகம்) என்ற பொருளது என்பர். In other words, it was imagined that the elephant has a face that looks like having been dug out! That was the impression that the elephant gave to the person who coined the word.
Last edited by bis_mala; 17th September 2012 at 05:02 PM.
Reason: expln add
B.I. Sivamaalaa (Ms)
-
17th September 2012 12:33 PM
# ADS
Circuit advertisement
-
25th September 2012, 10:22 PM
#332
Senior Member
Seasoned Hubber
அன்னதானம் வழங்கினார்
-என்பது சரியில்லை;
அன்னதானம் செய்தார்
என்பதே சரி.
அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்லாதலின், சோறு தானம் செய்தார் என்பதே சரி.
இவ்வாறு ஒரு தமிழ்ப் பேராசிரியர் கூறியுள்ளார்.
உங்கள் கருத்து யாது என்பதைத் தெரிவிக்கலாமே
===============================================
Notes:
The word occurs in Sanskrit and also Pali languages. Anna is participle of adati (to eat). Meaning in Sans and Pali are not confined to rice. Please see below.
In Tamiz, in oridnary parlance, it refers only to cooked rice. (with kuzambu and side servings). Does not refer to uncooked rice or arisi. (or ari as in Malayalam ordinary usage and literary Tamil ).
Anna
Anna (nt.) [Vedic anna, orig. pp. of adati to eat] "eating", food, esp. boiled rice, but includes all that is eaten as food, viz. odana, kummāsa, sattu, maccha, maŋsa (rice, gruel, flour, fish, meat) . Anna is spelt aṇṇa in combns aparɔ aṇṇa and pubbɔ aṇṇa. Under dhañña (combinations in Pali.)
Other Skrt teachers would say: anna
Food; gross visible matter; in its origin the word meant simply being or substance.
annam [nominative]
as opposed to reasearchers who said that it is a participle
Note also that rice is a staple food item of South Indians.
Last edited by bis_mala; 26th October 2012 at 07:39 AM.
Reason: more info for readers.
B.I. Sivamaalaa (Ms)
-
27th September 2012, 04:10 AM
#333
Senior Member
Seasoned Hubber
அன்னம் - சோறு
அன்பின் b.i.சிவமாலா !
அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்தானா ?
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - ஐந்தாம் திருமுறை-கோயில்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
மாணிக்க வாசகர் அருளிய - எட்டாம் திருமுறை
- திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்
நன்றி
-
4th October 2012, 10:34 PM
#334
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
tfmlover
அன்பின் b.i.சிவமாலா !
அன்னம் என்பது சமஸ்கிருதச் சொல்தானா ?
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் - ஐந்தாம் திருமுறை-கோயில்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
மாணிக்க வாசகர் அருளிய - எட்டாம் திருமுறை
- திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்
நன்றி
நன்றி. Thank you for the citations.
அவஸ்தான் மொழியில் "அட்" - உண் அல்லது சாப்பிடு என்று. பொருள். படுகிறது.
அவஸ்தான் இந்தோ ஐரோப்பியம் சார்ந்தது எனப்படுவதால், ஆங்கிலம் முதலாய மொழிகளில் "ஈட்" "ஏட்" (சாப்பிடுதல்) என்று வருவனவும் கவனிக்கத்தக்கவை.
அடதி என்ற வடசொல்லின் வினைச்சொல் உருவங்களில் ஒன்றுதான் அன்னம் எனப்படுவதும் கவனிக்கத்தக்கது.
இப்படிப் பார்த்தால்,"அன்னம்" - உணவு என்று பொருள்கொள்ளலாம்.
தமிழில்:
அடுதல் = சமைத்தல் .
அடு - அடுப்பு.
அடு > அடிசில். (அடு+சு+இல்) இங்கு சுகரத்தில் உள்ள உகாம் கெட்டது. (மறைந்தது),
சங்கதத்தில்ல் உள்ள "அடதி" என்பதிலிருந்து அன்னம் தோன்றியது என்று வடமொழிப் புலவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அடு என்ற தமிழ் வடிவத்திலிருந்து "அன்னம்" மாறியமைந்தது என்பதாகத் தமிழ்ப் புலவர்கள் ஏற்கமாட்டார்கள்.
என் செய்வது?
உங்கள் கருத்து யாது?
-
4th October 2012, 11:00 PM
#335
Senior Member
Seasoned Hubber
வரு >வருந்து.
திரு > திருந்து.
பொரு > பொருந்து.
இவற்றுள், இறுதியில் வந்த "து" வினைச்சொல்லாக்க ஈறு.
இனி,
அரு > அருந்து.
மேலும் நோக்கினால்,
கரு > கன் என்று திரியும்.
கரும்பு > கன்னல்..
எனவே. அரு ஏன் அன் என்று திரியலாகாது?
அரு> அன் > அன்னம்.
அடதி என்பது அன் > அன்னம் என்று சங்கதத்தில் திரியலாம் என்றால்,
அரு> அன் > அன்னம் என்றும் (in Tamil) திரியலாம், கரு > கன் (கரும்பு > கன்னல்) என்பதைப் போல.
ஆக, அன்னத்தை எங்கே பரிமாறுவது என்பதே கேள்வி.
சங்கத இலையிலா?
தமிழ் இலையிலா?
முடிவுக்கான காரணங்கள் யாவை?
-
5th October 2012, 08:05 AM
#336
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
வரு >வருந்து.
...............................தமிழ் இலையிலா?
முடிவுக்கான காரணங்கள் யாவை?
இந்த இணைமொழிகளையும் ஆராயுங்கள்:
சின்னஞ் சிறிய குடில்
இதில்: சிறு > சின்.
பென்னம்பெரிய மனிதர்
பெரு > பென்.
கன்னங் கரேல் என்றிருப்பான்.
கரு > கன்.
மேலும், கரு என்பது கண் என்றும் திரியும்.
கரு > கருப்பு > கருப்புசாமி.
கரு > கண்> கண்ணன்.
வருணம் என்ற சொல் வண்ணம் என்ற வடிவிலும் இலங்கும்.
வரு<> வண்.
இவற்றுள், ரு, று, ந், ண் வேறுபாடின்றித் திரிந்தன மேற்கண்டவை.
வரு(வான்) > வந்(தான்) (வந்)
இவ்வினை முற்றுகளில் வரு என்பது வந் (=வன்) என்று திரிதல்
காண்க.
These changes support aru(nthu) > an(nam) change.
In Tamil, annam only refers to cooked rice The Sans and Pali annam include fish, meat and also rice.
Is this a substantial difference? If so, the tamil annam is different from vadamozhi annam.
There are a number of persons in China having the name Nannan. There are also persons having this name in Tamil Nadu, India. We must therefore conclude that the Tamil Nannan is not the same word as the Chinese Nannan or European Nannan for that matter!!
-
5th October 2012, 10:40 AM
#337
Senior Member
Seasoned Hubber
அன்னாசிப் பழம் < அருநாசிப் பழம்
அன்னாசிப் பழம் என்பதைச் சிலர் அருநாசிப் பழம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். வாத்தியார் சொல்வது "அன்னாசி". மக்கள் மொழி: அர்நாசி. மலாய் மொழியில் "நாநாஸ்"
இதிலும் அரு > அன் திரிபைக் கவனிக்கவேண்டும்.
அரிய மூக்குப்போன்ற முட்டுக்களை உடையதும், உள்ளே மூக்குப்போன்றே துளைகளை உடையதும் ஆன இப்பழத்திற்கு இப்பெயர் இட்டவருக்கு நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்கவேண்டும்.
அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை.
அரு+ நாசி > அருநாசி >அன்னாசி.
நாசி என்பதும் அழகிய சொல். மூக்கு இல்லையானால், நாவினால் ஒழுங்காகப் பேசவராது. நாவிற்குச் சீர்தருவது நா+சீர் = நாசீர்> நாசி. நோஸ் என்ற ஆங்கிலம் வரை இதற்கு உறவு உண்டு.
இப்போது அரு(ந்து) > அன்(னம்) தொடர்பான திரிபுகளை இன்னொருமுறை கவனித்துக்கொள்ளுங்கள்.
-
5th October 2012, 03:09 PM
#338
Senior Member
Seasoned Hubber
விண்ணப்பம். விரு > விண்.
விரும்பி மேல்செலுத்துவதே விண்ணப்பம். இதில் உள்ள விண் என்ற சொல்லைக் கவனிப்போம்.
விரு > விண்.
இதுவும் மேலே சொன்ன கரு > கண் என்ற திரிபின்பால் பட்டதே.
விழைந்து முன்னே அல்லது மேல் (அதிகாரிக்கு அல்லது கடவுளுக்கு) ச் சமர்ப்பிக்கப்படுவது,
விண்+அ+பு+அம்.
அ என்பது சாரியை போன்று பகுதியையும் விகுதிகளையும் இணைப்பது.
அனுப்பு என்ற சொல்லும் அகரச் சுட்டுச் சொல்லினின்று எழுந்ததே.
எனவே, இங்கு அகரம் மிகவும் பொருத்தமான இணைப்பெழுத்து ஆகும்.
அன்றி, விடுத்தல் கருத்துடைய விள் என்பதினின்றும் இதற்குப் பொருள் கூறலாமாகையால், இஃது இருபிறப்பி எனலும் கொள்ளத்தக்கதே.
ஒரு நீண்ட கருத்தைச் சுருக்கி இச்சொல் ஆக்கப்பட்டுள்ளதென்பதை அறிகிறோம்.
Last edited by bis_mala; 5th October 2012 at 03:11 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
5th October 2012, 03:15 PM
#339
Senior Member
Seasoned Hubber
Arumai thodarungal
-
6th October 2012, 10:16 PM
#340
Senior Member
Seasoned Hubber
பாராட்டியமைக்கு மிக்க நன்றி. Please stay tuned and feel free to give your views.
இப்போது இன்னும் இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.
அரு <> அண்.
எது முந்துவடிவம் என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. ஒன்று மற்றொன்றாய் மாறியமையும் என்பது ( அருந்து > அன்னம் (அரு>அன்)) ஆய்வுக்குப் போதுமானது.
அருணமலை <>அண்ணாமல
அருணமலை = அருணகிரி, அருணசலம் எனவும் படும்.
ஒரு<> ஒன்.
ஒன்>ஒன்+து = ஒன்று.
will continue
Bookmarks