Page 30 of 39 FirstFirst ... 202829303132 ... LastLast
Results 291 to 300 of 384

Thread: TAMIL W0RD DEVELOPMENT

  1. #291
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    பலகணி என்பது சன்னல் (ஜன்னல்) என்று பொருள்படுவது.

    கண் என்பது பொத்தல், துளை என்றும் பொருள்தருவதாம். "ஊசிக்கண்" என்பதைக் காண்க.

    பல கண்களையுடையதே பலகணி. ஒரு வட்டம் அல்லது நாற்கோண அமைப்பினுள் பல் காற்றுத் துளைகள் இருக்கும்படி இச்சன்னல்களை அமைத்திருந்தனர் என்பதை உணரலாம். பிற்காலத்தில், மரச்சட்டங்களை குறுக்கு நெடுக்காக இணைத்து இந்தக் "கண்கள்" அமைக்கப்பட்டன. இப்பொழுது பெரும்பாலும் இரும்புச் சட்டங்களே பலகணிக்குப் பொருத்தமெனலாம்.

    பல+கண்+இ = பலகணி.

    பலகண்ணி> பலகணி.

    சொல்லாக்கத்தில் வேண்டுழித் தொகுத்தலும் விரித்தலும் இயல்பு. இப்படி விரித்தும் தொகுத்தும் அமைக்கப்பட்ட சொற்களில் பட்டியலை எழுதிவைத்துப் பாராயணம் பண்ணிக்கொள்ளுங்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    அவி > அவல். (அவி+ அல்) இகரம் கெட்டது
    அவி > அவம். (அவி + அம்_). இகரம் கெட்டது
    அவி >அவியல் (இங்கு இகரம் கெடவில்லை, மற்றும் யகர உடம்படு மெய் பெற்றது)
    அவம்: அவிதலில் கெடுவது, பின் பொதுவாகக், கேடு
    குறித்தது
    அவி > ஆவி ( நீரில் அவிக்கையில் வெளிப்படுவது).
    சுடு > சூடு என்பதில் போல முதலெழுத்து நீண்டது

    (ஆவி - நீராவி )

    குறிப்பு: ஆய்வாளர் பிறர் வெளியிட்டவை. அவர்கட்கு நன்றி.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #293
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மேற்கண்டவற்றைப் பின்வருமாறும் காட்டலாம்.

    ( அவ் ) > அவி.
    ( அவ் ) > அவல்
    ( அவ் ) > அவம்
    ( அவ் ) > அவியல்.
    ( அவ் ) > (ஆவ்) > ஆவி.

    இப்படி விளக்கும் சொல் ஆய்வாளரும் உண்டு. பாணினி கண்டுபிடித்த முறை இது என்பர். இதில் இடர் ஒன்று உண்டு என்றால், "அவ்" என்ற ஓரசைச் சொல் தமிழில் இல்லை என்பதுதான். "அவ்" "அவ்" என்றால் தமிழனுக்கும் புரியாது.

    ஆனால் அதனால் என்ன. அவ் : நீரால் சூடேற்றுதல்,
    இடித்த உணவு, அவித்த உணவு, கெடுதல், காற்று என்று பொருள்தரும் ஓர் மூலச்சொல் என்று அகரவரிசையில் எழுதி வைத்துக்கொள்வதுடன், "அவ்"என்பதிலிருந்து வேறு புதிய சொற்களையும் பிறப்பிக்கலாம், அவ் ஒரு தமிழ் மூலச்சொல் என்றும் வாதிடலாம்.

    அவ் - அவன் (ஆங்கிலம்: பொருள் அடுப்பு)
    அவ் - அவியேஷன் ( ஆங்: பொருள்: காற்றில் பறத்தல் என்றெல்லாம் தொடர்பு காண்பதுடன், இன்னும் பல மொழிச் சொற்களையும் இழுத்துவர வாய்ப்பு ஏற்படுகிறது அன்றோ?

    In Chinese, "ao" " அவ் " means:


    āo​ to boil / to simmer


    áo​ to cook on a slow fire / to extract by heating / to decoct / to endure

    The meanings are so close!

    (I have shown other Chinese words too, in some posts)


    நானும் ஒருபோது:

    இர் - இருள்
    இர் - இரவு
    இர் - இரா,
    இர் - இராமன்
    இர் - இரா - இராவண்ணன் - இராவணன்
    இர் - இராதை
    இர்- இரணியன்
    இர் - இரம்மியம் - ரம்யா (கருப்பழகி)

    என்று கூறியிருந்தேன். வேறு யாரும் இதையே கூறியிருந்தனரா என்பது தெரியவில்லை.

    பாணினிவழியும் சிறந்ததுதான் என்று ஒப்புவீரா?
    Last edited by bis_mala; 22nd March 2012 at 05:59 PM. Reason: further elaborate
    B.I. Sivamaalaa (Ms)

  5. #294
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    முதற்பொருளும் வழிப்பொருளும்

    ஒரு சொல்லுக்கு முதற்பொருளும் வழிப்பொருளும் உண்டென்பதை நாம் சிந்தித்தறிவது எளிதுதான். மேல் இடுகைகளில் பேசப்பட்ட "அவ்" (>அவி) என்பதன் முதற்பொருள் வெம்மையினால் மென்மையாகிவிடுதல் என்பதாக இருக்கலாம்.இதை வெந்துபோதல் என்கிறோம்.

    நாம் வேண்டுமென்றே வேகவைத்த அல்லது அவித்த ஒரு பொருளைக் "கெட்டுவிட்டது" என்று (at the end of the heating operation ) சொல்வதில்லை. அப்படிச் சொல்வதானால், கூடுதலாகவோ அல்லது பயன்படுத்த முடியாத அளவிற்குக் குழைத்தோ கருக்கியோ வேவித்திருக்கவேண்டும். ஆனால் சில பொருட்கள் வெம்மையினால் மாற்றமடைந்துவிட்டால், அவற்றைப் பயன்பாடு செய்ய இயல்வதில்லை. எடுத்துக்காட்டு: வெற்றிலை. அவிந்த வெற்றிலை போடுவதற்கு உதவாது என்பர்.

    ஆகவே:

    அவ் > அவி > அவிதல்

    என்பதில் வேறுபட்டது:

    அவ் >அவி > அவித்தல்.

    ஒன்று தன்வினை மற்றொன்று பிறவினை என்பது இலக்கணம்.

    கேடு என்று பொருள்படும் "அவம்" அவிதலில் (not aviththal) இருந்து தோன்றியதென்பதை அறியலாம். இஃது வழிப்பொருள். (derived meaning ), சீன மொழியில் அஒ "ao" or "av" என்பதன் வழிப்பொருள் "பொறுத்துக்கொள்ளல்" "தாங்கிக்கொள்ளல்" { endure} என்பதாம்,. இதுவும் பொருத்தமான வழிப்பொருள் தான்.அவிக்கும்போது சூடேற்றப்பட்ட பொருள், சூட்டைத் தாங்கிக்கொள்கிறதல்லவா?

    வெவ்வேறு மொழிகளில்,முதற்பொருள் ஒற்றுமை இருப்பினும் வழிப்பொருளில் இருப்பதில்லை. சிந்தனை வேறாகி,பயன்பாடும் வேறுபட்டுவிடுகிறது.
    Last edited by bis_mala; 23rd March 2012 at 09:24 PM. Reason: supply title
    B.I. Sivamaalaa (Ms)

  6. #295
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    aRu

    ஆறு > அறு?

    ஆறுபடை வீடு - அறுபடை வீடு.
    ஆறு தொழில் - அறுதொழில்.

    ஆறுதலை - அறுதலை

    அறுதலைப்பிள்ளை = முருகன்.

    மேற்கண்டவாறு ஆறு என்ற எண்ணுப்பெயர் அறு என்று குறுகும் என்பர்.

    இங்ஙனம் குறுகாமல் இயல்பாகவும் வரும்.
    (ஆண்டி யானதென்ன ஆறுமுகா" என்ற பாடல் வரி காண்க).

    ஐந்தொழில் உடையவராகக் கருதப்பட்ட அரசர், பின்னர் அறுதொழிலராய் உணரப்பட்டு நூல்களில் உரைக்கப்பட்டது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.இதை நாம் முரண்பாடென்று கருதவேண்டியதில்லை.
    A progress in analysis and thought or revision according to the situation then prevailing.
    Last edited by bis_mala; 8th April 2012 at 08:06 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #296
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    அறுதொழிலோர்

    Quote Originally Posted by bis_mala View Post
    ஆறு > அறு?

    ஆறுப................... பாடல் வரி காண்க).
    அறுதொழில் , இச்சொல்லுக்கு இருபொருள் கூறலாம். ஒன்று ஆறு தொழில்கள் என்பது. இன்னொன்று அறுவடைத் தொழில் என்பது. செய்யுளிலோ உரைநடையிலோ இச்சொல் வருமானால், முழுவதும் நோக்கியே பொருள்கூற வேண்டும்.

    பண்டைக்காலத்தில் அரசர் நீங்கிய பல்வேறு தொழிலுடையோருக்கும் ஆறு ஆறு தொழில்நடவடிக்கைகள் கூறப்பட்டன.
    எடுத்துக்காட்டாக,

    ஐவகை மரபின் அரசர் பாக்கமும்
    இருமூன்று மரபின் ஏனோர் பாக்கமும்

    (தொல்.புறத்.20)


    என்பது காண்க. தமிழ் மரபுப்படி அரசருக்கு ஐந்து வகை நடவடிக்கைகள் இருந்தன. ஏனையோருக்கு ஆறு நடவடிக்கைகள். இவை அவர்கள் பிழைப்புத் தொடர்பான நடவடிக்கைகள் ஆகும்.

    ஆகவே அறுதொழிலோர் என்பது அரசர் நீங்கிய அனைவரையும் குறித்தது. அம்பலவாணர் ஐந்தொழில் புரிபவர்; அரசரும் அவருக்கு இணையாக ஐந்தொழிலுடையவராய்க் கொள்ளப்பட்டார் போலும். சில நூல்கள் அரசருக்கும் ஆறு தொழில்கள் கூறும். (பிங்கலம் காண்க).

    அங்ஙனம் கொள்வதானால், அரசரும் ஏனோர்போல் அறுதொழில் உடையவரே என்க.
    ஐந்தொழில் உடையவராகக் கருதப்பட்ட அரசர், பின்னர் அறுதொழிலராய் உணரப்பட்டு நூல்களில் உரைக்கப்பட்டது ஒரு கருத்துவளர்ச்சியே ஆகும்.இதை நாம் முரண்பாடென்று கருதவேண்டியதில்லை,
    A progress in analysis and thought or a revision according to the situation then prevailing.

    aRuthozil - does it refer to six duties / activities or harvest activity? Which is appropriate in a given verse?
    எது பொருத்தம் என்று கண்டு பொருள்கொள்வது உங்கள் பொறுப்பாகட்டுமே.
    Last edited by bis_mala; 8th April 2012 at 08:12 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #297
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    ஐந்தொழில்:

    Ref: my last post in this thread.

    இறைவனின் ஐந்தொழில்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

    மறைத்தல் = மலம் நீங்கிய பற்றாளனின் ஆன்மாவினை இறைவன் தன்னுடன் இணைத்துகொள்ளுதல்.

    அரசனின் ஐந்தொழில்: ஓதல், பொருதல், உலகு புரத்தல், ஈதல், வேட்டல், ( 6th function: படைபயில்தல்.)

    ஓதலாவது: நூல்களை ஓதியறிதல்; பொரு > போர். உலகு புரத்தல் - மக்களைக் காத்தல்; ஈதல்-பிறருக்குத் தருதல் (தருமம்). வேட்டல்- நல்லன நிகழுமாறு வேண்டிக்கொள்ளுதல், வேள்வி செய்தல்.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #298
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நாடு > நாட்டவர்.
    எ-டு: வேற்று நாட்டவர்.

    நாடு > நாடவர்

    என்பது சரியா?

    உங்களுக்குத் தெரிந்தால் விடைதாருங்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #299
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala View Post
    நாடு > நாட்டவர்.
    எ-டு: வேற்று நாட்டவர்.
    =================================
    நாடு > நாடவர்

    என்பது சரியா?

    உங்களுக்குத் தெரிந்தால் விடைதாருங்கள்.
    இதென்ன, மிகவும் கடினமான கேள்வியா?
    B.I. Sivamaalaa (Ms)

  11. #300
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala View Post
    இதென்ன, மிகவும் கடினமான கேள்வியா?
    இதற்குப் பதில்:

    நாடு >நாட்டவர்

    என்று வரும்.

    நாடு > நாடவர் என்றும் வரும்.

    ஆனால், நாடவர் என்பது கவிதைகளில் வழங்கும் வடிவம்.

    இதற்கு எப்படி இலக்கணம் கூறுவீர்கள்?
    B.I. Sivamaalaa (Ms)

Page 30 of 39 FirstFirst ... 202829303132 ... LastLast

Similar Threads

  1. Evolution of Saivaism and it's development in Tamil Nadu
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 134
    Last Post: 23rd February 2017, 08:27 PM
  2. Replies: 27
    Last Post: 13th January 2017, 11:47 AM
  3. Is SC's verdict on reservation good for our development ?
    By Punnaimaran in forum Miscellaneous Topics
    Replies: 234
    Last Post: 5th January 2013, 04:15 PM
  4. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  5. Dams - Temples of doom or development?
    By jaiganes in forum Miscellaneous Topics
    Replies: 20
    Last Post: 8th April 2005, 08:51 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •