-
5th June 2011, 06:55 PM
#11
Senior Member
Seasoned Hubber
"உடைஇலை"
"உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்"
For the full stanza, please refer to:
Post 225, 31st May 2011 10:20 PM
http://www.mayyam.com/talk/showthrea...827#post692827
உடையிலை என்ற கூட்டுச்சொல்லைப் பார்ப்போம்.
பழங்காலத்தில், மனிதன் ஆடை நெய்ய அறியுமுன், இலைகளை உடையாக அணிந்திருந்தான்.
மேற்குறித்த புற நானூற்றுப் பாட்டு, உடையாக இடுப்பில் அணியப்படும் இலையின் அளவேனும் பிறருக்கு விட்டுக்கொடுக்காமல் தாமே ஆண்ட காவலால் சிறந்த
மன்னர் என்று பொருள் படுகிறது.
சீரை என்ற சொல் மரப்பட்டையைக் குறிக்கிறது. இதுவும் எடுத்துச்
ெசெதுக்கப்பட்டு இடுப்பில் அணியப்பட்டது.
சீரை - சீலை - சேலை
சீரை - சாரி தமிழ்ச்சொல் பாகத மொழிகள் வழிப் பரவியது.
தமிழின் பழமைக்கு இவைபோன்ற சொற்களும் சான்று
பகர்கின்றன
Last edited by bis_mala; 22nd June 2011 at 09:04 PM.
Reason: typo
B.I. Sivamaalaa (Ms)
-
5th June 2011 06:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks