-
19th January 2011, 12:28 PM
#221
Moderator
Platinum Hubber
Will try today. Meanwhile something I wrote yesterday:
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th January 2011 12:28 PM
# ADS
Circuit advertisement
-
19th January 2011, 05:17 PM
#222
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
றுங்கள் மனத்திலே உள்ளுணர்வு --- தங்கிற்றேல்
என்னதான் செய்திருப்பீர் சொல்லுவீர் இங்கெவரும்
அன்ன தறியும் படி.
தளை தட்டவில்லை (இதைப் போய் ஒரு விஷயமாக ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கொண்டிருக்கிறானே என்று நினைக்கவேண்டாம். எனக்கு இது பெரும் முயற்சியாக இருப்பதால் சொல்லத் தோன்றுகிறது!)
சாய்வு - incline என்ற பொருள் தான் பரிச்சயம்.
முதலடியில் பொழிப்பு மோனை (1-3 சீர்கள்) வருகிறது.
'உங்கள் மனத்திலே' என்று இரண்டாம் அடியை படிப்போமானால், உங்கள்/உள்ளுணர்வு என்று பொழிப்பு மோனை வருவதாகக் கொள்ளலாம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th January 2011, 05:19 PM
#223
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
சங்கப் புலவரின் வெண்பா என்று தெரிந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை ஒரு வெண்பாவாகப் புனைந்து சொல்லுங்கள்....எப்படி வருகிறதென்று பார்த்து அனைவரும் இன்புறுமாறு......!
சீரும் சிறப்புமுடை பாணர் கவிகுறையைச்
சீரும் அடியுமென கற்கும் சிறுவனிவன்
கூறத் தயங்குவதில் ஏதும் வியப்பிலையே:
யாரும் முழுதுணரா ஈசன் முனிந்ததனால்
கீரன் கதிநினைவில் உண்டு
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
19th January 2011, 09:32 PM
#224
Senior Member
Seasoned Hubber
"கவிகுறையை" (கூறுதல்) என்பதற்கும் "கவியில்குறை" (கூறுதல்) என்பதற்கும் பொருள் நுட்ப வேறுபாடு ஏதேனும் தென்படுகின்றதா?
மேலும் "கவிக்குறை" என்பதும் "கவிகுறை" என்பதும் ஒரே பொருள் தருமா?
மற்றவை நிற்க.
Just for discussion...
-
19th January 2011, 10:17 PM
#225
Senior Member
Veteran Hubber
உள்ளத்தில் உண்டு கள்ளமாய்க்கவிபாடும் கிடக்கை
வெள்ளத்தில் மிதக்கும் சந்தனத்தின் மரங்களுடன்
பள்ளத்தில் நிதம் வீழும் பாண்டியரின் சங்கக்கவியருவி
வெள்ளமொத்த உங்கள் கவி கண்டக்கால்.
தப்பிருந்தால் சொல்லவும். திருத்திக்கொள்வான் வெற்றிவிநாயகன்.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
20th January 2011, 04:01 AM
#226
Senior Member
Seasoned Hubber
good
Originally Posted by
jaiganes
உள்ளத்தில் உண்டு கள்ளமாய்க்கவிபாடும் கிடக்கை
வெள்ளத்தில் மிதக்கும் சந்தனத்தின் மரங்களுடன்
பள்ளத்தில் நிதம் வீழும் பாண்டியரின் சங்கக்கவியருவி
வெள்ளமொத்த உங்கள் கவி கண்டக்கால்.
தப்பிருந்தால் சொல்லவும். திருத்திக்கொள்வான் வெற்றிவிநாயகன்.
இது பாவினத்தில் அடங்கும் கவி.
நல்ல முயற்சி; நன்று.
-
20th January 2011, 04:32 AM
#227
Senior Member
Seasoned Hubber
meaning of chAyvu
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
chAyvu 1. slope, declivity, side of a hill; 2. bias, partiality; 3. defect, deficiency; 4. straitened circumstances; 5. going obliquely; turning aside, obliquity, divergency; 6. inclination, bent of mind; 7. death; 8. gradient
கவிதையில் வந்த "சாய்வு" என்ற சொல்லின் பொருள், மேலே தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளது.
-
20th January 2011, 04:46 AM
#228
Senior Member
Seasoned Hubber
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
இரு வேறு ஒன்றாமோ = இருவே றொன்றாமோ. தளை தட்டியது.
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
இருவேறு, ஒன்றாமோ என்பவை, ஒருபொருளனவாம். கூறியது கூறல் எனலாமோ? You may try explaining.
-
20th January 2011, 12:17 PM
#229
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
"கவிகுறையை" (கூறுதல்) என்பதற்கும் "கவியில்குறை" (கூறுதல்) என்பதற்கும் பொருள் நுட்ப வேறுபாடு ஏதேனும் தென்படுகின்றதா?
மேலும் "கவிக்குறை" என்பதும் "கவிகுறை" என்பதும் ஒரே பொருள் தருமா?
மற்றவை நிற்க.
Just for discussion...
கவிக்குறை என்றுதான் வந்திருக்கவேண்டும்.
கவியில்குறை மேலும் சிறப்பான சொல். கவியின் (கவிஞரின்) குறை என்ற பொருள்படுபடி இருப்பதை மாற்றி கவியில் குறை என்று தெளிவாக்குகிறது.
மற்றபடி மொத்த உள்ளடக்கமும் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. 'குறைகண்டவரை பொசுக்கிய இறையனாரும் சங்கப்புலவர் தானே, எதற்கு வம்பு' என்று பொருள்படும்படி எழுத முயன்றேன். சரியாக வரவில்லை.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
20th January 2011, 12:23 PM
#230
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
ஈர்ப்பும் பரிவும் இருவேறு ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியும் தான்
இரு வேறு ஒன்றாமோ = இருவே றொன்றாமோ. தளை தட்டியது.
ஆம் அதனால் தான் பிரித்து எழுதினேன்.
இருவேறே - என்று மாற்றினால் தட்டாது.
இறுதி அசை (அசைச்சீர்), தாம் என்று முடிதல் வேண்டும்.
தான் , ஒருமை; தாம் - பன்மை.
ஒ..நன்றி. திருத்திக்கொள்கிறேன்.
Originally Posted by
bis_mala
இருவேறு, ஒன்றாமோ என்பவை, ஒருபொருளனவாம். கூறியது கூறல் எனலாமோ? You may try
explaining.
இல்லை.
ஒன்றா(கு)மோ என்பது "ஆர்ப்பையும் அமைதியையும்" பற்றிய சொல்
உரைநடையில் சொல்வதானால்:
ஆர்ப்பும் அமைதியும் ஒன்றாகுமா? (அதுபோல தான்) ஈர்ப்பும் பரிவும் இரு வேறு (உணர்ச்சிகளே).
ஈர்ப்பும் பரிவும் இருவேறே ஒன்றாமோ
ஆர்ப்பும் அமைதியுந் தாம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks