-
9th December 2010, 07:28 PM
#211
Senior Member
Seasoned Hubber
meaning of certain words
இனி, மேற்கண்ட மூன்று வரிகளில் ஆக்கியோன் பயன்படுத்திய சில சொற்கள்:
சேகரன் = சேகு+அரன்.
செம்மை நிறமுடையோனாகிய சிவன்.
சே+கரன் = சிவந்த கரங்களை உடையோன்.
சே = சிவப்பு.
சேகரன் என்பது சந்திர சேகரன் என்ற சொல்லின் சுருக்கமாகவும் கொள்ளக்கூடும். தமிழில் பிறைசூடி என்பதாம்.
சேகரன் : முன்னிலை அல்லது முதன்மை வகிப்பவன் என்பது அகராதிப் பொருள்.
சேகரி+அன் = சேகரன் என்று கொண்டு, மழைமுகில் நிலத்தினின்றும், கடலினின்றும் நீரைச் சேகரித்துக்கொண்டு, பெய்கிறது என்று சொல்வது புதுமை. (Personification).
சகசை என்பது சகஜா என்ற சங்கதச் சொல்லின் திரிபு.
சக = உடன்;
ஜா = பிறந்தவள்.
வனஜா, கிரிஜா, பத்மஜா என்பவை போல.
-
9th December 2010 07:28 PM
# ADS
Circuit advertisement
-
13th December 2010, 01:10 PM
#212
Moderator
Platinum Hubber
Re: sister of ocean.
Originally Posted by
bis_mala
சாகரம் சார்சகசைச் சாற்று.
சாலைகள் கடலின் சகோதரியாய்விட்டன என்று கற்பனை
செய்தவாறு.
சகசை - எனக்குப் புதுச்சொல். நன்றி.
சேகரன் மாரிமுகில் சேர்மறுகில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமிலை சாலையது
சாகரம் சார்சகசை சாற்று.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
13th December 2010, 03:08 PM
#213
Senior Member
Seasoned Hubber
சாகரம் சார்சகசை சாற்று என்றால், கடலின்பால் சார்புடைய உடன்பிறப்பு (போன்றவள்) (என்று) சொல்வாயாக!
என்று பொருள்.
சாகரம் சார்சகசைச் சாற்று என்றால், கடல் சார்ந்த உடன்பிறப்பு, "முழுமை(யாக)" என்று பொருள்.
(1)சால்+து - முழுமையுடையது, மிகுதியானது,
நிறைவானது என்பது.
(2)சாற்று என்ற வினைச்சொல்லுக்குச் "சொல்வாயாக" என்று மட்டுமே பொருளாம்.
-
13th December 2010, 03:56 PM
#214
Senior Member
Seasoned Hubber
for your scanning
இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
Please examine this veNpaa: ethukai, mOnai, thaLai and rhythm and let's have your critical appreciation of the stanza with regard to these and such other aspects.
Thanks P_R for your appreciation.
-
31st December 2010, 04:27 PM
#215
Moderator
Platinum Hubber
Re: for your scanning
Originally Posted by
bis_mala
இரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானும் இம்மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
சிறு மாற்றம் செய்து அலகிட்டேன்
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
அலகிட்டால்..
1- நேரசை
2- நிரையசை
22-12-12-11
221-111-12-11
22-12-12-11
21-22-1
தளைகள்
1ல் அடி: விளமுன்நேர், விளமுன்நேர், விளமுன்நேர்
1ல் அடிக்கும் 2வது அடிக்கும்- மாமுன்நிரை
2வது அடி- காய்முன்நேர், காய்முன்நேர், விளமுன்நேர்
2வது அடிக்கும் 3வது அடிக்கும் - மாமுன்நிரை
3வது அடி - விளமுன்நேர்,விளமுன்நேர், விளமுன்நேர்
3வது அடிக்கும் 4வது அடிக்கும் -மாமுன்நிரை
4வது அடி - மாமுன்நிரை, மாமும்நிரை
அடி எதுகை
இர-பர, விரி-அரி
சீர்மோனை
பரந்த-பெண்பாலைப் பாசமென்
விரிகடல்-வானுமிம்
ஓசை
1,3 & 4 ம் அடிகள் ஒரே ஒலியில் இருக்கின்றன
கடைசி வரி 21-22-1 என்று பிரித்திருந்தாலும் அரியது ணிந்துவாழ் வார் 22-12-1 என்றும் பிரிக்கலாம். விளமுன்நேர், விளமுன்நேர் என்றாலும் தளை தட்டாது. 'நாள்' என்ற ஈற்றுச்சீர் வரை 1,3 போலவே ஓசை நயம் வருகிறது.
இரண்டாவது அடியில் அப்படி இல்லை. அதை கொஞ்சம் tweak செய்து பார்க்கலாம்.
செய்ய முனைந்திருப்பேன். ஆனால் எனக்கு பொருள் சரியாக விளங்கவில்லை
பொருள்
இரந்துகொண்டு் ஒண்பொருள் செய்வல் என்பானும்
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்
விரிகடல் ஊடு செல்வானும் இம்மூவர்
அரிய துணிந்து வாழ்வார்.
கடைசி அடி: மேற்பட்ட மூன்று செயல்களை செய்பவர்கள் துணிந்து வாழ்வது அரிது
விரிகடல் ஊடு செல்வான் - one who dares to seek his fortune in the high seas
பரந்துகொண்டு ஒழுகும் பெண்பால் - women who share affections with many ; unchaste அத்தகைய பெண்களை விரும்புபவன் (பரத்தை என்ற சொல்லுக்கு இது தான் வேரா?)
இரந்துகொண்டு ஒண்பொருள் செய்வல் - பிச்சை எடுத்து பொருள் சேர்ப்பவன். (ஒன்பொருள்?)
குழப்பம் என்னவென்றால் முதலிரண்டு செயல்கள் மோசமானவையாகவும், மூன்றாவது நற்செயலாகவும் இருக்கிறது. அதனால் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று சந்தேகம்
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st January 2011, 02:06 AM
#216
Senior Member
Seasoned Hubber
meaning
1. பிச்சை வாங்கிப், பணக்காரன் ஆவது அரிது;
2.பரத்தையிடம் பாசம் ஏற்படுவது அரிது; (அவள் பணத்துக்கு நடிப்பவள். பாசம் பணத்தின்மேலதாம்.)
3.கடலூடு சென்று மீள்வது அரிது;
அரிய இவற்றுள் ஈடுபடுவோர், துணிவு கொள்ளத்தகாத இடத்துத் துணிவு கொள்கிறவர்கள்.
அங்ஙனம் துணிதல் ஆகாது என்பதாம்.
இதுவே இதன் பொருள்.
பிச்சை வாங்கியே பணக்காரன் ஆகிவிடலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது; (ஆகவே உழைத்துப் பணம் ஈட்டு);
பரத்தை உண்மைப் பாசம் தருவாள் என்று கனவு காண்கிறாயா? அது நடக்காது; (ஆகவே கற்புடைய மங்கையை மணந்து வாழ்க )
பெருங்கடல்மேல் பயணம் செய்து மீண்டுவிடலாம் என்று நினைக்கிறாயா? அது நடக்காது; (ஆகவே பயணம் போனால், உயிருக்கு ஆபத்து உண்டாகும்படி போகாதே).
நடக்காது என்ற ஒவ்வொன்றும் ஒருகால் நடக்கலாம்; அது உனக்கு வாய்க்கும் என்பது என்ன திண்ணம்?
நல்ல உறுதியான பயன் விளையத்தக்க காரியங்களில் ஈடுபடு என்பது அறிவுரை
Originally Posted by
P_R
இரண்டாவது அடியில் அப்படி இல்லை. அதை கொஞ்சம் tweak செய்து பார்க்கலாம்.
செய்ய முனைந்திருப்பேன். ஆனால் எனக்கு பொருள் சரியாக விளங்கவில்லை Embarassed
You may try "tweaking"....now. Let our readers enjoy!
HAPPY 2011 TO ONE AND ALL!!
-
5th January 2011, 12:21 PM
#217
Moderator
Platinum Hubber
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரத்தையர் அன்பினை பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
8th January 2011, 10:19 PM
#218
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
P_R
இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரத்தையர் அன்பினை பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
அந்தப் பாடல் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் என்ற நூலில் உள்ளதாகும்.
சங்க- (அல்லது சங்கம் மருவிய காலத்து )ப் புலவர் நல்லாதனார் இயற்றியது.
புலவர் ஒரு வகைச் செப்பலோசையில் பாடியதை, மிகத் திறமையாகவே வேறொரு வகைச் செப்பலோசையில் எழுதியுள்ளீர்கள்.
என் பாராட்டுக்கள்.
-
10th January 2011, 10:08 AM
#219
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
அந்தப் பாடல் நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் என்ற நூலில் உள்ளதாகும்.
நான் ஏதோ இங்கு பயிற்சிக்காக நீங்கள் தந்தது என்று நினைத்தேன்.
Originally Posted by
bis_mala
என் பாராட்டுக்கள்.
நன்றி
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
10th January 2011, 09:37 PM
#220
Senior Member
Seasoned Hubber
சங்கப் புலவரின் வெண்பா என்று தெரிந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை ஒரு வெண்பாவாகப் புனைந்து சொல்லுங்கள்....எப்படி வருகிறதென்று பார்த்து அனைவரும் இன்புறுமாறு......!
சங்கப் புலவரின் சாய்வில்லா வெண்பாவென்
றுங்கள் மனத்திலே உள்ளுணர்வு --- தங்கிற்றேல்
என்னதான் செய்திருப்பீர் சொல்லுவீர் இங்கெவரும்
அன்ன தறியும் படி.
You may also scan, detect faults and comment freely on the above veNpaa!!
Bookmarks