-
6th December 2010, 04:57 PM
#201
Moderator
Platinum Hubber
மோனை என்பது நயம் கருதி சேர்க்கும் ஒன்று தானா, அல்லது கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்றா?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th December 2010 04:57 PM
# ADS
Circuit advertisement
-
6th December 2010, 05:23 PM
#202
Senior Member
Seasoned Hubber
you chose Asiriyam rhythm
கவிதைக்கு அழகு எதுகை மோனை எல்லாம். அவை இல்லாமல் எழுதினால் செந்தொடை. தமிழில் நிறைய எதுகை மோனைகள் கிடைக்கின்றன. வரட்சி ஒன்றுமில்லை.
கருத்துக் கெடவருமானால், மோனை இல்லாமலும் எழுதலாம்.
காய்ச்சீர்கள் வரும் வெண்பா கவர்வதில்லையா?
நீங்கள் ஏற்றுகொண்டது இயற்சீர்களால் மட்டும் ஆன வெண்பா.
The rhythm you proposed, so to speak, is closer to Asiriyappaa.
-
6th December 2010, 05:47 PM
#203
Moderator
Platinum Hubber
பிடிக்காது என்றில்லை.
இயற்சீர்கள் மட்டுமே ஈற்றடிக்கு ஒத்ததாய் மாற்ற நினைத்து அப்படியே வந்துவிட்டது. Not the most imaginative changes on my part.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th December 2010, 06:22 PM
#204
Moderator
Platinum Hubber
One for the rains in Chennai today
சேகரன் மாரிமுகில் சந்தடியில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமி்லை சாலையது
சாகர மானது பாரு
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th December 2010, 07:21 PM
#205
Senior Member
Seasoned Hubber
synonyms
Originally Posted by
P_R
One for the rains in Chennai today
சேகரன் மாரிமுகில் சந்தடியில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமி்லை சாலையது
சாகர மானது பாரு
கன்னடக் கவிஞர் போல -பேரு, ஊரு, ஆரு, என்பனவே பிடித்திருக்கும் போலும்.
பெங்களூர் > பெங்களூரு!!
சரி, வழி - மார்க்கம் என்பன ஒரு பொருட் சொற்கள். இதைக் "கூறியது கூறல்" என்பர். இதைத் தமிழாசிரியர் ஏற்பதில்லை. வழி - மார்க்கம் இவற்றுக்கு வெவ்வேறு பொருள் இருப்பதாகக் காட்டினால் மட்டுமே ஒத்துக்கொள்வர்.
Try to explain that they are not synonymous here....
-
6th December 2010, 07:47 PM
#206
Moderator
Platinum Hubber
Originally Posted by
bis_mala
கன்னடக் கவிஞர் போல
பாரு -guilty as charged. உங்கள் இடுகையைப் படிக்கும் வரைத் தோன்றவில்லை.
வழிமார்க்கம் என்ற சொற்பிரயோகம் பேச்சுவழக்கில் உண்டு. பாதை என்ற literal sense இல் அல்ல. "இந்த பிரச்சினைக்கெல்லாம் வழிமார்க்கம் ஏதாவது ஆண்டவன் தான் காட்டணும்" என்பது போல.
ஆக இது கூறியது கூறல் தான், என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் பேச்சுவழக்கில் உள்ள இந்த பிரயோகத்தை literalஆக பயன்படுத்தி புன்முறுவல் ஈட்ட முயன்றேன்.
இன்னொரு சறுக்கல்: ஈற்றடியில் சாகரத்துக்கு சரியாக சீர்மோனையும் சிக்கவில்லை
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
6th December 2010, 09:01 PM
#207
Senior Member
Seasoned Hubber
vaNNam
Originally Posted by
P_R
Originally Posted by
bis_mala
கன்னடக் கவிஞர் போல
............... தோன்றவில்லை.
வழிமார்க்கம் ............. ஏதாவது ஆண்டவன் தான் காட்டணும்"
.................
ஈற்றடியில் சாகரத்துக்கு சரியாக சீர்மோனை
சென்னைத் தெருக்களெல்லாம் ஆறுகள்போல் ஆகிவிட்ட காட்சிகளைத் தொலைக்காட்சியில் மலேசியாவில் கண்டோம். அந்தோ பரிதாபம்!
வழிமார்க்கத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிடுவோம்.
உங்கள் பாடலில், ஒன்றுதவிர ஏனைச் சீர்களிலெல்லாம் முதலெழுத்து நெடிலாக வந்துள்ளது. ஆகவே பாவில் நெடில் வண்ணம் பயில்கின்றது. தொல்காப்பியர் காலத்தில் 20 வண் ணங்கள். பிறகாலத்தில் பல.
சந்தடி என்ற சொல்லை எடுத்துவிட்டு, நெடில் முதலாகிய ஒரு சொல்லை/சீரைப் புகுத்தி, முற்றும் நெடில்வண்ணம் பயிலும்படி செய்யுங்கள் பார்க்கலாம்.
Note: cantadi 1. , tumult, uproar; 2. dense crowd
or சந்து+அடி?
-
6th December 2010, 09:53 PM
#208
Senior Member
Seasoned Hubber
sister of ocean.
சாகரம் சார்சகசை ் சாற்று.
சாலைகள் கடலின் சகோதரியாய்விட்டன என்று கற்பனை
செய்தவாறு.
பிடித்திருந்தால் ஈற்றடியை அப்படி மாற்றிகொள்ளுங்கள்.
சார் = சார்ந்த; சகசை = அக்காள் அல்லது தங்கை.
This may induce some further imagination into it. If you prefer....
-
6th December 2010, 10:06 PM
#209
Senior Member
Seasoned Hubber
another plausible explanation...
இன்னொன்று:
வழி மார்க்கம் = நீர் வழிந்துவிடுவதற்கான மார்க்கம் (வழி - வடி) என்றும் .....................
-
9th December 2010, 05:58 PM
#210
Senior Member
Seasoned Hubber
a suggestion
சேகரன் மாரிமுகில் சந்தடியில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமி்லை சாலையது
சாகர மானது பாரு
சேகரன் மாரிமுகில் சேர்மறுகில் சோர்ந்திடவே
வாகனம் போகவழி மார்க்கமிலை சாலையது
சாகரம் சார்சகசை சாற்று.
எல்லாம் நெடில் முதலாக வந்து யான் கூறிய வண்ணம் பயிலும்.
சே, மா, சே, சோ.
வா, போ, மா, சா,
சா, சா, சா! என்று முதலெழுத்துக்களை நீட்டிப் படிக்கவும்.
சேர் மறுகு = சாலையுடன் சென்று சேரும் சந்து.
சேகரன் = சிவபெருமானை யுடைய; மாரி = மாரியம்மை அனுப்பிய; முகில் = மேகமானது; சேர் மறுகில் = (சாலையுடன் இணையும்) சந்தில்; சோர்ந்திடவே= மழைபொழியவே; வாகனம் = வண்டிகள்; போக = செல்வதற்கு; வழி மார்க்கமிலை = நீர் வழிந்திட மார்க்கம் இல்லாமையால்; சாலை அது = அம் மறுகு சேரும் சாலை; சாகரம் = கடலினை; சார் = சார்ந்ததாகிய; சகசை = (அக்கடலின்) சகோதரி ஆய்விட்டது;; சாற்று = இதைச் சொல்வாயாக. என்று பொருள் உரைக்க.
இது கவிஞர் எண்ணிய பொருளின் சற்றே வேறுபடுவதாம்.
Bookmarks