-
21st March 2007, 07:43 PM
#71
Senior Member
Veteran Hubber
சங்கேதப் புகலிடம்.
செல்லக் குயில்களுக்கு உற்ற ஆலமாய்
வாயாடி வீணைகளுக்கு வக்கனை மேடையாய்
தட்டச்சு தாரகைகளின் சுவடேந்தும் சத்திரமாய்
இலட்ச தீபங்களில் தனித்ததொரு சுடரே!
நீ சமயங்களில் வால்நாயாகிறாய்
தருணங்களில் ஞான ஆசானாகிறாய்!
கண்காணா சிநேகிதங்களுக்கு மத்தியஸ்தன் நீயா?
வினையாட்டுப் பூசல்கார இயந்திரத் தீயா?
ராகம் ததும்பும் கானகமே
மோகம் படரும் ஆலயமே
கலைகள் களிக்கும் அரங்கமே
உன் நாமத்தில் அத்தனையும் சங்கமமே.
நீ கருத்துகளின் கூடரமோ
வழக்காடுமன்ற வழித்தோன்றலோ
மௌன ஒலிப்பெருக்கியோ
கோடிப்பூ பூங்காவனமோ
ரீங்கார ரங்கராட்டினமோ
அதுஇதுவென வரையறுக்கா ஓரொளியோ
சகலத்தின் சம்பந்தமாகிவிட்ட பேரொளியா
கேள்விகளின் கட்டிடமா
விடைகளின் வெட்டி மடமா
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயிர்திணையினும் உயர்திணை இவன்!
நுழைந்தால் அண்டம்
நுழையாவிடின் தண்டம்-
என் மையம்!
-
21st March 2007 07:43 PM
# ADS
Circuit advertisement
-
21st March 2007, 09:24 PM
#72
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
21st March 2007, 09:59 PM
#73
Senior Member
Diamond Hubber
Originally Posted by
VENKIRAJA
அஃறிணையென்று யாரிவனை சொன்னது?
உயிர்திணையினும் உயர்திணை இவன்!
நுழைந்தால் அண்டம்
நுழையாவிடின் தண்டம்-
என் மையம்!
Anbe Sivam
Bookmarks