Page 49 of 51 FirstFirst ... 394748495051 LastLast
Results 481 to 490 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #481
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    இறைவா நீ உலகைக் காப்பாற்று.....

    மழை வந்து விட்டால்
    அதில் மடியும் எறும்புகள் எத்தனை?
    பிழைத்துப் பின்தோன்றும் எறும்புகள்
    எங்கு ஒளிந்திருந்தனவோ?

    இவற்றின் இனம் அழிந்துவிடாமல்,,,,,,,,,,,,,,

    தோற்றம் பலப்பல!
    அழிவும் பலப்பல!

    தான் தோற்றுவித்தவை பல அழிதலில்
    இயற்கை அன்னைக்கோ ஏது கவலை?

    என்றும் போல்,
    பகலவன் தோன்றுவான், மறைவான்!

    மனிதனும் அப்படித் தானோ?

    கெண்டிங் மலையில் பேருந்து கவிழ்ந்து
    இறந்தோர் பலர்.

    எனக்குக் கவலை
    இயற்கைத்தாய்க்கு கவலை ஏது?

    இறைவா நீ உலகைக் காப்பாற்று.....
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #482
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    மரித்தல்

    மரித்தல் எனவொன்றே இல்லையென்றால் இன்பம்

    விரித்த புவிவாழ்வில் தெய்வத்தினைக் கூர்ந்து

    குறித்த எண்ணங்கள் மாந்தனுக்கே இல்லாகி

    வெறித்த தன்மையே விரிதலைக் கோலமே

    This was written some years back.
    Last edited by bis_mala; 26th August 2013 at 05:44 PM. Reason: ending made more palatable
    B.I. Sivamaalaa (Ms)

  4. #483
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முதல் அந்தாதி முயற்சி...!

    எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
    சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
    வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
    கண்ணன் கழல்களே காப்பு

    காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
    ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
    பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
    காத்துத்தான் நின்றவன் காண்..

    காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
    தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
    விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
    குழவிக் கிணையேது சொல்

    சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
    துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
    அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
    பள்ளிப் பருவத்தில் பார்..

    பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
    ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
    விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
    துறுதுறு கண்ணனவன் தான்..

    கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
    திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
    பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
    தொட்டனர் சுட்டியின் தாள்

    தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
    மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
    தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
    வாயில் தெரிந்த வுலகு..


    உலகங்கள் சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
    கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
    அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
    சின்னஞ் சிறுகண்ணன் தான்

    சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
    நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
    கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
    பின்னலைப் பின்னுவான் பார்..

    பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
    ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
    கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
    விண்ணினைக் காட்டுவா யா..
    Last edited by chinnakkannan; 27th August 2013 at 04:49 PM.

  5. #484
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Well done well done!

    Your anthaathi is v.gd.

    When was this composed chi ka avlE!
    B.I. Sivamaalaa (Ms)

  6. #485
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்றைய முன் தினம்- அதே 27ம் தேதி லஞ்ச் டயத்தில் 40 நிமிடத்தில் எழுதியது..எழுத 30 கரெக்ட் பண்ண 10..ஃபேஸ்புக்கில் போட்டு விட்டு இங்கு போடுகையில் பார்த்தால் முதல் பாட்டின் இறுதி வரி கழலே காப்பு என தவறாக எழுதியிருந்தேன்..அச்சச்சோ என நினைத்துப் பின் மாற்றிவிட்டேன்..!

  7. #486
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒன்று மறந்துவிட்டேன்.மிக்க நன்றி தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு

  8. #487
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    யாது வரைந்துள்ளார் யாதவக் கண்ணனைத்
    தீதகலப் போற்றும்சின் னக்கண்ணன், பாதகமோ
    யாதுமில்லை! பார்ப்போம்! யமுனா நதிதன்னின்
    தீரமில்லை ஆகையால் தூரமில்லை என்றுவர
    செந்தா மரைபோலும் அந்தாதி கண்மலர்ந்து
    வந்தேனை வாவென்று கூவி வரவேற்க
    உள்ள மகிழ்வினை உள்ள படியுரைத்தேன்
    தெள்ளு தமிழ்ப்பாட்டி னால்

    working now. not enough time to scan. thaLai chari paaththuvittu, innum ezuthungaL.
    Last edited by bis_mala; 29th August 2013 at 06:14 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #488
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆல விழுதாய் அழகாய்ப் பதிந்தது
    மாலாவின் பாராட்டுதான் ஆம்

    நன்றி சிவ மாலா..

  10. #489
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Chika.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #490
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி வெங்க்கிராம்..

Page 49 of 51 FirstFirst ... 394748495051 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •