-
11th January 2013, 05:10 PM
#441
Senior Member
Seasoned Hubber
கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?
-
11th January 2013 05:10 PM
# ADS
Circuit advertisement
-
6th February 2013, 04:31 PM
#442
Senior Member
Seasoned Hubber
Ghost...
ஒற்றைக்கால் பேயொன் றுளதாமே பள்ளிக்குள்
வெற்றுரையென் றெண்ணாதீர் வீணாக -- உற்றுப்பார்த்
தீரோ அதுகாண்பீர் தீரவே சிந்தித்து
வேறோசொல் வீரும் கருத்து.
GHOST PICTURE OF KANDY SCHOOL GIRL CAPTURED ON CAMERAS:
http://i1125.photobucket.com/albums/...io/page-33.jpg
Gossip Lanka News [English Edition]: INCIDENTS AFTER RAIN
A ghost picture of a Kandy School girl who had one leg amputated after an accident captured on cameras
A few weeks back, June 30th to be precise a hall of a famous Kandy High school had been taken as the venue to hold a passing out parade of nurses. Usually there are two or three halls of High schools in Kandy ................................ts about the entire story could be read from see online edition:
The quote has been abridged to save space.
Last edited by bis_mala; 14th February 2013 at 09:01 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
14th February 2013, 09:22 PM
#443
Senior Member
Seasoned Hubber
வானிற் பதிந்தபடி..................
These lines were lost whilst editing but now reconstructed.
வானிற் பதிந்தபடி வந்த நிலாமகளும்
தானும் கடலனைக் காதலித்தாள் --- ஏனோ
ஒருமை கடைப்பிடித் தொப்ப ஒழுகாமல்
இருமை இறைகொண் டனள்.
Note:
நிலாமகட்கு யார் பதி (கணவன்) என்றால், அவள் பதிந்திருக்கும் வானமே பதி. ஆகவே வானிற் பதிந்தபடி எனப்பட்டது. கடலன் = கடல். ஆண்பாலில் கூறப்பட்டது. ஒருமை கடைப்பிடித்தல் = ஒரே காதலனோ கணவனோ உடைய நிலை. இருமை நெறியாவது இரு கணவர்களோ (காதலர்களோ) உள்ள நிலை. (bigamous state).
polygamy - பல்கணவம்
இறை என்பது இறைவனையும் கணவனையும் குறிக்கும் சொல். இங்கு கணவனைக் குறிப்பது.
Last edited by bis_mala; 14th February 2013 at 09:35 PM.
Reason: n
B.I. Sivamaalaa (Ms)
-
14th February 2013, 09:24 PM
#444
Senior Member
Senior Hubber
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!
-
14th February 2013, 10:02 PM
#445
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!
வந்ததே வந்தீர்நல் வண்ணப்பாட் டொன்றுநான்
தந்துளேன் செந்தமிழில் என்றிங்கே --- சிந்தையுறு
சொல்லுடன் வந்து சுழல்காற்றாய் மேலுலவி
செல்லுமதே சீர்சான் றது.
-
14th February 2013, 10:38 PM
#446
Senior Member
Senior Hubber
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..
Last edited by chinnakkannan; 15th February 2013 at 08:36 AM.
-
15th February 2013, 08:14 AM
#447
Senior Member
Seasoned Hubber
on human rights மனித உரிமைகள்
மனித உரிமைகள் மாய்விலாக் கோளில்
இனிது மகிழ்பொங்க ஏயும்---கனிவுநாள்
என்றென் றிருந்தேங்கும் ஏதென்ப(து) இல்லாகி
நன்று பிறந்தால் நலம்.
-
15th February 2013, 08:56 AM
#448
Senior Member
Seasoned Hubber
On women's rights பெண்கள் உரிமைகள்
பெண்கள் உரிமைகள் பேணலுற் றிப்புவியில்
கண்களாய்ப் போற்றுபொற் காலமொன்று --- பண்களிலே
பாடல்மட் டின்றித்தான் பட்டிதொட்டி யாவினிலும்
கூடிவர ஆடிடுவம் கூத்து.
-
15th February 2013, 09:17 AM
#449
Senior Member
Seasoned Hubber
மறுமுயற்சி செய்யுங்கள்.
Originally Posted by
chinnakkannan
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..
உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.
-
15th February 2013, 11:04 AM
#450
Senior Member
Senior Hubber
தீண்டியதும் சுட்டதே தீ என இங்கே இட்டது உண்மை தான்..முக நூலில் இடும்போது கொஞசம் மாற்றினேன்..கடைசியாய் எழுதிய வரியை இடாததால் தான் இந்தக் குழப்பம்..
“பின்ன பரிசு எதுவும் கொடுக்கவில்லையே நான்..!”
Originally Posted by
bis_mala
உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.
Bookmarks