Page 43 of 51 FirstFirst ... 334142434445 ... LastLast
Results 421 to 430 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #421
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கட்டை யாக்கையிலே - ஒரு
    .....................................சுகமும் மாறாதே


    எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
    வழியே மிதக்கும் வலி..

    நல்ல பாடல் சிவ மாலா..

    நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...
    Hope I do not have to get this toe nail extracted..

    பழைய தாள்களை (பேப்பர்) ஒரு அலமாரியின் மேலடுக்கி, அதன்மேல் ஒரு கட்டையை வைத்துவிட்டாள் பணிப்பெண். காகிதம் (edge) தெரிகிறது. தலை உயரத்துக்குமேல் இருந்த கட்டை தெரியவில்லை. தாள் தேவை படுகிறதென்று ஒரு தாளை இழுக்கப்போய், கட்டை வந்து காலில் (நகத்தின்மேல்) விழுந்துவிட்டது.

    நொண்டி நொண்டி நடக்கும் காலம் வந்தால் , அப்படித்தான் நடக்கவேணும்...என்ன செய்வது, வலியை அனுபவிக்கவேண்டியதுதான்.

    உங்கள் கவிதை மிகவும் நன்று.

    நோவிற் கிடந்தாலும் - கால்
    நொண்டி நடந்தாலும் - ஒரு
    பாவில் கவிந்துமனம் - வலி
    மறந்தே பறந்திடுதே!

    nanRi nanRi
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வலி நிவாரணி - பெய்ன் கில்லர்ஸ் எடுத்து க் கொண்டீர்களா.. கொஞ்சம் பின் விளைவுகள் வந்தாலும்வ்லி நிவாரணி உட்கொள்வது கொஞ்சம் ரிலீஃப் ஆக இருக்கும்..

  4. #423
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Paracetimol.

    Pain relieving spray.

    இப்போது ஓய்வு!


    I have taken one tablet... thanks. Pain is now lessened.
    Last edited by bis_mala; 28th July 2012 at 11:34 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #424
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பணிப்பெண் அன்பும் சேவையும்.

    Quote Originally Posted by bis_mala View Post
    P..................d.
    a truly affectionate maid....

    என்கால் தன்மடி மீதுவைத்தாள்
    இனிதாய்த் தடவி வேதுவைத்தாள்
    தன்கால் மொத்தடி பட்டதுபோல்
    தான்மனக் கவலை உற்றுவிட்டாள்.

    சின்னக் கண்ணனும் எனைத்தேற்ற
    சேர்ந்தே பெண்ணவள் எனைப்போற்ற.
    அன்னை மூவராய் ஆனதினால்
    அதைத்த நோவதும் போனதன்றோ!

    அன்பினர் யாரும் எட்டநின்றால்
    ஆன வலியெலாம் கிட்டவந்து
    பண்பில் எருமைபோல் முட்டநிற்கும்
    அன்பினர் குறுகிடில் விட்டகலும்

    இரவில் வலியும் ஏறிடுமோ
    என்பால் தோழியும் கூறிடுவாள்
    வருவது வரட்டும் என்செய்வது
    வைத்தியம் என்பது பின்செய்வது


    வேது = இளஞ்சூடு கொடுத்தல்.
    மொத்தடி - மொத்து அடி.
    அதைத்த= வீக்கம் ஏற்பட்ட.
    நோவு = வலி. நோவு அதும் = நோவு அதுவும்
    கிட்ட - பக்கத்தில். அருகில்.
    பண்பில் - பண்பு இல் - பண்பு இல்லாத
    அன்பினர் - அன்பு உடையோர்.
    Last edited by bis_mala; 29th July 2012 at 06:24 PM. Reason: presentation
    B.I. Sivamaalaa (Ms)

  6. #425
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பிழைப்புக்கு வேட்டுவைத்தால்,,,,,,,

    காட்டை அழித்துவிட்டார் -- அந்தக்
    காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே
    கூட்டமாய் வந்தனவே -- அவை
    கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின்
    ஓட்டை அகற்றினவே -- கீழே
    ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி
    ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை
    அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!

    இருப்பிடம் போனதென்று ---அதில்
    ஏற்பட்ட கோபத்தின் பாற்பட்டிவ் வண்ணமாய்
    தெருக்களில் கூரைகளில் -- ஏறித்
    திரண்டதோர் சேட்டைகள் செய்தனவோ இவை!
    பொறுப்புடன் செய்தக்கதோ --பிடித்துப்
    போக்கிட வேண்டுமே காட்சிசேர் காப்பகம்!
    பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
    பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ!
    B.I. Sivamaalaa (Ms)

  7. #426
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கால்வலி முழுக்கக் குணமாகி விட்டதா.. இப்பொழுது தான் உங்கள் பாடல் பார்த்தேன்.. நல்ல பணிமகள்..



    ”பிழைப்புக்கு வேட்டுவைத்தால் --வந்த
    பீதியில் போரிடல் யார்க்கும் இயல்பன்றோ! -” நல்ல வரிகள்..

  8. #427
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    உங்களுக்கும் குணமடைய வாழ்த்திய ஏனையோருக்கும் நன்றி.

    பணிமகள் என்ற சொல்லைப் பயன்படுத்திய தங்களையும் பாராட்டவேண்டும். நல்ல தமிழ்.

    கால் நன்று. நகமும் தப்பித்துக்கொண்டது.

    நலம்தானே? வேலைப்பளு குறைய வாழ்த்துக்கள்.
    உங்கள் நாட்டில் இப்போது நோன்புப் பெருநாள் வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்குமே......
    B.I. Sivamaalaa (Ms)

  9. #428
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று ஈத் பெரு நாள் இங்கு.

    இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..

  10. #429
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    funny multiple marriage case....

    Quote Originally Posted by chinnakkannan View Post
    நேற்று ஈத் பெரு நாள் இங்கு.

    இன்னும் நாளை வரை விடுமுறை..பின் மறுபடி வழக்கம் போல..ஆனால் இந்தத் தடவை உபவாசம் காலை 4 மணிமுத்ல் மாலை 7 மணிவரை நீடிக்க மக்களுக்குக் கொஞ்சம் சிரமம் தான்..
    If one is from a vegetarian background, he or she may not be able to partake in such festivals, unless invited with specially catered food thrown in!

    Now, on a recent funny criminal case in TN.


    ஒருவனிடம் உண்மை விளம்பி -- அவன்
    ஒருபோதும் ஏலா உலகமீதில்
    பலரிடமும் பொய்யைத் துணிந்து--- அவள்
    பகர்ந்தாளோ எவ்வாறு அறிகிலேனே!

    மடுத்தசெவி எல்லாம் விழுந்து --அணல்#
    மறுத்தோத மாட்டா மெழுகுமாகி
    விடுத்தகணைக் கெல்லாம் இலக்காய்---மண
    விலங்கேற்றார், எவ்வாறு ? அறிகிலேனே.

    மணவினைக்குள் மாட்டினாள் மற்றும்-- வழி
    மறுத்திட்ட ஆண்கள் அனைவருக்கும்
    நினைவுவரு முன்பாய் அகன்று -- பிற
    நிலைகொண்ட தெவ்வாறு? அறிகிலேனே!



    Notes

    #அணல் -தொண்டை, வாய்

    ஏலா - ஏற்காத. உண்மை சொல்கையிலேயே ஆடவர் பலர் ஏற்காமல் வாதம் புரிகிறார்கள். அவள் பெரும்பொய் சொன்னபோது எப்படி நம்பினார்கள் என்பது கருத்து.

    மணவிலங்கு - மணவாழ்வு என்னும் கைவிலங்கு (. கைக்கட்டு )

    வழி = மணவாழ்க்கை நிலையிலிருந்து அவள் தப்பிச் செல்லும் வழி.
    பிற நிலை - மணவாழ்வில் இல்லாத தனியாள் நிலை.
    Last edited by bis_mala; 6th September 2012 at 05:43 PM. Reason: note improve
    B.I. Sivamaalaa (Ms)

  11. #430
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பரிபூரணானந்தமே!

    பார்க்குமிடம் எங்குமொரு
    நீக்கமற நிறைந்துள்ளாய்
    பரிபூரணானந்தமே! --- நானும்
    நோக்குமிட ம் ஒவ்வொன்றும்
    ஈர்ப்பதெது கவனமதை
    மக்கள்சிலர் ஆர்ப்பாட்டமே!

    படைத்தவன்நீ உலகமிதை,
    துடைத்தழிக்கும் பலமுடையோன்,
    கருத்துமிது பொருத்தமன்றோ--- நீயும்
    இடைத்துலக்கித் துயர்விலக்கி
    இவர்களெலாம் அமைதிபெற
    ஏன் உய்க்க மறந்துவிட்டாய்!

    இவர்களைநீ விலக்கிவிடு
    இனிநீயே மேற்கொள்வாய்
    இவருதவி உனக்கெதற்கு -- நல்ல
    தவம்பிழைத்த நெறிசெல்வார்!
    தண்ணருளைப் புறம்வைத்தார்
    தலைதடு மாற்றமுற்றார்.



    Note:

    இடை - இடையில்; முன் அல்லது தொடக்க காலத்திலிருந்து தலையிடாமல் இருந்ததை விட்டு இவ் இடைக்காலத்தில் சென்று....; துலக்கி = தூய்மை செய்து.
    Last edited by bis_mala; 24th September 2012 at 03:27 AM. Reason: expln
    B.I. Sivamaalaa (Ms)

Page 43 of 51 FirstFirst ... 334142434445 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •