-
11th July 2012, 08:55 PM
#411
Senior Member
Senior Hubber
மிக்க நன்றி...என்னஎழுதுவதென்று தெரியவில்லை..
வண்ணக் கவிபுனையும் வல்லவரில் இங்கேதான்
கண்ணன் சிறிய பயல்
**
பள்ளி விடுமுறையில் பெற்றோரும் மாணவரும்
துள்ளியே தாய்நாடு செல்ல தினந்தோறும்
மெல்ல நகர்ந்திருந்து மேவுகின்ற வாகனங்கள்
நல்ல நெரிசலுமே நன்றாகக் குறைந்ததனால்
கள்ளநகை சிந்துவதைக் காண்
-
11th July 2012 08:55 PM
# ADS
Circuit advertisement
-
12th July 2012, 07:27 PM
#412
Senior Member
Seasoned Hubber
உள்நாட்டார் தொகையாதோ ஊரினையே நோக்கிப்போம்
வெளிநாட்டார் விகிதமென்ன விரும்பாத நெரிசலென்றால்
வளிகேட்டில் வானமெங்கும் கரும்புகையோ நறும்பெயலும்
துளிகேட்டும் கிடைக்காத துன்பமிதோ விலகியதோ
மகிழுந்துகள் கக்கும் புகை மிஞ்சும் அளவுக்கு நெரிசலோ. அந்த ஊரில் வெளி நாட்டினர்தாம் ("தாய்நாடு செல்ல") அதிகமோ?
-
15th July 2012, 02:21 PM
#413
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
மிக்க நன்றி...என்னஎழுதுவதென்று தெரியவில்லை..
வண்ணக் கவிபுனையும் வல்லவரில் ...........
மேற்கண்ட பாடலில் சொற்பயன்பாடு சில கடினமாய்த் தோன்றலாம். எளிதாக்க இதோ கொஞ்சம் விளக்கம்.
வளிகேட்டில் = காற்றுத் தூய்மைக் கேட்டின் காரணமாக .வளி = காற்று.
நறும்பெயல் = நல்ல மழை. அது வந்தால் வானத்துப் புகைக்கூட்டம் கரைந்துவிடும் என்பார்கள்.
துளி கேட்டும் = கொஞ்சம் மாழை வேண்டுமென்று அங்குள்ளோர் கடவுளிடம் வேண்டியும்கூட.
இவர்கள் தொகை என்ன,அவர்கள் விகிதம் என்ன என்பனவெல்லாம் விளையாட்டுக்குக் கேட்டவைதாம் சின்னக்கண்ணன் அவர்களே, அதற்காக நீங்கள் புள்ளி விவர வாரியத்துக்குப் போய் இன்னல் உறவேண்டாம். சும்மா ஏதாவது எழுதி எழுப்பிய கேள்விகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்.
Enjoy the school holidays....!
-
15th July 2012, 06:20 PM
#414
Senior Member
Senior Hubber
ஹய்யோ.. அஃது அப்படி இல்லை..உடன் வராததற்கு மன்னிக்க
பொதுவாக அரபு நாடுகளில் உள் நாட்டார் வெகு குறைவு.. எல்லாம் அங்கு வந்து வேலை அல்லது வியாபாரம் செய்யும் வெளி நாட்டார் தான்..குறிப்பாக இந்தியர்கள்..அதுவும் பள்ளி விடுமுறைக்கு வெயில் கொஞ்சம் அதிகமென்பதாலும் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள்..இந்தமாத இறுதியில் ரமதான் ஆரம்பிக்கிறது..கேட்கவே வேண்டாம் எல்லா வியாபாரங்களும் கொஞ்சம் சின்னதாய் உறங்க ஆரம்பித்துவிடும்..
நோன்பிருக்கும் மாதத்தில் நன்றாய் வியாபாரம்
பூணும் விரதம் பார்..
இந்ததடவை விடுமுறை கொஞ்சம் தாமதம்.. எனில் ரமதான் விடுமுறையும் சேர்த்து பள்ளிகள் செப்டம்பர் ஆரம்பம் தான் துவங்கும்..
நெரிசல் குறைந்தது என்று சொன்னேனே தவிர..சில இடங்களில் சாலை பராமரிப்பின் காரணமாக இருந்து கொண்டு தான் இருக்கிறது..
-
15th July 2012, 06:27 PM
#415
Senior Member
Senior Hubber
எனக்கெங்கே பள்ளி விடுமுறை.. வேலை தான் இருக்கிறதே..
பள்ளி விடுமுறைக்குப் பாய்ந்து நினைத்ததவும்
கள்வெறி கொண்டுதான் கண்மூச்சி ஆடியதும்
துள்ளியே மானாக திக்கெட்டும் சென்றதுவும்
அள்ளும் இளமை அலைபாய வைத்ததுவும்
கொண்டிருந்த காலமெல்லாம் கானலாய் மாறிப்போய்
எண்ணுகிறேன் நாளைத்தான் இன்று..
-
15th July 2012, 06:41 PM
#416
Senior Member
Senior Hubber
இங்கே தினம் தினம் நடக்கும் விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான்.. போன மாதம் மட்டும் 600க்கும் மேற்பட்ட விபத்துக்கள்..காரணம் ஒரு நொடி வேகம் குறைக்காததினால்.. முக்கால் வாசி ஓமானியர்கள் குறிப்பாக பெண்கள்..காரில் ஏறினோமா ம்ம் விதிகள் இருப்பது மீறுவதற்கே என எண்ணுவார்கள் போலும்.. கொஞ்சம் அறிவையும் உபயோகப்படுத்தாமல் கொய்ங்க் கொய்ங்க் என வேகமாய் ச் செல்வதனால் விபத்துக்கள்..ஒரே விபத்தில் மூன்று நான்கு கார்கள்..அடிவாங்கும்.. காரின் சொந்தக்காரர்களுக்கு வேண்டாத மன உளைச்சல்.. அலைச்சல் இன்ஷ்யூரன்ஸிற்காக..
என்ன அந்த ஒரு நொடி - யாரும் யோசிப்பதில்லை..
குறித்த நேரத்தில் கொண்ட இலக்கை
சரியாய் அடையத்தான் சற்றேனும் எண்ணாமல்
ஓட்டுவார் வாகனத்தை ஓர்நொடியில் மோதிவிட
காட்டுவார் கண்களிலே நீர்..
ஏதோ யோசியாமல் படபடவென வெண்பா(?) அடிக்கிறேன்.. சுவை குறைவின் மன்னிக்க்
-
15th July 2012, 06:52 PM
#417
Senior Member
Senior Hubber
ப்ளாக் ஸ்பாட் வைத்திருப்பதாய் எழுதியிருந்தீர்கள் முடிந்தால் சொல்லவும்.. படித்து இன்புறுவேன்
-
17th July 2012, 09:07 PM
#418
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
ப்ளாக் ஸ்பாட் வைத்திருப்பதாய் எழுதியிருந்தீர்கள் முடிந்தால் சொல்லவும்.. படித்து இன்புறுவேன்
You are forever welcome,
The address is: http://sivamaalaa.blogspot.com/
Enjoy yourself by reading as much as possible.
(You may also join as member and criticize and comment freely,,,,even attack....Everything is fine with me). Have a nice journey through the blogspot pl)
Last edited by bis_mala; 17th July 2012 at 09:12 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
27th July 2012, 07:07 PM
#419
Senior Member
Seasoned Hubber
காலின் பெருவிரலில் - ஒரு
கட்டை விழுந்ததம்மா! --இது
போலோர் வலிதனையே -- எது
போதும் அறிந்ததில்லை.
தோலும் கிழியவில்லை --விரல்
துண்டாய்த் தெறிக்கவில்லை -- புறம்
மேலே சுரந்துவீங்கி-- நகமே
வேகும் வலிமிகுதே....
அழகிய நகமே அகல்வாயோ எனைவிட்டு
பழகிய நாளெலாம் மறந்தாயோ வினைபட்டு!
-
27th July 2012, 10:30 PM
#420
Senior Member
Senior Hubber
கட்டை யாக்கையிலே - ஒரு
கட்டை விழுந்ததனால் - சொற்
செட்டாய் பாடலுமே - இங்கு
ஜோராய் எழுந்ததம்மா
வலியின் ஓசையதும் -உள
ஒலியாய்க் காட்டிவிட்டே -நகம்
மெலிந்தே சென்றிடுமோ -குரல்
குறைந்தே கூறிவிட்டார்..
நகமும் விரலும் போல் - இங்கே
நல்லதோர் பாபுனையும் - திற்ன்
சுகமாய்க் கொண்டவர்க்கு - என்றும்
சுகமும் மாறாதே
எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..
நல்ல பாடல் சிவ மாலா..
நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...
Bookmarks