Page 36 of 51 FirstFirst ... 26343536373846 ... LastLast
Results 351 to 360 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #351
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஞானும் நல்லதுபோல தெரக்கி நோக்கி, அது கிட்டிட்டில்லா ஸாரே! ஏ திரி,நிங்ஙள் எவிட இட்டு?

    I am sorry

    anbudan
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #352
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ரசிகத் தன்மையில்
    கைதேர்ந்தவள் வஞ்சி,
    ராகத்தில் சிறந்தது
    நாட்டைக் குறிஞ்சி

    என்றொரு பாடலில் இசைப்பா அரசர் பாபநாசம் சிவன் அவர்கள் பாடியுள்ளார்.

    நாட்டைக் குறிஞ்சிக்கு ஒத்துவரும்படி வஞ்சி யாப்பில் அல்லது அதன் சாயலில் ஏதேனும் தரமுடியுமா?

    அன்புடன்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #353
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தோழீ ஈஈஈ... ரொம்ப் எதிர்பார்க்கறீங்க.. முயற்சி செய்யறேன்..
    அது ப்வள்மணிக்காவோட கவிதைக்குக் கவிதை பாட்டுக்குப் பாட்டு பொய்ம்ஸ்/க்விதைகள்ல முதல் திரி...

  5. #354
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    உலகின் மறுபெயர் துன்பம் - இதை
    ஒதுங்கின பேரகளுக் குள்ளதாம் இன்பம்!
    அளவிடும் ஆழறி வுள்ளார் --பல்
    லாண்டுகள் முன் நம தேட்டினில் சொன்னார்.

    புயல்மழை காற்றொடு வாட்டும் -- படு
    குளிர்பெருந் தீ புகை என்றிவற் றோடு
    கொலைகள வாம்வெடி வைப்பு -- எனக்
    கூறுதற் கில்லாத பட்டியல் நீட்டம்.

    வான்வழிச் செய்திகள் தம்மில் -- இந்த
    வன்மைகள் தின்மைகள் வற்றி இஞ் ஞாலம்
    கூன்படல் இல்லாத வாழ்வை -- மக்கள்
    கொண்டுயர்ந்தார் எனக் கேட்பதெந் நாளோ!
    B.I. Sivamaalaa (Ms)

  6. #355
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னால எல்லாம் உலகத்துயரிலிருந்து ஒதுங்கெல்லாம்முடியாது! இன்னும் வயதாகலையோன்னோ...!
    நல்ல கவிதை நன்றி..

    ம்லேசிய் நாட்டிலோர் மாலா – அட
    பலேயெனச் சொலும்பாடல் புனையுமோர் ஆளா!
    கலையுடன் கவிதைகள் தந்தே – நெஞ்சில்
    நிலையாக என்றுமே நிற்பாரே இங்கே

  7. #356
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ..............................!
    நல்ல கவிதை நன்றி..

    ம்லேசிய் நாட்டிலோர் மாலா – அட
    பலேயெனச் சொலும்பாடல் புனையுமோர் ஆளா!
    கலையுடன் கவிதைகள் தந்தே – நெஞ்சில்
    நிலையாக என்றுமே நிற்பாரே இங்கே

    நன்றிதனை நான்நவில்வேன்
    மன்றுபுகழ் சின்னக்கண்ணர்
    நன்றுநன்றும் கவிதையென்றே
    இன்றினிதே உரைத்தமைக்கு.

    அம்மாவை நினைத்தபோது
    சும்மாவிளித் திடும்குழந்தை
    நம்மால்வே றியலாதென்றே
    சும்மாநான் எழுதிப்பார்த்தேன்


    கவிதையம்மை வந்தாளென்று
    நவின்றதாலே நான்மகிழ்ந்தேன்;
    செவிமடுத்த சீரோர்யார்க்கும்
    இவண்வணங்கி அமைகின்றேன்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #357
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala View Post
    நன்றிதனை நான்நவில்வேன்
    ......................



    இவர் யாரோவெனின்,
    கவிதைக்குக் கவிதைபாடும் மன்னர்;
    கலைமொழி புனையுவிற் பன்னர்;
    நிலையாக நிறுத்திவைத்த
    சிலைபோலும் ஒருபோதும்
    கலையாத சொற்களையே
    கவித்து அழகுகாட்டிய கவி;

    இவர் ஈண்டு நிகழ்த்திய விந்தை
    யாதோவெனின்,
    அதுதான்,
    தோட்டத்துச் சிறுமலரை
    நாட்டியது நன்மலை நயந்த மதுமலராய்.
    இத்துணைப் புகழ்ச்சியோ இச்சிறு மலருக்கு?

    கொல்லையிற் கிடந்தே எல்லையுட் பட்ட
    முல்லை எனவே முகிழ்த்து
    பிறபுகழ் விழையா துறைந்தனம் யாமே.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #358
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உறுமீனாய் நிற்காமல் ஓடுகின்றார் செந்தமிழில்
    சிறுமலராம் ந்ம்புவா யா..

    அட அட நன்றியையும் அழகான பாக்களில் சொன்னீர்...

  10. #359
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    on Malaysian climate

    கொப்பளிக்கும் வெம்மை -- ஒரு
    குளிரறை தேடிட வைத்ததே எம்மை;
    தெப்பக்குளம் அண்மை -- எனில்
    தேங்கா ததிற்சென்று வீழுவோம் உண்மை.

    இப்படித் துன்புறவே -- கண்ட
    இயற்கைதந் தாள்பெய்க! பெய்யென் பொழிவே!
    செப்படி வித்தையன்றே--இந்தச்
    சீர்மிகு நன்மலை நாட்டிலி(து) இயல்பே.

    நான்கு பருவங்களோ -- இல்லை!
    நாமறிந் தோம்வெயில் மாரி இ ரண்டே
    பாங்குற வாழ்வதற்கு -- இயற்கை
    பண்பாடும் பொன்மலை நன்னாடு போலுண்டோ?
    Last edited by bis_mala; 1st February 2012 at 10:27 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #360
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் மால்ஸ்! நேற்று உங்கள இடுகைக்கு முன்னால் நழுவல் என்ற் தலைப்பில் எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.இன்று பார்த்தால் அனல் அடிக்கும்பாட்டு..சூட்டோடு சூட்டாக மீதியையும் எழுதி விட்டேனே...! நிறைய எழுத் நினைத்துச் சுருக்கிவிட்டதால் கொஞ்ச்ம் சுமாராய்த் தான் இருக்கும்.

    ***
    நழுவல்கள்
    **

    விரும்பி எழவும் முடியவில்லை
    …விழித்து நோக்கவும் தெரியவில்லை
    குருட்டாம் போக்காய் குறுகித்தான்
    ...ஒடுங்கி நன்றாய் இருந்தாச்சு
    புருவஞ் சுருக்கிக் கண்மூடிப்
    ...பொய்யா யுறங்கி இருந்ததுவும்
    இருட்டில் நழுவி ஓர்நாளில்
    ...உலகம் பார்க்க வந்தாச்சு.

    விழிகள் வெற்றாய்ப் நோக்குங்கால்
    ...வெளிச்சம் கண்ணில் அடித்திடவே
    கிலியால் உதடுகள் தான்கோணி
    ...கோவென் றழுதால் அன்னையவள்
    வலியச் சேர்த்தே அணைத்த்படி
    ...அமுதம் தன்னை புகட்டுங்கால்
    துளீயாய்ச் சிரித்துத் துஞ்சியதில்
    ...சென்ற நேரம் கொஞ்சமல்ல.

    கிட்ட இருந்தும் வாராமல்
    ...கூவி அழைத்தும் கேளாமல்
    எட்டி எடுக்க் முடியாமல்
    ...ஏயென் றழவும் அன்னையும்தான்
    தட்டித் தழுவிப் புற்ம்போட்த்
    ...தவழ்ந்து பொம்மை தானெடுத்துக்
    கட்டிப் பிடித்தே தூங்கியதில்
    ....கழிந்த காலம் எத்தனையோ

    தளர்நடை பழ்கும் போது
    ....த்யக்கமும் கொண்டி டாமல்
    உள்றலாய்ச் சொற்க ளோடு
    ...உயரமாய் உள்ள வற்றை
    மலர்ச்சியாய் எடுக்கப் பார்த்து
    ...ம்றுபடி முய்ற்சி செய்து
    கலவரம் அடைந்து க்த்தும்
    ...காலமும் போன தங்கே.

    பள்ளியில் படித்த பாடம்
    ...பருவமும் அடைந்த பின்பு
    துல்லிய மாக மேலே
    ...தொட்ர்ந்த்து வேறு திக்கில்..
    கல்வியும் முடித்த பின்பு
    ...கனிவுடன் வேலை தேடி
    நல்லிடம் த்னிலே சேர
    ...ந்ழுவிய் காலம் பலவே

    பழுதுகள் ஏதும் இல்லா
    ...பக்குவ மாக வேலை
    பார்த்த்தில் மனைவி சேய்கள்
    ...பாய்ந்துதான் சேர இன்றோ
    வழுக்கிடும் தரையைப் போலே
    ...வாழ்வதன் சுவைகள் எல்லாம்
    நழுவுது மெல்லக் கொஞ்சம்
    ....நாரணன் பேரைச் சொல்லி

Page 36 of 51 FirstFirst ... 26343536373846 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •