Page 35 of 51 FirstFirst ... 25333435363745 ... LastLast
Results 341 to 350 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #341
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எண்ணியாங்கு பாடும் எழுபா வலர்கைக்குள்
    வஞ்சி வடித்தால் வரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #342
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹை..இது தான் நழுவல் என்பது...

    கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
    நழுவும் மீனாமோ நீர்...

  4. #343
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஹை..இது தான் நழுவல் என்பது...

    கழுவும் பொழுதிலே கையிலே சிக்கா
    நழுவும் மீனாமோ நீர்...


    ஊஹூம், நான்thAn பறக்கும் பூச்சி என்று சொல்லிவிட்டேனே.
    Last edited by bis_mala; 16th January 2012 at 10:14 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #344
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பூச்சியெனப் பெயராமே
    சூச்சுமமாய்த் தவஞ்செய்வீர்
    கூச்சமதை அகற்றியுந்தான்
    மூச்சுவிட்டுக் கவிபுனைவீர்..

    என்னென்று உரைப்பதம்மா
    தன்னடக்கம் கொளும்நெஞ்சை
    வண்ணமய இசைச்சாறாய்
    எண்ணமுடன் எழுதியவர்

    தாழ்ந்தப்டி பறப்பவரோ
    ஆழ்ந்துமனம் உழுபவரோ
    சூழ்ந்துவரும் இடரினிலும்
    வீழ்ந்துபடா திருப்பவரே...

    நன்றி..கொஞ்சம் கஷ்டப் பட்டு வஞ்சித் தாழிசை (உபயம் அ.கி.பரந்தாமனார்) ப்டிச்சு எழுதிப் பார்த்தேன்..சரியா

  6. #345
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஒரே நாளில் - "வஞ்சி வருமென்று " நான் புகன்றதை ஐயமற நிறுவிவிட்டீர்.

    பறக்கும் பூச்சி, நீச்சல் வீரரான மீனுக்கு வேறென்ன விளம்ப முடியும்!

    The poochchi seems to make some noise, It is now decoded for you, follows:-

    மனம்போல் பாடல்புனைவீரே
    விரைந்தே பாவகைகள் அறிந்தே...

    உம்மனம் ஒன்றை நினைத்தால் - அதைத்
    திண்ணமாகச் செய்து முடிப்பீர்,
    உயர் கல்வி கலைகளில் முயன்றே
    உண்மையாய்ப் பண்பினால்.....(மனம்போல்) -
    B.I. Sivamaalaa (Ms)

  7. #346
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    time...

    பூச்சியொன்று பறந்தநேரம்
    மீன்களுக்கு நல்லநேரம்;
    ஆச்சுதென்று குஞ்சுமீனும்
    ஆழநீரில் நீச்சலிடும்.

    புதுவெள்ளம் இதுவென்று
    பொடிமீனோ அஞ்சவில்லை.
    நதி நீரின் ஓடுவேகம்
    நழுவவில்லை கண்டபின்பும்,

    பாராட்டுக்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #347
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி சிவமாலா..கொஞ்சம் கலிவிருத்தமா...

    பொடிமீனா பொடியவனா பைந்தொடியே யானறியேன்
    மடிநிறையப் பொரிபோலே மலரடுக்காய்க் கற்பனைகள்
    வடிவமைக்க மனக்குளத்தில் வந்துவிழ அவைதொடுக்க
    படித்ததையே தான்முயல பாவந்தே இசைத்ததுவே

  9. #348
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று மாலை, பார்த்தீர்களென்றால், என் அ.மாடிக் குடியிருப்பில் எனது மூன்றாவது மாடிப் பலகணியில் அந்தக்கால கறுப்பு வெள்ளை நிறத்தில்
    ஒரு புறா வந்துவிட்டது..

    கைப்பிடிச் சுவர் பெரிதோ அல்லது உடல் நிலை சரியில்லையோ தெரியவில்லை... அதனால் மறுபடி பறக்க இயலவில்லை.என் மனைவிதான் முதலில் பார்த்தது..( நான் அலுவலகம் முடித்து இரவு ஏழு மணிக்குத் தான் வருவேன்)

    கொஞ்சம் பொரி வைத்தாள்..ம்ஹீம் சாப்பிடவில்லை.. சோர்வாய் மூலையில் சென்று உறங்கிவிட்டதாம்.. நேற்று கொஞ்சம் குளிர்காற்று நிறைய..எனில் குளிரில் நடுங்கியபடி.. நான் வந்தபின்பும் பார்த்தால் தலையை உள்செலுத்தி நல்ல தூக்கம்..

    இன்று காலையில் அலுவல் கிளம்பும் போதும் பார்த்தால் உறக்கம் தான்..
    நான் சென்றபிறகு சமர்த்தாய்க் கண் விழித்து வீட்டுக்காரி போட்ட கோதுமை தானியங்களைக் கொத்தி கிண்ணத்தில் வைத்த காலைக்காப்பிபோன்ற தண்ணீரை அருந்திவிட்டு அன்ன நடை போட்டுக் கொண்டிருந்ததாம்

    சொல்ல மறந்துவிட்டேனே..இன்று என் தந்தையாரின் நினைவு நாள்.பலவருடங்களுக்கு முன் இந்நாளில் தான் என் தகப்பனார் வானுலகம் சென்றிருந்தார்.

    எனில் அலுவலகம் சென்றபோது தொலைபேசி.. அப்பாவுக்கு என்ன ஸ்வீட் ப்ண்ணி படைக்கிறது...சரி கேசரி செய்யேன்..

    செய்து படைத்தபோது பால்கனி வழியாக அந்தப் புறா கண்ணாடிக் கதவைக் கொத்திக் கொண்டிருந்ததாம்.. பின் தீபாராதனைகாட்டும் போதும் கொஞ்சம் தன்னைத் தானே சுற்றியதாம்.. கண்ணில் ஒற்றிவிட்டு பால்கனியில் கண்ணை ஓட்டினால்.. அது இல்லை..காணோம்..எப்படிப் பறந்ததென்றும் தெரியவில்லை..

    மாலை வந்து கொஞ்சம் விளையாடலாம் என எண்ணியிருந்த எனக்கு சற்றே ஏமாற்ற்ம் தான்..

    அதைக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன்..

    புறவே புறவே அழகுறும் அலகுடன்
    உறவு கொளவே ஓடிவந் தனையோ
    துறவைத் திடுமென துணிந்தே எடுத்தே
    விரைந்த துமேனோ விளக்குவாய் நீயே

    வானில் பறந்தே வகையாய் மகிழ்வைப்
    பேணிய படியே இருந்திருக் கலாமே
    நேற்று வந்தாய் நெஞ்சு நிறைத்தாய்
    ஊற்றாய் உளத்தில் சோகம் பொங்குதே..

    இட்ந்தான் மாறி இங்குவந் தாய்நீ
    இனிதா கவேதான் இருந்திருக் கலாமே
    திடமா யொருமுடி வெடுத்தே சென்றாய்
    தவிக்கும் மனதுன் அழகின் நினைவிலே

    எங்கோ பறந்தாய் மகிழ்வாய் இருந்தாய்
    இங்கே இருந்த இடமும் வெற்றாய்
    வெறுமையாய்ப் பாலையாய்த் தெரிந்தே
    புறவே உந்தன் நினைவைச் சொலுமே..

    **
    Last edited by chinnakkannan; 17th January 2012 at 11:20 PM.

  10. #349
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எலி சென்று மறைந்ததுவோர் ஏமாற்றமே
    வலி நெஞ்சில் கரைந்திடவே வருமாற்றமே
    என்றிருந்த நண்பருக்குப் புறவேற்றமே
    சென்றமன மகிழ்வினையே மீளேற்றுமே,
    இப்படியான் எதிர்பார்த்து நின்றபோதில்
    இப்புறவும் பறந்ததுவோ இன்றுகாதில்
    செப்பரிய துன்பியல்சேர் செய்திமாதே!
    ஒப்பிடவே ஏமாற்றம் இனியொன்றேதே!
    எனவாங்கு,
    யானுமென் கவலை ஈண்டு பதிவேன்,
    ஊணும் உறக்கமும் மீண்டு
    காணும் நன்மை அனைத்தும் மீளவே.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #350
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நல்லா இருக்கு...இது வஞ்சி தானே..

    பக்கத்து வீட்டு பாட்டுக்குப்பாட்டில் மா காய் காய் காய் என எழுதியிருக்கிறேன்..பார்த்துச் சொல்லுங்கள்..(இங்கும் இடலாம்..ஆனால் இரண்டு இடுகையாகுமென இடவில்லை..

Page 35 of 51 FirstFirst ... 25333435363745 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •