-
14th January 2012, 10:50 PM
#331
Senior Member
Seasoned Hubber
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...
தழுவி, தான் எடுத்தவற்றைப் பிறர் அங்ஙனம் அலட்சியப் படுத்துவது, கவலை தரக்கூடும்.
போட்ட பணம் திரும்பி வந்துவிட்டால், கவலை தீர்ந்துவிடுமே.....
போட்ட பணம்திரும்பப் போகும் கவலையெலாம்
ஆட்டமுடன் பாட்டமதன் பின்.
How did the film do at the box office?
-
14th January 2012 10:50 PM
# ADS
Circuit advertisement
-
14th January 2012, 11:35 PM
#332
Senior Member
Seasoned Hubber
ஜிஞ்சும்மா பட்டும்மா செல்லப் பாப்பு
...சில்லென்றே சிரிக்கின்ற ரோஜா ஈர்ப்பு
ப்ஞ்சுகொண்ட் மென்மையிலே ஆன கன்னம்
...பார்க்கும்விழி இரண்டிலுமே கவிதை மின்னும்
துஞ்சுவது தான்விழித்தால் தாவிக் கையில்
..தூக்கியதை எடுத்திடுவாள் தோளில் கொஞ்சம்
நெஞ்சகத்தின் அமுதத்தை ஈயும் தாயின்...
..நெகிழ்வான அணைப்புமொரு தழுவல் அன்றோ..
பட்டறிவு மிக்கப்பா வல்லவர் --என்று
பார்த்தவுடன் நான்கண்டு கொண்டேனே.
இட்டகவி தழுவற்குக் காவியம் -- நெஞ்சுக்
கிதமான கோவைச்சொல் ஓவியம்.
அனைத்தும் இனிய விருத்தங்கள்.
-
14th January 2012, 11:36 PM
#333
Senior Member
Senior Hubber
இப்போதைக்கு அரங்கு நிறைகாட்சிகள் தான்..பட் போகப்போகத்தாந்தெரியும்..கொஞ்ச்ம் நீளம்..மூன்றே கால் மணி நேரம்..ஹிந்தியில் பார்த்தபோதே சற்று கண் வ்லித்தது...
-
14th January 2012, 11:52 PM
#334
Senior Member
Senior Hubber
நன்றி சிவமாலா...
தாராட்டில் தான்மயங்கும் சேயினைப் போலுங்கள்
பாராட்டு மான தெனக்கு... (ஹிஹி..கண்ணா ஜஸ்ட் லைக்தட் குறள் எழுதிட்டடா)
வசிஷ்டரின் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் பெற்றாற்போலிருக்கிறது...
-
15th January 2012, 12:00 AM
#335
Senior Member
Seasoned Hubber
iniya ponggal vazththukkaL, ungkaLukkum anaivarukkum.
time 2 something in Malaysia, bye for now......
-
15th January 2012, 12:02 AM
#336
Senior Member
Senior Hubber
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...இனிய இரவு...
-
15th January 2012, 09:22 PM
#337
Senior Member
Seasoned Hubber
எழுந்த் எண்ணம் இது...! கவிதையா இல்லையா எனத் தெரியாது...
எதுகவிதை என்பதற்கோ இயலறிந்த ஆசிரியர்
எடுத்துரைக்கும் காரணங்கள் பலவே;
புதுவகையோ மரபுவழிப் போம்கவியோ யாதெனினும்
பொதிந்துவைத்த உணர்வுகளே கவியாம்;
மதுமலர்க்குள் வண்டினங்கள் மாந்தினது தேனன்றி
மற்றெவையும் குறியாதல் உளதோ?
பதிவுணர்வு தானன்றிப் பாட்டுக்குள் எதுவேண்டும் ?
இதுகவியென் றாடிடுக இனிதே.
அன்புடைய சி.க. அவர்களுக்கு என் நன்றி.
Last edited by bis_mala; 15th January 2012 at 09:33 PM.
Reason: add quote
B.I. Sivamaalaa (Ms)
-
15th January 2012, 11:47 PM
#338
Senior Member
Senior Hubber
அழகிய விருத்தம் சிவமாலா நன்றி.
-
16th January 2012, 12:05 AM
#339
Senior Member
Senior Hubber
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
பக்க்த்து வீட்டு பாட்டுக்குப் பாட்டிற்காக அதிகரீணியில் முய்ன்றது...
என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..
-
16th January 2012, 06:50 PM
#340
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
வதைக்கும்விழி அழைப்பால்மனங் கலங்கிக்குளச் சுழலாய்
பதைக்கும்பொழு தினிலேயவள் பருவத்தெழில் துணையில்
விதைப்பாள்சில விருப்பங்களை இதய்ம்மகிழ்ந் திடவே
கதைகள்பல் சொலியேமுகம் களிக்கும்படி உரைப்பாள்
Wow!
என்னவென்று தெரிய்வில்லை..வஞ்சியையும் புரிந்துகொள்ள முடியவில்லை..வஞ்சி விருத்தததையும்..கொஞ்ச்ம சொல்லிக் கொடுங்களேன்..
மீன்குஞ் சடிக்க முயல்கின்ற நீச்சலின்முன்
நான்சொல் கொடுக்கவோ! நன்று,,,,
ஓடையின் பக்கலில் ஓசைகுன்றித் தான்பறக்கும்
பாடறியாப் பாப்பாத்தி நான்.
Last edited by bis_mala; 16th January 2012 at 06:56 PM.
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks