Page 31 of 51 FirstFirst ... 21293031323341 ... LastLast
Results 301 to 310 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #301
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஒருவருடம் ஓடி ஒருநாள் மழையால்
    திருவருடும் தேடிவந் தாங்கு.


    செல்வம் சேரும். கவலை வேண்டாம்.
    தண்ணீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டுமோ?
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #302
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    யானெழுதிய ஒரு பழைய கவிதை. ஒரு தோழிக்கு ஆலோசனை.


    இரவும் பகலுமே மாறிவந் தாலும்
    இடர்கள் சிலருக்கு மாறாதவை!
    உறவும் பகையும் உதயம் உறுவதும்
    ஓரிடம் என்பதும் உண்டல்லவோ!

    இரவென்ன எல்லோன் பகலென்ன எல்லாம்
    இனியென்ன என்றே தொடர்ந்திடுவாய்
    மறைவென்ன மற்றும் குறைவென்ன யாவும்
    மனம்நினைத் தாலன்றி ஒன்றுமில்லை.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #303
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எழுதப்படா எண்ணங்கள்

    நினைத்தால் கொஞ்சம்
    சிரிப்பாகவும் நிறைய குழப்பமாகவும்....

    ஆயிரமாயிரமாய்
    அலைகள் மனதில் அடிக்கையில்
    எதை எழுதுவது
    *
    வேறொரு பிரச்னைக்காக
    வைத்தியரிடம் சென்றிருக்கையில்
    பக்கத்து இருக்கைப் பெண்
    அவளது எண் வ்ந்ததும்
    படீரென எழுந்து
    பக்கத்து அறைப் பெண்மருத்துவரிடம்
    செல்கையில்
    கண்ணில் பட்ட அவளது கண்ணின் ஈரம்..

    வயிற்று வலியா..
    அவர்களுக்கான பிரத்யேகப் பிரச்னையா..
    ஒரு வேளை
    புருஷன் விரும்பவில்லையா வாரிசை.

    மறுபடி பார்க்க நினைத்திருக்கையில்
    என் வரிசை வர
    அவள் மறந்தும் மறைந்தும் போனாள்..
    *
    அடுத்த வருஷத்திற்கான
    விற்பனை லாப நஷ்டம்...
    இந்த வருடம் இலக்கை எட்டுவோமா..
    வயிறு சற்றே கலங்குகிறதே
    உப்புமாவுடன் அந்தக் காரச்சட்டினியின் வேலையோ..
    என்ன இது..
    இவ்வளவு வாகனங்களின் ஊர்வலம்..
    எதனால் அடைப்பு..
    அடச்சீ சும்மா இரு..
    முன்னால் செல்பவள்பெண் என்பதால்
    அவள் வாகனத்தை முத்தமிடுதல் முறையல்ல..
    என் உந்து வண்டியிடம் சொன்னேன்..
    பின்...
    ஆண்டவா..
    வாழ்க்கை அழகாக இருக்கிறது
    என
    காலையில் உன்னை வாழ்த்தியது
    என் தவறு தான்
    எதற்காக இந்தப்
    பயணத் தடங்கல்..
    பொறுமை மீறுகிறதே..
    நிறுத்தலாம் என்றால்
    நிறுத்துமிடம் போவது கடினம்..
    நான் மிடில் லைன் எனத் தமிழில் சொல்லப்படும்
    நடுக்கோட்டில் இருக்கிறேன்
    இட,வலம் சுய நலமிகள்
    இடம் தரமறுக்கிறார்கள்..
    பாட்டைப் போடலாமா..
    போனால் போகட்டும் போடா.
    மேலும் வெறுத்து
    மெல்லமெல்ல
    நத்தையின் வழித்தோன்றலாய் நகர
    படீரென்
    தடைகள் விலகி ஓட்டமெடுத்ததில்
    எல்லாம் மறந்து போனது..

    *

    அலுவல்களில்
    தோய்ந்து தேய்ந்து
    வெளிப்போந்த
    ஒரு முன்னிரவு வேளையில்
    சாலையின் நடைபாதையில்
    சில பல இறகுகள்
    புறாவினுடையவை தான்..
    எப்படி இவ்வளவு
    எனச் சிந்தனையுடன்
    கண்ணை ஓட்டுகையில்
    சாலை நடுவில்
    மொத்தமான் மித்தமானவைகள்..
    உயிருடன் இருந்த போது
    அதைப் புறா எனத்தான் சொல்லியிருப்பார்கள்..
    பக்கென்று கொஞ்சம் கனம்
    மனதில் பூசிக்கொள்ள
    நடத்தல்முடிந்து
    என் குடியிருப்பை என்கால்கள்
    அடைந்து
    வீட்டில் நுழைந்ததும்
    குழந்தைகள் மனைவியைப் பார்த்ததும்
    புறா மறந்து போனது எதனால்..
    நாட்குறிப்பிலும் எழுத மறந்த்தேனே ஏன்..

    *
    தோழா நலமா..
    உன் ஊரில் வெள்ளம் எனக்
    கேள்விப் பட்டேனே..
    என்ன ஆயிற்று
    என வாஞ்சையாய்
    கேள்வி
    முகமறியா தோழியிடம் இருந்து
    வந்தும்
    சோம்பலா
    வேலைப் பளுவா..
    அல்லது வேறு ஏதாவதா..
    பதிலிறுக்க்காததற்கு
    காரணம் என ஒன்றுமில்லை
    என்றாலும் மனதில்
    எழுதிப் பார்த்த பதில்கள்
    அரங்கேறாதது ஏன் என்பதற்கு
    விடையுமில்லை..
    *
    இது ஏன் எனக் கேட்டு
    சற்றே யோசிக்கையில்
    மேலே இருந்து பல்லி
    சிரிக்கிறது...

    எப்படி அர்த்தம் கொள்வது..
    **
    anpin sivamala
    mannikka ungal idukaiyai ippo thaan kanden..just pp mattum pOikkitu irunthutten..( vazhakkam pol light aa ezhuthath than vanthathu..athaan varalai..
    anpudan
    chi.ka.

  5. #304
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    வீற்றிருக்கும் குயிலொன்று மரக்கிளையில்
    வீசுகின்ற தென்றலதைத் தாலாட்டும்!
    காற்றினிலே மிதந்துவரும் துகள்கள்தம்மை
    கௌவியெடுத் தவற்றையின்று கவிசெய்து
    நாற்றிசையும் ஒலித்திடவே செயும்விந்தை
    நான்கண்டு வியந்திட்டேன் தேனினையே
    ஊற்றியது போலினிமை செவிகளிலே
    நேற்றுவர நினைப்பிலையோ ஏன்குயிலே
    B.I. Sivamaalaa (Ms)

  6. #305
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாலதுவும் கொதிக்கையில்தான் பொங்கு மன்றோ..
    ..பாழ்மனது கொதிக்கையிலே கவியும் வாரா..
    ஊழலதைக் கொண்டுவிட்ட உள்த்தின் தன்மை..
    ..உறக்கத்தையே மறந்துவிட்டு எழுவ தெப்போ..
    காலமது சிறகுகளை விரித்துச் செல்ல
    ..கூட்டினிலே கதவ்டைத்த குயிலோ மெல்ல
    கோல்த்தில் நல்வரவு என்றே சொல்லும்..
    ..கோலமயில் தோழியவர் அழைப்பில் பாடும்..(விரைவில்..)

  7. #306
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பாலதுவும் கொதிக்கையில்தான் பொங்கு மன்றோ..
    ..பாழ்மனது கொதிக்கையிலே கவியும் வாரா..
    .....................(விரைவில்..)
    நின்றதோ நெஞ்சக் கொதிப்பே கவிமழை
    இன்றுமுதல் பெய்தற் கிசைந்து.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #307
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
    ..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
    காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
    ..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
    கோலினால் வாயினில் குழலினை ஊதியே
    ..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
    வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
    ..வாழிய கோதையே வாழியுன் பாடலே

    *பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...

  9. #308
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கன்னியும் குருவும்:

    ஒரு வழியாய்
    பிரயாணம் முடிந்து
    ஆற்றங்கரைக்கு
    வந்தாயிற்று.

    குரு சாமி
    பெருமூச்சு விட்டுச் சொன்னது..
    அவ்ளோ தான்..
    மலை கொஞ்ச தூரம் தான்
    நடந்தா
    மேல அவன் இருக்கான்
    நம்மளைப் பாத்துப்பான்..

    கன்னி சாமி முழித்தது.
    வா குளிக்கலாம்..
    குளிக்கும் போது
    யப்போவ் குளிருது..
    அப்பால்லாம் சொல்லாதே
    குருசாமின்னு சொல்
    சாமியேன்னு கத்து..குளிர் ஓடிடும்

    மறுபடி இருமுடி கட்டி
    கூட்டத்தோடு கூட்டமாய்
    வேகமாக மலைப்பாதையில் நடக்க
    யப்பாவ் பசி..
    குரு முறைத்து
    பத்திரமாய் வைத்திருந்த பை திறந்து
    கன்னிக்கு ஒரு சப்பாத்தி கொடுத்து
    தான் நான்கு உண்டது..

    கொஞ்சமாச் சாப்பிட்டாத்தான்
    வெரசா நடக்கலாம்..சொல்லு சாமியேய்..

    யப்போவ்..கால்ல கல்லுப்பா..
    ஆமாண்டா..
    கால்ல காலெடுத்தா கல்லுதான்..
    குரு தன் நகைச்சுவைக்குத்
    தானே சிரித்தபடி நடக்க
    மூச்சு வாங்கி மூச்சு வாங்கி
    கூட்டத்தோடு கூட்டமாய்
    சிலமணிப்பொழுதில்
    மேலே சேர...

    வாடாவா.. முதல் படி இது..
    நீ கன்னி சாமியோல்லியோ..
    உடை தேங்காயை..
    பின்னால் நின்றவாறே ஏறு..

    ‘கன்னி சாமி ரொம்பச்
    சின்னவரா இருக்காரே சாமியேய்’
    குரு பெருமிதத்துடன்
    ‘என் பையந்தான்.. ஆறு வயசாச்சு..’
    சொல்லு சாமி சாமியேய்...
    ஒருவழியாய்
    கடகடவென மெள்ளமாய்
    படியேறி
    இறைவனைப் பார்க்கலாமென்றால்
    ஒரே கூட்டம்..

    யப்பாவ்.. ஒண்ணும் தெரிய்லை..
    கூட்டம் நசுக்குது..
    ஒண்ணும் சொல்லாதே..
    வா தூக்கிக்கறேன்..
    நல்லா தெரியுதா...

    கூட்டத்தின் கோஷமும்
    நச நசவென்ற நெரிசலும்
    இருந்தும்
    எட்டி எட்டிப் பார்த்ததில்
    ஒன்றும் தெரியவில்லை..
    கொஞ்சம் சின்னதாய் விளக்கொளி மட்டும்..
    ஒருவேளை அது தான் இறைவனா..

    அப்பா குருசாமியிடம் கேட்க பயம்..
    சரி கண்ணை மூடி
    ‘சாமிபசிக்குது..
    அப்பா நல்ல சாப்பாடு கொடுக்கணும்..
    சீக்கிரம் கீழ போணும் கல் குத்தாம..
    நாளைக்கு ஸ்கூல் போணும்..
    ஹோம்வொர்க் பண்ணலை..
    டீச்சர் கேக்கக் கூடாது...”

    என்னடா சாமி கிட்ட வேண்டிக்கிட்டயா..
    ஓ..
    என்ன கேட்ட..
    உங்கள மாதிரி பெரியாளா வரணும்னுப்பா
    சாரி குருசாமி...””

    என்னை விட பெரியாளா வரணுண்டா
    என்றது குரு பெருமிதத்துடன்..

    கொஞ்சம் கீழே இறங்கி
    ஆகாரம் முடித்து
    மறுபடியும் இறங்குகையில்
    குருசாமியைக் காணோம்..

    கொஞ்ச்ம யோசித்துத்
    தேடினால்
    பின்னால் புதர்மறைவிலிருந்து
    க்ப் கப் என்று
    புகைவிட்டிருந்த குரு கண்ணில் பட
    கன்னி உரத்த குரலில் “சாமியேய்..”’”

    ஒருகணம் திகைத்த குரு
    கையிலிருந்ததைக் கீழ் போட்டுச் சொன்னது
    “சரணம் ஐயப்போவ்..”

    **

  10. #309
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மாலையில் முழுவதும் மணத்தினைத் தந்தவள்
    ..மாதவன் அழகினில் மயங்கியே நின்றவள்
    காலமும் கண்ணனைக் கண்ணுளே கொண்டவள்
    ..காலினைப் பற்றியே நெஞ்சினுள் வைத்தவள்
    கோலினால் வாயினில் குழலினை ஊதியே
    ..கோபியர் மதியிலும் விதியிலும் ஆடிய
    வாழ்வதன் அர்த்தமாம் கண்ணனைப் பாடிநீ
    ..வாழிய கோதையே வாழியுன் பாடலே

    *பல வருடங்களுக்கு முன் திருப்பாவைக்குப் பொழிப்புரை எழுதிப் பார்த்தபோது எழுதியது...

    சும்மா சொல்லக்கூடாதுங்க ....இது உண்மையிலேயே மிக்க அழகான பாடல். நீங்கள் ஒரு கவி என்பதை எடுத்துக் கூவும் (கூறும் மட்டும் அல்ல) கவிதை. பக்தி ரசம் சொட்டுகிறது.

    என் வாழ்த்துக்கள்.

    ஐயப்பா பற்றிய கதையும் அருமை என்றே சொல்வேன்.

    தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் அடையுமாறு சொல்லும் திறனும் ஓர் இறைக்கொடைதான்.

    Please keep up your excellent work.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #310
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    பொழிப்புரை கண்ட திருப்பாவை அச்சில்
    பதிப்புறக் காண்ப தினிது.
    B.I. Sivamaalaa (Ms)

Page 31 of 51 FirstFirst ... 21293031323341 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •