-
7th October 2011, 09:34 PM
#271
Senior Member
Senior Hubber
நன்றி சிவமாலா..புதுக் க(வி)தை இட்டு விட்டு சற்றே பயந்திருந்தேன்.. என்ன்வோ தெரியவில்லை..கற்பனைக் குதிரை கொஞ்சம் நொண்டியடிக்கிறது..ம்ம் மரபில் எழுதணும் இன்னும்..
*
கல்லிலே குதிரை செய்து கலையுடன் மன்னர் வீரம்
சொல்லிலே எழுத ஒண்ணா சித்திரம் படைத்த நாளும்
தள்ளியே சென்றிடாமல் தரமுடன் இருந்தே அவையும்
துல்லிய உணர்வாய் நெஞ்சில் தங்கியே நிற்குமன்றோ
குதிரைகள் பாட்டைக் கேட்டீர் கொஞ்சமாய் நெஞ்சில் வந்தே
ப்திந்தநல் கற்பனைகள் பாங்குடன் இட்டு விட்டேன்
புதியதாய் எழுதச் சொல்ல பூவையே உமையே கேட்பேன்
சதிருடன் மரபில் தோய்த்து சுகமுடன் படைக்க லாமே..
-
7th October 2011 09:34 PM
# ADS
Circuit advertisement
-
8th October 2011, 07:56 AM
#272
Senior Member
Seasoned Hubber
இது நான் வானொலியில் கேட்ட ஒரு பாட்டு. குறித்து வைத்துக்கொண்டேன்.
"குட்டியாய் இருக்கையிலே -- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு-- ஏழு
எட்டுமாத மானபின்னே -- முழங்கால்
முட்டுவிழுந்து மோச மாகவிளங்கும்!
யார் எழுதியதோ!
கழுதையைப் பற்றி எழுதினால், சுவையாக இருக்குமே!
-
8th October 2011, 07:47 PM
#273
Senior Member
Seasoned Hubber
பழுதில் தொழில்புரிவான்
நெடுஞ்செவி தானுடையோன் --கேட்க
நேரிதல் லாதது நாணுடையோன்.
கொடுமொழி காழென்பதே -- அன்றிக்
கூறப் பிறமொழி யாதுடையான்?
பழுதில் தொழில்புரிவான் ---முதுகு
பளுவில் அழுந்தினும் நோவுரையான்
கழுதை எனப்பழிப்பார் -- தொடர்பு
காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.
காலக் கணக்கெடுப்பால் -- ஏதும்
கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
நீலக் கடலலைபோல் -- படும்
நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.
குட்டிச் சுவரருகில் -- அதைக்
கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
எட்டி உதைப்பதுபோல் -- பல
ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!
அரியது சேவைஎன்றால் -- அதற்
கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
உரியது ஒருவிலங்காய் -- அஃது
ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?
அருஞ்சொற்கள்.
நேரிதல்லாதது - நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
புகல்வு - புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)
Last edited by bis_mala; 9th October 2011 at 06:35 PM.
Reason: add commentary
B.I. Sivamaalaa (Ms)
-
9th October 2011, 09:48 AM
#274
Senior Member
Senior Hubber
வெள்ளி மூக்கு...ன்னு கழுதையைப் பத்தியா எழுதறேப்பா என்று கேட்டாள் குட்டிப் பெண்.. இல்லடீ ஒன்னைத்தான் குட்டிக்கழுதை என்றவுடன் அம்மாவிடம் சொல்வதற்கு ஓடி விட்டாள்
வெள்ளியில் மூக்கிருக்கும் வக்கணையாய்ப் பாரமதைத்
தள்ளாமல் தாங்கிவிடும் அந்தியில் நன்றாய்
விழுந்து புரண்டிடும் வீம்பாகப் பேசுங்
கழுதையும் நீயென்றே கொள்..
*
தொழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் பிறரோ
க்ழுதையாய்த் தேய்பவர் தான்..
(காப்பி ரைட்ஸ் ரிசர்வ்ட் எந்த கட்சிக்கும் தரப்பட் மாட்டாது!)
Last edited by chinnakkannan; 9th October 2011 at 05:43 PM.
-
9th October 2011, 10:35 AM
#275
Senior Member
Senior Hubber
சிவமாலா..உங்கள் கழுதைப் பாட்டு அழகு..என்ன கொஞ்சம் ஆழத் தமிழ்..
-
9th October 2011, 06:37 PM
#276
Senior Member
Seasoned Hubber
எளிய சிந்தனைதான் -- அதைப்
பதிய முனைந்த பதங்களிலே
வலிய வந்தசில --கடின
வளியின் வீச்சை விளைத்தனவே.
கழறும் குறிப்புகளால் -- அந்தக்
கடினம் சிறிதே குறையுமென்றால்,
குழையும் இளங்காற்றாய் -- அது
குளிர்ந்து விரிந்திட மறுத்ததுவோ?
பாலை வனம்வீசும் -- அந்த
மணற்புயல் தன்னை மையமிட்டு
நாலின் மிகுபாக்களை - நீங்கள்
நன்கு புனைந்திட வேண்டுகிறேன்
Originally Posted by
chinnakkannan
அந்தியில் நன்றாய்
விழுந்து புரண்டிடும்
அது குப்பை கூளங்களில் விழுந்து புரள்வதாகக் கேட்டிருக்கிறேன். அது ஏன் அப்படிச் செய்கிறது?
Last edited by bis_mala; 9th October 2011 at 06:46 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
9th October 2011, 11:58 PM
#277
Senior Member
Senior Hubber
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!
குட்டி.. பாடம் படிப்பதற்கு விழுந்து அழுது புரளும்.. அல்லது மற்ற பிடிவாதங்களுக்கும்..
-
10th October 2011, 12:00 AM
#278
Senior Member
Senior Hubber
வ்ளி என்றால்..
கழறும் குறிப்புகளால்... பின்னால் இடப்படும் குறிப்புகளால் சரியா
-
10th October 2011, 11:14 AM
#279
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
வளி என்றால்..
கழறும் குறிப்புகளால்... பின்னால் இடப்படும் குறிப்புகளால் சரியா
வளி என்பது காற்று. வீச்சு - வீசுதல்.
கழறும் குறிப்புகள் என்றது பின் இட்ட குறிப்புகளை என்பது சரிதான்.
கழறு : to make solemn declaration, to say, declare, tell. There are other meanings too.
Last edited by bis_mala; 10th October 2011 at 06:10 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
10th October 2011, 06:31 PM
#280
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!
பாவம் கழுதை பளுதூக்கும் நோவதனால்
ஆவ தறியாமல் கீழ்விழுந்து --- கேவிப்
புரண்டெழுந்து கத்துமோ போம்கதி எண்ணி
மிரண்டநிலை மீளுமோ தான்.
Bookmarks