Page 27 of 51 FirstFirst ... 17252627282937 ... LastLast
Results 261 to 270 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #261
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..

    நீங்கள்தான் செந்தூள் கிளப்பிவிட்டீர்கள்,.உங்கள் கவிதை மிக நன்றாகவே உள்ளது.

    இப்போது மலேசிய யானைகள் பற்றி.......




    யானை

    கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
    கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
    யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
    காணலாம் காண்பீரே சென்று.

    அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
    உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
    ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
    கூன்படாக் கொள்கை இது.

    ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
    வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
    பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
    யானும்நம் பாவலரோ டிங்கு.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    தனியருளைப் பொழிவாய்...

    அட்டகாசம் செய்தனவாம் ஆனைக் கூட்டம்,
    அதுபற்றித் தொலைக்காட்சிச் செய்தி கேட்டேன்!
    ஒட்டிவனம் உள்ளசில சிற்றூர் மக்கள்
    உள்ளபடி பலதுன்பம் உழன்ற காட்சி!
    முட்டிபொரு பையனையும் கொன்ற தாக,
    மூதாட்டி அழுவதையும் கண்டேன் அந்தோ!
    தட்டிநமைக் கழிக்காமல் தண்மை பெய்து
    தனியருளைப் பொழிவாய்நீ பிள்ளை யாரே!
    B.I. Sivamaalaa (Ms)

  4. #263
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அசைந்தாடும் யானை அழகைப்போல் இங்கே
    இசைந்தாடும் பாக்கள் எழில்

  5. #264
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தீட்டுங்கள்,,,,,

    கொசுத்தொல்லை பற்றியிரு வரிகளிலே
    கொஞ்சுதமிழ் வரைகோலால் எழுத எண்ணி,
    அசைத்திட்டேன் அதனியக்கம் துவங்கியநாள்
    ஆட்சிசெய்த உடுக்களெவை பலன்கள் யாவை?
    இசைத்தபொருள் யானைவரை சென்றதுவே!
    இனியுங்கள் பாக்களையான் கேட்கும் நேரம்
    திசைத்தரவாய் வசப்படுதல் விழைகின்றேன்
    தீட்டுங்கள் குதிரைகளைப் பற்றிப் பாக்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #265
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பிடரிகளைச் சிலிர்த்திருக்கும் கால்கள்மாற்றி
    ...பரப்ப்பாய் நின்றிருக்கும் வேகம் கொண்டே
    மிடறுகளாய் முழுங்கியுள்ள உணவும் நன்றாய்
    ...மிச்சமெதும் இல்லாமல் செரிக்க எண்ணி
    திடமான சிந்தனைகள் கொண்டு இங்கே
    ...திண்ணமாக நின்றிருக்கும் மிருக மன்றோ
    இடங்கொடுத்தால் இப்புவியின் திசைக ளெல்லாம்
    ...இச்சையுடன் சுற்றிவரும் குதிரை யன்றோ..

    உளமுழுதும் போகின்ற் பாதை நோக்கி
    ..உணர்வுகளை ஒருங்கிணைத்து நிற்கும்போது
    குளம்புகளை நன்றாகத் தரையில் தேய்த்து
    ..கண்க்ளிலே கொண்டுவிடும் ஊக்கம் தன்னை
    புல்ம்சென்று ஏறியதும் தட்டி விட்டால்
    ..புரவியதும் பறந்திடுமே வழியைப் பார்த்து
    களம்பலவும் கண்டமன்னர் வெற்றி எல்லாம்
    ..கொண்ட்துவும் குதிரைகளின் திறமை யாலே..



    கற்பனைக் குதிரை என்போம் காரிய மாற்று தற்கு
    விற்பனை செய்வ தற்கும் வேகமாய்க் குதிரை போல
    நிற்காமல் ஓடு என்போம் நேரிழை கன்வில் வந்தால்
    சிற்றிடை பற்றி ஏற்றிச் செல்வதும் புரவி யில்தான்
    *

  7. #266
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மேலமாசி வீதியில் ஒரு மிதி மிதித்து
    ஆரியபவன வ்ந்த்தும் இடம்திரும்பி
    நேரே சென்றால்
    மேங்காட்டுப் பொட்டல்..
    ஜான்சி ராணிபூங்கா எதிரில் ஒய் எம் சி ஏ..
    நடுவில் குதிரைவண்டிகளின் வரிசை..

    சில வண்டிகளில் குதிரைகள்
    பூட்ட்ப் பட்டு
    சாதுவாய்
    புதிதாய் வீட்டிற்கு வந்திருக்கும்
    நாட்டுப் பெண்போல தலை குனிந்து
    கொஞ்சம் ஆடிய படி நின்றிருக்கும்
    சில வண்டியிலிருந்து
    அவிழ்த்து விடப்பட்டு
    குனிந்து இரும்பு வாளியில்
    வைக்கப்பட்டிருக்கும்
    புல், கொள் எதையாவது
    உண்டு கொண்டிருக்கும்
    அருகில் சென்று தொட்டாலோ
    முனிவர் போல அருட்பார்வை பார்த்து
    மறுபடி குனியும்..

    சிகப்பு.
    மங்கிய வெள்ளை,
    கறுப்பு வெள்ளை என
    கலந்து கட்டிய நிறங்களில்
    அழுக்காகவும்
    அதைவிட அழுக்காக
    வண்டிக்காரன்..

    உலகத்தில் மற்ற்விஷயங்களை விட
    குதிரைவண்டிக்காரனிடம் தான்
    மக்கள் பேரம்செய்வர்..
    எட்டணா அவனிடம் குறைத்தால்
    ஏதோ இமயத்தைத் தொட்டாற்போல்
    பெருமிதம் கொள்வோரும் உண்டு..

    காலப் போக்கில்
    கொஞ்ச்ம் கொஞ்சமாய்
    அந்த குதிரை வண்டி நிலையம் மாறி
    குதிரைகளும்
    காணாமற் போயின..

    இப்போது
    அந்த இடம் கடந்தால்
    கண்டிப்பாய் வரும்
    குதிரை வாசனை..

    **

  8. #267
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **

    ப்ஹா ப்ஹா..ப்ஹா..

    மரக்கலரில் ஜீன்ஸ்
    வெள்ளையாய் மேலுடை
    அதே நிறத்தில் காலணிகள்
    பஃபென்று கூந்தல் அலைபாய
    ஓடிவ்ந்து நின்றவளைப் பார்க்கையில்
    சிரிப்பு வர.,..
    ‘ஏய்.. உனக்காக
    காலங்காத்தாலே பாக்க ஓடி வந்தா
    என்ன சிரிப்பு’
    ‘கிட்ட்த் தட்ட குதிரை மாதிரி இருக்கே..
    பிடரில அழகாய் முடி அலை மோதுது..
    நெற்றிநுனியில் சின்னதாய்
    ஒற்றை வரியாய் இறங்கும் வியர்வை..
    என்னை இலக்கு வைத்து ஓடி வரும்
    உன் எண்ணம்..’
    ‘யோவ் குதிரை முட்டினால்
    எப்படி இருக்கும் தெரியுமா..’
    சற்றே பின்சென்று
    முட்டுதற்போல் வந்தவளை
    இடைபற்றி அணைத்து...
    ‘அடியே நீ என் காதல்குதிரை’ என்றால்
    முறைத்துப் பின் சிரித்தாள்.
    மேலும்
    ‘குதிரைகளை அடக்குவது சுலபம்..
    உன்னை..மிக்க் கஷ்டம் ஆ ஆ..’

    குதிரை கிள்ளினால் இப்படித் தான் இருக்கும்..
    திரும்பி அவள் ஓட ஆரம்பிக்க
    நானும் ஆண்குதிரையாய் மாறித் தொடர்ந்தேன்...

  9. #268
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    V.G.
    Please continue...
    You have the requisite knowledge too, to write on horses. (I did not expect....)
    B.I. Sivamaalaa (Ms)

  10. #269
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சுப்புலட்சுமிக்கு எப்போதும்
    சிறுவயது முதல்
    குதிரைக் கனவுகள் வரும்..
    எப்பொழுதும் வரும் குதிரைகள்
    இவள் கண்ணசைவில் மெல்ல நிற்கும் நகரும் பறக்கும்
    திரும்பிய பின் ஒவ்வொன்றாய் அருகில் வந்து
    உரசும்..
    இவளும் பிடரியைச் செல்லமாய் தடவ
    விழித்துக் கொள்வாள்..

    வயது வந்தபின் கனவில்
    சிலசமயம்
    சின்னதாய்த் தலைப்பாகையுடன்
    முகமறியா ஆடவன்
    இவளை அள்ளித் தூக்குவான்
    பின் சுழன்று பறந்து மறைவான்..

    அம்மாவிடம் சொல்ல சிரிப்பாள்..
    ஆமாண்டி நீயும் ராஜகுமாரி மாதிரிதான் இருக்கே
    ஒரு ராசாமகன் தான் வருவான்..
    ஆனா குதிரைக் கனவா சொல்றதப் பாத்தா
    குதிரைக்காரன் தான் வருவான் போல..

    கடைசியில் சிக்கியது
    குதிரைக் காரன் தான்..
    துபாயில் வேலையாம்
    ஷேக்கின் குதிரைகளைப்
    பராமரிப்பவனாம்..
    கை நிறைய சம்பளமாம்..
    மனம் போல மாங்கல்யமடி உனக்கு
    அம்மா சொன்னாலும்
    உள்ளுக்குள் நினைத்தாள்
    இன்னும் வேறு வரனா பார்த்திருக்கலாமோ

    சுப்புவிற்குக் குஷி..
    கையில் மெஹந்தி கழுத்தில் தொங்கத் தொங்கத் தாலி
    துபாய் சென்றால்
    கணவனுக்குப் பேச்செல்லாம் குதிரைபற்றித்தான்..

    அதுக ஒரு நாளைக்கு
    மூணு மணி நேரம் தான் தூங்கும் தெரியுமா..
    அதுவும் நின்னுக்கிட்டு தான்
    விட்டு விட்டு தூங்கும்..
    ரொம்ப களைப்புன்னா தான்
    படுக்கும்..
    எரிச்சல்னா வால் சுழற்றும்..
    நல்ல ஜீவன்கள்..

    வேலைக்குச் சென்றால்
    தினமும் நள்ளிரவு தான் வருகை..
    கொஞ்சம் மெலிதான மோசமான் வாசனை வரும்..
    பின் தூங்க சில நேரம்..

    சுப்புவிற்கு முதலில் அதிர்ச்சி
    பின் கொஞ்சம் பழக
    குதிரைகளைக் காட்டுவீங்களா..

    கல்யாணமாய் இரண்டுமாதங்கள் கழித்து
    தயங்கிக் கேட்க
    சரி நாளை எனவும்
    காலையிலேயே விழித்து
    அழகாய் உடையுடுத்தி
    கோவில் கடையில் சொல்லி வாங்கிய
    மல்லிகை கூந்தலில் இருத்தி
    அவனிடம் ’நல்லா இருக்கா’
    பதில் சொல்லாமல்’சீக்கிரம் வா..
    அதுகளுக்கு உணவு வைக்கணும்”
    சென்றால்..

    லாயத்தில் ஏக்க் குதிரைகள்..
    கணவன் அவளை விட்டுவிட்டு
    எதற்கோ உள் செல்ல
    ஒவ்வொன்றாய் தொட்டு தொட்டு
    பரவசப் பட்ட்வள்..
    கன்வில் வருவதைப் போல
    ஒரு கரிய நிறக் குதிரையைப் பார்த்துத்
    தடவி..
    மெல்லச் சொன்னாள் அதனிடம்..

    உனக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்யாசம்
    தெரியுமா..
    நீ நிறக்குருடு..
    அவர் மனக் குருடு..

    சின்னதாய் கண்ணோரம் நீர் உதிர
    அமைதியாய் அவளை
    அசைபோட்டபடி பார்த்த்து குதிரை...
    Last edited by chinnakkannan; 6th October 2011 at 09:38 PM.

  11. #270
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நீ நிறக்குருடு..
    அவர் மனக் குருடு.
    Your punchline is very powerful. Well done.
    B.I. Sivamaalaa (Ms)

Page 27 of 51 FirstFirst ... 17252627282937 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •