Page 26 of 51 FirstFirst ... 16242526272836 ... LastLast
Results 251 to 260 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #251
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
    *
    பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
    மெய்யுள் செலுத்துவோ மே..

    ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
    சிறுவயிற்றை சோபித்தீர் தான்..

    மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
    சாறுதான் சோயாவா சொல்..
    (சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)

    மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
    ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
    தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
    பூந்தென்றல் தீண்டிய பூ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #252
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பானை வயிற்றுடனே பாந்தநடை கொண்டுவரும்
    யானைக்கும் பாக்களைத் தா(ரும்)

  4. #253
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வெண்பா வேண்டாம்..விருத்தமாய்த் தருக..

    **
    ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதிப் பார்த்தது..
    *
    மழைமுன்வரும் சிறுகாற்றென மகிழ்விக்குமுன் வதனம்
    அலையால்வரும் சலனங்களில் அசைந்தாடிடும் கடலில்
    வலைவீசிடும் வலைஞர்வலை விழும்மீனென திகைத்தென்
    நிலைமாறிடச் செயினும்பல நெடுநாளுளம் இருக்கும்..

    கனவில்நிதம் கனிவாய்முகம் களிகாட்டியே சிரித்தே
    நனவில்பல தினமும்விதம் விதமாய்க்கதை படிக்கும்
    ரணமானசொல் ரதியானவுன் ஒருபார்வையில் கரைந்தே
    கணமும்மறைந் திடவேமனம் எளிதாகியே விடுமே

    தனியாயெனைத் தயங்காமலே தளர்வாக்குதல் முறையோ
    பணிவாயெனைப் பருவத்திலே அணைபோட்டிட வருவாய்
    இனிமையினி யெனவேநினைத் திதயம்மகிழ்ந் திடவும்
    பனிபோலவே மனமாறிட எனைச்சேர்ந்திடு அழகே..

  5. #254
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
    *
    பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
    மெய்யுள் செலுத்துவோ மே..

    ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
    சிறுவயிற்றை சோபித்தீர் தான்..

    மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
    சாறுதான் சோயாவா சொல்..
    (சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)

    மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
    ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
    தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
    பூந்தென்றல் தீண்டிய பூ
    கலக்குறீங்க பாஸ் !!!!

  6. #255
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    உணர்வுடன் - தளை தட்டி விட்டது..உணர்ந்து என மாற்றி..

    மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
    ஊன்இல்லாச் சோற்றை உணர்ந்து கொடுத்தவும்
    தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
    பூந்தென்றல் தீண்டிய பூ

  7. #256
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முன்பு எழுதிய ஒரு விருத்தக்கதை..பலவருடங்க்ளுக்கு முன்னால்.. எழுதிப்பார்த்தது..
    திண்ணையிலும் பிரசுரமானது..
    **
    ’வெளி’யில் இருக்கும் கடவுளர்க்கு
    ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு
    வெளியில் வந்து நின்றாலே
    ...வருவோர் போவோர் தெரிவதுண்டு
    உளியால் வரைந்த ஓவியங்கள்
    ...ஒன்றா இரண்டா பலவுண்டு
    நளினங் கொண்ட நல்லவர்கள்
    ...நன்றாய் அதனை நடத்திவந்தார்

    இடையில் இருக்கும் குழவிமுதல்
    ...இனிதாய்ச் சிரிக்கும் நங்கையரும்
    கடைசிக் காலம் தனையெண்ணி
    ...கசிந்தே உருகும் கிழவியரும்
    விடையைக் கேட்கும் சிறுவனென
    ...விடையைத் தேடும் கிழவ்ருமாய்
    நடையைத் திறந்தால் தெரிந்திடுமே
    ...நன்றாய் ஏதோ புரிந்திடுமே..

    வாசலதைத் திறந்துவிட்டால் வழியி லெல்லாம்
    ... வாசமலர் நறுமணங்கள் மனதை யள்ளும்
    காசதனைக் காண்பதற்கு இரண்டு பூக்கள்
    ...கரங்களிலே தொடுத்திடுமே உயிராய்ப் பூக்கள்
    பாசமுடன் மக்களும்தான் வாங்கிச் செல்வர்
    ...பக்தியுடன் கோவிலினுள் வேண்டுதற்கு
    நாசமென வருகின்ற தீமை எல்லாம்
    ...நலமுடனே விலகுதற்குப் பூவால் சொல்வர்

  8. #257
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வளைந்த முதுகைக் கண்டுவிட்ட
    …வயதின் மூப்பூ ஒன்றதனின்
    இளைய பருவம் இழைத்துவிட்ட
    …இளம்பூ ஒன்று அதுவோதான்
    மழைபோல் சிரிக்கும் பேசாது
    …மனதுள் பேசும் கேட்காது
    களையாய்ப் பூவைத் தொடுத்தேதான்
    …கட்டும் பூவால் பேசிவிடும்..

    ஊமையாய் இருந்த பூவின் உணர்வதைத் தூண்டச்செய்ய
    …ஆமையாய்ச் சொந்தமொன்றை அன்னையும் கட்டிவிட்டாள்
    ஊமையை மண்ந்த மாறன் ஊரிலே உள்ள எல்லாத்
    …தீமையைத் தன்னுள் கொண்டு குடியிலே மூழ்குந்தீரன்..

    சக்கரம் மூன்று கொண்ட சாலையில் அழகாய் ஓடும்
    …வக்கணை யான வண்டி வசத்தினில் வைத்தி ருந்தான்
    திக்கெலாம் சென்றால் தானே திரவியம் கிடைக்குமன்றோ
    …மக்கெனச் சோம்பி நின்று மங்கையை வாட்டி வந்தான்.

  9. #258
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு நாள் கோவிலினுள்

    கலையாமல் மேகங்கள் ஒன்று கூடி
    …கண்களையும் கருத்தினையும் குளிர வைத்தே
    நிலையாக நீர் நிலைகள் நிரம்பும் வண்ணம்
    …நல்ல மழை வரவேண்டித் தேவர் மீது
    வளையாத எண்ணத்தில் வேதியர்கள்
    …வளமான யாகத்தைச் செய்யுங்காலம்
    சிலைபோன்ற கல்மனதும் உருகும் வண்ணம்
    …சிறப்பாக மந்திரங்கள் சொல்லி வந்தார்..

    கோவிலின் வெளியே ஊமைப் பெண்ணின் கணவனோ..

    இலவு காத்த கிளிபோல
    …இருக்கின்றாயோ நீயடியே
    செலவுக்கெனக்கோ பணம்வேண்டும்
    …சொர்க்கம் தன்னைப் பார்ப்பதற்கு
    களவு ஏதும் செய்தாயோ
    …காசோ எங்கே எனக்கேட்டு
    நிலவைத் தரையில் போட்ட்டித்தான்
    …நுதலில் வண்ணம் வரவழைத்தான்

    பூவதனை நசுக்கிவிட்டே திரும்பியவன் மீது
    …புலம்வந்த வாகன்ந்தான் மோதிவிட்டுச் சற்றும்
    பாவமென எண்ணாமல் பார்க்காமல் மேலும்
    …வேகத்தைக் கூட்டிவிட்டு விரைந்தோடிச் செல்ல
    ஆவென்றே அலறியந்த அணங்கவளும் ஓடி
    …காலதனில் அடிபட்ட கணவனையும் நாடி
    தாவித்தான் தன்சேலைத் துணிகிழித்துக் கட்டி
    …தக்கபடி மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றாள்

  10. #259
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சற்றுமுன்னே அடித்தவந்தான் என்று சற்றும்
    …சங்கடமாய்ச் சிந்தனைகள் கொள்ளா மென்மை
    பற்றுடனே அவனருகில் பதறிச்சென்று
    …பரிவுடனே கட்டிவிட்டபாசத்தன்மை
    கற்றவர்க்குக் கிடைத்திடுமோ இந்த ஞானம்
    …கன்னியவள் வாய்மொழியாய்ச் சொல்லா உண்மை..
    நற்றமிழில் பெண்மையதன் சிறப்பைச் சொல்ல
    …நாலுபக்கம் போதாதே என்ன செய்ய..

    கண்பலவாயிரம் கொண்டசெவ் வானமக் காட்சியினை
    மண்ணிலே கண்டுவிட்டு நெஞ்சில் மயங்கிட மேகத்தை
    விண்ணிலே கூட்டியே வேகமாய் நல்ல இடிமுழக்கப்
    பண்ணை இசைத்தே மழையினைப் பாரில் பொழிவித்த்தே..

    வீட்டிற் கெதிரே கோயிலுண்டு வேண்டும் தெய்வம் வெளியிலுண்டு
    …நீட்டும் கரத்தை அழகாக நேசங்கொண்டே அணைப்பவளைத்
    தீட்ட நினைத்தே கேட்டேன்நான் தங்கப் பெயரை மனைவியிடம்
    …பாட்டில் வல்ல பாரதியால் பாவை அவளை அழைப்பாராம்..

  11. #260
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..

Page 26 of 51 FirstFirst ... 16242526272836 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •