-
17th December 2005, 11:47 PM
#1
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
-
17th December 2005 11:47 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2005, 11:56 PM
#2
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
-
18th December 2005, 12:10 AM
#3
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
என் இனமே...! என் சனமே...!
என்னை உனக்குத் தெரிகிறதா?
எனது குரல் புரிகிறதா?
என் இனமே...! என் சனமே...!
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்
என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
என் இனமே...! என் சனமே...!
அன்னை தந்தை எனக்குமுண்டு
அன்பு செய்ய உறவும் உண்டு
என்னை நம்பி உயிர்கள் உண்டு
ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு
என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்
என் இனமே...! என் சனமே...!
பாசறை நான் புகுந்த இடம்
பதுங்கு குழி உறங்குமிடம்
தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடன்
மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்
என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்
என் இனமே...! என் சனமே...!
என் முடிவில் விடிவிருக்கும்
எதிரிகளின் அழிவிருக்கும்
சந்ததிகள் சிரித்து நிற்க
சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்
என் இனமே என் சனமே
என்னை உனக்குத் தெரிகின்றதா
எனது குரல் புரிகிறதா
அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்
என் இனமே...! என் சனமே...!
-
18th December 2005, 12:23 AM
#4
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
சாவினைத் தொழுது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
-
18th December 2005, 12:35 AM
#5
Junior Member
Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்
போகாத வழி மீதில் ஆர் போயினார்கள்
பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணினார்கள்
ஆகாதசெயல் ஒன்றை ஆரே புரிந்தோம்
அலை மீதில் உவர் நீரை உழவே அலைந்தோம்
இருளோடு வெளியேறி வலை வீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறலாகும்
ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்
ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்
சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்
Bookmarks