Results 1 to 5 of 5

Thread: Poems of Tamil Eelam

  1. #1
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber KARTHIGAIPOO's Avatar
    Join Date
    Jul 2005
    Posts
    16
    Post Thanks / Like

    Poems of Tamil Eelam















    தேரடியில் காலையிலே...



    தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
    நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
    காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
    கண்டு மனமிரங்கவில்லை முருகா

    கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
    கண்டு மனமிரங்கவில்லை முருகா

    நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
    தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
    வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
    துள்ளி வந்து சேரலையே முருகா

    வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
    வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
    ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு
    எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

    செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
    உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
    வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்
    வல்ல புலி வெல்லுமடா முருகா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber KARTHIGAIPOO's Avatar
    Join Date
    Jul 2005
    Posts
    16
    Post Thanks / Like
    [tscii]









    தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

    தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
    சந்தனப் பேழைகளே! - இங்கு
    கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
    குழியினுள் வாழ்பவரே!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
    உறவினர் வந்துள்ளோம் - அன்று
    செங்களம் மீதிலே உங்களோடாடிய
    தோழர்கள் வந்துள்ளோம்.

    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
    இங்கே திறவுங்கள்.
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
    மறுபடி உறங்குங்கள்.

    நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
    நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
    கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
    சத்தியம் செய்கின்றோம்
    சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
    சந்ததி தூங்காது – எங்கள்
    தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
    தாகங்கள் தீராது.

    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
    இங்கே திறவுங்கள்.
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
    மறுபடி உறங்குங்கள்.

    உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
    உரைத்தது தமிழீழம் - அதை
    நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
    நிச்சயம் எடுத்தாள்வோம்
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
    தனியர(சு) என்றிடுவோம் - எந்த
    நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
    நினைவுடன் வென்றிடுவோம்.

    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
    இங்கே திறவுங்கள்.
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
    மறுபடி உறங்குங்கள்.

  4. #3
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber KARTHIGAIPOO's Avatar
    Join Date
    Jul 2005
    Posts
    16
    Post Thanks / Like
    என் இனமே...! என் சனமே...!
    என்னை உனக்குத் தெரிகிறதா?
    எனது குரல் புரிகிறதா?


    என் இனமே...! என் சனமே...!

    மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்

    என் இனமே என் சனமே
    என்னை உனக்குத் தெரிகின்றதா
    எனது குரல் புரிகிறதா


    என் இனமே...! என் சனமே...!

    அன்னை தந்தை எனக்குமுண்டு
    அன்பு செய்ய உறவும் உண்டு
    என்னை நம்பி உயிர்கள் உண்டு
    ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு

    என் இனமே என் சனமே
    என்னை உனக்குத் தெரிகின்றதா
    எனது குரல் புரிகிறதா


    மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

    என் இனமே...! என் சனமே...!

    பாசறை நான் புகுந்த இடம்
    பதுங்கு குழி உறங்குமிடம்
    தேசநலன் எனது கடன்
    தேன்தமிழே எனது திடன்

    மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்

    என் இனமே என் சனமே
    என்னை உனக்குத் தெரிகின்றதா
    எனது குரல் புரிகிறதா
    அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

    என் இனமே...! என் சனமே...!

    என் முடிவில் விடிவிருக்கும்
    எதிரிகளின் அழிவிருக்கும்
    சந்ததிகள் சிரித்து நிற்க
    சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்

    அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே சுவாசிப்பவன்

    என் இனமே என் சனமே
    என்னை உனக்குத் தெரிகின்றதா
    எனது குரல் புரிகிறதா
    அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்
    அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்


    என் இனமே...! என் சனமே...!

  5. #4
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber KARTHIGAIPOO's Avatar
    Join Date
    Jul 2005
    Posts
    16
    Post Thanks / Like
    ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
    ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்

    வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
    வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்

    சாவினைத் தொழுது தாங்கிய காவிய
    சந்தன மேனிகளே!
    உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
    ஆரை நினைத்தீரோ!
    நீங்கள் யாரை நினைத்தீரோ..!

    வாசலில் காற்றென வீசுங்கள்
    உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

    வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
    வீரக் கொழுந்துகளே!
    உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
    என்ன நினைத்தீரோ!

    வாசலில் காற்றென வீசுங்கள்
    உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

    சாவினைத் தொழுது தாங்கிய காவிய
    சந்தன மேனிகளே!
    உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
    ஆரை நினைத்தீரோ!
    நீங்கள் யாரை நினைத்தீரோ..!

    தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
    சாவைச் சுமந்தவரே!
    உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
    ஆரை நினைத்தீரோ!

    தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
    தாயை நினைத்தீரோ!
    உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
    கையை நினைத்தீரோ!

    வாசலில் காற்றென வீசுங்கள்
    உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

    சாவினைத் தொழுது தாங்கிய காவிய
    சந்தன மேனிகளே!
    உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
    ஆரை நினைத்தீரோ!
    நீங்கள் யாரை நினைத்தீரோ..!

    நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
    நாயகனை நினைத்தீரோ!
    உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
    சோகம்தனை நினைத்தீரோ!

    வாசலில் காற்றென வீசுங்கள்
    உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.

    சாவினைத் தொழுது தாங்கிய காவிய
    சந்தன மேனிகளே!
    உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
    ஆரை நினைத்தீரோ!
    நீங்கள் யாரை நினைத்தீரோ..!

  6. #5
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber KARTHIGAIPOO's Avatar
    Join Date
    Jul 2005
    Posts
    16
    Post Thanks / Like
    சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
    சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
    கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
    கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

    ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
    ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே

    வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்
    வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
    எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
    எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்


    போகாத வழி மீதில் ஆர் போயினார்கள்
    பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணினார்கள்
    ஆகாதசெயல் ஒன்றை ஆரே புரிந்தோம்
    அலை மீதில் உவர் நீரை உழவே அலைந்தோம்


    இருளோடு வெளியேறி வலை வீசினாலும்
    இயலாது தரவென்று கடல் கூறலாகும்
    ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்
    ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்


    சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
    சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
    கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
    கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

Similar Threads

  1. Eelam Songs
    By dusee80 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 13th March 2009, 08:47 PM
  2. Eelam Poetry from Kaasi Ananthan
    By Nedunchezhiyan in forum Poems / kavidhaigaL
    Replies: 6
    Last Post: 28th December 2005, 01:45 PM
  3. Two Poems (Querida)
    By RR in forum Hub Magazine Archive - 2005
    Replies: 3
    Last Post: 17th October 2005, 10:09 AM
  4. Meaning of Eelam & Dravidian Settlements in Ceylon
    By maaveerar in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 23rd April 2005, 08:15 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •