Page 197 of 216 FirstFirst ... 97147187195196197198199207 ... LastLast
Results 1,961 to 1,970 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1961
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள்- கமல் உருக்கம் - VIKATAN

    அண்மையில் கமல் வெளியிட்டதாகச் சொல்லப்பட்ட அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கமலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கமல் வெளியிட்டிருக்கும் விளக்கம்.....
    நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.
    என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.
    ன் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.
    பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
    இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.
    பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
    வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
    தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்" இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1962
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வெள்ள நிவாரணம்... நடிகர் ஷாரூக்கான் ரூ 1 கோடி அறிவிப்பு




    மும்பை: சென்னை வெள்ள நிவாரணத்துக்காக ரூ 1 கோடியைத் தருவதாக நடிகர் ஷாரூக்கான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை மாநகரம் சமீபத்திய புயல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைகிறேன். அதே நேரம், இந்த சோதனையும் துயரமும் மிக்க தருணத்தில் சென்னை மக்களின் அமைதியும், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு கடுமையான சூழலிருந்து மேலெழுந்து வரும் பாங்கும் எங்களை பெருமைப்பட வைக்கிறது. இந்தத் துயரிலிருந்து மக்களைக் காக்க உங்கள் அரசும் பிறரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம். சென்னை மக்களின் துயர் துடைக்க எங்கள் ரெட் சில்லி நிறுவனம் மற்றும் தில்வாலே படக்குழுவின் சார்பாக ரூ 1 கோடியை வழங்குகிறோம். தயவு செய்து இந்தத் தொகையை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய நடிகர்களில் இதுவரை யாரும் வழங்காத பெரும் தொகையை ஷாரூக்கான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Actor @iamsrk gave 1cr to TN flood relief...!





    Last edited by balaajee; 7th December 2015 at 10:06 PM.

  4. #1963
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Freaked out after losing home for first time: Actor Siddharth to NDTV


  5. #1964
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா

    தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.
    தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.
    இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.
    வசூலில் ரஜினியை நெருங்கிய அஜித்- முழு விவரம்
    தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றால் ரஜினி, விஜய், அஜித் தான். இவர்களின் சாதனையை இவர்களே உடைத்தால் தான் உண்டு.
    அந்த வகையில் விஜய், அஜித்திற்கு மேல் என்றும் எதிலும் நம்பர் 1ஆக இருப்பது சூப்பர் ஸ்டார் தான். அந்த இடத்தை அடைய தான் இருவரும் போராடி வருகின்றனர்.
    அந்த வகையில் வேதாளம் மலேசியா பாக்ஸ் ஆபிஸில் தற்போது வரை MYR 8,063,792 வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் சிவாஜி MYR 8,589,800 வசூல் செய்துள்ளது.
    இன்னும் சில வாரங்கள் இதே வசூல் நீடித்தால் வேதாளம் சிவாஜியை பின்னுக்கு தள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆனால், எவரும் எட்ட முடியாத இடத்தில் எந்திரன் தான் இன்றும் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
    சத்தியமாக யாராலும் முடியாது- சித்தார்த்
    சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடி ஓடி உதவியவர் சித்தார்த். இவர் இன்று கடலூர் சென்றுள்ளார்
    இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதல்வரால் தான் இத்தனை சீக்கிரம் இயல்பு நிலைக்கு வர முடிந்தது.
    வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஆகியிருந்தால் இத்தனை சீக்கிரம் மீண்டிருக்க முடியாது, என தமிழக முதல்வரை புகழ்ந்துள்ளார்.
    மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுத்த ரகுமான்
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் சமீபத்தில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகவும் வருந்தி ஒரு சில கருத்துக்களை வெளியிட்டார்.
    சமீபத்தில் வந்த தகவலின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகுமான் ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாராம்.
    இதுமட்டுமின்றி பல பிரபலங்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
    கடலூர் முழுவதும் சிவகார்த்திகேயன் பேச்சு தானாம்
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவர் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்தார்.
    இந்நிலையில் சென்னை மட்டுமின்றி கடலூரிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தற்போது தான் கடலூரை கவணிக்க ஆரம்பித்துள்ளனர்.
    ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்திலேயே பல உதவிகளை செய்துள்ளாராம். இதை டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘என்ன சார் கடலூரில் எங்கு சென்றாலும் உங்களை பற்றி தான் பேச்சு’ என்று கூறியுள்ளார்.
    மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அதை மட்டும் செய்யாதீர்கள்- ஜெயம் ரவி வேண்டுக்கோள்
    தனி ஒருவன் 100வது நாள் வெற்றியெல்லாம் ஓரங்கட்டி மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. இவர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகிறார்.
    இந்நிலையில் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்தார். அதில் அவர், ஒரு செய்தியை குறிப்பிட்டுயிருந்தார்.
    அது என்னவென்றால், 'உதவி செய்யுங்கள், ஆனால், அவர்களிடம் நின்று போட்டோ எடுத்துக்கொள்ளாதீர்கள்' என கூறியிருந்தார்.
    மக்களுக்காக இப்படி இறங்கினாரா பார்த்திபன்? படம் உள்ளே
    எப்போதும் தன் படங்களில் தொடர்ந்து புரட்சிகரமான களத்தை தொடுபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் பல உதவிகளை செய்தார்.
    இதில் ஒரு படி மேலே சென்று தானே தண்ணீரல் இறங்கி மக்களுடன் இணைந்து வேலை பார்த்தார்.
    இதைக்கண்ட மக்கள் அனைவரும் சினிமாவில் மட்டுமில்லை நிஜத்திலும் பார்த்திபன் ஹீரோ தான் என்று கூறியுள்ளனர்.
    ஹன்சிகாவிற்கு நன்றி தெரிவித்த டிடி
    தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் டிடி. இவர் தான் சின்னத்திரை பெண் தொகுப்பாளர்களில் நம்பர் 1.
    இவர் சென்னையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இது மட்டுமின்றி தன் சமூக வலைத்தள பக்கத்தில் பல விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
    இந்நிலையில் சென்னை நிவாரணத்திற்கு ஹன்சிகா ரூ 15 லட்சம் கொடுத்துள்ளார். இதற்கு பிரபலங்களில் முதல் ஆளாக தன் நன்றியை டிடி, ஹன்சிகாவிற்கு கூறியுள்ளார்.

  6. #1965
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Mana Madras Kosam - Fundraising Event By Film Stars Stills


  7. #1966
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Director @shankarshanmugh has donated Rupees 10 Lakhs for flood relief to CM's Relief Fund through RTGS


    Directors / Actors Cheran & Ameer cleared the trashes in streets with the help of Govt workers

  8. #1967
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Jiiva joined a Medical Camp organized by #SurgicalAvenue today...





    Actress Sri Divya donates Rupees 10 Lakhs for flood relief to CM's Relief Fund through Nadigar Sangam!


  9. #1968
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  10. #1969
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    போர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களை பட்டியலிட்டு வெளியிடுவர். தற்போது இந்த வருடத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    தமிழ் நடிகர்களான தனுஷிற்கு 37வது இடமும், ரஜினிகாந்திற்கு 69வது இடமும், சூர்யாவிற்கு 71வது இடமும் ஆர்யாவிற்கு 80வது இடமும் கிடைத்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் அஜித், விஜய் இடம்பெறவில்லை.


  11. #1970
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    Lol. Arya above Ajith and Vijay and has earned 29 crores in this year. He shud be a happy chap

    Sent from my SM-G531F using Tapatalk
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •