-
29th June 2015, 05:15 PM
#1791
Senior Member
Veteran Hubber
சௌத்ல எல்லோருமே அப்படித்தான் - சபாஷ் போடவைத்த ரஹ்மான்
குத்தாமல் குடையாமல் மரியாதையுடன் ஒரு தமிழ் கலைஞனை அவர்கள் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அது ரஹ்மான் மட்டும்தான். அவர்களின் கர்வத்தைத் தாண்டிய கௌரவத்தை சர்வதேச அளவில் ரஹ்மான் பெற்றிருப்பதால் வந்த பணிவாக இருக்கலாம்.
பேட்டியில், ரஹ்மானின் எளிமை மற்றும் பணிவு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் சொன்ன பதில் யாரையும் சபாஷ் போட வைக்கும். தன்னை குறித்த அந்தக் கேள்விக்கு தென்னிந்திய கலைஞர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பதிலை தெரிவித்தார். எப்படி?
தென்னிந்திய கலைஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இந்த குணங்களை (பணிவு, எளிமை) கொண்டிருப்பதாக நினைக்கிறேன் என்றார்.
தென்னிந்திய கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நற்குணங்கள் சொந்தம் என்று கூறவும் ஒரு பரந்த மனம் வேண்டும்.
ரஹ்மானின் வெற்றியில் அவரது இந்த மனவிசாலத்துக்கும் முக்கிய பங்கு உண்டு.
-
29th June 2015 05:15 PM
# ADS
Circuit advertisement
-
29th June 2015, 05:37 PM
#1792
Senior Member
Veteran Hubber
நாயகனாக படங்களை அடுக்கும் ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ச்சியாக நாயகனாக நடிக்க பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வரும் இப்படத்தில் ஆர்யா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கெளவர வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய குணா மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுத, வசனங்களை அட்லீ எழுத இருக்கிறார். இப்படத்திற்கு 'கெட்ட பயடா இந்த கார்த்தி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து பாண்டிராஜின் இணை இயக்குநர் பிரசாந்த் இயக்க இருக்கும் 'பாட்ஷா என்கிற ஆண்டனி' என்ற படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் வசனங்களை இயக்குநர் பாண்டிராஜ் எழுத இருக்கிறார்.
'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் 'பாட்ஷா என்கிற ஆண்டனி' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் 'டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
-
30th June 2015, 12:28 PM
#1793
Senior Member
Veteran Hubber
நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்
சென்னையில் நடந்த, ‘உயிரே உயிரே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளம் நடிகர்களை, நடிகை ராதிகா விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என திரைப்பட இயக்குநர் ராஜசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் திரைப்பட இயக்குநர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நான் இயக்கி வரும், ‘உயிரே உயிரே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நடிகை ராதிகா பேசும்போது, “இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. வானத்தை பார்த்து மேலே எச்சில் துப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
ஒரு படத்தின் விழா மேடையில் அந்த நடிகர், நடிகைகளை பற்றியோ, அதில் பணிபுரியும் டெக்னீசியன் பற்றியோதான் பேச வேண்டும். ஆனால், அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்சினையை மறைமுகமாக ராதிகா பேசியதுகண்டிக்கத்தக்கது.
இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். ஒருவருக்கு ஒரு கதை செட் ஆகவில்லை என்றால், அந்த கதைக்கு யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு மற்ற இளம் நடிகர்கள் சிபாரிசு செய்கின்றனர். அந்த அளவுக்கு இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.
மூத்த நடிகர்கள் அனைவரும் இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாதான் பொக்கிஷம் என மோகன்பாபு தெரிவித்தார். அப்படி இருக்கையில் இதுபோன்ற தவறான கருத்தை ராதிகா தெரிவித்தது நாகரிகமற்றது. இவ்வாறு ராஜசேகர் கூறினார்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th June 2015, 02:34 PM
#1794
Senior Member
Veteran Hubber
'இன்று நேற்று நாளை' 2-ம் பாகம்
விரைவில் உருவாகிறது 'இன்று நேற்று நாளை' 2-ம் பாகம்- Tamil HINDU
'இன்று நேற்று நாளை' படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கின்றன.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, புதுமுக இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து தயாரித்தார்கள்.
ஜூன் 26ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெளியான 3 நாட்களில் சுமார் 3 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும், திரையரங்குகளும் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
'இன்று நேற்று நாளை' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தில் கதை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இன்னும் சில தினங்களில் 'இன்று நேற்று நாளை-2' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
-
1st July 2015, 02:18 PM
#1795
Senior Member
Veteran Hubber
நேற்றுடன் நிறைவடைந்தது பாயும்புலி
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்து வந்த பாயும்புலி படம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க, வேந்தர் மூவிஸ் படத்தை வழங்குகிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.
இதன் கடைசிப் பாடல் மரக்காணத்தில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தப் பாடல் நேற்று நிறைவடைந்தது. அத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கி செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுகின்றனர்.
-
2nd July 2015, 11:00 AM
#1796
Senior Member
Veteran Hubber
அடிக்கிறார், சந்தேகப்படுகிறார்... மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்கும் நடிகர் கிருஷ்ணா
திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தனது மனைவி தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து ரத்தக் காயமத் ஏற்படுத்தியதாகவும், மனரீதியாக டார்ச்சர் செய்வதாகவும் கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகர், கிருஷ்ணா.
கழுகு உள்பட பல படங்களில் நடித்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி. இப்போது அவர் யட்சன் படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது. திருமணமாகி 16 மாதங்களே ஆன நிலையில், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது -
ஹேமலதாவும், நானும் காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு பின்னர் வடபழனியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினோம். ஹேமலதா மனைவிக்குரிய கடமைகளை செய்யாமல், தேவையில்லாமல் என்னுடன் தகராறு செய்து வந்தார். அவரது சந்தேகபுத்தியினால் நடிப்புத் தொழிலில் என் மனதை செலுத்த முடியவில்லை.
வாழ்க்கையின் உண்மை நிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆடம்பரமான வாழ்க்கை நான் அவருக்கு செய்து கொடுப்பேன் என்று நினைக்கிறார். இதற்காக என்னை உடலாலும், மனதாலும் சித்ரவதை செய்தார். இதனால், சில நேரங்களில் எனக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டது. அவருடன் வாழ்ந்த 14 மாதங்களும், எனக்கு மனரீதியான பல கொடுமைகளை செய்தார்.
என் மனைவி வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்தாலும், அவருக்கு தேவையான அனைத்து செலவுகளையும் நானே செய்தேன். சினிமா படப்பிடிப்பு முடிந்து இரவில் வீட்டுக்கு வரும்போது கதவை திறக்க மாட்டார். இதனால் பல இரவுகள் நண்பர்களது வீட்டில் தங்கியிருக்கிறேன். இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என்மீது ஹேமலதா புகார் செய்தார்.
அப்போது நடந்த கவுன்சிலிங்கில், ஹேமலதா சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் அவரைவிட்டு பிரிந்து நான் தனியாக வசித்து வருகிறேன். கடந்த 18-ந்தேதி கோவை மாவட்ட போலீசார் எனக்கு போன் செய்து, என் மீது ஹேமலதா வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்றும் கூறினார் கள். திருமணத்தின்போது ஹேமலதா பெற்றோரிடம் வரதட்சணை எதுவும் நாங்கள் கேட்கவில்லை.
திருமணச்செலவுகள் அனைத்தையும் எனது பெற்றோர்தான் செய்தனர். ஆனால், என்னை துன்புறுத்தவேண்டும் என்பதற்காக சென்னையில் வசிக்கும் ஹேமலதா கோவை மாவட்ட போலீசில் என் மீது பொய் புகார் செய்துள்ளார். என்னை பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் அவருடன் இனி சேர்ந்து வாழ முடியாத நிலையில் உள்ளேன். எனவே கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி நடந்த எங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.
-
3rd July 2015, 02:30 PM
#1797
Senior Member
Veteran Hubber
பாம்பை கையால் பிடித்து வீசிய துணிச்சலான சரத்குமார்!
சென்னை: துணிச்சலாக பாம்பை கையால் பிடித்து வீசி இருக்கிறார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ராடன் அலுவலகம் அருகில் ரோட்டின் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அந்த வேன் ஓட்டுனர், வண்டியின் என்ஜின் பகுதியில் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சரத்குமார், தனது காரில் இருந்து கீழே இறங்கி சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரித்துள்ளார். அதற்கு வேன் ஓட்டுனர், பாம்பு உள்ளே இருக்கிறது, வெளியே வர மறுக்கிறது என்று கூறி இருக்கிறார்.
உடனே சரத்குமார், ஓட்டுனரிடமிருந்த குச்சியை வாங்கி தூர எரிந்துவிட்டு, என்ஜின் பகுதியில் பதுங்கி இருந்த பச்சைப்பாம்பை தனது கையால் பிடித்து எடுத்து கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அதிர்ச்சியில் பயந்து ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடி இருக்கிறார்கள்.
துணிச்சலாக பாம்பை கையில் பிடித்து வீசிய நடிகர் சரத்குமாரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி சென்றிருக்கிறார்கள்.
-
3rd July 2015, 02:35 PM
#1798
Senior Member
Veteran Hubber
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல: ஆவேசப்பட்ட இளையராஜா!
சென்னை: நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல என்று ராயல்டி சர்ச்சை குறித்து இளையராஜா ஆவேசமாக கூறினார்.
மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமை சங்கம் சார்பாக கடந்த 30 ஆம் தேதி சென்னை தி.நகர் வாணி மஹாலில் இசைஞானி இளையராஜாவின் அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் இளையராஜா பேசும்போது, ''எனக்கு முன்னால் நிர்வாகிகள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். பல்வேறு கருத்துகள் உங்கள் மனத்தில் இருக்கும். நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன்.
இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும்போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ்.
இதைச் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாகச் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை.
என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் ஐம்பது சதவீதத்துக்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்தச் செலவு, இந்தச் செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள்.
அதேபோல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது? அதனால் அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.
எவனோ ஒருவன் என் பெயரைச் சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதேபோல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள்.
குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள், அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தின் மூலம் இந்தப் பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம்.
இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போதே கூட ஒரு கமிட்டியைப் போடுங்கள். நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்? நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆர்.எஸ் போன்ற அமைப்புகளை சரியாக எதிர்கொள்ள முடியும். மீண்டும் ஒரு முறை வேண்டுமானாலும் இதுபோல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன்.
பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன்பெற நாம் பாடுபடுவோம்.
இங்கே அறிவிப்பாளர் பேசும்போது ஏழை இசைக் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக்கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை உலகிலேயே தினமும் தான் செய்யும் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்பவர்கள் இசைக் கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால்கூட ஒரு பாடலை தனக்குள்ளாகவே பாடி சந்தோஷப்பட்டு திருப்தி அடைபவன் இசைக் கலைஞன். உதாரணத்துக்கு ஷிவ சத்யாய.... பாடலைப் பாடிப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நாம் மட்டுமே என்பது புரியும்.
இந்தக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த எல்லோருக்கும் நன்றி. இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்திற்கு விரைவாக நீங்கள் முடிவெடுங்கள். சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்கள்" என்றார்.
-
6th July 2015, 06:29 PM
#1799
Senior Member
Veteran Hubber
சிக்கல் தீர்ந்தது: விரைவில் விக்ரம் படப்பிடிப்பு துவக்கம்
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தின் படப்பிடிப்புக்கு இருந்த சிக்கல் தீர்ந்ததால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. ப்ரியா ஆனந்த் அப்படத்தில் இருந்து விலக, பிந்து மாதவி அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரத்தில், தயாரிப்பாளர் தாணு அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று பிரச்சினை எழுப்ப படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அப்படத்திற்கு என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது, " 'பீமா' படத்துக்கு சிக்கல் நிலவி வந்த நேரத்தில், ஐங்கரன் நிறுவனம் உதவி செய்தது. அதற்கு பதிலாக ஒரு படம் பண்ணி தருவதாக விக்ரம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையை தாணுவிடம் வாங்கி இருந்தார்.
தாணு - ஐங்கரன் நிறுவனம் இருவருக்கும் இடையே, விக்ரம் படத்தை யார் தயாரிப்பது என்ற பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியில் ஐங்கரன் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு கிளம்ப இருந்த நேரத்தில் தாணு, நான் தான் தயாரிப்பேன் என்று மீண்டும் புகார் அளித்தார்." என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது தாணு - ஐங்கரன் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாகவும், ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தாணு ஒப்புக் கொண்டார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் மலேசியாவுக்கு படப்பிடிப்பு கிளம்ப இருக்கிறார்கள்.
-
8th July 2015, 02:27 PM
#1800
Senior Member
Veteran Hubber
தயாரிப்பாளர் தற்கொலை மிரட்டல், செல்வராகவன் அதிர்ச்சி?
இயக்குநர் செல்வராகவனின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலாபாஸ்கர், அவருடைய மகனைக் கதாநாயகனாக வைத்து மாலைநேரத்துமயக்கம் என்றொரு படத்தைத் தொடங்கினார்கள். அந்தப்படத்துக்கு செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிதான் இயக்குநர்.
இயக்குநர் என்று அவர் பெயரை வைத்துக்கொண்டு செல்வராகவனே இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தின் படப்பிடிப்பு சிலநாட்கள் நடந்தது. அதன்பின் அந்தப்படவேலைகளில் ஆர்வம் காட்டாமல் சிம்பு படத்தை இயக்கப்போய்விட்டார் செல்வராகவன். கீதாஞ்சலியும் அந்தப்பட வேலைகளில்தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
மகனைக் கதாநாயகனாக்குவதால் அந்தப்படத்துக்கு நிறையச் செலவு செய்துவிட்ட தயாரிப்பாளர் கோலாபாஸ்கர், இந்தப்படத்தை முடித்துக்கொடுங்கள் என்று பலமுறை கேட்டும் செல்வராகவன் அதற்கு சரியான பதில் சொல்லவில்லையாம். இதனால் அவர் செல்வராகவனிடம் கோபமாகப் பேசியதால் சிம்பு படத்துக்கு அவர் படத்தொகுப்பு செய்யவேண்டாம் என்று சொல்லி வேறு படத்தொகுப்பாளரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
அதன்பின்னும் மாலைநேரத்துமயக்கம் படத்தை முடித்துக்கொடுப்பது பற்றி எதுவும் பேசவில்லையாம். இதனால் கடும்கோபமான கோலாபாஸ்கர், என் படத்தை முடித்துக்கொடுக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்த விசயம் செல்வராகவனுக்குத் தெரிந்துவிட்டதாம்.
அந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை முடித்துவிட்டுத்தான் சிம்பு நடிக்கும் கான் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
Bookmarks