-
30th July 2015, 05:19 PM
#1821
Senior Member
Veteran Hubber
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு?
தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு இறுதியில் கோரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
குறைந்தது 100 கோடியாவது பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துவிடவேண்டும் என்பதற்காக தமிழில் செல்வந்தன் என்ற பெயரிலும் டப் ஆகி ஸ்ரீமந்துடு வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் கோடீஸ்வரனாக நடித்திருக்கும் மகேஷ்பாபு, தன்னுடைய சொந்த கிராமத்தை தத்து எடுத்து பல நலத்திட்ட உதவிகள் செய்வது போல் நடித்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.
பொழுதுபோக்குடன் சமுக கருத்தையும் முன்வைக்கும் படமாக ஸ்ரீமந்துடு தயாராகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான புரோமோஷனில் பிஸியாக இருந்தவர், “ தமிழில் படம் நடிக்க தயாராகவிருப்பதாகவும், தமிழில் டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடும் வகையில் ஒரு படம் நடிக்கத் தயாராகவிருப்பதாகவும் கூறினார். மேலும் கன்னட படங்களில் நடிப்பேன். ஆனால் இந்திப் படங்களில் நடிக்க தயாராகவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
30th July 2015 05:19 PM
# ADS
Circuit advertisement
-
31st July 2015, 12:08 PM
#1822
Senior Member
Veteran Hubber
கவலைக்கிடமான நிலையில் நடிகர் வினு சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி- webulagam
நடிகர் வினு சக்ரவர்த்தி சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முரட்டு உருவம், கரகர குரல். இந்த காம்பினேஷனை வைத்து காமெடியில் வெளுத்து வாங்கியவர் வினு சக்ரவர்த்தி. கதாசிரியராக சினிமாவில் நுழைந்து கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என பல்துறைகளில் பங்களிப்பு செலுத்தியவர்.
பல வருடங்களாகவே வினு சக்ரவர்த்தி நடிப்பதை குறைத்துக் கொண்டார். சமீபமாக சர்க்கரை நோய் அவரை கடுமையாக தாக்கியது. இந்நிலையில் நேற்று ரத்த அழுத்தம் மற்றும் மிகை சர்க்கரை காரணமாக மயங்கிவிழுந்த அவரை உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
-
2nd August 2015, 02:56 PM
#1823
Junior Member
Senior Hubber
-
7th August 2015, 04:59 PM
#1824
Senior Member
Veteran Hubber
ரஜினி பட டைட்டில் பாபிசிம்ஹா படத்திற்குக் கிடைத்தது எப்படி?
சூதுகவ்வும், ஜிகர்தண்டா என்று தொடர் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பாபிசிம்ஹா. கோ 2, பாம்புச்சட்டை, உறுமீன், கவலைவேண்டாம் உள்ளிட்ட படங்களில் பிஸியாகவிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் படம் வீரா. 1994ல் ரஜினி, மீனா, ரோஜா நடிப்பில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் வீரா. அப்படத்தின் டைட்டிலைத் தான் பாபிசிம்ஹாவின் அடுத்த படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் கதைக்கு வீரா என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னதும், பஞ்சு அருணாசலத்தை சந்தித்து கதையைக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். கதை பிடித்ததால், பெயரைத்தர உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பஞ்சு அருணாசலம். அதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.
வீரா, ஆக்*ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கிறதாம். அறிமுக இயக்குநரான கே.ராஜாராமன் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனத்திற்காக இயக்குகிறார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள, கவலைவேண்டாம், கோ 2 ஆகிய படங்களீல் ஏற்கெனவே நடித்துக்கொண்டிருக்கிறார் பாபிசிம்ஹா. ஒரு தயாரிப்புநிறுவனத்தின் மூன்று படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
-
7th August 2015, 05:40 PM
#1825
Senior Member
Veteran Hubber
நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்து மலையாளத்தில் வெளியான படம் பிரேமம்.
த்ரிஷ்யம் படம் போலவே சில கோடிகளில் தயாரிக்கப்பட்டு அதைவிடப் பத்துமடங்கு அதிகமாக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அந்தப்டபத்தைத் தமிழில் எடுப்பதற்காக அந்த உரிமையை வாங்க தமிழகத்திலிருந்து பல படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டன. அதில் ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெற்றி பெற்றிருக்கிறதாம்.
தமிழில் அந்தப்படத்தைத் தயாரிக்கும் உரிமையை அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. உரிமையை அவர்கள் வாங்கிவிட்டார்கள்? அடுத்து கதாநாயகனாக நடிக்கப்போவது யார்? என்கிற கேள்வி வந்துவிட்டது.
ஸ்டுடியோகிரின் என்பதால் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு முன்னுரிமை இருக்கும். ஆனாலும் இப்போது அதுகுறித்து எந்த முடிவும் செய்யவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்குள் இந்தப்படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆளாளுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
Ajay U had watched the movie. Whom will you recommend in TAMIL?
-
10th August 2015, 02:13 PM
#1826
Senior Member
Veteran Hubber
வாய்த்துடுக்கால் கிடைத்த படத்தை இழந்த நடிகர்
கே.ராஜாராமன் என்கிற புதியஇயக்குநரின் இயக்கத்தில் பாபிசிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் படம் வீரா. இந்தப்படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவே படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது. அந்த அறிவிப்பு வந்ததற்குப் பலமான பின்னணிக்காரணம் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் நாயகனாக நடிக்க, பிரபலஇயக்குநரின் தம்பி, தயாரிப்பாளரின் மகன் ஆகிய அடையாளங்களைக் கொண்ட நடிகரைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். தொழில்நுட்பக்கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்குப் போகிற நேரத்தில் படம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று நினைத்திருந்தார்களாம். அதற்குள் நடிகரின் வாய்த்துடுக்கு இந்தப்பட வாய்ப்பைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த நடிகர் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த படம் அண்மையில் தயராகியிருக்கிறது.
அந்தப்படத்தைப் பார்த்தவர்கள், இந்தப்படத்துக்குப் பிறகு நீங்கள் எங்கேயோ போகப்போகிறீர்கள் என்று சொன்னார்களாம். உடனே சிலிர்த்துக்கொண்ட நடிகர், இந்தப்படத்தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு, ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தை மாற்றி எனக்கு அதிகச்சம்பளம் கொடுக்கிற மாதிரி புதுஒப்பந்தம் போடவேண்டும் என்று சொன்னதாகத் தெரிகிறது. அப்படி அவர் கேட்ட தொகை சிலகோடிகள். இதனால் அதிர்ச்சியான தயாரிப்புத்தரப்பு உடனே பாபிசிம்ஹாவைத் தொடர்புகொண்டு கதையைச் சொல்லி அவருக்கும் பிடித்ததால் அவரே நாயகன் என்று அறிவித்துவிட்டார்களாம்.
அந்த அறிவிப்பைப் பார்த்து அதிர்ச்சியான நடிகர், தயாரிப்புத்தரப்பை சமாதானப்படுத்தி மறுபடி ஒரு படவாய்ப்பைப் பெறப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தயாரிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கையைப் பற்றித் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் இப்படித்தான் செய்யவேண்டும் என்று பாராட்டிக்கொண்டிருப்பதாகத் தகவல்
-
10th August 2015, 05:27 PM
#1827
Senior Member
Veteran Hubber
மகேஷ் பாபு, விஜய்க்கு செய்தது நியாயமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா,சதீஷ் நடிப்பில் சென்ற வருட தீபாவளி அன்று வெளியாகி 100 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்த படம் ‘கத்தி’. படத்தின் கதைப்படி ஒரு குளிர்பான கம்பெனி கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அதை விஜய் போராடித் தடுப்பார். இதுதான் படத்தின் கரு.
இதே பாணியில் தான் சமீபத்தில் வெளியான செல்வந்தன், தெலுங்கில் ஸ்ரீமந்துடு படமாக வெளியாகியுள்ளது. விவசாயம், ஊரில் தண்ணீர் பிரச்னை. ஊருக்காக தன் நலத்தைக் கூட பொருட்படுத்தாத ஹீரோ இடையில் செருகப்பட்ட குளிர்பான கம்பெனி விவகாரம் என இந்தப் படத்தின் கதையும் ஓரளவு ‘கத்தி’ படத்தின் கதைதான்.
ஏற்கனவே ‘கத்தி’ படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க முதன்முதலில் மகேஷ் பாபுவிற்குதான் கதை சொல்லப்பட்டது. நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை எனக் கூறி மறுத்தார்.
அதனைத் தொடர்ந்து பவன் கல்யாணிடம் பேசப்பட்டது அவரும் மறுக்கவே இப்போது படம் காத்திருப்பில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘செல்வந்தன்’ படம் ‘கத்தி’ படத்தின் கதையை ஒத்திருக்கும் பட்சத்தில் பின்னர் ஏன் ‘கத்தி’ ரீமேக்கிற்கு மகேஷ் பாபு சம்மதிக்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் ’கத்தி’ படத்தின் கதையைக் கேட்டு அதிலிருந்து கதையை உருவி இந்த ‘செல்வந்தன்’ படத்தின் கதையை உருவாக்கி விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இனி இந்த செல்வந்தன் வெளியானதால் அதே மாதிரியான கதையை மீண்டும் தெலுங்கில் எடுக்க முடியுமா. ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பாளரின் நிலைதான் என்ன? இனி எந்த ஹீரோ நடிப்பார் இப்படி பல குழப்பங்கள் உருவாகியுள்ளன.
-
14th August 2015, 11:56 AM
#1828
Senior Member
Veteran Hubber
Bollywood
பிரபு தேவா , அக்*ஷய் குமார், எமி ஜாக்ஸன் கூட்டணியில் ’சிங் ஈஸ் ப்ளிங்’ கலக்கும் போஸ்டர்கள்
பிரபு தேவா இயக்கத்தில் அக்*ஷய் குமார், எமி ஜாக்ஸன் , நடிக்கும் புதிய படம் ‘சிங் ஈஸ் ப்ளிங்’. ஆக்*ஷன் கதைக்களமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ட்விட்டர், முகநூல் என வைரலாக பரவி வருகிறது.
ஸ்ருதி ஹாசனைத் தொடர்ந்து எமி ஜாக்ஸனும், விஜய், தனுஷ் , இந்தியில் அக்*ஷய் குமார் என செம பிசியாக நடித்து வருகிறார்.
-
17th August 2015, 12:59 PM
#1829
Senior Member
Veteran Hubber
திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இளையராஜா தனது பெயரில் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக அவர் கலந்து கொண்டு பேசினார். அன்றிரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு இதய பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், உடல்நிலை வேகமாக தேறி வருவதால் இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இளையராஜாவின் திடீர் உடல்நலக்குறைவு அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
18th August 2015, 01:50 PM
#1830
Senior Member
Veteran Hubber
டிஸ்சார்ஜ் ஆன அன்றே ரிக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா
இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜா, டிஸ்சார்ஜ் ஆன உடனேயே ரிக்கார்டிங்கை ஆரம்பித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.
இளையராஜாவின் பேச்சு மூச்சு வாழ்க்கை எல்லாம் இசை என்பது பூமி உருண்டை என்பதற்கு சமமானது. சில தினங்கள் முன்பு இளையராஜா தனது பெயரிலான இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
நேற்று மதியம் 12 மணி அளவில் இளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்தனர். இரண்டு மூன்று தினங்கள் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். ஆனால், காரில் திரும்பும்போதே தனது உதவியாளர்களுக்கு போன் செய்த இளையராஜா, இரண்டு மணி நேரத்தில் ரிக்கார்ட்டிங்குக்காக அனைவரையும் பிரசாந்துக்கு வரச்சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் தனது ரிக்கார்டிங் பணியை இளையராஜா தொடங்கினார்.
சும்மாயில்லை இசை ஞானி என்கிறார்கள்.
Bookmarks