-
21st December 2015, 05:14 PM
#1191
Senior Member
Veteran Hubber
’பீப்’ பாடல் எதிரொலி...ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி! - VIKATAN
சிம்புவின் பீப் பாடல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஒரு பக்கம் மாதர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என கண்டங்களையும் புகார்களையும் கொடுத்து வரும் நிலையில் சிம்புவுக்கு நாங்கள் ஆதரவு என்ற ரீதியிலும் ரசிகர்கள் கொந்தளிக்கத் துவங்கியுள்ளனர்.
சிம்புவின் ஆதரவாளர்களின் கேள்விகள் இதுதான். அவர் சொந்த விஷயத்துக்காக உருவாக்கிய பாடல். அது வேறு யாரோ தெரியாமல் வெளியிட்டுவிட்டனர். மேலும் இது போன்ற பாடல்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லையா.
இதைவிட மோசமான பாடல்கள், வசனங்கள் என வந்துள்ளன. அது ஏன் சிம்புவை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள், என்ற கேள்விகளுடன் #WeSupportSimbu என்ற டேக் இட்ட வார்த்தைகளும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சுற்றலில் உள்ளன.
இந்நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக வேலுரைச் சேர்ந்த மதன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த கெட்டவன் பிரகாஷ் இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை இப்படியே போனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மீதுள்ள மரியாதை கெடும் என்பதே உண்மை.
-
21st December 2015 05:14 PM
# ADS
Circuit advertisement
-
22nd December 2015, 11:31 PM
#1192
Senior Member
Veteran Hubber
சிம்புவின் ‘பீப்’ பாடலை இணைய தளத்தில் வெளியிட்ட பிரபல கதாநாயகன் போலீசில் சிக்குகிறார்
சிம்பு பாடிய பீப் ஆபாச பாடலை வெளியிட்டது தொடர்பாக பிரபல கதாநாயகன் ஒருவர் சிக்குகிறார். அவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் எழுதி, பாடியதாக நடிகர் சிம்புவுக்கு எதிராகவும், இசையமைத்து இருப்பதாக கூறப்படும் அனிருத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை தி.நகரில் மாசிலா மணி தெருவில் உள்ள உள்ள சிம்பு வீட்டு முன் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சிம்பு, அனிருத்தின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து சாணியால் அடித்தனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு பதிலாக இருவரின் பெற்றோர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசாரும் சிம்பு, அனிருத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இது அவர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை உறுதி என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சிம்பு, அனிருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சில வழக்குகளில் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர். தாங்கள் பாடலை வெளியிடவில்லை. தங்களுக்கு வேண்டப்படாத யாரோ இதுபோன்று மோசடி வேலைகளில் இறங்கி விட்டனர் என சிம்பு, அவரது தந்தை டி.ராஜேந்தர் உருக்கமாக பேசினர். இதைத் தொடர்ந்து யூடியூப்பில் பாடலை வெளியிட்டது யார் என்ற விபரத்தை தெரிந்து கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இதனால், குற்றவாளி விரைவில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், ஆபாச பாடலை வெளியிட்டதின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. பாடல் பாடப்பட்டு அதன் இணை அமைப்பு நிறைவடைந்த உடன் அனிருத் தனது பாடலை நட்பு ரீதியிலும், விளையாட்டு ரீதியிலும் வளர்ந்து வரும் பிரபலமான நடிகர் ஒருவருக்கு அனுப்பி உள்ளாராம். தற்போது நடித்துள்ள அனைத்து படங்களிலும் வெற்றி பதித்து வரும் மற்றும் பெண்கள், குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற அந்த நடிகர் பாடலின் பாதிப்பு புரியாமலும், தன்மை தெரியாமலும் விளையாட்டுத்தனமாக அந்த பாடலை தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் மற்ற நண்பர்களுக்கு பகிர, யூடியூப்பிலும் சிலர் பகிர்ந்துள்ளனர். அதன் பிறகு வாட்ஸ்அப், பேஸ் புக் என உலகம் முழுவதும் பாடல் பரப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது, போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட கதாநாயகனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பாடலை லீக் செய்து இருந்தால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் பிரபல நடிகர் சிக்கி இருப்பது தற்போது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
23rd December 2015, 10:49 AM
#1193
Senior Member
Veteran Hubber
சிவகார்த்திகேயனுக்கும் பீப் பாடலுக்கும் தொடர்பில்லை: சிம்பு விளக்கம்!
பீப் பாடல் விவகாரத்தில் மேலும் ஒரு சர்ச்சையாக, அப் பாடல் வெளியாக சிவகார்த்திகேயன்தான் காரணம் என வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. சமூக வலைத்தளங்களிலும், சிம்புவின் பீப் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், "இந்த பாடல் வெளியானதற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை யாரோ வேண்டுமென்றே இந்த பிரச்னையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அவருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு இதே பிரச்னையில், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
23rd December 2015, 10:51 AM
#1194
Senior Member
Veteran Hubber
சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை - நீதிபதி அதிரடி உத்தரவு!
பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணையில், அந்தப் பாடலை கேட்டபிறகு தீர்ப்பு வழங்குமாறு நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், நீதிபதி பாடலை கேட்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
பீப் பாடல் குறித்த அரசின் விளக்கத்தை கேட்கவும், மனுதாரர் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத்தினரின் வாதத்தை கேட்கவும் ஏதுவாக வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்) பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
23rd December 2015, 11:06 AM
#1195
Senior Member
Veteran Hubber
இளையராஜா பற்றி அவதூறு... மன்னிப்புக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன்!
இசைஞானி இளையராஜா பற்றி தவறாகப் பேசியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.சமீபத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம், ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தமே இல்லாமல் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப, அதனால் கோபமடைந்த இளையராஜா, "எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறாய்.. உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டார்.இதற்கு இணைய வெளியில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். பெரும்பாலான மீடியாக்காரர்களும் கூட அந்த தொலைக்காட்சி நிருபரின் செயலைக் கண்டித்திருந்தனர். இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்டு இளையராஜா போன்ற மேதைகளை அவமதித்தது தவறு என்று கூறினர்.ஆனால் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளையராஜா பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்."ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ஒரு ட்விட்டும், அது தொடர்பாக ரசிகர்களுடன் எழுந்த மோதலில், மிகவும் கொச்சையாக இன்னொரு ட்விட்டும் போட்டார் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு தனது ட்வீட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில், 'நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், வெறியன் அல்ல.. அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க முடியாது,' என்று கூறியிருந்தார்.இதனால் அவருக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இணைய வெளியில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் அவர் இப்போது ஒரு அறிக்கை
வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.அந்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால்தான் இந்த மன்னிப்பு அறிக்கை.இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால்தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
-
23rd December 2015, 11:18 AM
#1196
Senior Member
Diamond Hubber
Originally Posted by
balaajee
இளையராஜா பற்றி அவதூறு... மன்னிப்புக் கேட்ட ஜேம்ஸ் வசந்தன்!
இசைஞானி இளையராஜா பற்றி தவறாகப் பேசியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.சமீபத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளையராஜாவிடம், ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தமே இல்லாமல் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்ப, அதனால் கோபமடைந்த இளையராஜா, "எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறாய்.. உனக்கு அறிவிருக்கா?' என்று கேட்டார்.இதற்கு இணைய வெளியில் ஏகப்பட்ட கருத்து மோதல்கள். பெரும்பாலான மீடியாக்காரர்களும் கூட அந்த தொலைக்காட்சி நிருபரின் செயலைக் கண்டித்திருந்தனர். இடம் பொருள் தெரியாமல் கேள்வி கேட்டு இளையராஜா போன்ற மேதைகளை அவமதித்தது தவறு என்று கூறினர்.ஆனால் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளையராஜா பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்."ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும்" என்று ஒரு ட்விட்டும், அது தொடர்பாக ரசிகர்களுடன் எழுந்த மோதலில், மிகவும் கொச்சையாக இன்னொரு ட்விட்டும் போட்டார் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு தனது ட்வீட்டுகளுக்கு விளக்கம் சொல்லும் வகையில், 'நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன், வெறியன் அல்ல.. அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க முடியாது,' என்று கூறியிருந்தார்.இதனால் அவருக்கும் இளையராஜா ரசிகர்களுக்கும் இணைய வெளியில் கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார் ஜேம்ஸ் வசந்தன். இந்த நிலையில் அவர் இப்போது ஒரு அறிக்கை
வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.அந்த அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது. இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்தக் கருத்தால் காயமுற்றதால்தான் இந்த மன்னிப்பு அறிக்கை.இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும் , படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால்தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண் படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்க கூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம். நன்றி!இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
Twitter:
Dummy's guide for "How to be always in News without doing anything useful?". Author: James Vasanthan
for i = 1 to ∞
{
News1: James Vasanthan abuses
News2: JV faces backlash
News3: JV runs away
News4: JV apologizes
News5: JV is back.
}
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th December 2015, 12:46 AM
#1197
Junior Member
Devoted Hubber
kolunthu vittu eriyuthu matter.. munnaye naa predict panna mathiri oru sinna sorry from STR would have put a full stop on this matter.. but instead he chose to go on no mans road.. eppa mudiyumo intha matter.. paavam kutti thalai
-
25th December 2015, 05:20 AM
#1198
Senior Member
Veteran Hubber
"SIMBU has to CHANGE, Otherwise..." - Pandiraj | Pasanga2
-
25th December 2015, 05:23 AM
#1199
Senior Member
Veteran Hubber
Simbu Mother: We Have No Privacy Here! Want To Leave TamilNadu | Beep Song - Usha T Rajendar Speech
-
25th December 2015, 05:25 AM
#1200
Senior Member
Veteran Hubber
Beep Song Controversy : Simbu's Mother Cries for her Son - Full Emotional Interview
Bookmarks