-
27th August 2015, 07:35 PM
#1131
Senior Member
Diamond Hubber
Originally Posted by
PR218
iththanai padam nadichi enna projanam? edho james cameron padam mathiri next film anegama oru 3 varushathukku apram than varumnu nenakiren..
Lol, VTV and Manmadhan were his only "tolerable" movies till date, rest of the are marana mokkais !
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
27th August 2015 07:35 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2015, 01:58 PM
#1132
Senior Member
Veteran Hubber
சிம்புவின் சுவாரஸிய ட்விட்டர் உரையாடல்
சிம்பு ட்விட்டர் மூலமாக அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார். வில்லங்கமான கேள்விகளுக்கும் பதில் வரும் அவரிடமிருந்து.
இந்தமுறை கேள்விகளில் விஜய்யும் இடம் பிடித்திருந்தார். வாலு வெளியாக உதவியதன் மூலம் சிம்புவின் உடன்பிறவா சகோதரர் ஆகிவிட்டாரல்லவா விஜய்.
நடிகர் விஜய்யை உங்கள் படத்தில் நடிக்க அழைப்பீர்களா என வில்லங்கமாக ஒரு கேள்வி.
விஜய்யை என்னுடைய படத்தில் நடிக்க அழைப்பது நியாயமாக இருக்காது. ஆனால், அவர் அவருடைய படத்தில் நடனம் ஆட அழைத்தால் நிச்சயம் போய் நடனமாடுவேன் என்று தெரிவித்தார்.
இது நம்ம ஆளு படத்தின் வெளியீடு குறித்தும் ஒரு கேள்வி. படம் எப்போது வரும், தீபாவளிக்கா?
தல படம் தீபாவளிக்கு வந்தால், இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸ்...தள்ளிப் போகும். தல படம் தீபாவளிக்கு வராவிட்டால் இது நம்ம ஆளு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.
சிம்பு என்றால் தனுஷ் இல்லாமலா? தனுஷ் நடித்தப் படங்களில் எது சிம்புவுக்குப் பிடிக்கும்?
தனுஷ் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆனாலும், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆடுகளம் மிகவும் பிடிக்கும் என நேர்மையாக பதிலளித்துள்ளார் சிம்பு.
நடிகர் சங்க விவகாரத்தில் சிம்பு சரத்குமார் பக்கம். இது குறித்த கேள்விக்கு, நடிகர் சங்க விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்கும் என பட்டும் படாமலும் பதிலளித்துள்ளார்.
நின்றுபோன வேட்டை மன்னன் இன்னும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகவில்லை. வேட்டை மன்னன் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய தகவல் ஏதாவது இருந்தால் நானே தெரிவிக்கிறேன் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
எந்த நடிகருக்கும், யாராவது ஒரு முக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிம்புவுக்கு?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
அடுத்தமுறை நயன்தாரா, ஹன்சிகா பற்றியும் காரசாரமாக பேசுங்க சிம்பு.
-
30th August 2015, 03:07 PM
#1133
Senior Member
Veteran Hubber
STR @iam_str 16h16 hours ago
Finally things are falling in place followed by #Vaalu next #INA then #AYM and #KAAN ... what more can i ask for ... thanks to allmighty
-
6th September 2015, 07:43 AM
#1134
Senior Member
Veteran Hubber
கமல், அரவிந்த்சாமி வரிசையில் சிம்பு
சின்னத்திரையில் தன்னுடைய செல்வாக்கினால் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறார் குஷ்பு. இப்போதும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடிகர்களைப் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
“சிம்ப்ளிகுஷ்பு” என்கிற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்நடிகர் ஜெயம்ரவி. அதில் அவர் பல முக்கியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரையடுத்து கமல், கார்த்தியையும் அதற்கடுத்து அரவிந்தசாமியையும் பேட்டி எடுத்திருக்கிறார் குஷ்பு.
நான்காவதாக அவர் பேட்டி எடுத்திருப்பது சிம்புவை. அடுத்தடுத்த வாரங்களில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறதாம். தொடக்கத்திலேய பெரிய நடிகர்களை அழைத்து வந்திருப்பதால் குஷ்பு வெயிட்டானவர்தான் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், இதே தொலைக்காட்சி சார்பாகப் பேட்டி கேட்டால் இந்த நடிகர்கள் எல்லாம் பேட்டி தருவார்களா? நிச்சயம் தரமாட்டார்கள், ஆனால் பேட்டி எடுப்பவர் குஷ்பு என்பதால் எல்லோரும் ஒடிவந்து பேட்டி கொடுக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் இருக்கின்றன.
-
11th September 2015, 04:26 PM
#1135
Senior Member
Veteran Hubber
நடிகர் சங்க தேர்தலில் முக்கிய பதவிக்கு மல்லுக்கட்டும் நடிகர்– நடிகைகள்!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 அணிகள் போட்டியிடுவதால் விஷால் அணியில் கார்த்தியும், குஷ்பும், சரத்குமார் அணியில் சிம்புவும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய நிர்வாகிகள் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அடுத்த மாதம் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2009 மற்றும் 2012ஆம் ஆண்டு தேர்தல்களில் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக ராதாரவி பதவி வகித்தார்.
இந்த தேர்தலில் விஷால் தலைமையில் இன்னொரு அணி களத்தில் குதித்துள்ளது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. இரு அணியினரும் ஆதரவு திரட்டும் பணியில் கடந்த ஒருமாதமாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தகுதி உள்ளவர்களாக 3,139 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிகம்பேர் இசை நாடக நடிகர்கள். இவர்கள் மேடையில் பாட்டுப்பாடி நடிக்க கூடியவர்கள். மதுரை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். கரூர், காரைக்குடி, திண்டுக்கல் பகுதிகளிலும் நாடக நடிகர்கள் பரவலாக காணப்படுகின்றனர்.
சினிமா நடிகர்களைவிட, நாடக நடிகர்கள்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். எனவேதான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவர்களை குறிவைக்கிறார்கள். ஏற்கனவே இரு அணியினரும் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக, நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இரண்டாவது கட்டமாக மீண்டும் இந்தப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இன்னொரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு சிம்பு நிறுத்தப்படுவார் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த பதவியில் முன்பு வாகை சந்திரசேகர் இருந்தார்.
இவர்கள் அணியில் இரண்டு துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தியாகு, குண்டு கல்யாணம், குயிலி, நளினி, ஜெயமணி ஆகியோரும் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.
விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளராக விஷால் நிற்கிறார். பொருளாளர் பதவிக்கு பொன்வன்ணன் அல்லது கருணாஸ் நிறுத்தப்படுவார் என தெரிகிறது.
கார்த்தி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர்கள் அணி சார்பில் நடிகை குஷ்புவையும் முக்கிய பதவிக்கு போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
-
15th September 2015, 12:47 PM
#1136
Senior Member
Veteran Hubber
சரத்குமார் அணியில் சிம்பு உபதலைவர் பதவிக்கு போட்டி: ஒரு வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியல்
நடிகர் சங்கத் தேர்தலில் சரத் குமார் அணியில் நடிகர் சிம்பு உப தலைவராகப் போட்டி யிடுகிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணி யினரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து சரத்குமார் நேற்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி என் மீது தொடர்ந்து பல குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு வரு கின்றன. இந்நிலை நீடித்தால் பல உண்மைகளை வெளியிட வேண்டி வரும். படங்கள் வெளி யிடுவதில் பிரச்சினை என்றாலும், நடிகர்களுக்கு எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், நடிகர் சங்கத் தலைவர் என்கிற முறையில் பல பிரச்சினை களைத் தீர்ப்பதில் முழு ஈடுபாட் டோடு செயல்பட்டுள்ளேன்.
நடிகர் சங்கக் கட்டிடம் 2013லேயே கட்டி முடிக்கப்பட் டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றிருந்தால், நலிவுற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் இன்று பலன் அடைந்தி ருப்பார்கள். இவ்வாறு சரத் குமார் பேசினார்.
உப தலைவர் பதவிக்கு சிம்பு
சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு உபதலைவர் பதவிக்கு போட்டி யிடுவதாக அறிவித்துள்ளார். பத்திரிகையாளர் பேட்டி யின்போது சிம்பு கூறிய தாவது:
நான் டி.ஆரோட பையன் என் பதைத் தாண்டி ஒரு சிறந்த மனித னாக இருக்கவே விரும்புகி றேன். ஆரம்பம் முதற்கொண்டே நடிகர் சங்கத்தின் செயல்பாடு களைப் பார்த்து வருகிறேன். இந்த அணிக்கு நான் ஏன் வந்துள்ளேன் என்றால் இந்த அணியில்தான் உண்மை உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதா ரவி உள்ளிட்டோரின் செயல்பாடு களைப் பார்த்து அவர்களின் அணியில் சேர்ந்துள்ளேன். நடி கர்களுக்குள் பல பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமையை இழந்துவிடக்கூடாது என்றார்.
-
15th September 2015, 01:30 PM
#1137
Senior Member
Veteran Hubber
-
23rd September 2015, 01:15 PM
#1138
Senior Member
Veteran Hubber
ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறார் சிம்பு!
இனி நான் ட்விட்டரில் இல்லை என்று சிம்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்து வெளியான படம் வாலு. வாலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நயன்தாராவுடன் நடித்துவரும் இது நம்ம ஆளு படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார்.தொடர்ந்து கெளதம் மேனனுடன் அச்சம் என்பதுமடமையடா, செல்வராகவனுடன் கான் உள்ளிட்ட படங்களில் நடித்துவருவதால் இடைவிடாது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. அதனால் இனி ட்விட்டரில் நான் தொடரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.
ட்விட்டரில் சிம்பு கூறியதாவது, “ இதுவரை என் ரசிகர்களும், என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் .
தேவைப்பட்டால் மட்டுமே ட்விட்டரில் என்னுடைய கருத்தை பதிப்பேன். ஒரு நடிகனாக தரமான படம் கொடுக்கவேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அவர்களுடனான என்னுடைய தொடர்ப்பு வெற்றிதரும் படம் மட்டுமே. தவிர இதுசார்ந்த எந்த சமுக வலைதளங்களில் உங்களுடன் பேசுவதில் நான் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.
என்னுடைய இந்த முடிவை நீங்கள் ஏற்றுகொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை. மிஸ் யூ” என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
7th October 2015, 10:36 PM
#1139
Senior Member
Veteran Hubber
Simbu's angry speech against Vishal's Paandavar Ani - Part 1
-
7th October 2015, 10:37 PM
#1140
Senior Member
Veteran Hubber
Simbu's angry speech against Vishal's Paandavar Ani - Part 2
Bookmarks