-
17th July 2015, 09:25 PM
#1121
Senior Member
Veteran Hubber
Simbu: Phase Two
Silambarasan on his film Vaalu and finding new direction in life
When we caught up with Silambarasan TR, we were surprised to find Tamil cinema’s favourite bad boy uncharacteristically sombre, laid-back and rather exhausted. The lull at the box office seems to have taken its toll on the actor, singer and producer. Besides a string of flops like Idhu Namma Aalu and Vettai Mannain in the past two years, the 32-year-old has also received a lot of flak for his off-and-on relationships with his co-stars and has been the butt of negative publicity, especially post his break-up with co-star Hansika Motwani. With STR’s latest film, Vaalu (co-starring Motwani), releasing soon and Gautham Menon’s Acham Embathu Madamaiyada and Selvaraghavan’s Kaan in the pipeline, he is hopeful but talks less about his movies and more about life.
Shooting star
Silambarasan says he plays a macho character in Menon’s next, in contrast to his breakthrough character of Karthik in Vinnaithandi Varuvaaya. “I have respect for Gautham Menon’s faith in me, even after I hit an all-time low. We deliberately kept my character in his next film a stark contrast to the boy-next-door image. The character is like a mix of Karthik in Vinnaitandi Varuvaaya and Surya of Kaakha Kaakha. Kaan, on the other hand, will see me as a devotee to Lord Murugan,” says the actor, who is shooting simultaneously for both projects. Does he research the diverse characters he is playing? “I just go on the set and speak to my director. Then I launch into my character. I do not require any former preparation, I know I’m good at what I do,” he says.
Changing goals
“Superstar MGR was very careful about his image as a star, which got him to where he was. I did just the opposite, but I still became a superstar,” says the Vallavan star, who has been known to call a spade a spade. “The last two years have not been easy for me. I realised I have had my biggest learning in 32 years during this phase. My goals are no longer restricted to making films. Box office hits or `100 crore films do not excite me. I do films because my fans have stood by me. As long as they whistle and clap and have a good time, my job is done,” says Silambarasan. The actor who has adopted meditation, and embraced spirituality over the last two years says he does not chase money or fame anymore. “In the last two years, I did not ask my parents for money even when I ran dry. I have realised there is a larger goal to life than chasing material goals and I am keener on finding myself with God; of reaching further through meditation,” he insists.
Bigger plans
The actor does not have much to say about making it to film festivals. “I don’t have to pretend to be somebody and talk about awards and off-beat cinema. I like the kind of films I do and am also appreciative of films like Kaaka Muttai, where I did a brief cameo,” he says, meanwhile, he has no plans of getting married anytime soon. “Life is moving forward and with women empowerment and equality on the cards, women are choosing what they’d like to do, be it same sex marriage or staying single. As a man, I choose to live and let live,” laughs the actor, who brushes off his past relationships, commenting that probably life has “bigger plans for him”. So what is with his meditative state of mind? “Every human being has a phase two. I am just lucky to have discovered my calling,” the actor concludes.
Vaalu is scheduled to release shortly.
-
17th July 2015 09:25 PM
# ADS
Circuit advertisement
-
27th July 2015, 04:33 PM
#1122
Junior Member
Seasoned Hubber
வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி
சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஒரு இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய்.
“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக சிம்பு தன்னை அஜித் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பர். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது உதவியிருப்பது விஜய் என்பதால் இதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
-
5th August 2015, 04:12 PM
#1123
Senior Member
Veteran Hubber
சிம்புவின் கான் படம் பற்றிய ரகசியங்களை உடைத்த ஜகபதிபாபு!
மகேஷ்பாபு , ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு உட்பட பலர் நடிப்பில் தமிழில் வெளியாகவிருக்கும் படம் செல்வந்தன். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெகபதிபாபு, தான் நடிக்கும் கான் படம் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, காத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் கான். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். மேலும் கான் என்றால் காடு என்று அர்த்தம். முக்கிய காட்சிகள் சிலவற்றைக் காட்டுக்குள் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், டாப்ஸி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கெனவே வெளிவந்தன.
நேற்று நடைபெற்ற செல்வந்தன் பட செய்தியாளர் சந்திப்பில் கான் படத்தின் சில ரகசியங்களை ஜகபதி பாபு கூறும்போது, “ குடி, புகைப்பழக்கம், கெட்ட குணம் என்று கெட்ட வழியில் சென்றதால் “ராணுவ” அதிகாரியான நான் வேலையிலிருந்து நீக்கப்படுகிறேன். இன்னொரு அதிகாரியான சிம்புவுக்கும் எனக்குமான போராட்டமே கான்” என்றார் ஜகபதிபாபு.
-
8th August 2015, 08:09 PM
#1124
Junior Member
Veteran Hubber
Originally Posted by
Deepak7
வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி
சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஒரு இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய்.
“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக சிம்பு தன்னை அஜித் ரசிகன் என்றே சொல்லிக்கொள்வார். இந்தப் படத்தைத் தயாரித்தவரும் அஜித்தின் முன்னாள் நெருங்கிய நண்பர். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது உதவியிருப்பது விஜய் என்பதால் இதை எல்லோரும் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
money for promotional speech at audio release.. Good deal
Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR
-
14th August 2015, 11:28 AM
#1125
Senior Member
Veteran Hubber
அமீர் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு
சிம்புவின் வாலு ஒருவழியாக வெளியாகிவிட்டது. இதையடுத்து, இது நம்ம ஆளு வரவிருக்கிறது.
இந்த இரு படங்கள் தவிர்த்து கௌதம் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில், கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம், அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிலர் சொல்வது போல் இரண்டு நாயகர்கள் கதையல்ல. சிம்பு தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
-
14th August 2015, 11:32 AM
#1126
Senior Member
Veteran Hubber
உண்மையானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன்: ‘வாலு’ பிரச்சினை பற்றி சிம்பு மனம் திறக்கிறார்
சிம்பு
‘வாலு’ படப் பிரச்சினையின் மூலம் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார்.
சிம்பு, ஹன்சிகா நடித்த ‘வாலு’ திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘பாஸ்கி டிவி’ என்ற பெயரில் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவிருக்கும் பாஸ்கிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
‘வாலு’ திரைப்படம் வெளிவர தாமதமானதற்கு நீங்களும் ஒரு வகையில் காரணம் இல்லையா?
முக்கியமான காரணம் நான் தான். இங்கே என் வெற்றிக்கான எல்லா விஷயங்களையும் நான் தான் செய்ய வேண்டும். என்னை எதிர்பார்ப்பவர்களுக்கான வேலையை நான் செய்ய வேண் டும். அப்பா எனக்காக நிறைய சம்பா தித்து வைத்திருக்கிறார். நானும் சம்பாதிக்கிறேன். மற்ற யாரிடமும் நான் எதுவும் கேட்டதில்லை.
நான் சின்ன வயதில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியவன். ஒரு கட்டத்தில் நாம ஏன், இப்படி ஓட வேண்டும் என்ற கேள்வி எனக் குள் வந்தபோது ஆன்மிகத்துக்குள் சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் வந்தது. மீண் டும் இங்கே வராமல் அங்கேயே இருந்திருக்கலாம். ஆனால், ‘சிம்பு பயந்துவிட்டான்’ என்று சொன்னால் என்ன செய்வது. அதனால்தான் மீண்டும் வந்தேன். அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறேன்.
‘வாலு’ படத்தின் சிக்கல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிந்ததா?
இந்த இடைவெளியிலும், நெருக்கடியிலும் எனக்கு உண்மை யானவர்கள் யார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி ஒரு சம்பவம் இல்லாமல் போயிருந்தால் எனக்கு யாரெல்லாம் எதிரி என்று தெரியாம லேயே போயிருக்கும்.ஜூலை 17-ம் தேதி படம் ரிலீஸ் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விளம்பரம் வந்தது. அப்போதெல்லாம் விட்டு விட்டு படம் ரிலீஸாக ஒரு வாரம் மட்டுமே இருக்கும்போது ‘வாலு’ படத்தை வெளியிடாமல் தடுக்க வேண்டும் என்று நிற்கிறார்கள். இதன் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டுபிடித்தேன்.
சிம்பு தனுஷ் இடையே பலத்த போட்டி இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறதே?
நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாத ஒரு காலகட்டம் இருந் திருக்கிறது. அவரிடம் ஒன்றும், என்னிடம் ஒன்றும் கூறப்பட்ட சூழலும் இருந்தது. இதெல்லாம் ஆரம்ப கட்டம். அவர் 230 ரன்கள் அடித்தால் நானும் அதைப்போல் ஜெயிக்கவேண்டும் என்று நினைத் திருக்கிறேன். அதற்கு பதிலாக நீ சதமே அடிக்கக்கூடாது என்று சொல்லும் மனநிலை எனக்கு கிடையாது.
ஒரு மாதம் முழுக்க பெண்களிடம் பேசாமல் உங்களால் இருக்க முடியுமா?
முடியாது. ஏனென்றால் எனக்கு பெண்களைப் பிடிக் கும். அவர்கள் நம்முடைய எதிர்பால். பெண்கள் எப் போதும் என்னிடம் சகஜமாக பழகுகிறார்கள். நானும் அவர் களுக்கு மரியாதை கொடுப் பேன்.
‘வாலு’ திரைப்படம் வெளிவரு வதில் விஜய் உங்களுக்கு கை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீங்கள் அஜித் ரசிகராயிற்றே?
விஜய் சாருடன் நான் நெருக்கமானவன். நாங்கள் இருவருமே இளம் வயதில் சினிமாவுக்குள் வந்தவர்கள். விஜய் சார் யாரிடமும் பேசாமல் இருக்கும் இடங்களில்கூட என்னிடம் மட்டுமே பேசி யிருக்கிறார். நாங்கள் சகோதரர் களாகத்தான் பழகி வருகிறோம். நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொன்னதால் எனக்கு விஜய்யை பிடிக்காது என்று பலரும் அவர் களாகவே நினைத்துக்கொள் கிறார்கள். அதுதான் இங்கே பிரச்சினை. ‘ஒஸ்தி’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு விஜய் வந்தார். ‘தலைவா’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நான் அவரிடம் பேசினேன். இப்போது ‘வாலு’ படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது தனக்கு நெருக்கமான விநியோகஸ் தர்களிடம் பேசி இதைத் தீர்க்கு மாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் அஜித் சார் வெளியில் வந்து பேச வேண்டும் என்பது அவசியமில்லை. அஜித் சாரை அப்பா சந்தித்தபோதுகூட, ‘இந்த பிரச்சினைக்காக கவலைப் பட வேண்டாம். இதையெல்லாம் கடந்து சிம்பு வந்துவிடுவார்’ என்று கூறியிருக்கிறார்.
‘வாலு’ படத்தின் தயாரிப்பாளராக நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் இருக்கிறார். அவர் அஜித் சாரின் நண்பர். அதனால் கூட அஜித் சார் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
18th August 2015, 12:46 PM
#1127
Senior Member
Veteran Hubber
கிருத்திகா உதயநிதி படத்தில் நடிக்க சிம்பு மறுப்பு?
வணக்கம் சென்னை என்ற படாவதி படத்தை எடுத்த கிருத்திகா உதயநிதி அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கு சிம்புவும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிம்பு அளித்த தனது வருங்கால படங்கள் பட்டியலில் கிருத்திகாவின் படம் இல்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு, கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் படங்களுடன் அடுத்த வருடம் நடிக்கயிருக்கும் அமீர் படத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் கிருத்திகாவின் படம் இல்லை.
வாலு பிரச்சனையில் உதயநிதியின் பெயரும் அடிபட்டது. அதற்கு அவர் விளக்கமளித்தாலும் அந்த உரசல் காரணமாகவே கிருத்திகா படத்தை சிம்பு புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.
-
24th August 2015, 02:23 PM
#1128
Senior Member
Veteran Hubber
சிம்புவுடன் தமன்னா நடிக்கிறாரா இல்லையா?
சிம்பு இப்போது கௌதம் இயக்கத்தில் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.
இவ்விரு படங்களும் இவ்வாண்டில் நிறைவு பெற்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. அதன்பின்னர்தான் அமீர் படம் தொடங்கும். ஆனால் இப்போதே அந்தப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன என்று சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தில் சிம்பு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார் என்றும் முதன்முறையாக சிம்பு ஜோடியாக அவர் நடிக்கவிருக்கிறார் என்றும் அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன என்றும் செய்தி வந்திருக்கிறது. இது தொடர்பாக தமன்னாவின் தரப்பில் கேட்டால், அப்படி யாரும் இதுவரை எங்களிடம் பேசவில்லை என்று சொல்கிறார்கள்.
-
26th August 2015, 01:43 PM
#1129
Senior Member
Veteran Hubber
அமீர் - சிம்பு - தமன்னா - ஒரு மெர்சலான கூட்டணி
பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு, கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில் கான் என மூன்று படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதையடுத்து அவர் அமீர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த செய்தியை சென்ற வாரமே வெளியிட்டிருந்தோம். இவர்கள் இணையும் படத்துக்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர்.
மெர்சலில் சில ஆச்சரியங்கள். முதலாவது, அமீரின் அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா மெர்சலில் இல்லை.
அவருக்குப் பதில் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். முதல்முறையாக தமன்னா சிம்பு ஜோ*டியாக நடிக்கிறார்.
-
27th August 2015, 02:19 AM
#1130
Junior Member
Devoted Hubber
iththanai padam nadichi enna projanam? edho james cameron padam mathiri next film anegama oru 3 varushathukku apram than varumnu nenakiren..
Bookmarks